தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கமல்ஹாசன் இயக்கி தயாரித்து நடித்த படங்களில் ஒன்று ‘விஸ்வரூபம்’.
கடந்த 2013ஆம் ஆண்டில் வெளியான படம் இஸ்லாமியர்களை அவமதிப்பதாக கூறி பல சர்ச்சைகளை உண்டாக்கியது.
தமிழகம் தவிர அனைத்து மாநிலங்களிலும் இப்படம் வெளியானது.
இப்படத்தின் பிரச்சினையின்போதுதான் கமல், நாட்டை விட்டு வெளியேறப் போகிறேன் என தெரிவித்து இருந்தார்.
இதனால் கமலுக்கு ஆதரவாக பலரும் களம் இறங்க, பின்னர் சில காட்சிகளை வெட்டிவிட்டு இப்படத்தின் தடையை நீக்கியது ஜெயலலிதா தலைமையிலான அரசு.
இந்நிலையில் கமலின் சமீபத்திய பேட்டியில் இப்படம் தொடர்பாக தான் பட்ட கஷ்டங்கள் பற்றி கூறியுள்ளதாவது….
“விஸ்வரூபம்’ பட தடைக்கு முக்கிய காரணம் அப்போதைய அரசுதான்.
இந்த தடையால் எனது நிதிநிலை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
எனது சொத்துகள் அனைத்தையும் அடகு வைத்தேன். அவமானத்துக்குள்ளானேன்.
ஆனால், ஊழலில் திளைத்திருக்கும் இந்த தேசத்தில் எனக்கு நேர்ந்தது போன்ற சம்பவங்கள் எளிதில் மறக்கடிக்கப்பட்டுவிடும்.
எப்போதுமே வரி ஏய்ப்பு செய்திராத நான் விஸ்வரூப பிரச்சினையால் ரூ.60 கோடியை இழந்தேன்.
‘விஸ்வரூபம் 2’ படத்திற்கு எந்த பிரச்சினையும் வராது என நம்புகிறேன். இருந்தாலும்.. எது வேண்டுமானாலும் நடக்க வாய்ப்புள்ளது.” என்று தெரிவித்துள்ளார் கமல்.
Kamalhassan talks about Vishwaroopam 2 release issues