ராணுவத்தில் சேர்ந்தால் உயிருக்கு ஆபத்து என நினைப்பது தவறு.. : கமல்

ராணுவத்தில் சேர்ந்தால் உயிருக்கு ஆபத்து என நினைப்பது தவறு.. : கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasanகமல்ஹாசன் தயாரித்து இயக்கி நடித்த விஸ்வரூபம் 2 படம் நேற்று முன்தினம் ஆகஸ்ட் 10ல் ரிலீசானது.

அந்த படத்தை சென்னை கிண்டியில் உள்ள ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி கல்லூரியில் இராணுவ வீரர்களுடன் அமர்ந்து இன்று கமல் கண்டுகளித்தார்.

இதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன் பேசியபோது, விஸ்வரூபம் படத்துக்காக தமக்கு ராணுவப் பயிற்சி அளித்ததற்காக இந்திய ராணுவத்துக்கும் பாதுகாப்புத் துறைக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

ராணுவத்தில் சேர்ந்தால் உயிருக்கு ஆபத்து என நினைப்பது தவறு என்று கூறிய கமல், நாடு காக்கும் வேலை முக்கியமானது என தெரிவித்தார்.

தமிழன் மட்டுமே ஆளவேண்டும் என சீறும் சிநேகனே இதை கவனிச்சீங்களா?

தமிழன் மட்டுமே ஆளவேண்டும் என சீறும் சிநேகனே இதை கவனிச்சீங்களா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Lyricist Snehan angry attack speech on TN Govt in DhaDha 87 audio launchசாருஹாசனின் மிரட்டல் நடிப்பில் உருவாகியுள்ள படம் தாதா 87.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கவிஞர் சிநேகன் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.

அப்போது அவர் பேசும்போது தமிழக அரசை கடுமையாக சாடினார். எதுக்காக இந்த அரசாங்கம் உள்ளது? என அனல் பறக்க பேசினார்.

காவிரி நீருக்காக பல வருடங்களாக தமிழகத்தில் போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் மழை வெள்ளதால் அணைகள் நிரம்பி காவிரி நீர் வந்துவிட்டது.

ஆனால் இங்கே நீரை சேமிக்க வழியில்லை. எல்லாம் வீணாக கடலில் போய் சேர்கிறது.

நீரை சேமிக்க முடியாதவர்கள் எதற்காக ஆட்சியில் இருக்க வேண்டும். எதுக்குடா? நீங்க இருக்கீங்க என்றார்.

அவர் மேலும் பேசும்போது…

தமிழ் நாட்டில் யார் வேண்டுமானாலும் வாழட்டும். ஆனால் தமிழன்தான் இந்த தமிழகத்தை ஆள வேண்டும் என வலியுறுத்தி பேசினார்.

அங்கேதான் அவருடைய கருத்துக்கள் முரண்பாடாக உள்ளது.

தற்போது தமிழகத்தை ஆளும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வமும் தமிழர்கள் தானே. அவர்கள் ஆளும் தமிழகம் எப்படியுள்ளது?

தமிழக அரசை குறை சொல்லும் சிநேகனுக்கு அவர்கள் (ஈபிஎஸ், ஓபிஎஸ்) இருவரும் தமிழர்கள் என்பது தெரியாதா?

தமிழர்கள் ஆளும் தற்போதைய தமிழகத்தின் நிலை அவருக்கு தெரியாதா?

ஐயா சிநேகன் அவர்களே. இதற்கு உங்கள் பதில் என்னவோ..?

Lyricist Snehan angry attack speech on TN Govt in DhaDha 87 audio launch

தமிழன் என்று முழங்கும் ஜாக்குவார் தங்கமே இதெல்லாம் ஓவரா இல்ல.?

தமிழன் என்று முழங்கும் ஜாக்குவார் தங்கமே இதெல்லாம் ஓவரா இல்ல.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jaguar Thangam may act work in Many languages But he will not allow others to work in Tamilநீண்ட இடைவெளிக்கு பின்னர் சாருஹாசன் கதையின் நாயகனாக நடித்துள்ள படம் தாதா 87.

இதில் ஜனகராஜ் மற்றும் கீர்த்தி சுரேஷின் பாட்டி ஆகியோர் நடித்துள்ளனர்.

ஸ்ரீவிஜய் ஜி இயக்கிள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள காசி திரையரங்கில் இன்று நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகை கௌதமி, ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம், கவிஞர் சிநேகன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

அப்போது வழக்கம்போல ஜாக்குவார் தங்கம் தமிழன் தமிழன் என்று முழங்கிக் கொண்டிருந்தார்.

தமிழ் சினிமாவில் தமிழன்தான் இயக்குனராக வேண்டும். தமிழ் சினிமாவில் தமிழன்தான் நாயகனாக நடிக்க வேண்டும்… இப்படியாக தமிழன் மட்டும்தான் தமிழ் சினிமாவில் இருக்க வேண்டும் என்பது போல ஆவேசமாக பேசினார்.

இறுதியாக தமிழன் வென்றே தீருவான் என தொண்டை கிழியும் வகையில் உரக்கமாக பேசினார்.

அவருடைய தமிழ் உணர்வை நிச்சயம் பாராட்ட வேண்டும்தான். ஆனால் இப்படி தமிழன் மட்டுமே தமிழ் சினிமாவில் இருக்க வேண்டும் என்றால் இவர் எதற்காக மற்ற மொழி படங்களில் பணி புரிந்தார்.

ஜாக்குவார் தங்கம் அவர்கள் இதுவரை 1000க்கும் மேற்பட்ட ஸ்டண்ட் மாஸ்டராக பணி புரிந்துள்ளார்.

அதில் 500 படங்கள் மட்டுமே தமிழ் படங்கள். மற்ற அனைத்தும் மற்ற மொழி படங்களே.

அப்படி என்றால் இந்த தமிழ் உணர்வு இவருக்கு இந்த 60 வயதில்தான் வந்ததா? அல்லது இனி சினிமாவில் நாம் பணி புரிய போவதில்லை என நினைத்து பேசுகிறாரா?

மொழி மதம் அனைத்தையும் கடந்ததுதான் கலை என்பார்கள். ஆனால் இவர் இப்படி மேடைக்கு மேடை பேசுவது எந்த விதத்தில் நியாயம் சாரே..?

Jaguar Thangam may act work in Many languages But he will not allow others to work in Tamil

ஆராஸ் சினிமாஸ் தயாரிப்பில் *RX 100* தமிழ் ரீமேக்கில் ஆதி

ஆராஸ் சினிமாஸ் தயாரிப்பில் *RX 100* தமிழ் ரீமேக்கில் ஆதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Aadhi plays the lead in the Tamil remake of RX 100சமீபத்தில் தெலுங்கில் வெளி வந்து மாபெரும் வெற்றி பெற்ற “ஆர் எக்ஸ் 100″ என்ற படத்தின் தமிழ் பதிப்பில் கதாநாயகனாக நடிக்க தற்போது ஆதி நடிக்க உள்ளார்.

இளைஞர்களை பெருமளவில் கவர்ந்த இந்த படம் தெலுங்கு திரை உலகில் பல்வேறு சாதனைகளை முறியடித்து இருக்கிறது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் தமிழாக்கம் உரிமையை பலத்த போட்டிகிடையே பிரபல திரைப்பட விநியோக நிறுவனமும், அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா, அதர்வா ஹன்சிகா இணையாக நடிக்கும் 100 ஆகிய படங்களை தயாரிக்கும் நிறுவனமுமான ஆரா சினிமாஸ் நிறுவனர் மகேஷ் கோவிந்தராஜ் பெற்று உள்ளார்.

” விநியோக துறையில் ஒரு நம்பகத்தன்மையான நிறுவனம் என்று பெயர் பெற்றாலும், திரைப்பட தயாரிப்பில் எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. ராஜ தந்திரம் வீரா நடிக்கும் “அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா, அதர்வா – ஹன்சிகா நடிப்பில் சாம் அன்டன் இயக்கும் 100 ஆகிய இரு படங்களும் படப்பிடிப்பு முடிந்து வெளிவரும் தருவாயில் உள்ளது.

நடிகர் ஆதியுடன் எனக்கு நீண்ட நாட்களாக பழக்கம். நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்கிற ஆசை எங்கள் இருவருக்கும் இருந்தது. ஆனால் அதற்கேற்ற கதை கிடைக்கவில்லை.

இதே நேரத்தில் தெலுங்கில் ஆர் எக்ஸ் 100 என்ற படம் வெளி வந்து பல சாதனைகளை முறியடித்து ஓடிக் கொண்டு இருந்தது. ஆதி என்னை அழைத்து படம் பார்க்க சொன்னார்.எங்கள் இருவருக்கும் படம் மிகவும் பிடித்து இருந்தது.

தமிழ் உரிமை வாங்க ஏகப்பட்ட போட்டி. தீவிர முயற்சியுடன் இந்தப் படத்தின் உரிமையை நான் பெற்றுக் கொண்டேன். இளைய சமுதாயத்தினருக்கு மிகவும் பிடிக்கும் கதை அம்சம் கொண்டு உள்ள படம் இது. ரசிகர்களின் நாடி துடிப்பை அறிந்த ஒருவர் தான் இந்த படத்தை இயக்க வேண்டும். அதற்கான தேடல் நடை பெற்றுக் கொண்டு இருக்கிறது.

இந்த படத்தின் கதாநாயகி பாத்திரம் மிகவும் சவாலானது. கதாநாயகி தேர்வு கூட நடைபெறவுள்ளது.

இந்த மாத இறுதிக்குள் மற்ற தொழில் நுட்ப கலைஞர்கள், மற்ற நடிக நடிகையர் தேர்வு நடைபெறும். செப்டெம்பர் மாதம் இறுதியில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

அதிவிரைவில் உருவாகி ரசிகர்களின் உள்ளத்தில் சீறி பாயும் ” ஆர் எக்ஸ் 100″ ஏன்று உற்சாகத்துடன் சொன்னார் ஆரா சினிமாஸ் மகேஷ் கோவிந்தராஜ்.

Actor Aadhi plays the lead in the Tamil remake of RX 100

பார்வையற்றவர்களுக்கு டெலி மீடியா மூலம் சிகிச்சை; அரசு உதவுமா.?

பார்வையற்றவர்களுக்கு டெலி மீடியா மூலம் சிகிச்சை; அரசு உதவுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tele Media treatment for Blind peoples Eye camp held at Tanjoreபாஜ மாநில இளைஞரணி துணை தலைவர் சதீஷ்குமார் போன்ஸ்லே தலைமையில், தஞ்சை மேம்பாலம் அருகில் உள்ள அரசு பார்வையற்றோர் உயர்நிலைப் பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.

பத்மஸ்ரீ விருது பெற்ற கண் மருத்துவர் நடராஜன், மாணவர்களுக்கு கண் பரிசோதனை செய்தார். இதில் 150 பார்வையற்ற மாணவர்கள் பங்கேற்றனர்.

இதை தொடர்ந்து பத்மஸ்ரீ விருது பெற்ற கண் மருத்துவர் நடராஜன் கூறுகையில், கண் பாதிப்பு பிறவி கோளாறினாலும், மாலை கண் நோயினால் தான் வருகிறது. உலகளவில் 35 மில்லியன் மக்களுக்கு சர்க்கரை நோய் உள்ளது.

அவர்கள் எல்லாம் கட்டாயம் கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மேலும், பார்வையற்ற மாணவர்களுக்கு டெலி மீடியா மூலம் மருத்துவ சிகிச்சையளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், பார்வையற்றவர்களுக்கு நவீன சிகிச்சை மூலம் பார்வை தெரியும் வகையில் அமெரிக்காவில் கண்டுபிடித்துள்ளனர்.

அதற்கான விலை ரூ.2 கோடியாகும். விலை அதிகமாக இருப்பதால் மத்திய அரசு தலையிட்டு அந்த மருந்தை குறைந்த விலைக்கு வாங்கி கொடுத்தால் பெரும்பாலோருக்கு பார்வை கிடைத்துவிடும் என்றார்.

Tele Media treatment for Blind peoples Eye camp held at Tanjore

*புலி* பட இளவரசியான ஹன்சிகாவுக்கு 50வது படத்தில் *இளவரசி* பட்டம்

*புலி* பட இளவரசியான ஹன்சிகாவுக்கு 50வது படத்தில் *இளவரசி* பட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Hanshika got Princess title from her 50th movie Mahaசினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 50 படங்களை கடந்துவிட்டார் ஹன்சிகா.

அவரது 50வது படத்திற்கு “மஹா”என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த தலைப்பை தனுஷ் வெளியிட்டார்.
ஒது ஒரு க்ரைம் திரில்லர் பாணியில் உருவாகவுள்ளது.

அறிமுக இயக்குனர் U R ஜமீல் இயக்கத்தில், ஜிப்ரான் இசை அமைப்பில், etcetra entertainment என்கிற நிறுவனத்தின் சார்பில் மதியழகன் தயாரிக்கும் படம் இது.

ஒரு மாஸ் கதாநாயகனுக்குரிய தலைப்பு இது என்று அனைவரும் பாராட்டுவதாக கூறிய தயாரிப்பாளர் மதி அழகன் மேலும் கூறியதாவது ”

ஹன்சிகா தனது உச்ச நிலையில் இருந்து இறங்காமல் அங்கேய நிலைத்து நிற்கும் திறன் படைத்தவர். அவருடைய அபரிதமான அழகும் தனிப்பட்ட முறையில் அவர் செய்து வரும் தொண்டுகளும், ரசிகர்கள் மனதில் அவருக்கு நிலையான இடத்தை தந்து இருக்கிறது.

அவருடைய இமேஜை மனதில் வைத்து, அவருடன் இரண்டு படங்கள் இணை இயக்குனராக பணியாற்றி உள்ள இயக்குனர் U R ஜமீல் கதையை அவரை வைத்து எழுதி இருக்கிறார்.

இந்த கதை hollywood படங்களுக்கு சவால் விடும் திறன் படைத்தது. அவருடைய கதைக்கு பொருத்தமானவர் ஹன்சிகா தான் என்று ஆணித்தரமாக நம்பி இருக்கிறார்.

ஒரு தயாரிப்பாளராக அவருடைய கருத்தை நான் ஆமோதிக்கிறேன். என் நிறுவனத்தின் சார்பில் தரமான படங்கள் மட்டுமே தருவது என்பதில் நான் தீர்மானமாக இருக்கிறேன்.

அதற்கு உகந்ததாக “மஹா” இருக்கும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை.

தமிழ் திரை ரசுகர்களுக்கு இந்த திரைப் படம் மறக்க முடியாத படமாக இருக்கும் என்பதிலும், இந்த படத்துக்கு பிறகு ஹன்சிகா ஒரு இளவரசியாக தமிழ் திரை உலகில் நீடிப்பார் என நம்புகிறேன்.

“மஹா”திரைப்படம் மூலம் ஹன்சிகாவுக்கு இளவரசி என்ற பட்டம் வழுங்குவதில் எங்கள் படக் குழுவினருக்கு பெருமை” என்கிறார் தயாரிப்பாளர் மதிஅழகன்.

விஜய் நடிப்பில் உருவான புலி படத்தில் இளவரசி மாதங்கினியாக ஹன்சிகா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Hanshika got Princess title from her 50th movie Maha

hanshika 50 titled maha

More Articles
Follows