பரத் – ரகுமான் இணையும் ‘சமாரா’..; மூன்று மொழிகளில் உருவானது

பரத் – ரகுமான் இணையும் ‘சமாரா’..; மூன்று மொழிகளில் உருவானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Peacock Art House என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் M.K.சுபாகரன், அனுஜ் வர்கீஸ் வில்யாடத் ஆகியோர் இணைந்து பிரமாண்டமாக தயாரித்துள்ள படம் ‘சமாரா’.

இத்திரைப்படம் மலையாளம், தமிழ், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் தயாராகியுள்ளது.

சார்லஸ் ஜோசப் இயக்கியுள்ள இந்த படத்தில் பரத் மற்றும் ரகுமான் முதன்மை நாயகர்களாக நடித்துள்ளனர்.

இவர்களுடன் பிசால் பிரசன்னா, கேனஸ் மேத்திவ் ஜார்ஜ், சோனாலி சூடன், டினிஜ் வில்யா, ஸ்ரீ லா லக்ஷ்மி, சினு சித்தார்த், சஞ்சன திபு, ராகுல், பினோஜ் டோஜ், கோஜ்னி கிருஷ்ணா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஹிந்தியில் ‘பஜ்ரங்கி பாய்ஜான்’, ‘ஜோலி எல்எல்பி-2’, தமிழில் ‘விஸ்வரூபம்-2’ ஆகிய படங்களின் மூலம் பிரபலமான பாலிவுட் நடிகர் மீர் சர்வார் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஒளிப்பதிவு – சினு சித்தார்த் , இசை – தீபக் வாரியர், பின்னணி இசை – கோபி சுந்தர், படத் தொகுப்பு – R.J.பாப்பன், சண்டை இயக்கம் – தினேஷ் காசி, நடன இயக்கம் – டேனி பவுல், தயாரிப்பு – M.K. சுபாகரன், அனுஜ் வர்கீஸ். வசனம் – கதை, திரைக்கதை, இயக்கம் – சார்லஸ் ஜோசப்.

இந்த நிலையில் இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Eye catchy First Look of Samara goes viral

வடசென்னை பின்னணியில் skm சினிமாஸ்-இன் புதிய படம்

வடசென்னை பின்னணியில் skm சினிமாஸ்-இன் புதிய படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கத்திலும், தரமான மற்றும் வித்தியாசமான கதைக்களங்களை தயாரிக்கும் நோக்கத்திலும் தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறது எஸ்.கே.எம் சினிமாஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தின் மூலம் தொடர்ந்து பல படங்களை நடிகரும் தயாரிப்பாளருமான அகில் திட்டமிட்டுள்ளார் .

இந்த நிறுவனத்தின் முதல் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் விஜய் ஆனந்தன் இயக்குகிறார்.

நாளைய இயக்குநர்கள் போட்டியில் கலந்துக்கொண்டு பாராட்டு பெற்ற விஜய் ஆனந்தன், பல குறும்படங்கள் இயக்கி தன்னை நிரூபித்திருக்கிறார்.

சினிமா மீது உள்ள ஆர்வத்தினால் யாரிடமும் உதவியாளராக பணியாற்றாமல் சினிமாவைக் கற்றுக்கொண்டவர் எஸ்.கே.எம சினிமாஸ் நிறுவனத்தின் முதல் திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார்.

வட சென்னையை பின்னணியாக கொண்ட கேங்ஸ்டர் படமாக உருவாக உள்ள இப்படத்திற்கு ’இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’, ‘போத்தனூர் தபால் நிலையம்’, ‘நட்சத்திரம் நகர்கிறது’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த தென்மா இசையமைக்கிறார்.

ஆரி ஒளிப்பதிவு செய்ய, ராம் படத்தொகுப்பு செய்கிறார். மக்கள் தொடர்பாளர்களாக தர்மதுரை & சுரேஷ் சுகு பணியாற்றுகிறார்கள்.

ஐந்து இளைஞர்களாக தமிழ் சினிமாவின் கவனத்தை ஈர்த்திருக்கும் வளர்ந்து வரும் இளம் நடிகர்கள் நடிக்க இருக்கிறார்கள். நாயகியாக பிரபல நடிகை ஒருவர் நடிக்க இருக்கிறார்.

இன்று (ஆகஸ்ட் 4) சென்னை பிரசாத் லேபில் எஸ்.கே.எம் சினிமாஸ் நிறுவனம் மற்றும் அந்நிறுவனம் தயாரிக்கும் முதல் படமான ‘புரொடக்‌ஷன்ஸ் 1’ துவக்க விழா பிரமாண்டமாக நடைபெற்றது.

இதில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்துக்கொண்டு எஸ்.கே.ம் சினிமாஸ் நிறுவனத்தையும், படக்குழுவினரையும் வாழ்த்தினார்கள்.

The dawn of SKM Cinemas in the presence of film celebrities

யார் சூப்பர் ஸ்டார்.? விஜய்யின் அரசியல் பிரவேசம்.,; பிரபு & அருண் விஜய் கருத்து

யார் சூப்பர் ஸ்டார்.? விஜய்யின் அரசியல் பிரவேசம்.,; பிரபு & அருண் விஜய் கருத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் இளைய திலகம் பிரபு புதுச்சேரியில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் பேசியதாவது..

சூப்பர் ஸ்டார் என்றால் அண்ணன் ரஜினிகாந்த் மட்டும்தான்.

ஆனால் அவரே ஒரு முறை சொல்லி இருக்கிறார் என் இடத்திற்கு நாளை வேறு யாராவது வரலாம் என தெரிவித்திருக்கிறார்.

‘தேவர் மகன்’ படத்தில் பெரிய தேவர் ஐயா மறைவுக்குப் பின் அவரது இடத்திற்கு சின்ன தேவரய்யா வருவார்.

ஆனால் என்னைப் பொறுத்தவரை ஒரே சூப்பர் ஸ்டார் என்றால் எங்கள் அண்ணன் ரஜினி மட்டும்தான்.

இந்த நிலையில் இன்று ஆகஸ்ட் 4ஆம் தேதி… நடிகர் அருண் விஜய் திருவண்ணாமலையில் அண்ணாமலையாரை தரிசித்த பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவரிடமும் இந்த சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து கேள்வி கேட்கப்பட்டபோது.. “நான் ரஜினிகாந்த் ரசிகன்” என்று அதிரடியாக பதில் கொடுத்தார்.

மேலும் விஜய்யின் அரசியல் வருகை குறித்து பிரபு மற்றும் அருண் விஜய் ஆகிய இருவருமே ஒரே கருத்தை தெரிவித்திருந்தனர்.

“அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். இளைஞர்கள் வரவேண்டும் என்கிறார்கள். எனவே விஜய்யும் வரலாம்.

நல்லது செய்ய வேண்டும் என நினைத்து விஜய் வருகிறார். எனவே அவரை வரவேற்போம் என்ற கருத்தை இருவரும் பேசி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘மாஞ்சா வேலு’ என்ற திரைப்படத்தில் பிரபு மற்றும் அருண் விஜய் ஆகிய இருவரும் அண்ணன் தம்பியாக நடித்திருந்தனர் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Prabu and Arun Vijay speaks about Vijay politics and Superstar title

‘வாரிசு’ பட விநியோகத்தில் வரி ஏய்ப்பு.; என்ன செய்யப் போகிறார் விஜய்.?

‘வாரிசு’ பட விநியோகத்தில் வரி ஏய்ப்பு.; என்ன செய்யப் போகிறார் விஜய்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘வாரிசு’.

இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், எஸ் ஜே சூர்யா, பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கடந்த ஜனவரி 11-ம் தேதி தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகியது.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், ‘வாரிசு’ பட விநியோகத்தில் நடந்த வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக தகவல்கள் வந்ததுள்ளன. இதோ அது தொடர்பான ஆதாரங்கள்…

வாரிசுவாரிசு

Tax fraud in Vijays Varisu movie distribution

3 மாநிலங்களில் ‘சுப்ரமணியபுரம்’ ரீ-ரிலீஸ்.; சசிகுமார் – சமுத்திரக்கனி கேக் வெட்டி கொண்டாட்டம்

3 மாநிலங்களில் ‘சுப்ரமணியபுரம்’ ரீ-ரிலீஸ்.; சசிகுமார் – சமுத்திரக்கனி கேக் வெட்டி கொண்டாட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி சசிகுமார் இயக்கத்தில் வெளியான படம் ‘சுப்ரமணியபுரம்’.

இப்படத்தில் ஜெய், சசிகுமார், சமுத்திரகனி, சுவாதி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ஜேம்ஸ் வசந்தன் இசையமைப்பில் உருவான படத்துக்கு எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

‘சுப்ரமணியபுரம்’ படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஆகஸ்ட் 4-ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் ரீ-ரிலீசாக உள்ளது என படக்குழு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், 15 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மீண்டும் ‘சுப்ரமணியபுரம்’ படம் தமிழகம், கர்நாடகா, கேரளாவில் ரிலீஸ் செய்யப்பட்டது.

வடபழனி கமலா தியேட்டரில் இன்று காலை திரையிடப்பட்ட ‘சுப்ரமணியபுரம்’ படத்தை பார்ப்பதற்கு சசிகுமார், சமுத்திரக்கனி, ஜெய் ஆகியோர் வந்தனர்.

அதன்பின்னர் ‘சுப்ரமணியபுரம்’ படக்குழு கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

சுப்ரமணியபுரம்

The crew of ‘Subramaniapuram’ re release celebrated by cutting a cake

ஜோதி எப்போதும் என் இதயத்திற்கு நெருக்கமானவள்.. – ரவீனா ரவி

ஜோதி எப்போதும் என் இதயத்திற்கு நெருக்கமானவள்.. – ரவீனா ரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான ‘மாமன்னன்’ படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ், ரவினா ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

‘மாமன்னன்’ படம் கடந்த ஜூன் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது.

பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், ‘மாமன்னன்’ படத்தில் ரத்னவேலுவாக நடித்த ஃபகத் பாசிலின் மனைவியாக ஜோதி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்த ரவினா ரவி.

ரவினா ரவி தற்போது அந்த பாத்திரம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை நெகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார்.

அதில், “இந்த கதாபாத்திரத்திற்கு இவ்வளவு அன்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை; ஜோதி எப்போதும் என் இதயத்திற்கு நெருக்கமாக இருப்பாள். நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

ரவீனா ரவி

raveena ravi tweet about maamannan movie his character

More Articles
Follows