BUY 1 GET 2 ஆயிரம் பொற்காசுகள்.; KR-க்கு கமல் பாராட்டு

BUY 1 GET 2 ஆயிரம் பொற்காசுகள்.; KR-க்கு கமல் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தயாரிப்பாளர் இயக்குநர் கே ஆர் தனது ‘ஆயிரம் பொற்காசுகள்’ திரைப்படத்திற்கு அறிமுகப்படுத்தியுள்ள புதுமையான ‘ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம்’ திட்டத்திற்கு உலகநாயகன் கமல் ஹாசன் பாராட்டு

தயாரிப்பாளர் கே ஆர் அவர்களின் கடிதம்…

உயர்திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு….

வணக்கம்… வருகிற 22 ஆம் தேதி “ஆயிரம் பொற்காசுகள்” என்ற நகைச்சுவை படத்தை தமிழ்நாடு முழுவதும் ரிலீஸ் செய்கிறேன். விதார்த், சரவணன், அருந்ததி நாயர் உட்பட பலர் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர்.

தற்போதைய சூழ்நிலையில் பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கு மட்டுமே தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வருகின்றனர். மற்ற நடிகர்களின் படங்களுக்கு முதல் நாள் முதல் காட்சிக்கே ரசிகர்கள் வருவதில்லை.

அதனால் பல தியேட்டரில் காட்சிகள் ரத்து (show break) ஆகிவிடுகிறது. இதனால் ஒன்று இரண்டு நாட்களிலேயே அந்த படம் தூக்கப்பட்டு விடுகிறது.

சில படங்கள் நன்றாக இருப்பதாக விமர்சனங்கள் மூலம் தெரிய வந்தாலும் ரசிகர்கள் படம் பார்க்க வரும்போது படம் இருப்பதில்லை. இத்தகைய கடினமான சூழ்நிலையை எதிர்கொள்வதற்கு நாம் ஏதாவது செய்தாக வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு புதிய முயற்சியை முன்னெடுத்திருக்கிறேன்.

அதாவது அனைத்து தியேட்டர்களிலும் முதல் நாள் முதல் காட்சிக்கு மட்டும் “ஒரு டிக்கெட் வாங்கினால் மற்றொரு டிக்கெட் இலவசம்’ என்ற திட்டத்தை அறிவித்திருக்கிறேன்.

ஆயிரம் பொற்காசுகள்

இது ரசிகர்கள் மத்தியிலும் தயாரிப்பாளர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

எப்போதுமே திரையுலகில் புதுமைகளை புகுத்தி புரட்சி செய்வதில் முன்னணியில் நிற்பது நீங்கள் தான். திரைத் தொழிலை காப்பாற்றத் துடிக்கும் தங்களுக்கு இதன் அவசியம் கண்டிப்பாக புரியும் என்று நம்புகிறேன்.

எனவே இந்த முயற்சி ரசிகர்களை சென்றடைந்து முதல் நாள் முதல் காட்சிக்கு கூட்டம் வருமானால் அது மற்ற சிறிய படங்களுக்கும் பேருதவியாக இருக்கும். எனவே இந்த முயற்சிக்கு தாங்கள் ஆதரவு தெரிவித்தால் நிச்சயமாக இந்தப் படம் வெற்றி பெறும். இந்த கான்செப்ட் வெற்றி பெற்றால் அது ஒட்டுமொத்த திரையுலகின் வெற்றியாக உருவெடுக்கும் என்பது உறுதி.

நன்றி நன்றி..

இப்படிக்கு,

கே ஆர்

**

*உலகநாயகன் கமல்ஹாசன் பாராட்டு செய்தி:*

சிறப்பான முயற்சி… தடைகளை உடைத்து வெளிவரும் சிறிய படங்களுக்கு நான் எப்போதுமே ஆதரவாளன் தான். நானும் அப்படி வந்தவன் தான். எதிர்கால நட்சத்திரங்கள் சிறிய படங்களில் இருந்தோ அல்லது பெரிய பட்ஜெட் படங்களில் சிறிய வேடங்களில் நடிப்பதன் மூலமாகவோ தான் உருவாகிறார்கள். சிறியது என்பது அழகானது மட்டுமல்ல நிச்சயமாக ஒருநாள் பெரியதாக வளரக்கூடியது. ஆனால் பெரியது மேலும் பெரியதாகி ஒரு புள்ளியில் நின்று விடும். வாழ்த்துக்கள்.

– கமல்ஹாசன்

All the very best . I am always in favour of small but path breaking films . That is how I got my break . The future stars will rise from smaller films only or at least from smaller roles in bigger films . Small is not only beautiful but will one day definitely will grow to be big. Big will get bigger and will stop at a particular point. Congrats

**
ஆயிரம் பொற்காசுகள்

Kamalhassan appreciates Aayiram porkaasugal prouucer KR

பணம் மட்டும்தான் வாழ்க்கையா? இளையராஜா இசையில் உருவான ‘தினசரி’

பணம் மட்டும்தான் வாழ்க்கையா? இளையராஜா இசையில் உருவான ‘தினசரி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ரீகாந்த்- சிந்தியா லெளர் டே ஜோடியாக நடிக்கும் புதிய படத்தின் பெயர் ” தினசரி “.

மேலும் இதில் எம்.எஸ். பாஸ்கர், பிரேம்ஜி, சாந்தினி, மீரா கிருஷ்ணன், வினோதினி, சாம்ஸ், குமார் நடராஜன், சரத், நவ்யா, இன்னும் பலர் நடிக்கின்றனர்.

இளையராஜா பாடல்கள் எழுதி இசையமைக்கும் இதற்கு ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவையும், ஜான் பிரிட்டோ கலையையும், சாம் சண்டை பயிற்சியையும், தினேஷ் நடன பயிற்சியையும் , பாலமுருகன்– சண்முகம் இருவரும் தயாரிப்பு மேற்பார்வையையும் கவனிக்கின்றனர்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி தமது முதல் படமாக இயக்கி வரும் சங்கர் பாரதி படத்தை பற்றி கூறியதாவது…

” மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சனைகளை எப்படி கையாள்வது.? குறிப்பாக இளைஞர்கள் பணம் இருந்தால்தான் வாழ்க்கை சிறக்கும் என்ற எண்ணத்தில் வாழ்க்கையை தொலைக்கிறார்கள்.

தினசரி

அதிலிருந்து எப்படி மீண்டு வருவது என்பதை நகைச்சுவையுடன் ஆக்சனையும் கலந்து விறு விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லி இருக்கிறேன்.

நாயகனாக நடிக்கும் ஸ்ரீகாந்த் ஜோடியாக அமெரிக்காவில் வாழும் சிந்தியா லெளர் டேவை கதாநாயகியாக நடிக்க வைத்துள்ளேன். பிரேம்ஜி, எம்.எஸ். பாஸ்கர் , மீரா கிருஷ்ணன், வினோதினி, முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளார்கள்.

இளையராஜா இசையில் முதல் பட இயக்குனர்களின் படங்கள் வெற்றி படங்களாகவே இருந்து வரும் சென்டிமெண்டில் இப்பொழுது நானும் இணைகிறேன். எனக்கு இது தான் முதல் படம்- இளையராஜா என்ற மாபெரும் சாதனையாளர் என்படத்திற்கு இசையமைப்பது நான் செய்த பாக்கியம்.” என்று கூறினார்.

500 படங்களுக்கு மேல் மக்கள் தொடர்பாளராக பணியாற்றி உள்ளவரும், ஆறு நேரடி தமிழ் திரைப்படங்களை தயாரித்தவருமான என். விஜயமுரளி தமது மகா மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் ” தினசரி ” திரைப்படத்தை தயாரிக்கிறார்.

படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ள “தினசரி ” படத்தில் இரண்டு பாடல்களுக்கு மாபெரும் அரங்குகள் அமைத்து படமாக்கி உள்ளனர்.
விரைவில் திரைக்கு வர உள்ளது ” தினசரி ” திரைப்படம்.

தினசரி

Thinasari movie starring Srikanth in ilaiyaraaja musical

பிராங் ஷோ ஃபிராடுகள்.: இனி யார் உதவி செய்வா.? மஹானாவை அடித்த விஜய் விஷ்வா

பிராங் ஷோ ஃபிராடுகள்.: இனி யார் உதவி செய்வா.? மஹானாவை அடித்த விஜய் விஷ்வா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராயல் என்டர்பிரைசஸ் சார்பில் குமாரதாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கும்பாரி’. இளைஞர்களின் நட்பு மற்றும் அண்ணன் தங்கை பாசத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தை கெவின் ஜோசப் எழுதி இயக்கியுள்ளார்.

காதலையும் நட்பையும் பற்றிப் பேசும் காமெடி ஆக்ஷன் படம் ‘கும்பாரி’

நெய்தல் நிலப் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் ‘கும்பாரி’.

இந்த படத்தில் விஜய் விஷ்வா, நலீப் ஜியா, மஹானா சஞ்சீவி , ஜான்விஜய், பருத்திவீரன் சரவணன், சாம்ஸ், மதுமிதா, செந்தி குமாரி, காதல் சுகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் கெவின் ஜோசப்.

ஒளிப்பதிவாளராக பிரசாத் ஆறுமுகம், இசை அமைப்பாளர்களாக ஜெயபிரகாஷ், ஜெய்சன் பிரித்திவி ஆகியோர், படத்தொகுப்பாளராக டி.எஸ்.ஜெய், நடன இயக்குநராக ராஜுமுருகன், சண்டை இயக்குநராக மிராக்கல் மைக்கேல், கலை இயக்குநராக சந்தோஷ் பாப்பனாங்காடு, பாடல் ஆசிரியர்களாக வினோதன், அருண் பாரதி, சீர்காழி சிற்பி ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

ஆதரவற்ற ஒருவனும் அனாதைச் சிறுவனும் சிறு வயதிலிருந்து நட்பு கொள்கிறார்கள். பிறகு அது இறுகி உறுதியான பிணைப்பாக மாறுகிறது.மீன்பிடிக்கும் தொழிலைச் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள்.

ஒரு நாள் வேறு ஊரைச் சேர்ந்த ஓர் இளம்பெண்ணை ஒரு ரவுடிக் கும்பல் துரத்துகிறது. அவள் கண்ணில் படுபவர்களிடம் எல்லாம் உதவி கேட்கிறாள்.
இதைப் பார்த்து மனம் பதைபதைத்துப் பரிதவித்தாலும் உதவ வராமல் தயங்கி நிற்கிறார்கள்.

கும்பாரி

என்னைக் காப்பாற்ற யாருமே இல்லையா என்று கதறுகிறாள் அவள்.ஆனால் யாரும் வரவில்லை.
அனைவரும் தயங்கி நிற்கிறார்கள்.

இது நாயகனுக்குத் தெரிகிறது அவளும் நாயகனிடம் முறையிடுகிறாள். அவன் அவளைத் துரத்தி வந்த அந்தக் கும்பலை அடித்து துவம்சம் செய்கிறான்.

அடி வாங்கிய அவர்களோ பதில் விளைவு காட்டாமல் சிரிக்கிறார்கள்.நாயகன் புரியாமல் நிற்கிறான்.

இதில் என்ன கொடுமை என்றால் அந்த, துரத்தப்பட்ட இளம் பெண்ணும் சிரிக்கிறாள்.காரணம் அது ஒரு பிராங்க் ஷோவாம். இப்படி பொதுமக்கள் உணர்ச்சிகளோடு விளையாடும் அவர்களின் வியாபார நோக்கமறிந்து கொதிக்கிற நாயகன்,இப்படிப் போலியாக நடிக்கும் செயல்களால் உண்மையான ஆபத்து வரும்போது யாரும் காப்பாற்ற வர மாட்டார்கள் என்று நாயகியை ஓங்கி அறைந்து விடுகிறான்.

இப்படிப்பட்ட வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்ற வெளிப்படையான குணம் கொண்ட நாயகன் மீது காதலில் விழுகிறாள்.

அவள்காதலுக்கு அண்ணன் எதிர்ப்பு தெரிவிக்க காதல் ஜோடி ஊரை விட்டு ஓட… அதன்பிறகு அவர்களுக்குள் என்ன நடக்கிறது என்பதுதான் ‘ கும்பாரி’ படத்தின் கதை.

படம் பற்றித் தயாரிப்பாளர் குமாரதாஸ் பேசும்போது,…

“இது ஒரு பயணத்தில் செல்லும் காதல் கதை. சிவகார்த்திகேயன் நடித்த ‘மனம் கொத்திப் பறவை ‘போல் காதலர்கள் செய்யும் பயணம் தான் இப்படம்.. காதல், நட்பு, நகைச்சுவை, ஆக்சன் என அனைத்தும் கலந்த முழு நீள எண்டர்டெய்னராக இப்படம் உருவாகி உள்ளது என்கிறார்.

கும்பாரி

கும்பாரி என்றால் குமரி மண்ணின் வட்டார மீனவ மக்கள் வழக்கில் நண்பன் என்று பொருளாம்.

இந்தப் படம் ஒரு காதல் கதை தான் என்றாலும் நட்பை பற்றியும் இப்படம் பேசுகிறது.

நட்பைப் பற்றி இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் ஒரு நட்பதிகாரமே படைக்கும் வகையில் உள்ளது.

குமரி மண்ணின் அழகும், மண்மணம் மணக்கும் மொழியும், பாடல்களும் படத்திற்கு வேறு நிறம் காட்டுகின்றன.

இப்படத்தில் காதல், நகைச்சுவை, நட்புடன் கலந்து சமகாலச் சமூகப் போக்கையும் பிரதிபலித்துக் கதை உருவாகியுள்ளது.

‘ கும்பாரி’ படத்தின் படப்பிடிப்பு கடலும் கடல் சார்ந்த இடங்களான கன்னியாகுமரி, நாகர்கோவில், முட்டம் ஆகிய கடற்கரைப் பகுதிகளிலும் கேரளாவில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதிகளிலும் நடைபெற்றுள்ளது.

ஒரே கட்டமாக 30 நாட்களில் படத்தை எடுத்து முடித்திருக்கிறார்கள் என்பது இவர்களின் திட்டமிடுதலுக்கு ஒரு சாட்சியாக விளங்குகிறது. கும்பாரி’ படத்தை ராயல் என்டர்பிரைசஸ் சார்பில் குமாரதாஸ் தயாரித்துள்ளார்.

‘கும்பாரி ‘திரைப்படம் 2024 ஜனவரி 5ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.. இப்படத்தினை 9V ஸ்டுடியோஸ் வெளியிடுகிறது.

கும்பாரி

Kumbaari movie deals with prank show frauds

சூப்பர் ஸ்டார் பட்டம் எல்லாம் பெருமையா? சூப்பர் ஆக்டர் செம..; பார்வதி ஓபன் டாக்

சூப்பர் ஸ்டார் பட்டம் எல்லாம் பெருமையா? சூப்பர் ஆக்டர் செம..; பார்வதி ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாளத்தில் பிரபலமான நடிகை பார்வதி. இவர் தமிழில் பூ படத்தில் நடித்து பிரபலமானவர்.

மேலும் ‘மரியான்’ உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் இவரின் சமீபத்தில் பேட்டியில் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து இவர் பேசியுள்ளதாவது.

‘சூப்பர் ஸ்டார்’ பட்டம் யாருக்கும் எதையும் கொடுக்காது. அதில் என்ன பெருமை. அதனால் என்ன லாபம்?. அந்தப் பட்டம் இமேஜைக் கொடுக்கிறதா என தெரியவில்லை.

சூப்பர் ஸ்டார் என்பதைவிட என்னை சூப்பர் ஆக்டர் என்று சொன்னால் நான் மகிழ்ச்சி. மலையாளத்தில் ஃபகத் ஃபாசில், ஆசிப் அலி, ரீமா கல்லிங்கல் ஆகியோரை சூப்பர் ஆக்டர் என்றும் சொல்லலாம்” என தெரிவித்துகிறார்.

பார்வதி

Actress Parvathi open talks about Superstar title

பிக் ஸ்க்ரீன் விருதிற்கு உலகத் திரைப்படங்களோடு இணைந்த ‘ஏழு கடல் ஏழு மலை’

பிக் ஸ்க்ரீன் விருதிற்கு உலகத் திரைப்படங்களோடு இணைந்த ‘ஏழு கடல் ஏழு மலை’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராம் இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி, சூரி நடித்த ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தை தயாரித்துள்ளார் சுரேஷ் காமாட்சி

இது குறித்து அவர் கூறியுள்ளதாவது…

படைப்புகள் திரைக்கு வரும் முன்பே அங்கீகாரம் பெறுதல் பெரும் உற்சாகத்தைக் கொடுக்கும். அப்படியொரு மானசீக மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது இயக்குநர் ராம் இயக்கியிருக்கும் “ஏழு கடல் ஏழு மலை”

எனது வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ராமின் அடுத்த படைப்பான ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் 53 வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் ‘பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில்’ தேர்வாகியிருப்பது மிகுந்த உத்வேகத்தை கொடுக்கிறது.

வருகிற 2024 ஜனவரி 25 முதல் பிப்ரவரி 4 வரை நடைபெறவுள்ள ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் முக்கிய போட்டிப் பிரிவான பிக் ஸ்க்ரீன் விருதிற்கு பல உலகத் திரைப்படங்களோடு ‘ஏழு கடல் ஏழு மலை’ போட்டியிடுவதில் பெருமை கொள்கிறோம்.

இதை சாத்தியமாக்கிய நிவின் பாலி, அஞ்சலி, சூரி மற்றும் இசையில் எப்போதுமே நுணுக்கமாக விளையாடும் யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவினை சிறப்பாகக் கையாண்டிருக்கும் ஏகாம்பரத்திற்கும், படத்திற்கு மிக பக்கபலமாக நின்ற ஆர்ட் டைரக்டர் உமேஷ் குமாருக்கும், ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்டண்ட் சில்வா, மற்றும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் தேர்வுக் குழுவிற்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நல்ல படைப்புகளுக்கு எப்போதும் ஆதரவு அளித்து வரும் ஊடகத்துறை நண்பர்களும் சினிமா ரசிகர்களும் ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்திற்கும் உங்களின் ஆதரவையும் ஊக்கத்தையும் அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்.
ஆண்டின் இறுதியில் இச்செய்தியை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
சர்வதேச அளவில் முதல் முறையாக சிறப்புக்குரிய ஒரு விருதிற்கான தேர்வில் எமது நிறுவனத்தின் படைப்பை உலக அரங்கில் கொண்டு நிறுத்தியுள்ள எங்கள் இயக்குநர் ராமிற்கு முதல் நன்றி.

நல்லவைகளை எதிர்பார்த்திருக்கும்
அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

அன்புடன்,
சுரேஷ் காமாட்சி

Ezhu Kadal Ezhu Malai joins with Big screen award film festival

‘தரைப்படை’யில் இணைந்த மூன்று ஹீரோக்கள் ஜீவா – பிரஜின் – விஜய்விஷ்வா

‘தரைப்படை’யில் இணைந்த மூன்று ஹீரோக்கள் ஜீவா – பிரஜின் – விஜய்விஷ்வா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரம்மாண்டமான பொருட்செலவில் ஏர்போர்ட் செட் போட்டுப் படமாகி இருக்கும் திரைப்படம் ‘தரைப்படை ‘

ஒரு படத்தின் கதை தொடங்கியவுடன் அந்த படத்தின் கதாநாயகன் யார் வில்லன் யார் என்று தெரிந்துவிடும்.

அப்படி வழக்கமான அதே வார்ப்பில் தான் எல்லா திரைப்படக்கதைகளும் அமைக்கப்படுகின்றன.படம் பார்க்கும் ரசிகர்களின் மனதில் இவர் ஹீரோ , இவர் வில்லன் என்று படம் தொடங்கிய சில காட்சிகளிலேயே தெரிந்துவிடும். ஆனால் ஒரு கதையில் யார் கதாநாயகன் யார் வில்லன் என்று தெரியாத வகையில் அந்தந்த கதாபாத்திரத்தின் கறுப்பு வெள்ளைப் பக்கங்களைப் புரட்டிக் காட்டப்படுகின்றன .

ரசிகர்களுக்கு யார் நேர்நிலை நாயகன்? யார் எதிர்மறை நாயகன் ? என்று புரியாது.

அப்படி ஒரு கதையாக எடுத்து உருவாகி இருக்கும் படம் தான்
‘தரைப்படை’ .

இது ஒரு கேங்ஸ்டர் சம்பந்தமான கதை. மல்டி லெவல் மார்க்கெட்டிங் எனப்படும் சங்கிலித் தொடர் சந்தைப்படுத்துதல் மூலம் ஒரு மோசடிக் கும்பல் மக்கள் பணத்தை அபகரிக்கிறது. அந்தக் கும்பலிடமிருந்து இந்த கேங்ஸ்டர் கும்பல் அந்தப் பணத்தைக் கைப்பற்றுகிறது.

இப்படி அந்தப் பணம் மாறி மாறி மனிதர்களிடம் போய்க் கொண்டிருக்கிறது. இறுதியில் எங்கே செல்லும் என்று சொல்ல முடியாத அளவிற்குப் பயணம் நிகழ்கிறது.படத்தின் கதையையும் காட்சிகளையும் பார்க்கும் போது யார் நல்லவன் ? யார் கெட்டவன்? என்று தெரியாத வகையில் விறுவிறுப்புடன் உருவாகி இருக்கும் படம் தான்
‘தரைப்படை’ .

இந்தப் படத்தை ராம்பிரபா இயக்கியுள்ளார். ஸ்டோனக்ஸ் நிறுவனத்தின் சார்பில் P.B. வேல்முருகன் தயாரித்துள்ளார்.

தரைப்படை

அது என்ன தரைப்படை?

அதாவது எளிய மக்களிடம் இருக்கும் ஒரு வன்முறைக் கும்பல் எப்படி கூட்டமாக இருந்து பிறருக்குத் தொல்லை கொடுக்கிறது?.திரை மறைவு வேலைகளையும் சட்டவிரோத காரியங்களையும் குழுவாக நின்று எப்படி சாதிக்கிறது? என்ற கருத்தைக் குறிப்பிடும் வகையில் தான் ‘தரைப்படை’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் ஜீவா , பிரஜின், விஜய் விஷ்வா என்று மூன்று கதாநாயகர்கள் நடித்திருக்கிறார்கள்.

அந்த மூன்று நாயகர்களும் அவரவரும் தங்களுக்கான அடையாளங்களைத் தேடிக்கொண்டிருப்பவர்கள்.

ஜீவா நடித்த ‘கொம்பு’ படத்தில் அவர் கதாபாத்திரம் பேசப்பட்டது. இந்த ஜீவா, ரஜினி ரசிகர்களிடம் நன்கு பிரபலமானவர் .ரஜினி போல் மேனரிசம் காட்டுவதில் தனக்கென தனி இடம் பிடித்தவர்.

அதேபோல நல்ல கதையைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகராக பிரஜின் இருக்கிறார் .அவர் நடித்த ‘D3’ திரைப்படம் தமிழ்நாட்டை விடவும் கேரளாவில் அதிக வசூல் பெற்றுத் தந்துள்ளது.

விஜய் விஷ்வா சமூக சேவைகள் மூலமும் சில குறிப்பிடத்தக்க படங்களின் பாத்திரங்கள் மூலமும் மக்களிடம் நன்கு அடையாளப்படுத்தப்பட்டுள்ளவர்.

ஜீவா - பிரஜின் - விஜய்விஷ்வா

இப்படி தனித்தனியான அடையாளம் பெற்ற மூன்று பேரும் கதாநாயகர்களாக நடித்திருக்கிறார்கள்.

அவர்களுக்கு ஜோடியாக மூன்று அறிமுக நிலை கதாநாயகிகளும் நடிக்கிறார்கள்.

படத்திற்காகக் கோடிக் கணக்கில் செலவழித்து கலை இயக்குநர் ரவீந்திரன் கைவண்ணத்தில் ஒரு பிரமாண்டமான ஏர்போர்ட் செட் போடப்பட்டுள்ளது .அதில் படத்தில் முக்கியமான காட்சிகள் படமாகி உள்ளன .

மிரட்டல் செல்வாவின் இயக்கத்தில் ஆறு சண்டைக் காட்சிகள் படமாகியிருக்கின்றன
இயக்குநர் ராம்பிரபாவுடன் சுரேஷ்குமார் சுந்தரம், மனோஜ் குமார் பாபு, ராம்நாத், ரவீந்திரன், மிரட்டல் செல்வா, S.V. ஜாய்மதி, ராக் சங்கர்,சரண் பாஸ்கர், ராஜன் ரீ,குருதர்ஷன், மேகமூட்டம் வைத்தி, நித்திஷ் ஸ்ரீராம் , பவிஷி பாலன்,ஸ்ரீ சாய் ஸ்டுடியோ, வெங்கட் எனப் பல்வேறு திறமைசாலிகளுடன் கூட்டணி சேர்த்துக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

படத்தின் கதை , மொழியைத் தாண்டி ரசிக்கப்படும் என்பதால் தமிழ் மட்டுமல்ல தெலுங்கு ,ஹிந்தி என்று பிற மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. இப்படி ‘தரைப்படை’ திரைப்படம் ஒரு பேன் இந்தியா படமாக உருவாகிக் கொண்டு இருக்கிறது. படத்தின் தொழில்நுட்பப் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன.

ஜீவா - பிரஜின் - விஜய்விஷ்வா

Jeeva Prajin Vijayviswa starrer Tharaipadai

More Articles
Follows