தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நீட் தேர்வு முறையால், மருத்துவம் படிக்காத முடியாத விரக்தியில் தற்கொலை செய்துக்கொண்ட மாணவி அனிதாவுக்கு சென்னையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
இதில் தமிழ் சினிமாவைச் சார்ந்த பல்வேறு இயக்குனர்கள், நடிகர்கள் என பலரும் கலந்துக் கொண்டர்.
இந்த நிகழ்வின் போது பத்திரிகையாளர்களிடம் காலா இயக்குனர் ரஞ்சித் பேசியதாவது…
“சமூகத்தில் யார் படிக்கலாம்? யார் படிக்கக் கூடாது? என்பதை முடிவு செய்ய மருத்துவக் கல்வி கொள்கை இருக்கிறது என நினைத்து பார்க்கும்போது மிகுந்த வேதனையளிக்கிறது.
+2 தேர்வில் அனிதா 1176 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார். அவருக்கு பொதுப்பிரிவிலேயே இடம் கிடைக்க கூடிய தகுதி உள்ளது.
இடஒதுக்கீட்டில் சிலர் எளிதாக படிக்கிறார்கள் என பல கூறியதை கேட்டு அந்த பெண் எரிச்சலைடைந்து தன்னை இந்தளவுக்கு தயார் படுத்தியிருக்கிறார்.
மாணவர்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பதை கேட்டறிய வேண்டும்.” என்று இயக்குனர் பா.ரஞ்சித் பேசினார்.
Kaala Director Ranjith makes his statement on Anithas suicide