தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
உதயநிதி தயாரித்து நாயகனாக நடித்துள்ள ‘மாமன்னன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் திரளான கோலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
கமல்ஹாசன், வெற்றிமாறன், விஜய் ஆண்டனி, ரஞ்சித், சிவகார்த்திகேயன், கவின், முருகதாஸ், எஸ்ஜே. சூர்யா, சூரி, பிரதீப் ரங்கநாதன், விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் பங்கேற்று உதயநிதியை வாழ்த்தி வருகின்றனர்.
இந்த மேடையில் மிஷ்கின் பேசும்போது..
நான் கமல் அவர்களைப் பற்றி பேசாத நாளே இருக்காது. அவருக்கு நாம் எல்லாரும் எழுந்து நின்று மரியாதை கொடுக்க வேண்டும் என்றார். அதன்படி அரங்கமே எழுந்து நின்று கமல்ஹாசன் அவர்களுக்கு மரியாதை கொடுத்தது.
எஸ் ஜே சூர்யா மேடையில் பேசும்போது…
உலகநாயகனை நேர்ல பாக்கற பாக்கியம் கிடைச்சுது மறக்க முடியாத தருணம். அத பற்றி இன்னொரு நாள் சொல்றேன்
எல்லாரும் 1,2,3 னு போட்டி போட்டுட்டு இருக்கும் போது நீங்க போய் ஆல்ரெடி மேல போய் பர்ஸ்ட்ல உக்கார்ந்து இருக்கீங்க” என்றார்.
உங்களைப் பற்றி பேச இந்த மேடை எல்லாம் பத்தாது.. பேசிக் கொண்டே இருக்கலாம் என்று மேடையில் பேசும்போது கமல் அவர்களைப் பற்றி குறிப்பிட்டார் பிரதீப் ரங்கநாதன்.
நான் எல்லாருக்கும் பாட்டு எழுதிருக்கேன் உலகநாயகனை தவிர அவர் ஆல்ரெடி உச்சத்துல நம்பர் ஒன்ல இருக்காரு..
நான் பாட்டு எழுதினா இன்னும் பல நூறு கோடி பண்ணுவீங்க என கவிஞர் யுகபாரதி பேசினார்.
sj suryah funny speech at maamannan audio launch