சீயான் விக்ரம் படத்தை இயக்கும் சித்தார்த்தின் ஹிட் பட இயக்குனர்

சீயான் விக்ரம் படத்தை இயக்கும் சித்தார்த்தின் ஹிட் பட இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்ரம் நடிப்பில் உருவாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள படம் ‘தங்கலான்’.

ரஞ்சித் இயக்கி வரும் இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார்.

பல ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த ‘துருவ நட்சத்திரம்’ படம் நவம்பர் மாதம் 24ல் வெளியாக உள்ளது. விக்ரம் நடித்துள்ள இந்த படத்தை கௌதம் மேனன் இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் விக்ரம் நடிக்க உள்ள புதிய படத்தின் அப்டேட் கிடைத்துள்ளது.

சித்தார்த் தயாரித்து நடித்து சமீபத்தில் வெளியான ‘சித்தா’ என்ற படத்தை இயக்கியவர் அருண்குமார்.

இந்த படம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து தற்போது வரை திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

தற்போது அருண்குமார் இயக்கத்தில் தான் விக்ரம் நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன..

விக்ரம் மற்றும் சித்தா இயக்குனர் அருண்குமார் இணையும் இந்த படத்தை இருமுகன் படத்தை தயாரித்த சிபு தமின்ஸ் தயாரிப்பதாக கூறப்படுகிறது.

கூடுதல் தகவல்…

விஜய்சேதுபதி நடித்த ‘சிந்துபாத்’ & ‘சேதுபதி’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அருண்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

Chithha director Arunkumar will direct Vikram

விஷாலுடன் இணைந்த இயக்குனர்கள் கௌதமேனன் & சமுத்திரக்கனி

விஷாலுடன் இணைந்த இயக்குனர்கள் கௌதமேனன் & சமுத்திரக்கனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆக்சனுக்கும் வேகத்திற்கும் பஞ்சமில்லாத படம் என்றால் இயக்குனர் ஹரி இயக்கிய படங்களை சொல்லலாம்.

தற்போது தாமிரபரணி & பூஜை ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஷாலுடன் இணைந்து பணியாற்றிய வருகிறார் இயக்குனர் ஹரி.

இந்த படத்தில் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஹரி இயக்கத்தில் கௌதம் மேனன் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பதை விஷால் புகைப்படத்துடன் பகிர்ந்து உள்ளார்.

தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தை கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்து வருகின்றனர்.

ஹரியின் ஆஸ்தான பகுதிகளான காரைக்குடி & தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வந்துள்ளது.

Gautam Menon and Samuthirakani join hands with Vishal

துரோகி சிவகார்த்திகேயன்..; இந்த ஜென்மத்தில் இணைய மாட்டேன் – இமான்

துரோகி சிவகார்த்திகேயன்..; இந்த ஜென்மத்தில் இணைய மாட்டேன் – இமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் படங்களில் பாடல்களுக்கு எப்போதுமே முக்கியத்துவம் இருக்கும். இவரது படங்களில் சிட்டி சப்ஜெக்ட்டாக இருந்தால் அனிருத் இசை இருக்கும்.. அதுவே சிவகார்த்திகேயன் கிராமத்து நாயகனாக நடித்திருந்தால் அந்த படத்தில் இமான் இசை நிச்சயமாக இருக்கும்.

இப்படி ரசிகர்களை மகிழ்வித்த சிவகார்த்திகேயன் – இமான் கூட்டணி சமீப காலமாக முறிந்து விட்டது. இது யதார்த்தமான ஒரு நிகழ்வாக இருந்திருக்கலாம் என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் சிவகார்த்திகேயன் பற்றி மனம் திறந்து சமீபத்திய பேட்டிகள் தெரிவித்துள்ளார் இமான்.

அவரது பேட்டியில்.. இனி நானும் சிவகார்த்திகேயனும் இணைந்து பணிபுரிய போவதில்லை.. அவர் எனக்கு துரோகம் செய்துவிட்டார். அது என்னுடைய பர்சனல் விஷயம். எனவே வெளியே சொல்ல முடியாது.

ஆனால் இனி இந்த ஜென்மத்தில் அவருடன் இணைந்து பணிபுரிய மாட்டேன். ஒருவேளை மறு ஜென்மம் இருந்து நாங்கள் இதே துறையில் இருந்தால் பணிபுரிய வாய்ப்பு இருக்கலாம்.” என்றார் இமான்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், சீமராஜா, ரஜினி முருகன் உள்ளிட்ட பல படங்களில் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆக அமைந்தன. சிவகார்த்திகேயன் நடித்த இந்த படங்களுக்கு இசையமைத்தவர் இமான் என்பது குறிப்பிடத்தக்கது.

Reason Behind Sivakarthikeyan and Imman clash

கிரிக்கெட்டில் ஜெய் ஸ்ரீராம்.. விஜய்க்கு குரல் கொடுக்காத சித்தார்த்.. 4 கோடி பட்ஜெட் விஷால் பேச்சு.; அமீர் ஆவேசம்

கிரிக்கெட்டில் ஜெய் ஸ்ரீராம்.. விஜய்க்கு குரல் கொடுக்காத சித்தார்த்.. 4 கோடி பட்ஜெட் விஷால் பேச்சு.; அமீர் ஆவேசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை மயிலாப்பூரில் சிட்டி சென்டர் அருகே ‘தீ லா கஃபே’ என்ற உணவகத்தை நடிகர் அமீர் தொடங்கி உள்ளார். இந்த விழாவிற்கு வந்து ஹோட்டலை திறந்து வைத்தார் நடிகர் விஜய்சேதுபதி.

இந்நிகழ்வில் அவருடன் கரு பழனியப்பன், நடிகர் சாய் தீனா, சஞ்சிதா செட்டி உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர்.

இந்த விழாவிற்கு பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

விஜய்சேதுபதி

அதில்…

“விஜய் படங்கள் வெளியாகும் போதெல்லாம் பிரச்சனை வருதே. அதற்கு சித்தார்த் குரல் கொடுத்தாரா? .. இலங்கை விவகாரம் தொடர்பாக என்னை கைது செய்தார்களே அப்போது சித்தார்த் குரல் கொடுத்தாரா?

இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடைபெற்ற போது ஜெய்ஸ்ரீ ராம்.. ஜெய் ஸ்ரீ ராம் என்று கோசம் எழுப்பியது பற்றி கேட்டபோது.. கிரிக்கெட் போட்டியை காண வருபவர்கள் சாதாரண ஏழை மக்கள் அல்ல. ஒவ்வொரு வகையில் வசதியான மேல் தட்டு மக்களே..

அப்படி இருந்தும் அவர்களிடம் ஏற்பட்டுள்ள அறியாமையை கண்டு என்ன சொல்வது? இது ஒரு அரசாங்க நடத்தும் போட்டி அல்ல. தனியார் நடத்துப் போட்டி தான்.

விஜய்சேதுபதி

இந்தியா கிரிக்கெட் வாரியம்.. பாகிஸ்தான கிரிக்கெட் வாரியம் என தனியார் இந்த போட்டிகளை நடத்துகின்றன. ஆனாலும் அரசு தலையிட வேண்டும் என்றார்.

சின்ன படங்களுக்கு தியேட்டர்கள் கொடுக்கப்படவில்லை என்று கேள்வி கேட்டனர். அதற்கு அமீர் பதிலளிக்கையில்…

கடலில் நிறைய மீன்கள் உள்ளன.. அவையெல்லாம் ரிலையன்ஸ் என்ற தனியார் மார்க்கெட்டுக்கு மட்டும் வருவதில்லை.. ரோட்டு கடைகளிலும் மீன் விற்கப்படுகிறது.. அது போல குறைந்த பட்ஜெட்டில் சின்ன படங்கள் தயாரிக்கும் போது அவை தியேட்டரை மட்டும் நம்பி இருக்க கூடாது. தற்போது ஓடிடி சந்தை விரிவடைந்துள்ளது.. அவற்றையும் சின்ன படங்கள் குறி வைக்க வேண்டும்.

குறைந்த பட்ஜெட்டில் படம் எடுப்பவர்கள் வேண்டாம் என விஷால் கூறி இருந்தது ஆவேசத்தில் கூறினாரா அல்லது அக்கறையுடன் கூறினாரா தெரியவில்லை. ஆனால் அவர் அக்கறையிடம் கூறியிருப்பார் என்று தெரிகிறது என்றார் அமீர்.

அமீர்

Ameer speech at his new restaurant opening ceremony

எம்ஜிஆர் – சிவாஜி ஸ்டைலில் விஜய்சேதுபதி கெட்டப்.; ஓ இதுக்கு தானா.?

எம்ஜிஆர் – சிவாஜி ஸ்டைலில் விஜய்சேதுபதி கெட்டப்.; ஓ இதுக்கு தானா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாயகன் வில்லன் என எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதில் தன் அடையாளத்தை நிரூபித்து வருபவர் விஜய்சேதுபதி. எனவே தான் இவருக்கு தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் ஹிந்தி சினிமாவிலும் அதிக வாய்ப்புகள் வருகின்றன.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இயக்குனர் அமீர் தொடங்கியுள்ள புதிய ஹோட்டலை திறந்து வைக்க வந்திருந்தார் விஜய் சேதுபதி. அப்போது அவரது மீசை ஸ்டைல் வித்தியாசமாக இருந்தது.

1960 களில் எம்ஜிஆர் – சிவாஜி – ஜெமினிஆகியோர் வைத்திருந்த மீசையை போல மீசை வைத்துள்ளார்.

விஜய்சேதுபதி

விஜய் சேதுபதியின் இந்த புதிய மீசை கெட்டப் போட்டோ இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய்சேதுபதி தற்போது ‘விடுதலை 2’ படத்தில் நடித்து வருகிறார். அதுபோல மிஷ்கின் இயக்கத்திலும் நடிக்கிறார்.

எனவே இந்த மீசை கெட்டப்பாக அந்த படத்திற்காக தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்சேதுபதி

Vijay Sethupathi new moustache getup photo goes viral

அரசு அறிவித்த விதிகளை ‘லியோ’ மீறினால் புகாரளிக்க கலெக்டர் ஆர்டர்

அரசு அறிவித்த விதிகளை ‘லியோ’ மீறினால் புகாரளிக்க கலெக்டர் ஆர்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அக்டோபர் 19ஆம் தேதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ திரைப்படம் ரிலீஸ் ஆகிறது.

இந்த படத்திற்கு தமிழகத்தில் அதிகாலை 4 மணி காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் உமா இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன் விவரம் வருமாறு…

நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் வரும் 19 ம் தேதி திரைக்கு வரவிருக்கும் நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் 19 ம் தேதி முதல் 24 ம் தேதி வரை (ஒரு நாளைக்கு 5 காட்சிகள் ) திரையிட வேண்டும்.

காட்சிகள் காலை 9 மணி முதல் அடுத்த நாள் அதிகாலை 1.30 மணி வரை மட்டும்.

அரசு அறிவித்த டிக்கெட் கட்டணம், பார்க்கிங் கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்தால் 04286 299137 என்ற எண்ணில் புகார் செய்யலாம்.

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் உமா அறிவிப்பு.

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் உமா

Rules and Regulations for Leo Screening Collector order

More Articles
Follows