JUST IN மக்கள் விரும்பினால் மீண்டும் நடிப்பேன்.. நடித்தால் அவருடன் இணைவேன் – உதயநிதி

JUST IN மக்கள் விரும்பினால் மீண்டும் நடிப்பேன்.. நடித்தால் அவருடன் இணைவேன் – உதயநிதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏ ஆர் ரஹ்மான் இசையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாமன்னன்’.

உதயநிதி ஸ்டாலின் தயாரித்து கதையின் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் வடிவேலு, பகத் பாஸில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் இசை வெளியீட்டு விழா இன்று ஜூன் 1ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.

இந்த விழா தொடங்குவதற்கு முன் உதயநிதி ரெட் கார்பெட்டில் பேசும்போது..

“வரும் மூன்று ஆண்டுகளுக்கு நான் சினிமாவில் நடிக்க மாட்டேன்.

அதன் பிறகு சூழ்நிலையை பொறுத்து மக்கள் விரும்பினால் மீண்டும் திரைப்படங்களில் நடிப்பேன். அப்படி ஒருவேளை நடிக்க ஆரம்பித்தால் மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தான் நடிப்பேன்” என தெரிவித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

I will act again if people want I will join him if I act says Udayanidhi

BREAKING கஷ்டப்பட்டு தான் ‘மாமன்னன்’ இசை விழாவுக்கு வந்தேன்.; அமைச்சர் உதயநிதி பேச்சு

BREAKING கஷ்டப்பட்டு தான் ‘மாமன்னன்’ இசை விழாவுக்கு வந்தேன்.; அமைச்சர் உதயநிதி பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உதயநிதி தயாரித்து நடித்துள்ள மாமன்னன் திரைப்படத்தில் இசை வெளியீட்டு விழா இன்று ஜூன் 1ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த விழாவில் பங்கேற்பதற்காக வந்த அமைச்சர் உதயநிதி அரங்கத்திற்குள் நுழைவதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசும்போது…

“மாரி செல்வராஜ் படத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் அத்தனையும் இந்த ‘மாமன்னன்’ படத்திலும் இருக்கும்.

இந்த படம் சமூக நீதி பற்றி பேசி இருக்கிறது. மாரி செல்வராஜ்க்கும் எனக்கும் ஒரு அரசியல் புரிதல் இருக்கிறது.

நான் பகத் கீர்த்தி உள்ளிட்ட பலர் இருக்கிறோம். ஆனால் எங்களை எல்லாம் தள்ளி வைத்து வடிவேலு ஒரு கேரக்டர் செய்து இருக்கிறார்.

இந்த படத்தை ஜூன் 29ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளோம்.

எனக்கு முதல்வர் அமைச்சர் பதவி வழங்கியிருக்கிறார். எனவே அதை பொறுப்புடன் செய்ய வேண்டும்.

அனேகமாக மாமன்னன் படம் தான் கடைசி படமாக இருக்கும். ஒரு நல்ல படத்தில் நடித்த திருப்தி இருக்கிறது.

கமல் சார் தயாரிப்பில் ஒரு படம் நடிக்க இருந்தேன். அதைக் கூட மறுத்து விட்டேன். மக்கள் பணி இருப்பதால் படங்களின் அடிப்பதில்லை

இப்போது கூட கடும் பணி சுமைகளுக்கு நடுவே இந்த இசை விழாவிற்கு வந்திருக்கிறேன். மேலும் டப்பிங் பணிகளையும் முடித்துக் கொடுத்திருக்கிறேன்.

ஆனால் மாரி செல்வராஜ் மீண்டும் அவரது இயக்கத்தில் நடிக்க கேட்டுக் கொண்டுள்ளார். சூழ்நிலை பொருத்து முடிவு எடுக்கலாம்.”

என உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

Udhayanidhi says I came to the ‘MAAMANNAN’ music festival only with difficulty

13 வருடங்களுக்கு பிறகு டிஜிட்டல் புதுப்பொலிவுடன் ரஜினியின் ‘எந்திரன்’; வெளியீட்டு தேதி இதோ..

13 வருடங்களுக்கு பிறகு டிஜிட்டல் புதுப்பொலிவுடன் ரஜினியின் ‘எந்திரன்’; வெளியீட்டு தேதி இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரஜினிகாந்த்.

கடந்த 2010-ஆம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் ‘எந்திரன்’.

இப்படத்தை ரஜினியின் ‘சிவாஜி: தி பாஸ்’, ‘எந்திரன் 2.0’ ஆகிய மூன்று சூப்பர்ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவானது.

இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் கதாநாயகியாக நடிக்க, சந்தானம், கருணாஸ், தேவ தர்ஷினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.

கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான படங்களின் வசூலை ‘எந்திரன்’ திரைப்படம் முறியடித்து சாதனை படைத்தது.

எந்திரன்’ திரைப்படம் புதுப்பொலிவுடன் மீண்டும் வெளியாகவுள்ளது.

அதாவது, முதல்முறையாக டிஜிட்டலில் ரீமாஸ்டர் செய்து 4k அல்ட்ரா எச்.டி.தரத்தில் டால்பி அட்மோஸ் மற்றும் டால்பி விஷனில் பிரம்மாண்டமாக தயாராகியுள்ளது.

இந்நிலையில், பதிமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியின் ‘எந்திரன்’ திரைப்படம் OTT இல் மறுவெளியீட்டுக்கு தயாராக உள்ளது.

மேலும், ‘எந்திரன்’ படம் ஜூன் 9-ல் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

எந்திரன்

Rajini’s ‘Enthiran’ digitally remastered on OTT

‘கைதி – மாஸ்டர்’ பட நடிகர் KPY தீனா திருமணம்.; Love or Arranged.?

‘கைதி – மாஸ்டர்’ பட நடிகர் KPY தீனா திருமணம்.; Love or Arranged.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தீனா.

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தீனா சினிமா அல்லது தொலைக்காட்சியில் எப்படியாவது பெரிய ஆளாக வர வேண்டும் என்கிற எண்ணத்தில் சென்னை கிளம்பி வந்தவர்.

இவர் ஆரம்பத்தில் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் உதவி இயக்குனராக சில ஆண்டுகள் வேலை செய்து கொண்டிருக்கிறார். அப்போது இவருடைய டைமிங் காமெடி பார்த்து பலர் பாராட்டி இருக்கிறார்கள்.

நம்பிக்கையுடன் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் ஸ்டேஜ் ஏற, அந்த நிகழ்ச்சியே தீனாவை உச்சத்துக்கு கொண்டு சென்றது.

இதன்பின்னர் சினிமா பக்கம் வந்த தீனா, தனுஷ் இயக்கிய ‘பவர் பாண்டி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘கைதி’, ‘மாஸ்டர்’ படங்களில் நல்ல கேரக்டரில் நடித்திருந்தார்.

நடிகர் தீனா கடந்த மார்ச் மாதம் சொந்த ஊரில் சொந்தமாக வீடு ஒன்றை கட்டியிருந்தார்.

இந்நிலையில், தீனாவுக்கு இனிதே திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. கிராஃபிக் டிசைனராக பணியாற்றி வரும் பரமேஸ்வரி என்ற பெண் தான் தீனாவுக்கு மனைவியாக அமைந்துள்ளார்.

இந்த திருமணம் முழுக்க முழுக்க பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் ஆகும்.

திருவாரூரில் நடக்கும் கல்யாணத்தில் பலர் கலந்து கொள்ள முடியவில்லை.

இதனால் நடிகர் தீனா சினிமா, சின்னத்திரை பிரபலங்களுக்காக சென்னையில் அடுத்த வாரம் திருமண வரவேற்பு நடக்க இருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

தீனா

master fame kpy dheena gets married

10 வருடங்களில் 150+ குறும்படங்களுக்கு இசை.; சைலன்ட்டாக வளரும் ‘சைத்ரா’ இசையமைப்பாளர் பிரபாகரன் மெய்யப்பன்

10 வருடங்களில் 150+ குறும்படங்களுக்கு இசை.; சைலன்ட்டாக வளரும் ‘சைத்ரா’ இசையமைப்பாளர் பிரபாகரன் மெய்யப்பன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை யாஷிகா ஆனந்த் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘சைத்ரா’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியானது.

ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்திருப்பதன் மூலம் தமிழ் திரையுலக ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறார் இசையமைப்பாளர் பிரபாகரன் மெய்யப்பன்.

இவரைப் பற்றி கூடுதலாக தெரிந்து கொள்ள…

இசையமைப்பாளராவதற்காக கடந்து வந்த பாதை..?

கல்லூரியில் படிக்கும் காலகட்டத்திலேயே முறைப்படி கர்நாடக சங்கீதம் மற்றும் மேற்கத்திய சங்கீதத்தை கற்றுக் கொண்டேன். பெற்றோர்களின் விருப்பத்திற்காக தனியார் நிறுவனத்தில் சில காலம் பணியாற்றினேன்.

இருப்பினும் இசை மீது இருந்த பேரார்வத்தின் காரணமாக இசையமைப்பாளராக வேண்டும் என திட்டமிட்டேன்.

2012 ஆம் ஆண்டில் முதன்முதலாக குறும்படத்திற்கு இசையமைக்க தொடங்கினேன். அதன் பிறகு தற்போது வரை 150 க்கும் மேற்பட்ட குறும்படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன்.

இதில் 50-க்கும் மேற்பட்ட குறும்படங்களுக்கு சிறப்பாக இசையமைத்ததற்காக விருதுகளையும் வென்றிருக்கிறேன். ‌

இதைத்தொடர்ந்து ‘முஸ்தபா -தி மேஜிசியன்’ எனும் அனிமேஷன் திரைப்படத்திற்கு இசையமைத்தேன். இந்தத் திரைப்படம் 2016 ஆம் ஆண்டில் ஆஸ்கார் விருதுக்கான சிறந்த அனிமேஷன் படப் பிரிவில் போட்டியிட்டது.

இதனைத் தொடர்ந்து ‘மேகி’ எனும் படத்திற்கு பின்னணி இசையமைத்தேன். தற்போது இயக்குநர் எம். ஜெனித் குமார் இயக்கத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் கதையின் நாயகியாக நடித்து வரும் ‘சைத்ரா’ படத்திற்கு இசையமைத்திருக்கிறேன்.

இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றிருக்கிறது. இந்தப் திரைப்படத்தில் இடம் பெற்ற சிங்கிள் ட்ராக்கும் வெளியாகி பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

எதிர்கால இலக்கு?

இசைத்துறையில் முத்திரை பதிக்க வேண்டும். இசை என்பது பெருங்கடல். இங்கு சாதித்தவர்கள் ஏராளம். திரையிசை, சுயாதீன பாடல்கள் என அனைத்து இசை வடிவங்களிலும் தனித்துவமான திறமையை வெளிப்படுத்தி சிறந்த இசையமைப்பாளராக முன்னேற வேண்டும்.

Music for 150+ short films in 10 years.; Prabhakaran Meiyappan’s growth

ரஜினி – தனுஷை தொடர்ந்து சத்யராஜை இயக்கும் சௌந்தர்யா

ரஜினி – தனுஷை தொடர்ந்து சத்யராஜை இயக்கும் சௌந்தர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்தின் இளையமகள் சவுந்தர்யா, இவர் ரஜினி, தீபிகா படுகோன் நடித்த ‘கோச்சடையான்’ என்ற அனிமேஷன் படத்தை இயக்கி இருந்தார்.

இதை தொடர்ந்து, தனுஷ் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தை இயக்கினார். இப்படத்தில் தனுஷுடன் இந்தி நடிகை கஜோல் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யா தற்போது வெப் தொடர் ஒன்றை இயக்குகிறார்.

இந்த வெப் தொடரில் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

சவுந்தர்யா இயக்கும் வெப் தொடர் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

soundarya rajinikanth to direct web series starring sathyaraj

More Articles
Follows