JUST IN அம்பேத்கரை காட்டினால் மதுரை எரியும்.; மாமன்னன் காட்சியை மாற்ற சொன்னேன் – ரஞ்சித்

JUST IN அம்பேத்கரை காட்டினால் மதுரை எரியும்.; மாமன்னன் காட்சியை மாற்ற சொன்னேன் – ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜூன் 1ம் தேதி நடைபெற்ற ‘மாமன்னன்’ இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் இயக்குனர் பார ரஞ்சித்.

அப்போது அவர் பேசும்போது..

“பரியேறும் பெருமாள்’ படம் செய்யும்போது ஒரு தயக்கம் இருந்தது ஒரு பயம் இருந்தது. அது ஏன் என்று தெரியவில்லை. ஆனால் மாரி செல்வராஜின் கலையை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என எண்ணினேன்.

அதில் அம்பேத்கர் படத்தை காட்டினால் மதுரை எரியும் என்றார்கள். ஆனால் மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். எங்களின் விருப்பம் சரியாக நிறைவேறியது.

பரியேறும் பெருமாள் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த வெற்றி தான் இன்று ‘மாமன்னன்’ மேடையை மாரிக்கு அமைத்துக் கொடுத்துள்ளது.

நான் வடிவேலுவின் தீவிர ரசிகன். ஆனால் மாமன்னன் படத்தின் சில காட்சிகளை பார்த்தேன். மிகவும் சீரியஸ் ஆக இருந்தது.

கொஞ்சம் காட்சிகளை காமெடியாக மாற்ற சொன்னேன். ஆனால் முடியாது. இது சீரியஸ் படம் என மறுத்து விட்டார் மாரி செல்வராஜ்.

மாரிக்கு இந்த மேடை அமைத்துக் கொடுத்த உதயநிதிக்கு நன்றி. இந்த படம் ஒரு முக்கியமான அரசியலை பேசி இருக்கிறது”

இவ்வாறு மனம் திறந்து பேசினார் ரஞ்சித்.

Ranjith appreciates Mari Selvaraj growth at Maamannan audio launch

JUST IN கமல் சார் இருக்கும்போது அத பேசலாமா.? மாற்று சினிமாவுக்கு விதை போட்டவர் அவர் – சிவகார்த்திகேயன்

JUST IN கமல் சார் இருக்கும்போது அத பேசலாமா.? மாற்று சினிமாவுக்கு விதை போட்டவர் அவர் – சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உதயநிதி தயாரித்து நாயகனாக நடித்துள்ள ‘மாமன்னன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் திரளான கோலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கமல்ஹாசன், வெற்றிமாறன், விஜய் ஆண்டனி, ரஞ்சித், சிவகார்த்திகேயன், கவின், முருகதாஸ், எஸ்ஜே. சூர்யா, சூரி, பிரதீப் ரங்கநாதன், விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் பங்கேற்று உதயநிதியை வாழ்த்தி வருகின்றனர்.

இந்த மேடையில் சிவகார்த்திகேயன் பேசும் போது..

“நான் கெட்டப் மாறிவிட்டதாக பேசிக்கிறாங்க.. கமல் சார் இருக்கும்போது கெட்டப் பத்தி பேசலாமா.?

கமல் சார் தயாரிப்பில் நான் நடிப்பது நான் செய்த பாக்கியம்..

மாற்று சினிமாவிற்கு விதை போட்டது கமல் சார். உங்க கம்பெனில படம் பண்றது என்னோட பாக்கியம்.

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் படம் பண்ணும் போது இதுபோல வித்தியாசமா படங்களை இனிமே தேர்ந்தெடுக்கணும் முடிவு பண்ணிருக்கேன்.” என்றார் சிவகார்த்திகேயன்.

I learned lot of Kamal production house says Sivakarthikeyan

JUST IN எல்லாரும் 1- 2 – 3ன்னு போட்டி போடும் போது அவரு மேல போய் உட்கார்ந்துட்டாரு – சூர்யா

JUST IN எல்லாரும் 1- 2 – 3ன்னு போட்டி போடும் போது அவரு மேல போய் உட்கார்ந்துட்டாரு – சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உதயநிதி தயாரித்து நாயகனாக நடித்துள்ள ‘மாமன்னன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் திரளான கோலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கமல்ஹாசன், வெற்றிமாறன், விஜய் ஆண்டனி, ரஞ்சித், சிவகார்த்திகேயன், கவின், முருகதாஸ், எஸ்ஜே. சூர்யா, சூரி, பிரதீப் ரங்கநாதன், விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் பங்கேற்று உதயநிதியை வாழ்த்தி வருகின்றனர்.

இந்த மேடையில் மிஷ்கின் பேசும்போது..

நான் கமல் அவர்களைப் பற்றி பேசாத நாளே இருக்காது. அவருக்கு நாம் எல்லாரும் எழுந்து நின்று மரியாதை கொடுக்க வேண்டும் என்றார். அதன்படி அரங்கமே எழுந்து நின்று கமல்ஹாசன் அவர்களுக்கு மரியாதை கொடுத்தது.

எஸ் ஜே சூர்யா மேடையில் பேசும்போது…

உலகநாயகனை நேர்ல பாக்கற பாக்கியம் கிடைச்சுது மறக்க முடியாத தருணம். அத பற்றி இன்னொரு நாள் சொல்றேன்

எல்லாரும் 1,2,3 னு போட்டி போட்டுட்டு இருக்கும் போது நீங்க போய் ஆல்ரெடி மேல போய் பர்ஸ்ட்ல உக்கார்ந்து இருக்கீங்க” என்றார்.

உங்களைப் பற்றி பேச இந்த மேடை எல்லாம் பத்தாது.. பேசிக் கொண்டே இருக்கலாம் என்று மேடையில் பேசும்போது கமல் அவர்களைப் பற்றி குறிப்பிட்டார் பிரதீப் ரங்கநாதன்.

நான் எல்லாருக்கும் பாட்டு எழுதிருக்கேன் உலகநாயகனை தவிர அவர் ஆல்ரெடி உச்சத்துல நம்பர் ஒன்ல இருக்காரு..

நான் பாட்டு எழுதினா இன்னும் பல நூறு கோடி பண்ணுவீங்க என கவிஞர் யுகபாரதி பேசினார்.

sj suryah funny speech at maamannan audio launch

BREAKING தேவர் மகனுக்கு பிறகு மாமன்னன்.. படத்தை பார்க்க மாட்டீங்க அரசியல் ஹீரோ உதயநிதி – வடிவேலு

BREAKING தேவர் மகனுக்கு பிறகு மாமன்னன்.. படத்தை பார்க்க மாட்டீங்க அரசியல் ஹீரோ உதயநிதி – வடிவேலு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாமன்னன்’ படத்தில் உதயநிதி பகத் பாசில் கீர்த்தி வடிவேலு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் இசை விழா தற்போது சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் பங்கேற்பதற்காக வந்திருந்த நடிகர் வடிவேலு அரங்கத்தில் நுழைவதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்தார்.்

அப்போது அவர் பேசும்போது..

“எனக்கு தேவர்மகன் படத்திற்கு பிறகு மாமன்னன் படம் அமைந்துள்ளது என்பேன். தேவர் மகன் அரசியல் படம் கிடையாது ஆனால் இந்த மாமன்னன் அரசியல் படம்.

எனது கேரக்டர் பற்றி நிறைய செய்திகள் வருகின்றன. நான் வில்லனாக நடிக்கிறேன் கற்பழிப்பு செய்கிறேன் என்றெல்லாம் செய்திகள் வந்துள்ளன.

ஒரு சிறந்த குணசத்திர கேரக்டரை இந்த படத்தில் செய்துள்ளேன். ஒரு சுயமரியாதை கொண்டவராக நடித்துள்ளேன்.

இப்போது என்னிடம் கேரக்டர் குறித்து கதை குறித்து கேட்காதீர்கள்.. எல்லாம் சொல்லிவிட்டால் படத்தை யார் பார்ப்பது.?

இது உதயநிதியின் கடைசி படம் அல்ல. அவருக்கு மக்கள் பணி நிறைய இருப்பதால் தற்காலிகமாக இதை ஒத்தி வைத்துள்ளார்.

அவர் அரசியலில் ஹீரோவாக போகிறார். அங்கே அவருக்கு நிறைய வேலை இருக்கு” என்று பேசிக் கொண்டிருந்தார் வடிவேலு.

செய்தியாளர்கள் மீண்டும் மீண்டும் கேள்வி கேட்கும் போது பைக்கை எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தார் வடிவேலு.

Vadivelu compared Devar Magan and Maamannan

JAILER Update : தமன்னாவுடன் ரஜினி உற்சாகம்.; தியேட்டரில் சந்திப்போம் என நெல்சன் நெகிழ்ச்சி

JAILER Update : தமன்னாவுடன் ரஜினி உற்சாகம்.; தியேட்டரில் சந்திப்போம் என நெல்சன் நெகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜெயிலர்’.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தை நெல்சன் இயக்க அனிருத் இசையமைத்து வருகிறார்.

இதில் ரஜினியுடன் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கிசரஃப், சுனில், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி உள்ளிட்ட பல இந்திய பிரபல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

எனவே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

ஆனாலும் ரஜினியின் லுக் இன்னும் போதுமானதாக இல்லை என ரஜினி ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஜெயிலர்

ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று ஜூன் 1ம் தேதி ‘ஜெயிலர்’ பட ஷூட்டிங் முடிவடைந்து விட்டதாக பட குழுவினர் அறிவித்து புதிய போட்டோக்களை வெளியிட்டுள்ளனர்.

அதில் தமன்னா நெல்சன் ஆகியோருடன் ரஜினிகாந்த் கேக் வெட்டுகிறார்.

மேலும் படக்குழுவினர் மிகவும் உற்சாகத்துடன் காணப்படுகின்றனர்.

ரஜினி படத்தை இயக்கிய நெகிழ்ச்சியில் நெல்சன் இருப்பதாக தெரிகிறது.

தியேட்டரில் சந்திப்போம் என அறிவித்து போட்டோக்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

ஜெயிலர்

rajini’s jailer shoot wrapped and rajini cake cutting

JUST IN ‘மாமன்னன்’ விழாவில் ‘தங்கலான்’ & ‘சார்பட்டா 2’ அப்டேட் கொடுத்த ரஞ்சித்

JUST IN ‘மாமன்னன்’ விழாவில் ‘தங்கலான்’ & ‘சார்பட்டா 2’ அப்டேட் கொடுத்த ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உதயநிதி தயாரித்து நாயகனாக நடித்துள்ள ‘மாமன்னன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் திரளான கோலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கமல்ஹாசன், வெற்றிமாறன், விஜய் ஆண்டனி, ரஞ்சித், சிவகார்த்திகேயன், கவின், முருகதாஸ், சூரி, பிரதீப் ரங்கநாதன், விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் பங்கேற்று உதயநிதியை வாழ்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த விழாவில் பங்கேற்ற ரஞ்சித் அவர்கள் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘தங்கலான்’ படத்தில் அப்டேட் கொடுத்துள்ளார்.

அவர் ரெட் கார்பெட்டில் பேசும்போது..

“வருகிற ஜூன் 15ஆம் தேதி முதல் தங்கலான் பட ஷூட்டிங் மீண்டும் தொடங்கும். இன்னும் 10- 12 நாட்கள் மட்டுமே ஷூட்டிங் மீதம் உள்ளது.

விக்ரம் விபத்துக்கு பிறகு குணமாகி இப்போ ஜாலியா இருக்கார்.

சார்பட்டா பரம்பரை 2 படத்தின் ஷூட்டிங் அடுத்த வருடம் தொடங்கும்” என தெரிவித்தார் ரஞ்சித்.

Thangalaan and Sarpatta Parambarai 2 update given by Ranjith

More Articles
Follows