2 வருட காத்திருப்பால் 2018 அதிர்ஷ்ட வருஷமானது… : *ஜானி* ஹரி ஜாலி

2 வருட காத்திருப்பால் 2018 அதிர்ஷ்ட வருஷமானது… : *ஜானி* ஹரி ஜாலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

johnny hari and vishal “மெட்ராஸ்”, ” கபாலி” என இயக்குநர் பா.இரஞ்சித் பட்டறையில் இருந்து வந்திருக்கும் மற்றுமொரு இளம் நடிகர் “ஜானி” ஹரி.

“மெட்ராஸ்” திரைப்படத்தில் இவர் நடித்த “ஜானி” கதாபாத்திரத்தின் பெயராலேயே ரசிகர்களால் அறியப்படும் ஹரி, அடுத்தடுத்து “பரியேறும் பெருமாள்”, ” வட சென்னை” மற்றும் “சண்டக்கோழி 2” ஆகிய திரைப்படங்களின் மூலம் பரபரப்பான நடிகராகி இருக்கிறார்.

தான் நடித்திருக்கும் மூன்று பெரிய படங்களும் வரிசையாக வெளியாகி இருக்கும் உற்சாகத்தில் இருக்கும் ஹரி, தனது அனுபவத்தைக் கூறும்போது,

“இந்த வருசம் நிஜமாவே எனக்கு சூப்பரான வருசம். இடையில் இரண்டு வருசம் பெரிய இடைவெளி இருந்தது.

அதை மறக்கடிக்கும் வகையில் ” அண்ணனுக்கு ஜே”, “பரியேறும் பெருமாள்”, ” வட சென்னை” மற்றும் “சண்டக்கோழி 2” என அடுத்தடுத்து படங்கள் வெளியாகி இருக்கு. சொல்லப்போனா “பரியேறும் பெருமாள்” நடிப்பதற்கு முன்னாடியே “வட சென்னை”, ” சண்டக்கோழி 2″ படங்களில் நடிக்க ஆரம்பிச்சிட்டேன்.

நான்கு படங்களுமே வெவ்வேறு களம், வெவ்வேறு ஜானர்.. அதனால் இந்த படங்களில் வேலை செய்தது நல்ல அனுபவமா இருந்தது.

இவ்வளவு பெரிய படங்களில் ஒரு முக்கியமான ரோல் கிடைக்கிறதெல்லாம் சாதாரணமான விசயமில்லை. இவை அனைத்திற்கும் காரணம் “ஜானி” தான். “ஜானி” மூலமாகத் தான் எனக்கு இங்கே வெளிச்சம் கிடைத்தது.

அதற்காக இயக்குநர் பா.இரஞ்சித் அவர்களுக்கு என் முதல நன்றி. மேலும், எனக்கு இவ்வளவு பெரிய வாப்பினை வழங்கிய இயக்குநர் வெற்றிமாறன், லிங்குசாமி, மாரி செல்வராஜ் ஆகியோருக்கும் எனது நன்றிகள்” என்று கூறினார்.

கோயிலில் மங்களகரமாக துவங்கிய *மரிஜுவானா* பட துவக்க விழா

கோயிலில் மங்களகரமாக துவங்கிய *மரிஜுவானா* பட துவக்க விழா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

MarijuvanaSubject: கோலாகலமாக நடைபெற்ற “மரிஜுவானா ” படத்துவக்க விழா

Third Eye Creations சார்பில் MD விஜய் தயாரிப்பில் MD ஆனந்த் இயக்கத்தில் ரிஷி ரித்விக் மற்றும் ஆஷா பார்த்தலும் நடிப்பில் உருவாக இருக்கும் ” மரிஜுவானா ” படத்தின் படத்துவக்க விழா இன்று நடைபெற்றது .இதில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்கள் PL தேனப்பன் சரவணன் இயக்குனர்கள் RV உதயகுமார் மற்றும் ராஜு முருகன் ஒளிப்பதிவாளர் செல்வா கில்டு தலைவர் ஜாக்குவார்தங்கம் தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் தலைவர் விஜய்முரளி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் . இயக்குனர் ராஜு முருகன் கிளாப் போர்டு அடிக்க படத்தின் முதல் காட்சி பதிவு செய்யப்பட்டது.படக்குழுவை நேரில் சந்தித்த யோகிபாபு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்

ரஜினியின் *பேட்ட* பராக்.; விலகி ஓடும் அஜித்தின் *விஸ்வாசம்*.?

ரஜினியின் *பேட்ட* பராக்.; விலகி ஓடும் அஜித்தின் *விஸ்வாசம்*.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Petta plans to release on Pongal 2019 So Viswasam may get postponedசிவா இயக்கத்தில் உருவாகும் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார் அஜித்.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார்.

இதில் அஜித்துடன் நயன்தாரா, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

தீபாவளிக்குள் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் என கூறப்படுகிறது.

எனவே 2019 பொங்கல் தினத்தில் இப்படத்தை வெளியிட முடிவு செய்திருந்தனர்.

ஆனால் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படம் 2019 பொங்கலுக்கு வெளியாகும் என தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

எனவே ரஜினி படம் ரிலீஸ் என்பதால் அஜித்தின் விஸ்வாசம் பொங்கல் ரேஸில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் பேட்ட படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.

Petta plans to release on Pongal 2019 So Viswasam may get postponed

*இன்று நேற்று நாளை* பட 2ஆம் பாகத்தை உறுதி செய்த தயாரிப்பாளர்

*இன்று நேற்று நாளை* பட 2ஆம் பாகத்தை உறுதி செய்த தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Super Hit movie Indru Netru Naalai sequel updatesரவிக்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்து மாபெரும் வெற்றி பெற்றப் படம் ‘இன்று நேற்று நாளை’.

கடந்த 2015-ம் ஆண்டு வெளியான நாயகியாக மியா ஜார்ஜ் நடித்திருந்தார்.

இதனை ‘திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் – ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தன.

டைம் ட்ராவல் பற்றிய படமாக இது உருவாக்கபட்டு இருந்தது.

இந்நிலையில் இதன் 2-ம் பாகம் உருவாகவுள்ளதாக தயாரிப்பாளர் சி. வி. குமார் கூறியுள்ளார்.

இதில் விஷ்ணுவிஷால் நடிப்பது மட்டும் தற்போது உறுதியாகியுள்ளது.

இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய இயக்குநர் ரவிக்குமார் தற்போது சிவகார்த்திகேயனின் படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் வெற்றிப் பெற்ற முண்டாசுப்பட்டி 2 படத்திலும் நடிக்கவுள்ளார் விஷ்ணு விஷால் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Super Hit movie Indru Netru Naalai sequel updates

வீண்பழி சுமத்திய பிரித்திகா மீது அவதூறு வழக்கு தொடருவேன்… : தியாகராஜன்

வீண்பழி சுமத்திய பிரித்திகா மீது அவதூறு வழக்கு தொடருவேன்… : தியாகராஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Thiagarajan clarifies about Prithika menons MeToo issue on himபிரபலங்கள் மீது சினிமா துறை சார்ந்த பெண்கள் பாலியல் புகார்களை தொடர்ந்து கூறிய வண்ணம் உள்ளனர்.

வைரமுத்து மீது சின்மயி புகார்களை கூறியதை தொடர்ந்து தற்போது நடிகர் தியாகராஜன் மீது புகைப்பட கலைஞரான பிரித்திகா மேனன் பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது… பொன்னர் சங்கர் படத்தில் நான் புகைப்பட கலைஞராக பணியாற்றினேன் அப்போது எனக்கு 21 வயது இருக்கும்.

கோவை அருகே போர் காட்சிகளை எடுத்தார்கள். படப்பிடிப்பில் 200க்கும் மேற்பட்ட300 ஆண்கள் இருந்தார்கள். நானும் 3 பெண்களும் மட்டுமே இருந்தோம்.

சூட்டிங் சமயத்தின் போது தியாகராஜன் எனக்கு பல விதங்களில் பாலியல் தொல்லை கொடுத்தார்.

நான் தங்கியிருந்த ஓட்டல் அறைக்கு நள்ளிரவில் வந்து கதவை தட்டுவார். என பிரித்திகா மேனன் தெரிவித்து இருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக தியாகராஜன் கூறியதாவது…

நான் இயக்கி தயாரித்த கலைஞரின் பொன்னர் சங்கர் பட சூட்டிங்கின் சமயத்தில் இரவில் யாரோ அவரது அறை கதவை தட்டியதாகவும் அது நானாக இருக்கலாம் என்ற யூகத்தில் அவரது பேஸ் புக் அக்கவுண்டில் தவறான ஒரு செய்தியை பதிவிட்டுள்ளார் பிரத்திகா என்ற பெண்.

இதை நான் முற்றிலும் மறுக்கிறேன். அவர் இப்போது எங்கே இருக்கிறார் என்பது கூட தெரியவில்லை.

என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள அந்த பெண் மீது அவதூறு வழக்கு தொடர உள்ளேன்.

அதோடு இது போன்ற பொய் குற்றச்சாட்டு கூறுபவர்களுக்கு இது ஒரு பாடமாக அமையும்.

விரைவில் பத்திரிகையாளர்களை சந்திப்பேன். அவர்கள் முன்னிலையில் பல உண்மைகள் வெளிவரும்.” இவ்வாறு தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

Actor Thiagarajan clarifies about Prithika menons MeToo issue on him

காஸ்மிக் எனர்ஜி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் *சந்தோஷத்தில் கலவரம்*

காஸ்மிக் எனர்ஜி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் *சந்தோஷத்தில் கலவரம்*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Kranthi Prasad talks about his upcoming release Santhoshathil Kalavaramமுற்றிலும் புதியவர்களின் முயற்சியில் உருவாகி நவம்பர் 2 -ல் வெளிவரும் படம் ‘சந்தோஷத்தில் கலவரம்’.

இப்படம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி படத்தின் இயக்குநர் கிராந்தி பிரசாத் பேசும் போது…

” எனக்கு சினிமா மீது அவ்வளவு காதல். எவ்வளவோ வேலை வாய்ப்பு வருமானம் எல்லாவற்றையும் இழந்து விட்டு துறந்து விட்டுத்தான் சினிமாவுக்கு வந்திருக்கிறேன்.

இப்படத்தைப் பல போராட்டங்களைச் சந்தித்துதான் எடுத்தேன். ஆனால் படம் எடுத்ததை விட வெளியிடுவதையே மிகவும் சிரமமாக உணர்ந்தேன். கடைசியில் நானே வெளியிடுவது என்று முடிவு செய்தேன். வெளியிடுகிறேன்.

நவம்பர் 2 -ல் உலகம் முழுதும் வெளியாகிறது. இந்தப் படம் காதல், நட்பு, நகைச்சுவை. ஆக்ஷன், ஹாரர், த்ரில்லர் என்று எல்லாமும் கலந்த ஒன்றாக இருக்கும்.

இந்த உலகம் இரு வேறு சக்திகளால் இணைந்தது. பாசிடிவ் சக்திக்கும் நெகடிவ் சக்திக்கும் இடையே தினமும் போர் நடக்கிறது. இது ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொருவருக்குள்ளும் நடைபெறுகிறது.

இங்கே யாருக்கும் காஸ்மிக் எனர்ஜி பற்றித் தெரிவதில்லை. படித்தவர் கூட அறியவில்லை. அதன் அற்புதங்கள் எப்படி வெளியே தெரியும்? நான் காஸ்மிக் சக்தி பற்றிப் படத்தில் கூறியிருக்கிறேன்.

இந்த உலகில் உள்ள பாசிடிவ் எனர்ஜியையும் காஸ்மிக் எனர்ஜியையும் சேர்த்தால் பெரிய அற்புதம் நிகழும். எவ்வளவோ படித்தாலும் காஸ்மிக் எனர்ஜி பற்றி யாருக்கும் தெரிவதில்லை. அதைப் பற்றிப் படத்தில் கூறியிருக்கிறேன். ” இவ்வாறு இயக்குநர் கிராந்தி பிரசாத் கூறுகிறார்.

Director Kranthi Prasad talks about his upcoming release Santhoshathil Kalavaram

Santhoshathil Kalavaram

More Articles
Follows