அன்புச்செழியன் வீட்டில் 65 கோடியை கைப்பற்றியது வருமான வரித்துறை

அன்புச்செழியன் வீட்டில் 65 கோடியை கைப்பற்றியது வருமான வரித்துறை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

financier anbu chezhiyanகோபுரம் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தை அன்புச்செழியன் நடத்தி வருகிறார்.

மேலும் மதுரை உட்பட தென்மாவட்ட சினிமா விநியோகஸ்தராகவும் உள்ளார்.

இந்நிலையில் இவரது வீட்டில் ஐடி ரெய்டு நடைபெற்று வருகிறது.

மதுரை கீரைத்துறை, காமராஜர் ரோட்டில் உள்ள அவரது வீடுகள், தெற்கு மாசி வீதி அலுவலகத்திலும் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

தலைமறைவான அன்புசெழியனுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்

இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கின.

விஜய் நடித்த பிகில் படத்தை ஏ.ஜி.எஸ்., நிறுவனம் தயாரித்தது.

இதற்கு அன்புச்செழியன் நிதி வழங்கி இருக்கலாம் என்றும், இப்படத் தயாரிப்பில் முறைகேடு நடத்திருக்கலாம் என்றும் அதிகாரிகள் சந்தேகித்து வருகின்றனர்.

இன்று நடந்த சோதனையில் மதுரையிலிருந்து ரூ.15 கோடியும், சென்னையிலிருந்து ரூ.50 கோடி பணமும் ரொக்கமாக கைப்பற்றி உள்ளதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நடிகர் விஜய் வீட்டிலும் 2வது நாளாக சோதனை நடந்து வருகிறது.

டப்பிங் யூனியன் தேர்தலில் ராதாரவி வெற்றி; வழக்கு தொடர சின்மயி முடிவு

டப்பிங் யூனியன் தேர்தலில் ராதாரவி வெற்றி; வழக்கு தொடர சின்மயி முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Radha ravi chinmayiடப்பிங் யூனியன் தேர்தல் நடைபெற இருந்தது. ஒரு அணியில் ராதாரவியும் மற்றொரு அணியில் சின்மயியும் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர்.

ஆனால் சின்மயி மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், போட்டியின்றி ராதாரவி தலைவராக தேர்வாகியுள்ளார்.

இந்த நிலையில் ராதாரவியின் இந்த வெற்றி குறித்து சின்மயி கூறியதாவது:-

“எந்தத் தேர்தலாக இருந்தாலும் ஜனநாயக முறைப்படி தானே நடக்க வேண்டும்.

ரஜினி வருவார்; அவருடன் நிற்பேன்; ‘ராங்கா’ பேசிய ராதாரவி பல்டி

என்னுடைய மனுவை எதற்காக நிராகரித்தார்கள் என்ற எவ்வித அறிவிப்பும் செய்யவில்லை. ஆனால் ராதாரவி வெற்றி பெற்றதாக அறிவித்து உள்ளனர்.

இது சூழ்ச்சியாகவே தெரிகிறது.

டப்பிங் ஆர்ட்டிஸ்ட் யூனியனில் பணிபுரியும் நூற்றுக்கணக்கானவர்களின் சம்பளத்தை பல வருடங்களாக 10% பிடித்தம் செய்து டப்பிங் யூனியனை நடத்தி வந்தார்கள்.

அந்தப் பணத்தில்தான் யூனியன் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

மேலும் 47.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இடம் மற்றும் கட்டிடத்தை ஒரு கோடிக்கும் மேலாக மதிப்பிட்டு உறுப்பினர்களின் பணத்தில் ஊழல் செய்துள்ளனர்.

எதிர்த்துப் பேசுபவர்களைக் மிரட்டுகின்றனர்.

தற்போது தேர்தலில் தோல்வி உறுதியானதும் குறுக்கு வழியில் வெற்றி பெற்றுவிட்டார். இதை எதிர்த்து கோர்ட்டுக்கு செல்வேன்.

இவ்வாறு சின்மயி கூறினார்.

‘தர்பார்’ நஷ்டஈடு பிரச்சினை; போலீஸ் பாதுகாப்பு கேட்கும் முருகதாஸ்

‘தர்பார்’ நஷ்டஈடு பிரச்சினை; போலீஸ் பாதுகாப்பு கேட்கும் முருகதாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

AR Murugadoss Rajiniரஜினி நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உருவான ‘தர்பார்’ படம் இன்னும் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.

லைகா தயாரித்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

ஆனால், தர்பார் படம் சரியான வசூல் கொடுக்கவில்லை என்றும் விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் ஓரிரு விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று முருகதாஸ் மற்றும் ரஜினி ஆகியோரை சந்திக்க முயற்சித்து வருகின்றனர்.

தர்பார் நஷ்டத்திற்கு பேராசையே காரணம் என பாரதிராஜா பேச்சு

அப்போது வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த சம்பவத்திற்கு முருகதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் சென்னையில் போஸ்டர்களையும் ஒட்டியுள்ளனர்.

இந்த நிலையில் இழப்பீடு கோரி தன்னை மிரட்டுவதாக குற்றஞ்சாட்டி, போலீஸ் பாதுகாப்பு கேட்டு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மனு கொடுத்துள்ளார்.

நான் சிரித்தால் திரைப்படம் உருவாக முக்கிய காரணம் ரஜினிகாந்த் தான் – இயக்குநர் ராணா

நான் சிரித்தால் திரைப்படம் உருவாக முக்கிய காரணம் ரஜினிகாந்த் தான் – இயக்குநர் ராணா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Naan sirithal director rana‘நான் சிரித்தால்’ படத்தின் கர்டெய்ன் ரெய்ஸர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பேசியதாவது:-

நடிகை குஷ்பூ பேசும்போது,

நாங்கள் ‘நான் சிரித்தால்’ படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதுவரை நான் படம் பார்க்கவில்லை. ஆதியைப் பார்க்கும்போது எனக்கு சுந்தர்.சி-யை பார்ப்பது போலவே இருக்கும். ஆனால், அவர்களுடைய விடாமுயற்சி, கடினஉழைப்பு, அர்ப்பணிப்பு போன்றவற்றை பார்க்கும்போது நானும், ஆதியின் மனைவியும் பிரமித்துப் போகிறோம் என்றார்.

அங்கிள் ஆண்ட்டி வராதீங்க..; ‘நான் சிரித்தால்’ விழாவில் ஆதியின் ஆணவ பேச்சு

ஒளிப்பதிவாளர் வாஞ்சிநாதன் பேசும்போது,

இப்படத்தில் எனக்குப் பிடித்த விஷயம், எந்த கவலைகளும் உள்ளுக்குள் கொண்டு போகாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்பதை கூறியிருக்கிறார்கள். நானும் அதற்கு முயற்சி செய்ய வேண்டுமென்று நினைத்தேன் என்றார்.

சண்டை இயக்குநர் பிரதீப் பேசும்போது,

இப்படத்திற்கு சண்டைக் காட்சிகள் அமைத்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. ஏனென்றால், மற்ற படங்களில் சண்டைக் காட்சிகள் விறுவிறுப்பாக இருக்கும். ஆனால், இந்த படத்தில் சிரித்துக் கொண்டே காட்சி அமைக்க வேண்டி இருந்தது என்றார்.

நடன இயக்குநர் ராஜ் பேசும்போது,

ஆதியுடன் எனக்கு இது மூன்றாவது படம். இந்த வாய்ப்புக் கொடுத்த ஆதிக்கும், இயக்குநர் சுந்தர்.சி-கும் நன்றி என்றார்.

நடன இயக்குநர் சந்தோஷ் பேசும்போது,

‘நட்பே துணை’ படத்தில் இடம்பெற்ற ‘சிங்கிள் பசங்க’ பாட்டிற்கு நடனம் அமைத்தேன். அதன் பிறகு இந்த படத்தின் ‘அஜ்ஜுக்கு’ பாடலுக்கு நடனம் அமைத்திருக்கிறேன் என்றார்.

ஆடை வடிவமைப்பாளர் பிரீத்தி பேசும்போது,

‘நட்பே துணை’ படத்திற்குப் பிறகு ‘நான் சிரித்தால்’ படத்திற்கு ஆதிக்கு ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்திருக்கிறேன். இப்படத்தின் மையக்கரு என்னை மிகவும் கவர்ந்தது என்றார்.

இயக்குநர் ks.ரவிக்குமார் பேசும்போது,

படப்பிடிப்பு நடக்கும்போது நான் ஆதியைத் தேடுவேன். ஆனால், அவர் ஓரமாக ஆடிக் கொண்டிருப்பார். அருகே சென்று பார்த்தால் தான் பாடலுக்கு இசையமைப்பது தெரியும். எப்போதும் சுறுசுறுப்பாக ஏதாவது செய்துக் கொண்டே இருப்பார் என்றார்.

ரவிமரியா பேசும்போது,

நான் எப்போதும் இயக்குநர் சுந்தர்.சி-யைத்தான் பின்பற்றுவேன். அவர் பணியின்போது தான் உண்டு தன் வேலை உண்டு என்று அவருடைய முழு கவனமும் பணியில் மட்டும்தான் இருக்கும். இப்படத்தில் முதல் பாதியில் வில்லனாக வருவேன். இறுதியில் காமெடியனாக மாறிவிடுவேன். இப்படம் நிச்சயம் வெற்றி பெறும்.

இயக்குநர் சுந்தர்.சி எப்படி மூன்று படங்களுக்கும் ஆதியை வைத்தே தயாரிக்கிறார் என்று நினைத்தேன். இப்படத்தில் நடிக்கும்போது தான் ஆதிக்கு பல திறமைகள் இருக்கிறது என்பது தெரிந்தது. இயக்குநர் ரவிக்குமார் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.

‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி பேசும்போது,

இப்படத்தில் நான் சிரித்திருக்கிறேன். என்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் ‘காந்தி’. எங்கெங்கெல்லாம் சிரிக்கக் கூடாதோ அங்கெல்லாம் சிரிப்பேன். இப்படம் எனக்கு சிறப்பான படம். அவ்னி மூவிஸ் நிறுவனம், சுந்தர்.சி கூட்டணியில் இது எனக்கு மூன்றாவது படம். ஆனால், எங்களது மூன்று படங்களுக்கும் மூன்று இயக்குநர்கள். என்னுடைய கனவுகளை இயக்குநர் சுந்தர்.சி நனவாக்கினார். இதற்கு முன் வெளியான இரண்டு படங்கள் வெற்றி பெற்றதற்கு இயக்குநர் சுந்தர்.சி எனக்கு கொடுத்த சுதந்திரம் தான் காரணம். அதே வகையில் இப்படமும் வெற்றிபெறும்.

ஆரம்ப காலகட்டத்தில் ராப் பாடகராகத்தான் வந்தேன். நான் சுதந்திர பாடகராக வந்தபோது யாரும் அங்கீகரிக்கவில்லை. ஆனால், இப்போது தென் தமிழகத்தில் ‘ஹிப் ஹாப்’ பெயர் தனி மனிதனின் பெயராக அடையாளம் காணப்பட்டிருக்கிறது.. சென்னையில் தெருவோரங்களில் ‘வாட்டர் பாட்டில்’ என்ற குழுவுடன் இணைந்தோம். அதன்பிறகு ரேடியோவில் ‘வாடிபுள்ள வாடி’ பாடல் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைப் பார்த்து இயக்குநர் சுந்தர்.சி என்னை அழைத்தார். பாடலுக்கு வாய்ப்பு கொடுக்க நினைத்த அவரிடம் ஒரு படம் கொடுங்கள் என்று கேட்டேன். அப்படித்தான் எனது சினிமா பயணம் தொடங்கியது.

இயக்குநர் சுந்தர்.சி. பேசும்போது,

இப்படம் என்னுடைய தயாரிப்பில் ஆதி நாயகனாக நடிக்கும் மூன்றாவது படம். சிறு பையனாக வந்து தன்னுடைய நல்ல குணத்தால் ரசிகர்களின் மனதை வென்றிருக்கிறார். எனக்கும் அவருக்கும் அதிக வயது வித்தியாசம் இருந்தாலும் ஆதியை என்னுடையை சகோதரராகவே கருதுகிறேன். ‘மீசைய முறுக்கு’ நட்பை மையப்படுத்தும் படம், ‘நட்பே துணை’ விளையாட்டை மையப்படுத்தும் படம். ஆனால், ஆதியிடம் இருக்கும் நடிப்புத் திறமையையும் வெளிப்படுத்த விரும்பினேன். அதன் முயற்சிதான் ‘நான் சிரித்தால்’ திரைப்படம் என்றார்.

இயக்குநர் ராணா பேசும்போது,

எனது பெற்றோர்கள், ரஜினிகாந்த் மற்றும் என்னுடைய இயக்குநர் ஷங்கர் இவர்கள் மூவருக்கும் நன்றி. ரஜினிகாந்த் என்னுடையை ‘கெக்க பெக்க’ குறும்படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டினார். அவரின் பாராட்டுத்தான் 20 நிமிட குறும்படம் 2.20 மணி நேரமாக மாறியது. இயக்குநர் ஷங்கர் செய்யும் பணியில் 5 சதவீதம் செய்தாலே நான் வெற்றிப் பெற்று விடுவேன்.

உலக நாடுகளில் அழுத்தத்தில் இருக்கக்கூடிய முதல் 5 நாடுகளின் பட்டியலில் இந்தியா இருக்கிறது. நமக்கிருக்கும் அழுத்தம், தோல்வி, சோகம், கவலைகள், பிரச்னைகள் போன்றவற்றை தள்ளி வைத்து சிரித்தால் எப்படி இருக்கும்? என்பதே இப்படம். ஆகையால், அனைவரும் திரையரங்குகளில் வந்து படத்தைப் பாருங்கள். இப்படம் பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தன்று வெளியிடுகிறார், இப்படத்தை வெளியிடும் ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் T.முருகானந்தம்.

கதாநாயகி ஐஸ்வர்யா மேனன், சாரா, ஆஷிக், சுஜாதா, ‘படவா’ கோபி, கதிர், சத்யா, ‘எரும சாணி’ விஜய், இவர்களுடன் நடிகை குஷ்பூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியின் இறுதியாக, ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி ‘நான் சிரிச்சா வேற லெவல்’ என்ற பாடலை வெளியிட்டு பாடி, ஆடினார்.
உலக உரிமை : ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் T.முருகானந்தம்.

கைபா பிலிம்ஸ், கோ ஸ்டுடியோஸ், மற்றும் நாஸிக் ராவ் மீடியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஹாலிவுட்டில் தயாரித்துள்ள படம் Trapcity

கைபா பிலிம்ஸ், கோ ஸ்டுடியோஸ், மற்றும் நாஸிக் ராவ் மீடியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஹாலிவுட்டில் தயாரித்துள்ள படம் Trapcity

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

GV Prakashகைபா பிலிம்ஸ், கோ ஸ்டுடியோஸ், மற்றும் நாஸிக் ராவ் மீடியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஹாலிவுட்டில் தயாரித்துள்ள படம் Trapcity. பிராண்டன் இப்படத்தில் ஹீரோவாக நடிக்க ஜிவி பிரகாஷும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். ரிக்கி பர்செல் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். இன்று இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்டு, தயாரிப்பாளர் பேசியதாவது,

டெல்.கணேசன் பேசியதாவது,

“இந்தப்படம் எடுப்பதற்கான ஐடியா 2019-ல் வந்தது. ஒரு சவுண்ட் ட்ராக் வேலைக்காகத் தான் ஜிவியைச் சந்தித்தேன்..அப்போது தான் அவரை ஹாலிவுட் அழைத்தேன். இப்படத்தில் சர்ஜனாக ஜிவி நடித்துள்ளார்.

தெலுங்கிலும் சூர்யா குரலை பதிவு செய்த ஜிவி. பிரகாஷ்

படத்தின் ஹீரோ பிராண்டன் ஒரு பெரிய ராப் சிங்கர். அவர் அவரது வறுமை காரணமாக போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட போலிசாரால் சுடப்படுகிறார். அவருக்கு ட்ரீட்மெண்ட் செய்பவராக ஜீவி வருகிறார். இந்தச் சம்பவம் நடக்கும் போதே பிராண்டன் வெளியிட்ட ஒரு பாடல் பெரிதாக ஹிட் ஆகிறது. படத்தின் கதை இப்படியாகத் தான் ட்ராவல் ஆகும்

படம் புரொடக்சன் முடிந்து விட்டது. தற்போது போஸ்ட் புரொடக்சன் வேலை நடந்து கொண்டிருக்கிறது.

அங்கு ரிலிஸ் எப்படி?

அங்கு முதலில் டிஸ்ட்டிப்யூட்டரிடம் பேசுவோம்..அதன் பிறகு நிறைய மார்க்கெட் இருக்கிறது..

“ஜீவியை தேர்ந்தெடுத்த காரணம்?

கார்த்திக் நரேன் இயக்கத்தில் இணையும் தனுஷ் & ஜிவி. பிரகாஷ்

” அவரைச் சந்தித்த போதே அவரிடம் ஒரு திறமை இருப்பதாக தெரிந்தது..அவரின் வொர்க் எனக்குப் பிடிக்கும்..இனி இசைக்காக ஹாலிவுட்ல இருந்து வருவார்கள்.
மேலும் இந்தப் படத்தில் பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் நடித்துள்ளனர். நம்ம ஸ்டார்ஸும் இருக்கிறார்கள்… எத்தனை தியேட்டரில் ரிலீஸ் பண்ணணும் என்று ப்ளான் பண்ணவில்லை..
தமிழை விட ஆங்கிலம் மார்க்கெட் 200% அதிகம். அதனால் ஜிவி இண்டெர்நேஷனல் லெவலில் இனி அறியப்படுவார். ஜிவியை அமெரிக்காவில் உள்ள லோக்கல் மக்கள் அக்செப்ட் பண்ணிவிட்டார்கள். . படம் அங்கும் இங்கும் ஒரே நேரத்தில் ரிலிஸ் ஆகாது. ஏன் என்றால் அங்கு சென்சார் தனி..இங்கும் சென்சார் தனி.
டெவில்ஸ் நைட், கிறிஸ்துமஸ் கூப்பன், ட்ராப் சிட்டி, படங்களின் தயாரிப்பைத் தொடர்ந்து மேலும் இரண்டு படங்களை டிஸ்டிபூட் பண்ண இருக்கிறேன். தமிழில் இப்பைதைக்கு படம் பண்ணும் ஐடியா இல்லை.

யாருமே பண்ணாத விசயங்களைத் தான் நான் செய்யணும் என்று நினைக்கிறேன். இந்த ட்ராப் சிட்டி படம் ஒரு நல்ல அனுபவமாக இருக்கும். முதலில் ஆங்கிலத்தில் அதன்பின் டப் செய்து தமிழில் வெளியீடும் திட்டமும் இருக்கிறது” என்றார்

நடிகர் ஜிவி பிரகாஷ் பேசியதாவது,

சூர்யா-தாணு-வெற்றிமாறன் கூட்டணியில் ஜிவி பிரகாஷ்

இந்தப்படம் எனக்கு நல்ல செயல் எக்ஸ்பீரியன்ஸ். படத்தின் ஹீரோ
பிராண்டன் நல்ல மனிதர். அவரும் ஒரு மியூசிக் லவ்வர். அவரோடு வொர்க் பண்றது நல்லாருந்தது..ஹாலிவுட் மாதிரி இடங்களில் தொடர்ந்து பயணிக்க ஆசை இருக்கிறது. அதற்கான முயற்சிகளும் நடக்கின்றன.

தமிழ்படத்திற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?

அதை கம்பேரே பண்ண முடியாது. எனக்கு ஹாலிவுட் படத்தில் ஒரு நன்மை நடந்தது. கதையை முன்னமே என்னிடம் கொடுத்து விட்டார்கள். அதனால் படத்தை முழுதுவமாக உள்வாங்க முடிந்தது. மேலும் படப்பிடிப்பிற்குள் செல்லும் முன்பு ஒரு பக்கா ரிகல்சர் நடக்கும். அது சூட்டிற்கு போகும்போது கான்பிடன்ட்ஸ் கொடுக்கும்.

இப்படத்திற்காக இரண்டு பாடல்கள் பாடியுள்ளேன். இது பக்கா மியூசிக்கல் மற்றும் திரில்லர் படம்

கான்செர்ட் அமெரிக்காவில் பண்ணுவீங்களா?

ஜிவி: 350க்கும் மேல் பாடல்கள் பண்ணி இருக்கிறேன்..அதனால் நிச்சயம் கான்செர்ட் செய்வேன்.

தனுஷுடன் நடிகராக மோதி இசையமைப்பாளராக ஜெயித்த ஜிவி. பிரகாஷ்

உங்களுடைய அடுத்தடுத்த படங்கள்?

வசந்தபாலன் சார் இயக்கிய ஜெயில் முதலில் ரிலீஸாக இருக்கிறது. ஐங்கரன், அடுத்து வரும், அதற்கடுத்து எழில் சார் இயக்கிய ஆயிரம் ஜென்மங்கள்..வரும். சூரரைப் போற்று, வாடிவாசல் படங்களுக்கு இசை அமைத்து வருகிறேன்”.

Trap city படம் மூலம் ஹாலிவுட் சினிமாவில் என்ட்ரி ஆவதை ஒரு நல்ல நகர்வாகப் பார்க்கிறேன்” என்றார்

தென்னிந்திய நடிகைகளில் முதல் முறையாக மேடம் டுஸாட் மெழுகு சிலை மாளிகையில் இடம்பெற்ற காஜல் அகர்வால் !

தென்னிந்திய நடிகைகளில் முதல் முறையாக மேடம் டுஸாட் மெழுகு சிலை மாளிகையில் இடம்பெற்ற காஜல் அகர்வால் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Kajal Aggarwalதென்னிந்திய நடிகைகளில் முதல் முறையாக காஜல் அகர்வாலின் மெழுகு சிலை சிங்கப்பூர் மேடம் டுஸாட் மெழுகு சிலை மாளிகையில் இடம் பெறப்போவதாக அறிவிப்பு வெளியானபோது, அவரது ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். அவரது மெழுகு சிலை எந்தளவு தத் ரூபமாக இருக்கும்? அவரைப்போல் அச்சு அசலாக இருக்குமா? என பல கேள்விகள் சுற்றிவந்தன. இறுதியாக இன்று 5 பிப்ரவரி 2020 காலை சிங்கப்பூர் மேடம் டுஸாட் மெழுகு சிலை மாளிகையில் காஜல் அகர்வாலின் சிலை திறக்கப்பட்டது. தென்னிந்திய நடிகைகளில் முதல் முறையாக இந்தப் பெருமையை பெற்ற தன் வாழ்வின் பொன்னான தருணத்தை கொண்டாடி வருகிறார் காஜல் அகர்வால். தத்ரூபமாக படைக்கப்பட்டிருக்கும் அவரது சிலையை கண்டு அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்து வருகிறார்கள்.

மீண்டும் சூர்யா & சிவாவுடன் இணையும் காஜல் அகர்வால்

இது குறித்து காஜல் அகர்வால கூறியதாவது…

என்னை நானே ஒரு கலைஞரின் விழியில் பார்க்கிறேன். எனக்கும் சிலைக்குமான ஒப்பீடு அபாரமானதாக உள்ளது. ஒரு சிறு பிசிறில்லாமல் அத்தனை நுண் விவரங்களுடன் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. இத்தருணம் என் வாழ்வின் இன்றியமையாத பொன்னான தருணம். உலகின் மிக மிக பிரபலமான நபர்களின் சிலைகளுடன் எனது சிலையும் இடம்பெற்றிருப்பதில் மிக மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உணர்கிறேன் என்றார்.

More Articles
Follows