தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இயக்குனர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் என்பவர் பைனான்சியர் அன்புச்செழியனிடம் கந்துவட்டி முறையில் கடன் வாங்கியிருந்தார்.
கடன் நெருக்கடி அதிகரித்த நிலையில், அசோக்குமார் தற்கொலை செய்துகொண்டார்.
எனவே தற்கொலைக்கு தூண்டியதாக அன்புசெழியன் மீது வழக்கு பதிவு செய்யப்பட, இதனையறிந்த அன்புச்செழியன் தலைமறைவானார்.
தற்போது அவரை போலீசார் தேடி வரும் நிலையில், அன்புச்செழியனுக்கு எதிராக காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வெளிநாடுகளுக்கு அவர் தப்பிச் செல்வவதை தடுக்கும் வகையில் அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Police Issued Lookout Notice Against Financier Anbu Chezhiyan