தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஷங்கர்-ரஜினி-ஏஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவாகியுள்ள 2.0 படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை துபாய் நாட்டில் நடைபெறவுள்ளது.
எனவே இன்று அங்குள்ள பத்திரிகையாளர்களை படக்குழுவினர் சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்பில் படக்குழுவினர் பேசியதாவது….
ஏஆர். ரஹ்மான் பேசியதாவது…
இந்த படத்தில் 3 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. நாளை இரண்டு பாடல்கள் மட்டுமே வெளியிட இருக்கிறோம்.
மீதமுள்ள ஒரு பாடலை விரைவில் வெளியிட உள்ளோம்.
எமிஜாக்சன் பேசியதாவது…
இதற்கு முன் செய்த படங்களை விட முற்றிலும் புதிய அனுபவமாக இப்படம் இருந்தது.
படத்தின் முதல் நாள் சூட்டிங் முதல் அனைத்தும் ஒரு சவாலாக இருந்தது.
ஷங்கர் பேசியதாவது…
இது எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் கிடையாது. உலக ரசிகர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள ஒரு இந்திய திரைப்படம் இது.
இப்படத்தின் கரு கிடைக்கவே ஒரு வருடத்திற்கு மேலானது.
இதில் சொல்லப்பட்டுள்ள ஒரு கருத்திற்கு உலகம் தெரிந்த ஒரு நடிகர் தேவைப்பட்டார். அதான் அர்னால்ட்டை அனுகினோம்.
ஆனால் சில காரணங்களால் அவரை ஒப்பந்தம் செய்ய முடியவில்லை. அதன்பின்னர் அக்ஷய்குமாரிடம் பேசி ஒப்பந்தம் செய்தோம்.
ரஜினியுடன் பணி புரிந்த அனுபவம் பற்றி அக்ஷய்குமார் பேசியதாவது…
ரஜினிகாந்த் மிகவும் ஜாலியான மனிதர். ஒரு யதார்த்தமான மனிதரும் கூட. அவருடன் பழகிய அனுபவம் புதுமை.
வாழ்க்கையில் புகழின் உச்சியை தொட்ட பின்பும் இவ்வளவு எளிமையாக இருக்கிறார். அவர் புகழை தன் தலையில் ஏற்றிக் கொள்வதில்லை. எனவேதான் எல்லாருக்கும் பிடித்த வகையில் இருக்கிறார்.
இன்னும் அவரிடம் 5 படங்களாவது பணி புரிய வேண்டும். அவரிடம் நிறைய கற்றுக் கொள்ள இருக்கிறது. என்றார்.
ரஜினிகாந்த் பேசும்போது…
இந்திய சினிமாவே பெருமைப்பட கூடிய படம் 2.0 படம். இது உலக சினிமா ரசிகர்களை கவரக்கூடிய படம்“ என்றார்.