தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தயாரிப்பாளராக இருந்த உதயநிதியை ‘ஒருகல் ஒருகண்ணாடி’ படத்தில் நடிக்க வைத்து அவருக்கு ஹீரோ அவதாரம் கொடுத்தவர் இயக்குனர் எம்.ராஜேஷ்.
இதில் இவர்களுடன் சந்தானமும் இணைந்து இருந்தார். இப்படம் கமர்ஷியல் ரீதியாக மாபெரும் வெற்றிப் பெற்றது.
இந்நிலையில் கடவுள் இருக்கான் குமாரு படத்தை முடித்துவிட்டு மீண்டும் உதயநிதி படத்தை இயக்கவிருக்கிறாராம் ராஜேஷ்.
அதற்கான ஸ்கிரிப்ட் பணிகளை விரைவில் தொடங்கவிருக்கிறார்.
இதனிடையில் உதயநிதியிடம் கதை விவாதமும் நடைபெற்றதாக தெரிய வந்துள்ளது.
இதில் முக்கிய வேடத்தில் சந்தானம் நடிப்பார் என கூறப்படுகிறது.
தற்போது எழில் மற்றும் கௌரவ் இயக்கும் படங்களில் நடித்து வருகிறார் உதயநிதி.
இப்படங்களை முடித்துவிட்டு மீண்டும் ஓகே ஓகே என வந்துவிடுவார் என சொல்லப்படுகிறது.