தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் நடித்த சர்கார் படத்தில் தமிழக அரசு வழங்கும் இலவச பொருட்களையும் அவர்களின் ஆட்சி முறையையும் கடுமையாக விமர்சித்திருந்தார் டைரக்டர் முருகதாஸ்.
இதனையடுத்து அதிமுக தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவிக்க சென்சாருக்கு மீண்டும் அந்த அனுப்பி அந்த காட்சிகளை நீக்கிவிட்டு பின்னர் திரையிட்டனர்.
இதனிடையில் இவர் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வந்தன. இதனால் அவர் முன் ஜாமீன் பெற்றார்.
இந்நிலையில் டைரக்டர் முருகதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் இனி அரசை விமர்சித்து தனது படத்தில் காட்சி வைக்க மாட்டேன் என உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில் முருகதாஸ் மன்ன்னிப்பு கேட்க முடியாது என தெரிவித்துள்ளார்.
இனி இயக்கும் படங்களில் அரசின் நல்ல திட்டங்களை விமர்சிக்க மாட்டேன் என உத்தரவாதமும் அளிக்க முடியாது என உறுதியாக தெரிவித்துள்ளார்.
மேலும் முருகதாஸை கைது செய்ய 2 வாரங்களுக்கு தடையும் விதித்துள்ளது நீதிமன்றம்.
விஜயகாந்த் நடித்த ரமணா படத்தை இயக்கியவர் முருகதாஸ்.
அந்த படத்தில் தன் நாயகன் ஒரு பன்ச் டயலாக்கை அடிக்கடி சொல்வதாக காட்சிகளை வைத்திருந்தார்.
தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தை மன்னிப்பு. தற்போது அந்த வார்த்தையை நிஜத்தில் செய்து காட்டியிருக்கிறார் முருகதாஸ்.
Director AR Murugadoss says he wont ask apologise in Sarkar