ரமணா பாணியில் விஜய்யை மாஸாக காட்டும் லோகேஷ் கனகராஜ்

ரமணா பாணியில் விஜய்யை மாஸாக காட்டும் லோகேஷ் கனகராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijays role in Thalapathy 64 and Shooting updatesவிஜயகாந்தின் சினிமா கேரியரில் மிக மிக முக்கியமான படம் ரமணா. இப்படத்தை முருகதாஸ் இயக்கியிருந்தார்.

இதில் கல்லூரி பேராசிரியராக நடித்திருப்பார் விஜயகாந்த். கல்லூரி மாணவர்களின் படையை வைத்துக் கொண்டு இந்த சமூகத்தை ஊழலற்ற நாடாக மாற்றி காட்டுவார்.

தற்போது அதே பாணியில் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறாராம் விஜய்.

லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் தளபதி 64 படத்தில் விஜய்க்கு இந்த வேடம் என கூறப்படுகிறது.

இதன் படப்படிப்புகள் கடந்த சில நாட்களாக டெல்லியில் நடைபெற்றது.

விஜய் இல்லாத காட்சிகளை படமாக்கிய டைரக்டர் தற்போது விஜய் காட்சிகளை படமாக்கி வருகிறார்.

40 நாள் வரை படக்குழு டெல்லியில் தங்கி சூட்டிங்கை முடிக்கவுள்ளனர். விரைவில் விஜய்சேதுபதியும் கலந்துக் கொள்வார் என கூறப்படுகிறது.

இந்த படத்தில் விஜய்யுடன் விஜய்சேதுபதி, ஆண்டனி வர்க்கீஸ், சாந்தனு, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், ஸ்ரீமன், கௌரி, பவித்ரா உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

அனிருத் இசையமைக்க சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். அடுத்த 2020ல் ஏப்ரல் மாதம் படம் திரைக்கு வருகிறது.

Vijays role in Thalapathy 64 and Shooting updates

என் படம் ரிலீஸ் எப்போ சார்?; கவுதம்மேனனுக்கு கார்த்திக் நரேன் கேள்வி

என் படம் ரிலீஸ் எப்போ சார்?; கவுதம்மேனனுக்கு கார்த்திக் நரேன் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karthik Narains question to Gautham Menon about Naragasooranஓரிரு தினங்களுக்கு முன்பு தனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா, விக்ரமின் துருவ நட்சத்திரம், வருணின் ஜோஷ்வா’ ஆகிய படங்கள் ரிலீஸ் குறித்து பேசியிருந்தார் இயக்குனர் கௌதம் மேனன்.

இந்த 3 படங்களையும் இவர் இயக்கியிருந்தார். ஆனால் இவர் தயாரித்த நரகாசூரன் படம் ரிலீஸ் பற்றிய தகவல் எதையும் அதில் குறிப்பிடவில்லை.

இந்த நிலையில் நரகாசூரன் படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் அவர்கள் படம் குறித்து கௌதம் மேனனுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

“இந்தப் படம் (‘நரகாசூரன்’) எப்போது பகல் வெளிச்சத்தைப் பார்க்கும் என்பதைப் பற்றிய ஒரு தெளிவைச் சொன்னால் மிகவும் உதவியாக இருக்கும். ஆம், இந்தப் படம் என் இதயத்திற்கு நெருக்கமான படம்” எனத் தெரிவித்துள்ளார்.

கௌதம் மேனன் என்ன சொல்வாரோ? பார்ப்போம்.

Karthik Narains question to Gautham Menon about Naragasooran

நான்கு பரிணாம வெற்றியில் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்

நான்கு பரிணாம வெற்றியில் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

enptதிரைப்படத் தொழில் என்பது செழிப்பாக இருக்க வேண்டுமெனில் ஒவ்வொரு தயாரிப்பாளரும் எடுக்கும் திரைப்படங்கள் வெற்றி அடைந்து, அவர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்த வேண்டும். தங்கப் புதையல் வேட்டையைப்போல், ஒவ்வொரு திரைப்படத் தயாரிப்பு நிறுவனமும் இந்த வெற்றியை நோக்கியே தங்கள் தயாரிப்பைத் தொடர்கின்றன.
தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தொடர்ந்து தரும் வெற்றிகள் மூலம் தனது வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தை கவனிக்க வைத்திருக்கிறார்.

திருட்டு விசிடி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் திரையரங்கில் படம் ஓடும் காலத்தை குறைக்க, வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரித்த ‘கோமாளி’ திரைப்படம், 80 நாட்களைக் கடந்து இன்னமும் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு முறை ஓளிபரப்பு மற்றும் செயற்கைக்கோள் தொலைக்காட்சி உரிமைகளைத் தாண்டி இந்த வெற்றியை கோமாளி அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

வருண் மற்றும் சம்யுக்தா நடிப்பில் வெளியான இந்நிறுவனத் தயாரிப்பான ‘பப்பி’ என்ற படம் இளைஞர்கள் மட்டுமின்றி குடும்பத்தில் உள்ள அனைவரையும் கவரும் படமாக வெற்றி நடை போடுகிறது. ‘பப்பி’ வெளியாகி 25 நாட்கள் கடந்தும் இன்னும் கணிசமாக இருக்கைகள் நிரம்பிய அளவில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

கெளதம் வாசுவேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான ‘என்னை நோக்கிப் பாயும் தோட்டா’ திரைப்படம் மிக நீண்ட காத்திருப்புக்குப் பின் இப்போது இம்மாதம் 29ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பு வேல்ஸ் பிலிம் intetnational நிறுவனத்திடம் இருந்து அதிகாரபூர்வமாக வந்தது ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இவை அனைத்துக்கும் மேலாக ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருப்பது, இமைபோல் காக்க என்ற டேக் லைனுடன் வரும் ‘ஜோஷ்வா’ திரைப்படம்.
வருண் நடிக்கும் இப்படம் கெளதம் வாசுதேவ் இயக்கத்தில் உருவாகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

திரைப்படங்கள் மீது தீவிர வேட்கை கொண்டிருப்பதால்தான் டாக்டர் ஐசரி .கே. கணேஷ் மற்றும் அவரது படநிறுவனத்தால் இப்படி தொடர் வெற்றிகளைக் குவிக்க முடியும் என்பது நிதர்சனம்.

விஜய்க்கு ஒரு நியாயம்; நஸ்ரியாவுக்கு ஒரு நியாயமா? இத கேட்பீங்களா?

விஜய்க்கு ஒரு நியாயம்; நஸ்ரியாவுக்கு ஒரு நியாயமா? இத கேட்பீங்களா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sarkar movie poster‛நேரம்’ ‛ராஜா ராணி, உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நாயகியாக நடித்தவர் மலையாள நடிகை நஸ்ரியா.

அதன்பிறகு நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலானார்.

தனது கணவரின் தயாரிப்பு நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார் நஸ்ரியா.

கடந்த வருடம் பிரித்விராஜின் தங்கையாக ‘கூடே’ என்கிற படத்தில் நடித்திருந்தார்.

தற்போது கணவர் பஹத் பாசிலுக்கு ஜோடியாக ட்ரான்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார் நஸ்ரியா. இப்படத்தை பிரபல இயக்குனர் அன்வர் ரஷீத் இயக்குகிறார்.

இந்த பட பர்ஸ்ட் லுக் போஸ்டரில் நஸ்ரியா சிகரெட் பிடிப்பது போல உள்ள படம் வெளியாகியுள்ளது.

கடந்த வருடம் சர்கார் போஸ்டரில் விஜய் சிகரெட் பிடிப்பது போன்ற போட்டோ வெளியான போது பல எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஆனால் தற்போது நஸ்ரியாவுக்கு எந்த வித எதிர்ப்பும் எழவில்லை என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

Trance movie Nasriya smoking still goes viral

மீண்டும் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுக்கும் விஜயசாந்தி & அமலா

மீண்டும் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுக்கும் விஜயசாந்தி & அமலா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Vijaya shanthi and Amala re entry movie newsரஜினி, கமல் உள்ளிட்ட டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர் விஜயசாந்தி மற்றும் அமலா.

இதில் அமலா நடிகர் நாகர்ஜீனாவை திருமணம் செய்துக் கொண்டு செட்டிலானார்.

விஜயசாந்தி அரசியலில் கவனம் செலுத்தினார்.

தற்போது இருவரும் சினிமாவில் நடிக்கத் தொடங்கியுள்ளனர்.

மகேஷ்பாபு நடித்து வரும் சரிலேரு நீகேவரு என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார் விஜயசாந்தி. இப்படத்தில் நடிக்க 75 நாட்கள் கால்சீட் கொடுத்துள்ளாராம் விஜயசாந்தி. இவரது ரோல் மகேஷ்பாபுவிற்கு இணையாக இருக்கும் என்கிறார்கள்.

கடந்த ஆண்டு ஜீ 5-இல் ஹைக் பிரிஸ்டெஸ் என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார் நடிகை அமலா. தற்போது மீண்டும் கோலிவுட்டில் நடிக்க உள்ளார்.

வியூகம், சைல்ட்வுட் டைரிஸ் போன்ற குறும்படங்கள் மூலம் அறியப்பட்ட இயக்குனர் ஸ்ரீ கார்த்திக்.

இவர் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் எடத்தை இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தில் அமலா ஷர்வானந்த்துக்கு அம்மாவாக நடிக்கிறார்.

இந்தப் படத்தில் ஷர்வானந்த், ரிது வர்மா, நாசர், சதீஷ், ரமேஷ் திலக் ஆகியோரும் நடிக்கின்றனர்.

Actress Vijaya shanthi and Amala re entry movie news

அருண் விஜய் மீண்டும் போலீஸ் அவதாரமெடுக்கும் புதிய படம் “சினம்” !

அருண் விஜய் மீண்டும் போலீஸ் அவதாரமெடுக்கும் புதிய படம் “சினம்” !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

arun vijayதமிழ் சினிமாவில் சமீபமாக வெகு நேர்த்தியான படங்களால் வெற்றி நாயகனாக வலம் வரும் அருண் விஜய் அடுத்ததாக நடிக்கும் புதிய படத்திற்கு “சினம்” எனப் பெயரிடப்பட்டுள்ளது. தேசிய விருது பெற்ற இயக்குநர் GNR குமரவேலன் இப்படத்தினை இயக்குகிறார். குற்றம் 23 எனும் மாபெரும் வெற்றிப்படத்திற்கு பிறகு அருண் விஜய் மீண்டும் போலீஸ் அதிகாரியாக இப்படத்தில் நடிக்கிறார். இப்படம் குற்றம் 23ல் இருந்து முற்றிலும் மாறுபட்ட வேறொரு வடிவத்தில் போலீஸ் கதையை சொல்வதாக இருக்கும் என்கிறது படக்குழு.

சினம் எனும் வலிமை மிகுந்த தலைப்பு பற்றி அருண் விஜய் கூறியதாவது…

எப்போதும் எந்தவொரு விஷயத்திலும் , எந்தவொரு தொழிலும் கோபம் எனும் பண்பு எதிர்மறையானதாகவே அடையாளப்படுத்தப்படும். கோபத்தை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பலவற்றை கடந்தே பலரும் வந்திருப்போம். ஆனால் இந்தச்சினம் அப்பாடியானதொன்று அல்ல. பலநேரத்தில் கோபமானது பல விசயங்களில் சரியானதாக இருக்கும். தர்மத்தை நிலைநாட்டும் அவசியமான கருவியாக கோபம் இருக்கும். தேவையானவர்களுக்கு நியாயத்தை பெற்றுத்தர சினம் என்பது அவசியமாகவே இருக்கும். இப்படத்தின் கதைநாயகன் அப்படியான சினம் கொண்டவன். இயக்குநர் GNR குமரவேலன் மிக அற்புதமாக இந்தப் பாத்திரத்தை வடிவமைத்துள்ளார். அவரது திட்டமிடலும் திறமையும் வியக்கும்படி உள்ளது. அவரது அபார ஒருங்கிணைப்பில் முதல் நாள் முதல் ஷுட்டிங் வெகு அருமையாக நடந்து வருகிறது. நவமபர் 8 முதல் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

Movie Slide Pvt Ltd நிறுவனம் இப்படத்தினை தயாரிக்கிறது. பாலக் லால்வாணி இப்படத்தின் நாயகியாக நடிக்க, நடிகர் காளிவெங்கட் மிக முக்கிய பாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். நெஞ்சமுண்டு நேர்மையுண்டு, சகா படப்புகழ் சபீர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய, ராஜா முகமது எடிட்டிங் செய்கிறார். மைக்கேல் கலைஇயக்கம் செய்ய, ஸ்டண்ட் சில்வா சண்டைப்பயிற்சிகளை செய்கிறார். மதன் கார்கி, பிரியா ஏக்நாத் பாடல்களை எழுதுகிறார்கள். பவன் டிசைன் செய்கிறார். படத்தின் விறுவிறுப்பான இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மிகவிரைவில் துவங்கவுள்ளது.

More Articles
Follows