அண்ணாத்த’ புரொடியூசர்.. ‘அன்பே சிவம்’ டைரக்டர்..; தனுஷ் போடும் சக்ஸஸ் ரூட்

அண்ணாத்த’ புரொடியூசர்.. ‘அன்பே சிவம்’ டைரக்டர்..; தனுஷ் போடும் சக்ஸஸ் ரூட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’, சூர்யா நடிக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’, விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’, விஜய்சேதுபதி நடிப்பில் ஒரு படம் மற்றும் தனுஷ் நடிக்கும் ‘திருச்சிற்றம்பலம்’ ஆகிய முன்னணி நடிகர்களின் படங்களை தொடர்ச்சியாக தயாரித்து வருகிறது சன் பிக்சர்ஸ்.

இதில் அண்ணாத்த இந்தாண்டு தீபாவளி ரிலீசாக நவம்பர் 4ல் வருகிறது.

இந்த நிலையில் சுந்தர் சி இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள மற்றொரு படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்க திட்டமிட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

சுந்தர் சி. தயாரித்து, இயக்கி, நடித்திருக்கும் அரண்மனை 3 அக்டோபர் 14ல் ஆயுத பூஜை விருந்தாக வெளியாகிறது.

இத்துடன் தலைநகரம் 2 படத்தில் நாயகனாகவும் நடிக்கிறார் சுந்தர் சி.

இத கொஞ்சம் பாருங்க : மீண்டும் தனுஷ் – அமீர் கூட்டணியை இணைக்கும் பிரபல இயக்குனர்

இந்த படத்தை முடித்து விட்டு தனுஷ் படத்தை சுந்தர் இயக்குவார் என கூறப்படுகிறது.

மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் ‘திருச்சிற்றம்பலம்’ கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘மாறன்’ & தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலாவின் இயக்கத்தில் ஒரு படம், செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’ ஆகிய படங்கள் தனுஷ் கைவசம் தற்போது உள்ளன.

Dhanush next with this popular hit director ?

நிவின்பாலி – அஞ்சலி இணையும் பட சூட்டிங்கை தொடங்கிய சிம்பு பட புரொடியூசர்

நிவின்பாலி – அஞ்சலி இணையும் பட சூட்டிங்கை தொடங்கிய சிம்பு பட புரொடியூசர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அமைதிப்படை-2, கங்காரு, மிக மிக அவசரம் உள்ளிட்ட படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் தற்போது சிலம்பரசன் TR, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஜே சூர்யா நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்கிற படத்தை மிகப் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

தனது திரையுலக பயணத்திலேயே மிகப்பெரிய படமாக இதை எதிர்பார்க்கிறார் சிலம்பரசன் TR..

சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ட்ரெய்லருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் இதுவரை சுமார் 8 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இதனைத் தொடர்ந்து வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் இயக்குநர் ராம் டைரக்சனில் தனது ஐந்தாவது படத்தை தயாரிக்கிறது.

படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரம் அருகில் உள்ள தனுஷ்கோடியில் நேற்று முதல் துவங்கி நடைபெற்று வருகிறது..

மலையாள இளம் முன்னணி நடிகர் நிவின்பாலி கதாநாயகனாக நடிக்க, அஞ்சலி கதாநாயகியாக நடிக்கின்றார்.

கற்றது தமிழ், பேரன்பு படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக ராம் இயக்கத்தில் நடிக்கிறார் அஞ்சலி.

மேலும் இந்தப்படத்தில் சூரி முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்.

ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கலை வடிவமைப்பை உமேஷ் ஜே குமார் கவனிக்கிறார். மக்கள் தொடர்பு : A. ஜான்

தரமான படங்களை இயக்கி, தேசிய விருதும் பெற்ற இயக்குநர் ராமின் இந்த புதிய படைப்பும் தேசிய விருதை வரவழைத்து தரும் என எதிர்பார்க்கலாம்.

Director Ram’s new project kick starts

டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விஜய் விஸ்வா.; ஏன் தெரியுமா.?

டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விஜய் விஸ்வா.; ஏன் தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மதுரை வெஸ்டர்ன் பார்க் ஹோட்டலில் நடைப்பெற்ற ‘சர்வதேச அமைதி தமிழ் பல்கலைக்கழகம்’ சார்பில் சென்னை மாவட்ட நீதிபதி என்.வைத்தியலிங்கம் தலைமையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டு கொரோனா காலங்களில் மக்களுக்கு சேவை செய்ததற்காக நடிகர் விஜய் விஸ்வா அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

விழாவில் கமலம் குழுமம் சேர்மன் ஜெ.கே. முத்து, மங்கையர்கரசி பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் கார்த்திகேயன் மற்றும் எ.கே.ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் சமீபத்தில் நடைபெற்ற ரோட்டரி சங்க மாநில அளவிலான பொதுக்குழு பொதுக்குழுவில் ஆளுநர் ஜெய்கன் மற்றும் பாலகுரு அவர்களது முன்னிலையில் மாநில அளவிலான கௌரவ உறுப்பினர் பதவி நடிகர் விஜய் விஸ்வாவுக்கு வழங்கப்பட்டது.

ரோட்டரி சங்கத்தில் டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் முன்னிலையில் கௌரவ உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.

Why was Actor Vijay Viswa honoured with doctorate?

JUST IN என் சாவுக்கு அஜித்தே காரணம்.; தல வீட்டின் முன்பு தீக்குளிக்க முயன்ற தமிழச்சி (வீடியோ)

JUST IN என் சாவுக்கு அஜித்தே காரணம்.; தல வீட்டின் முன்பு தீக்குளிக்க முயன்ற தமிழச்சி (வீடியோ)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒருமுறை மருத்துவ பரிசோதனைக்காக நடிகர் அஜித் ஒரு மருத்துவமனைக்கு சென்றார். அப்போது அஜித்துக்கு தெரியாமல் அவரை பர்சானா என்ற பெண் வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனால் அந்த பெண்ணை மருத்துவமனை நிர்வாகம் வேலையை விட்டு நீக்கியது. இதனால் வேலை இல்லாமல் கடந்த ஒரு வருடமாக திண்டாடி வந்துள்ளார் அந்த பெண்.

எனவே நடிகர் அஜித்தை சந்தித்து மன்னிப்பு கேட்டு விட்டு மீண்டும் அந்த வேலையில் சேருவதற்கு உதவி செய்யுமாறு கேட்டுள்ளார்.

ஆனால் அவர் அஜித் வீட்டு வாசலிலேயே திருப்பி அனுப்பப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது,

மேலும் வேலைக்கு பரிந்துரை செய்ய முடியாது எனவும் அந்த பெண்ணின் குழந்தையின் படிப்புக்கு உதவுவதாக அஜித் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாம்.

இந்நிலையில் இன்று அக்டோபர் 4 மாலை நடிகர் அஜித் வீட்டின் முன் அந்த பெண் தீக்குளிக்க முயன்றுள்ளார்.

மேலும் அஜித்தால் தான் எனக்கு வேலை போய்விட்டது என் சாவுக்கு காரணம் அஜித் தான் என கதறி கொண்டே சென்றுள்ளார்.

இதனைப் பார்த்த போலீஸ் அவர் மேல் தண்ணீர் ஊற்றி அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

The women who tried to commit suicide infront of ajith kumar house

JUST IN எஸ்பிபி பாடிய கடைசி பாட்டு..; கனவிலும் நினைக்கவில்லை என ரஜினி உருக்கமான பதிவு

JUST IN எஸ்பிபி பாடிய கடைசி பாட்டு..; கனவிலும் நினைக்கவில்லை என ரஜினி உருக்கமான பதிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘அண்ணாத்த’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர்கள் அண்மையில் வெளியாகி ரஜினி ரசிகர்களின் உற்சாகத்தை எகிற வைத்துள்ளது.

சன் பிக்சர்ஸ் மிகப்பிரம்மாண்டமாக இந்த படத்தை தயாரித்துள்ளது.

இதில் ரஜினியுடன் குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மறைந்த எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் இறுதியாக பாடிய ‘அண்ணாத்த, அண்ணாத்த வர்றேன்…’ என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இது ரஜினியின் அறிமுக பாடலாக படத்தில் இடம்பெற்றுள்ளது.

‘அண்ணாத்த, அண்ணாத்த வர்றேன் அதிரடி சரவெடி தெருவெங்கும் வீசு, அண்ணாத்த, அண்ணாத்த வர்றேன் நடையில, உடையில கொல, கொல மாஸு என்பதாக அந்த பாடல் உள்ளது.

பாடலாசிரியர் விவேகா இந்த பாடலை எழுதியிருக்கிறார்.

வழக்கம்போல ரஜினிகாந்த் – எஸ்.பி.பி காம்போவில், அண்ணாத்த பட பாடலாக வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.

இது பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் கடைசி பாடல் என்பதால் ஒரு பக்கம் நெகிழ்ச்சியும் சூப்பரான பாடல் என்பதால் மறுபக்கம் மகிழ்ச்சியும் கலந்த வண்ணம் ரசிகர்கள் பாடலை கேட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினி உருக்கமாக ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில்…

“45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி அவர்கள் அண்ணாத்தே படத்தில் எனக்காகப் பாடிய பாடலின் படப்பிடிப்பின் போது, இதுதான் அவர் எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. என் அன்பு எஸ்பிபி தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்.” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Rajinikanth’s emotional post about SPB

ரஜினியின் ‘அண்ணாத்த’ முதல் பாடல்..; தெறிக்க விட்டு நெகிழ வைத்த எஸ்பிபி

ரஜினியின் ‘அண்ணாத்த’ முதல் பாடல்..; தெறிக்க விட்டு நெகிழ வைத்த எஸ்பிபி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘அண்ணாத்த’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர்கள் அண்மையில் வெளியாகி ரஜினி ரசிகர்களின் உற்சாகத்தை எகிற வைத்துள்ளது.

அரசியலுக்கு வரமாட்டார் என ரஜினி ஏமாற்றிவிட்டதால் ரசிகர்கள் துவண்டு இருப்பார்கள் என நினைத்தால் அது ரஜினி ரசிகர்களின் ஆரவாரம் அதிகரித்து செய்துவிட்டது எனலாம்.

சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் அண்ணாத்த படத்தை சிவா இயக்க இமான் இசைமையத்து வருகிறார்.

இதில் ரஜினியுடன் குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் எஸ்பி பாலசுப்ரமணியம் இறப்பதற்கு முன் இறுதியாக பாடிய அண்ணாத்த முதல் பாடலும் ரஜினியின் அறிமுக பாடலுமான ‘அண்ணாத்த, அண்ணாத்த வர்றேன்…’ என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது-

‘அண்ணாத்த, அண்ணாத்த வர்றேன் அதிரடி சரவெடி தெருவெங்கும் வீசு, அண்ணாத்த, அண்ணாத்த வர்றேன் நடையில, உடையில கொல, கொல மாஸு என்பதா அந்த பாடல் உள்ளது.

பாடலாசிரியர் விவேகா இந்த பாடலை எழுதியிருக்கிறார்.

வழக்கம்போல ரஜினிகாந்த் – எஸ்.பி.பி காம்போவில், அண்ணாத்த பட வெளியாகி அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. தன் வசீகர குரலில் பாடலை தெறிக்க விட்டுள்ளார்.

இது நிச்சயம் தியேட்டர்களில் பட்டைய கிளப்பும் என கண்டிப்பாக எதிர்பார்க்கலாம்.

இது பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் கடைசி பாடல் என்பதால் ஒரு பக்கம் நெகிழ்ச்சியும் சூப்பரான பாடல் என்பதால் மறுபக்கம் மகிழ்ச்சியும் கலந்த வண்ணம் ரசிகர்கள் பாடலை கேட்டு வருகின்றனர்.

இதோ அந்த பாடல் லிங்க்…

Evergreen Combo of Rajinikanth – SPB Comes to an End

More Articles
Follows