ரஜினிக்காக காத்திருக்கும் தனுஷ்-ரஞ்சித்

ரஜினிக்காக காத்திருக்கும் தனுஷ்-ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini Dhanush Ranjithரஞ்சித் இயக்கத்தில் கபாலி படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே ஷங்கரின் 2.0 படத்திலும் நடித்தார் ரஜினிகாந்த்.

இதனிடையில் கபாலி வெளியாகி மாபெரும் சாதனை படைத்தது.

தற்போது 2.0 படத்தின் சூட்டிங் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இப்படத்தை ஏப்ரலில் முழுவதுமாக முடித்துவிட்டு, மே மாதம் முதல் அடுத்த படத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினி.

இப்படத்தை தனுஷ் தயாரிக்க, ரஞ்சித் இயக்கவிருக்கிறார்.

மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு தற்போது நடைபெற்று வருவதால், விரைவில் கலைஞர்களின் விவரம் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

Dhanush and Ranjith waiting for Rajini to start shooting

பெருமையுடன் பிறந்தநாள் கொண்டாடும் சிவகார்த்திகேயன்

பெருமையுடன் பிறந்தநாள் கொண்டாடும் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan birthday celebrationசிவகார்த்திகேயன் சினிமாவில் நடிக்க தொடங்கி ஆறு வருடங்கள் மட்டுமே ஆகியுள்ளன.

இதுவரை ஒரு டஜன் படங்களில் கூட அவர் நடிக்கவில்லை.

ஆனால் இவரது ரசிகர் கூட்டம் திரையுலகையே ஆச்சரியப்படவைக்கிறது.

இந்நிலையில் இவர் நாளை தனது பிறந்தநாளை கொண்டாடவிருக்கிறார்.

இதனை முன்னிட்டு சில ரசிகர்கள் ரத்ததான முகாம் நடத்தி உதவ இருக்கிறார்களாம்.

ரசிகர்களின் இந்த நற்பணிகளால் நாளை தனது பிறந்தநாளை பெருமையுடன் கொண்டாடுவார் சிவகார்த்திகேயன் என்றே சொல்லலாம்.

சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் ரசிகர்கள் உறுதிமொழி

சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் ரசிகர்கள் உறுதிமொழி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

siva bday resolutionசிவகார்த்திகேயன் நாளை தனது 32வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இதனை முன்னிட்டு அவரது ரசிகர்கள் விமரிசையாக கொண்டாட தயாராகி வருகின்றனர்.

ஒரு சிலர் ரசிகர்கள் ஐந்து உறுதிமொழிகளையும் எடுக்கவிருக்கிறார்களாம். அவை…

1) கோபப்படக்கூடாது

2) எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கவேண்டும்

3) மது அருந்தக்கூடாது

4) சிவா ரசிகர்கள் அனைவரும் சகோதர சகோதரிகள்

5) பொதுமக்களுடன் பிரச்சினையில் ஈடுப்படக்கூடாது

காதலர் தினத்தில் ரஜினி ரசிகர்களுக்கு ஷங்கர் விருந்து

காதலர் தினத்தில் ரஜினி ரசிகர்களுக்கு ஷங்கர் விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2pointO rose shankar rajiniஎந்திரன் படத்தில் ஐஸ்வர்யா ராயின் காதலுக்காக ரெண்டு ரஜினிக்கும் பிரச்சினை வரும்.

தற்போது எந்திரன் இரண்டாம் உருவாகி வருகிறது.

இதில் ஆக்‌ஷன் அதிகளவில் இருக்கும் என கூறி வந்த நிலையில், நேற்று காதலர் தினத்தில் ஒரு ரோஜா போஸ்ட்ரை வெளியிட்டுள்ளார் ஷங்கர்.

இதனை ரஜினி ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

தனுஷின் ஹாலிவுட் சூட்டிங் தேதி உறுதியானது

தனுஷின் ஹாலிவுட் சூட்டிங் தேதி உறுதியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor dhanushகோலிவுட்டை தொடந்து ஹாலிவுட் படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியானது.

ஆனால், காலம் தாமதம் ஆவதால் இப்படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

ஆனால் வருகிற மே மாதம் இப்படத்தின் சூட்டிங் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரெஞ்ச் எழுத்தாளர் ரோமைன் பியுர்டேலஸ் எழுதிய நாவலை மையமாக வைத்து அமைக்கப்பட்டுள்ள இக்கதைக்கு ‘தி எக்டார்டினரி ஜர்னி ஆப் த ஃபகிர்’ என டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது.

இப்படத்தை ஹாலிவுட் இயக்குனர் மர்ஜானே சட்ரபி இயக்கவிருந்தார்.

எனவே, கனடாவைச் சேர்ந்த, கென் ஸ்காட் படத்தை இயக்கவிருக்கிறாராம்.

ஹாலிவுட் நடிகைகள் உமா துர்மன் மற்றும் அலெக்ஸாண்ட்ரா தத்தாரியோ ஆகியோரும் இப்படத்தில் நடிக்க உள்ளனர்.

100 கோடிக்கு காரணமான ஹரிக்கு சூர்யா கொடுத்த பரிசு

100 கோடிக்கு காரணமான ஹரிக்கு சூர்யா கொடுத்த பரிசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya hari carஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த சி3 படம் கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி வெளியானது.

இப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

இதனிடையில் 2டி எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனத்தை சேர்ந்த ராஜசேகர் பாண்டியன் இயக்குனர் ஹரிக்கு தங்க செயினை பரிசளித்தார்.

இப்படம் வெளியாகி 6 நாட்களில் உலகம் முழுவதும் ரூ- 100 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக
அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தற்போது சூர்யாவும் ஹரிக்கு பரிசளித்துள்ளார்.

டொயோடோ பார்டியூனர் கார் ஒன்றை பரிசளித்துள்ளார். இதன் மதிப்பு ரூ. 35 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

More Articles
Follows