தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
டப்பிங் யூனியன் தேர்தல் நடைபெற இருந்தது. ஒரு அணியில் ராதாரவியும் மற்றொரு அணியில் சின்மயியும் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர்.
ஆனால் சின்மயி மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், போட்டியின்றி ராதாரவி தலைவராக தேர்வாகியுள்ளார்.
இந்த நிலையில் ராதாரவியின் இந்த வெற்றி குறித்து சின்மயி கூறியதாவது:-
“எந்தத் தேர்தலாக இருந்தாலும் ஜனநாயக முறைப்படி தானே நடக்க வேண்டும்.
ரஜினி வருவார்; அவருடன் நிற்பேன்; ‘ராங்கா’ பேசிய ராதாரவி பல்டி
என்னுடைய மனுவை எதற்காக நிராகரித்தார்கள் என்ற எவ்வித அறிவிப்பும் செய்யவில்லை. ஆனால் ராதாரவி வெற்றி பெற்றதாக அறிவித்து உள்ளனர்.
இது சூழ்ச்சியாகவே தெரிகிறது.
டப்பிங் ஆர்ட்டிஸ்ட் யூனியனில் பணிபுரியும் நூற்றுக்கணக்கானவர்களின் சம்பளத்தை பல வருடங்களாக 10% பிடித்தம் செய்து டப்பிங் யூனியனை நடத்தி வந்தார்கள்.
அந்தப் பணத்தில்தான் யூனியன் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
மேலும் 47.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இடம் மற்றும் கட்டிடத்தை ஒரு கோடிக்கும் மேலாக மதிப்பிட்டு உறுப்பினர்களின் பணத்தில் ஊழல் செய்துள்ளனர்.
எதிர்த்துப் பேசுபவர்களைக் மிரட்டுகின்றனர்.
தற்போது தேர்தலில் தோல்வி உறுதியானதும் குறுக்கு வழியில் வெற்றி பெற்றுவிட்டார். இதை எதிர்த்து கோர்ட்டுக்கு செல்வேன்.
இவ்வாறு சின்மயி கூறினார்.