சேத்தன் – நயன்தாரா நடிக்கும் ‘ஜென்டில்மேன் 2’ ஷூட்டிங்.; அமைச்சர் ஆரம்பித்து வைத்தார்

சேத்தன் – நயன்தாரா நடிக்கும் ‘ஜென்டில்மேன் 2’ ஷூட்டிங்.; அமைச்சர் ஆரம்பித்து வைத்தார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மெகா தயாரிப்பாளர் கே.டி குஞ்சுமோன் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகும் படம் ‘ஜென்டில்மேன்”.

ஏ.கோகுல் கிருஷ்ணா இயக்கும் இப்படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைக்க, கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதுகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (அக்-9) சத்யா ஸ்டுடியோவில் துவங்கியது.

தமிழக தகவல் ஒளிபரப்பு மற்றும் செய்தித்துறை அமைச்சர் மாண்புமிகு அமைச்சர் எம்.பி.சாமிநாதன் ஸ்விட்ச் ஆன் செய்ய, எம்.ஜி.ஆர்-ஜானகி காலேஜ் மற்றும் சத்யா ஸ்டுடியோ தலைவர்
டாக்டர்.குமார் ராஜேந்திரன் கிளாப் அடிக்க, கவிப்பேரரசு வைரமுத்து ஆக்‌ஷன் சொல்ல.. படபிடிப்பு ஆரம்பமானது.

முதல் காட்சியில், நாயகன் சேத்தன், நாயகி நயன்தாரா சக்ரவர்த்தி முதல் ஷாட்டில் பங்கு பெற்றனர்.

எனது ஆரம்ப காலகட்டங்களில் எம்.ஜி.ஆர் நடித்த பல படங்கள், சத்யா ஸ்டுடியோவில் வளர்ந்த சத்யா மூவீஸ் பல படங்களை நான் வினியோகம் செய்துள்ளேன்.

என் வாழ்க்கையின் உயர்வுக்கு முக்கிய பங்களித்த இந்த சத்யா ஸ்டியோவில் #ஜென்டில்மேன்-ll
படபிடிப்பு துவங்கியதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்..” என்றார் மெகா தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன்.

தொடர்ந்து சென்னையிலேயே 25 நாட்கள் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

கதை ; K.T.குஞ்சுமோன்
இயக்கம் ; A.கோகுல் கிருஷ்ணா
ஒளிப்பதிவு ; அஜயன் வின்சென்ட்
இசை ; M.M.கீரவாணி
பாடல்கள் ; கவிப்பேரரசு வைரமுத்து
கலை ; தோட்டா தரணி
படத்தொகுப்பு ; சதீஷ் சூர்யா
ஒலிப்பதிவாளர் ; தபஸ் நாயக்
ஸ்டண்ட் ; தினேஷ் காசி
நடனம் ; பிருந்தா
ஆடை வடிவமைப்பு ; பூர்ணிமா
புராஜெக்ட் வடிவமைப்பு ; மற்றும் மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ் ; C.K.அஜய் குமார்
மக்கள் தொடர்பு ; ஜான்சன்
தயாரிப்பு மேற்பார்வை ; சரவண குமார், முருக பூபதி
விளம்பர வடிவமைப்பு ; பவன் சிந்து கிராபிக்ஸ்
விளம்பரம்: மூவி பாண்ட்

*நடிகர்கள்*

சேத்தன்
நயந்தாரா சக்கரவர்த்தி
பிரியா லால்
பிராச்சிகா
சித்தாரா
சுதா ராணி
ஸ்ரீ ரஞ்சனி
சத்யபிரியா
சுமன்
அச்சுத குமார்
மைம் கோபி
புகழ்
படவா கோபி
முனீஸ்ராஜா
ராதாரவி
பிரேம்குமார்
இமான் அண்ணாச்சி
வேலா ராமமூர்த்தி
ஸ்ரீராம்
ஜான் ரோஷன்
ஆர் வி உதயகுமார்
கே.ஜார்ஜ் விஜய் நெல்சன் மற்றும் பலர்

*படப்பிடிப்பு நடைபெறும் இடங்கள்*

சென்னை, ஹைதராபாத், துபாய், மலேசியா & ஸ்ரீலங்கா.

Gentleman 2 shooting started from today

சமூகத்தை திருத்த படம் எடுக்கல.. குடும்ப உரையாடலே சந்தோஷம்.. – சித்தார்த்

சமூகத்தை திருத்த படம் எடுக்கல.. குடும்ப உரையாடலே சந்தோஷம்.. – சித்தார்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சேதுபதி, சிந்துபாத் படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் உருவான படம் ‘சித்தா’.

நடிகர் சித்தார்த் தயாரித்து நடித்துள்ள ‘சித்தா’ சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இதனை முன்னிட்டு நன்றி தெரிவிக்கும் விழாவில் ‘சித்தா’ குழுவினர் பங்கேற்றனர்.

அப்போது இயக்குநர் அருண்குமார் பேசுகையில்…

“இந்த படத்தை எடுத்து செய்வதற்கு நானும் சித்தார்த்தும் ஒரு நாள் கூட யோசித்ததில்லை. கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் இதில் வேலை பார்த்துள்ளோம்.

என்னை நம்பி வேலை பார்த்த படக் குழுவினர் அனைவருக்கும் நன்றி. இந்தப்படம் கமர்சியலாகவும் வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சியை கொடுக்கிறது. இந்த படத்தில் சித்தார்த்தின் நடிப்பிற்கு மிகப்பெரிய அங்கீகாரங்கள் வரும் என காத்திருக்கிறேன். இந்தப் பொறுப்போடு இனி வரும் படங்கள் செய்வோம்”.

நடிகர் சித்தார்த் பேசுகையில்…

“இது அருண்குமாரின் ‘சித்தா’. வெற்றி, தோல்வி என்பது குறித்து நாங்கள் முடிவு செய்யாமல் படத்தின் கதைக்கருவுக்காக எடுத்தோம். நாட்டை மாற்றவோ, சமுதாயத்தைத் திருத்தவோ படம் எடுக்கவில்லை.

நல்ல விஷயம் பல ஆயிரம் வகையில் நடக்கலாம் என்பதைத் தெரியப்படுத்த வேண்டும் என விரும்பினோம். ‘சித்தா’ படம் அன்பு, குடும்பம், குழந்தைகள் வளர்ப்பில் உள்ள பொறுப்பு பற்றிய படம். குற்றம், தண்டனை சார்ந்த படம் கிடையாது.

நடந்த ஒரு அனுபவத்தை வாழ்க்கையாக மாற்றி விடாதீர்கள் என சொல்லும் படம். அடுத்து ஒரு மிகப்பெரிய படம் வரப்போகிறது. அதுவரை இந்தப் படத்தை எத்தனை பேரிடம் சென்று சேர்க்க முடியுமோ கொண்டு போங்கள். இந்தப் படம் பார்த்துவிட்டு ஒரு குடும்பத்தில் உரையாடல் ஆரம்பித்தால் கூட சந்தோஷம்தான்.

மணி ரத்னம், கமல்ஹாசன் என எனக்கு சினிமா சொல்லிக் கொடுத்த குருக்கள் இந்தப் படத்திற்கு கொடுத்த ஊக்கம் மிகப்பெரிது. ரஜினி சாரும் படத்தைப் பற்றி கேள்விப்பட்டு பார்ப்பதாக சொல்லி இருக்கிறார். படக்குழுவினர் அனைவருடைய உழைப்பும் இப்போது பேசப்படுகிறது.

பழனி என்ற ஊரும் அந்த முருகனும் எங்கள் படக்குழுவை நன்றாகப் பார்த்துக் கொண்டதற்கும் அங்குள்ள புது இடங்களை சினிமாவில் அறிமுகப்படுத்தியதும் எங்களுக்கு மகிழ்ச்சி.

படத்தில் நடித்துள்ள அந்த குழந்தைகள் தேவதைதான். அவ்வளவு அருமையாக நடித்துள்ளார்கள். ’அஞ்சலி’ படத்தின் குழந்தைகள் போல இவர்கள் இயல்பாக நடித்துள்ளதாக மணி சார் பாராட்டினார்.

உனக்குதான் பாடல் மறக்கமுடியாத ஒன்றாக விவேக் கொடுத்துள்ளார். சந்தோஷ் நாராயணனுக்கும் நன்றி. 99% படங்கள் ஆண்களுக்காகதான் எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக இதைப் பெண்களுக்கான படம் என்று சொல்லவில்லை.

மனிதநேயம் என்பதைப் புரிந்து கொண்டால் இந்தப் படமும் உங்களுக்குப் புரியும். இந்தப் படம் பார்த்துவிட்டு இயக்குநர் சசி சார் இரண்டு மணிநேரம் அழுது கொண்டே பேசினார்.

பாய்ஸ் படத்தில் முன்னா என்ற கேரக்டரில் நடித்தேன். 20 வருடங்களை சினிமாவில் கடந்து விட்டேன்.. தற்போது ‘சித்தா’ மூலம் மீண்டும் எனக்கு பெயர் கிடைத்துள்ளது

ஒரு நடிகனாக ‘சித்தா’ எனக்கு முக்கியமான படம். அஞ்சலி நாயர் படம் ஆரம்பிக்கும் போது கர்ப்பமாகிவிட்டார். எங்களுக்கு மகிழ்ச்சியான விஷயம் அது. படத்தில் சிறப்பாக வேலை செய்த அனைத்து தொழில்நுட்பக் குழுவினருக்கும் நடிகர்களுக்கும் நன்றி!” என்றார்.

Siddharth talks Kamal and Rajini at Chithha success meet

தமிழ் சினிமாவுக்கு கிடைத்த அற்புதமான படம் ‘சித்தா’… – சசி

தமிழ் சினிமாவுக்கு கிடைத்த அற்புதமான படம் ‘சித்தா’… – சசி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அருண்குமார் இயக்கத்தில் உருவான படம் ‘சித்தா’.

நடிகர் சித்தார்த் தயாரித்து நடித்துள்ள ‘சித்தா’ சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இதனை முன்னிட்டு நன்றி தெரிவிக்கும் விழாவில் ‘சித்தா’ குழுவினர் பங்கேற்றனர்.

அப்போது இயக்குநர் சசி பேசுகையில்…

“’சித்தா’ படத்தில் ஒரு காட்சி வரும். தூய்மைப் பணியாளர்களைத் தவறாக பேசும் ஒருவரை கதாநாயகி அடிப்பது போல. அந்தக் காட்சியில் கண்கலங்கி விட்டேன். இதுபோல, படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் கேரக்டர் ஆர்க்கும் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அருணின் ஃபிலிம் லாங்குவேஜ் சிறப்பாக வந்துள்ளது. எமோஷனலான, எண்டர்டெய்னிங்கான படம் இது. கிளைமாக்ஸை இதுபோல எடுப்பதற்கு ஒரு இயக்குநருக்கு மிகப்பெரிய தைரியம் வேண்டும். அது அருணுக்கு உள்ளது. தயாரிப்பாளராக சித்தார்த்தும் அந்த இடத்தை அருணுக்குக் கொடுத்துள்ளார்.

இதன் வெற்றி என் படத்தின் வெற்றி போல சந்தோஷமாக உள்ளது. அதைக் கொண்டாடவே இங்கு வந்தேன். தமிழ் சினிமாவுக்கு ஒரு அற்புதமான படம் கிடைத்துள்ளது”.

Chithha movie is one of best Tamil movie says Sasi

20 வருட உழைப்பில் ‘பிச்சைக்காரனுக்குப் பிறகு சித்தா’ கொடுத்த சிறப்பு… – தர்ஷன்

20 வருட உழைப்பில் ‘பிச்சைக்காரனுக்குப் பிறகு சித்தா’ கொடுத்த சிறப்பு… – தர்ஷன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அருண்குமார் இயக்கத்தில் உருவான படம் ‘சித்தா’.

நடிகர் சித்தார்த் தயாரித்து நடித்துள்ள ‘சித்தா’ சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இதனை முன்னிட்டு நன்றி தெரிவிக்கும் விழாவில் ‘சித்தா’ குழுவினர் பங்கேற்றனர்.

நடிகர் தர்ஷன் பேசியதாவது…

“இந்தப் படத்திற்கு வரவேற்பு கொடுத்து வரும் அனைவருக்கும் நன்றி. படத்தைத் தயாரித்து நடித்துள்ள சித்தார்த் சாருக்கும் அவரது தயாரிப்பு நிறுவனத்திற்கும் நன்றி. சித்தார்த் சார் படத்தில் அருமையாக நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்தது இயக்குநர் அருண் சார்தான். சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த எனக்கு இந்த கனமான கதாபாத்திரத்தை அருண் சார் கொடுத்துள்ளார். அவர் என்ன சொன்னாரோ அதைத்தான் செய்திருக்கிறேன்.

20 வருடங்கள் வாய்ப்புத் தேடி அலைந்த எனக்கு நல்ல கதாபாத்திரம் கிடைத்துள்ளது. ‘பிச்சைக்காரன்’ படத்தில் சசி சாரும் அருமையான கதாபாத்திரம் கொடுத்தார். பார்வையாளர்கள் பாராட்டி வருகின்றனர். மிக்க நன்றி!” என்றார்.

நடிகர் பாலாஜி… “ என்னுடைய முதல் படம் இது என்பது பெருமையாக உள்ளது. இயக்குநர் அருண் சார், சித்தார்த் சார், ராஜேஷ் சார் இவர்களுக்கு நன்றி” என்றார்.

நடிகை அஞ்சலி நாயர் பேசியதாவது…

“இந்த படம் இவ்வளவு பெரிய வரவேற்பு பெற்று வருவதில் மகிழ்ச்சி. சித்தார்த் சாருடன் எளிமையாக நடித்தோம்.

‘த்ரிஷ்யம்’ படம் பார்த்துவிட்டு தான் என்னை இந்த படத்தில் தேர்ந்தெடுத்தார்கள். அதற்கு ஜித்து ஜோசப் சாருக்கு நன்றி.

இந்த படம் ஆரம்பித்த சில நாட்கள் நடித்த பின்பு எனக்கு இரண்டாவது குழந்தை உருவானது. ஏழு மாதங்கள் வரை படத்தில் நடித்தேன்” என்றார்.

Chithha villain Darshan emotions at success meet

‘சித்தா’ படத்திற்கு சம்பளம் வாங்கவில்லை.; சிலிர்ப்பில் பாடலாசிரியர் விவேக்

‘சித்தா’ படத்திற்கு சம்பளம் வாங்கவில்லை.; சிலிர்ப்பில் பாடலாசிரியர் விவேக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எடாகி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அருண்குமார் இயக்கத்தில் நடிகர்கள் சித்தார்த், அஞ்சலி நாயர், நிமிஷா சஜயன், குழந்தை நட்சத்திரங்கள் பஃபியா , சஹஸ்ரா ஆகியோர் நடித்திருந்த படம் ‘சித்தா’. இந்தப் படத்தின் சக்சஸ் மீட்டில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

பாடலாசிரியர் விவேக் பேசியதாவது…

“என் அருண் என்று இயக்குநரை சொந்தம் கொண்டாடுவதில் மகிழ்ச்சி.

இதைவிட சிறந்த நடிப்பை கொடுக்க முடியுமா என சொல்லும் அளவிற்கு சித்தார்த் நடித்துள்ளார். இது போன்ற ஒரு கதையை நம்பி தயாரித்துள்ள சித்தாரத்துக்கு நன்றி. படக்குழுவினர் அனைவரும் சிறப்பாக செய்துள்ளனர். என்னாலான சின்ன சமர்ப்பணமாக இந்த படத்துக்கு நான் சம்பளம் வாங்கவில்லை” என்றார்.

கலை இயக்குநர் பாலச்சந்திரன் பேசியதாவது…

“நல்ல படமாக உருவான இதை வெற்றி படமாக மாற்றிய உங்கள் அனைவருக்கும் நன்றி. வாய்ப்பளித்த இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி!”

இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர்…

“இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து செய்துள்ளோம். அந்த திருப்தி எனக்கு உள்ளது. படத்தில் உள்ள பேருந்து காட்சி, கிளைமாக்ஸில் நிமிஷா பேசும் காட்சிகளுக்கு எல்லாம் சிறப்பான இசை வேண்டும் என சித்தார்த் ஆர்வத்தோடு கேட்டார். அது பார்வையாளர்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி!” என்றார்.

நடிகை சிந்துஜா விஜி…

” ஒரு நல்ல படத்தில் வேலை செய்துள்ள திருப்தி கிடைத்துள்ளது. இந்த படத்தில் பல இடத்தில் சித்தார்த் என்னை அழ வைத்துள்ளார்”. என்றார்.

நடிகர் பிரணவ்… ” இப்படியான ஒரு நல்ல படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரம் கொடுத்த இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் படத்தைக் கொண்டாடும் பார்வையாளர்களுக்கும் நன்றி”.

ஆக்டிங் கன்சல்டண்ட் ராஜேஷ்…

“ஆக்டிங் கன்சல்டன்ட் என்பது ஒன்றுமில்லை. படத்திற்கு முன்பு 40 நாள் ஒர்க் ஷாப் அனைவருக்கும் வைத்தோம். இதற்கு காரணம் சித்தார்த் சார்தான். எல்லா நடிகர்களுக்கும் நடிப்பு பயிற்சி கொடுக்க சுதந்திரம் கொடுத்த இயக்குநருக்கும் சித்தார்த்துக்கும் நன்றி”.

Lyricist Vivek emotional speech at Chithha success meet

ரஜினியை சந்தித்த 2018 படக்குழுவினர்.; என்ன சொன்னார் சூப்பர் ஸ்டார்.?

ரஜினியை சந்தித்த 2018 படக்குழுவினர்.; என்ன சொன்னார் சூப்பர் ஸ்டார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘தலைவர் 170’ படத்தில் படப்பிடிப்பிற்காக கேரளாவில் தங்கி இருக்கிறார்.

ஞானவேல் இயக்கும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்த படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ரஜினியை சந்தித்துள்ளனர் 2018 படக்குழுவினர்.

ரஜினிகாந்த்

மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டான இந்த படம் தற்போது ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ரஜினியுடன் நடைபெற்ற இந்த சந்திப்பு குறித்து இந்த படத்தின் இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது..

ரஜினிகாந்த்

“என்ன ஒரு அற்புதமான படம் ஜூட். எப்படி படமாக்கினீர்கள்? அட்டகாசமான படைப்பு.

ஆஸ்கர் விருதுக்கான ஆசீர்வாத்ததை உங்களிடமிருந்து பெற்றோம். “போய் ஆஸ்கார் கொண்டு வா, என் ஆசிகள் மற்றும் பிரார்த்தனைகள்” என நீங்கள் (ரஜினி) சொன்னது மறக்க முடியாது. மறக்கமுடியாத வாய்ப்பு. இந்த சந்திப்பை ஏற்படுத்திக் கொடுத்த சௌந்தர்யாவுக்கு நன்றி”

என பதிவிட்டுள்ளார் ஜூட் ஆண்டனி ஜோசப்.

ரஜினிகாந்த்

2018 movie team met Rajini and got blessing

More Articles
Follows