தென்தமிழக அரசியல் படத்தில் இணையும் செல்வராகவன் – யோகிபாபு – சுனில்

தென்தமிழக அரசியல் படத்தில் இணையும் செல்வராகவன் – யோகிபாபு – சுனில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமீப காலமாக நடிப்பில் கவனம் செலுத்தி அதிலும் தனக்கென தனி முத்திரை பதித்து வரும் இயக்குநர் செல்வராகவன், மொமென்ட் என்டர்டெயின்மென்ட்ஸ் பேனரில் ஜி ஏ ஹரிகிருஷ்ணன் மற்றும் துர்கா தேவி ஹரிகிருஷ்ணன் தயாரிக்க புதுமுக இயக்குநர் ரெங்கநாதன் இயக்கும் படமொன்றில் முதன்மை வேடத்தில் நடிக்கிறார்.

யோகி பாபு, பிரபல தெலுங்கு நடிகர் சுனில், மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, ராதாரவி மற்றும் வினோதினி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் இயக்குநர் ராஜீவ் மேனனின் மகள் சரஸ்வதி மேனன் நாயகியாக அறிமுகம் ஆகிறார்.

இன்னொரு நாயகியின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும்.

செல்வராகவன் - யோகிபாபு - சுனில்

படத்தை பற்றி பேசிய இயக்குநர் ரெங்கநாதன்…

“தென் தமிழ்நாட்டின் அரசியலை பற்றி பேசும் கதை இது. பரபரப்பான களத்தில் ரசிகர்களை கவரும் வகையில் பல்வேறு அம்சங்களை புகுத்தி உள்ளோம். கதையைக் கேட்ட செல்வராகவன் அவர்கள் அதை மிகவும் ரசித்ததோடு முதன்மை வேடத்தில் நடிக்கவும் ஒப்புக்கொண்டார்.

“படப்பிடிப்பு தொடங்கி திண்டுக்கல், ராமநாதபுரம் மற்றும் கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

50 நாட்களில் படப்பிடிப்பை நிறைவு செய்ய திட்டமிட்டு பணியாற்றி வருகிறோம். பிரபல இசையமைப்பாளர் இத்திரைப்படத்திற்கு இசை அமைக்கிறார். அவரது பெயர் விரைவில் வெளியிடப்படும்,” என்றார்.

இத்திரைப்படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவை கவனிக்க, ராமபாண்டியன் படத்தொகுப்பை கையாள்கிறார். கலை இயக்கத்திற்கு டி பாலசுப்பிரமணியன் பொறுப்பேற்றுள்ளார். நிர்வாக தயாரிப்பாளர்: சதீஷ் சுந்தர்ராஜன், மக்கள் தொடர்பு: நிகில் முருகன்.

மொமென்ட் என்டர்டெயின்மென்ட்ஸ் பேனரில் ஜி ஏ ஹரிகிருஷ்ணன் மற்றும் துர்கா தேவி ஹரிகிருஷ்ணன் தயாரிக்க புதுமுக இயக்குநர் ரெங்கநாதன் இயக்கும் படமொன்றில் செல்வராகவன் முதன்மை வேடத்தில் நடிக்கிறார்.

செல்வராகவன் - யோகிபாபு - சுனில்

Selvaraghavan Sunil Yogi Babu act in new movie revolves around TN politics

கவிஞர்… முன்னாள் மிஸ். தமிழ்நாடு.. சிறந்த இயக்குநர் என சரித்திரம் படைக்கும் ஷீபா

கவிஞர்… முன்னாள் மிஸ். தமிழ்நாடு.. சிறந்த இயக்குநர் என சரித்திரம் படைக்கும் ஷீபா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமுதாயம் வெற்றி பெற அதனை வழி நடத்திச் செல்வதற்கு ஆற்றலும், திறனும் மிகுந்த தலைவர் ஒருவர் வேண்டும் என முன்னோர்கள் சொல்வர்.

இன்றைய சூழலில் இளைய சமுதாயத்தினரை அவர்கள் விரும்பும் சமூக ஊடக வலைத்தளங்கள் மூலமாக முன் உதாரண நாயகியாக திகழ்பவர் டாக்டர் ஷீபா லூர்தஸ் (Dr.Sheeba Lourdhes )

இவரைப் பற்றி தெரிய ஆர்வமுடன் விசாரிக்க தொடங்கினோம். அதன் போது கிடைத்த / குவிந்த தகவல்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தின. அவரின் சாதனைகளை பட்டியலிடத் தொடங்கினால்..

குழந்தைகள் நல உளவியலாளர்

சமூக சீர்திருத்தவாதி

சமூக செயற்பாட்டாளர்

முன்னாள் மிஸ் தமிழ்நாடு

தொலைக்காட்சி விவாத பேச்சாளர்

அரசியல் விமர்சகர்

பெண்ணுரிமை இயக்கவாதி

கவிஞர்

எழுத்தாளர்

ஆளுமை மேம்பாட்டு பயிற்றுனர்

சுய முன்னேற்ற பேச்சாளர்

தத்துவவாதி

குருதி நன்கொடையாளர்

உடல் தானம் செய்திருப்பவர்

மேற்கத்திய நடனக் கலைஞர்

வங்கியாளர் / நிதி சேவையாளர்

இது மட்டும் அல்லாமல் ஒன்றுபட்ட சமாரியர்கள் அமைப்பு (UNITED SAMARITAN INDIA FOUNDATION) இந்தியா பவுண்டேஷன் எனும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தலைவர்

ஷீபா லூர்தஸ்

அலையன்ஸ் கிளப் இன்டர்நேஷனல் எனும் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்

லயன்ஸ் கிளப் ஆப் சென்னை ஒன்றுபட்ட சமாரிட்டன்ஸ் எனும் அமைப்பின் தலைவர்

சர்வதேச அளவிலான குழந்தைகளின் உளவியல் சிகிச்சை நிபுணர்

இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தமிழ்நாட்டு பிரிவின் புரவலர்

தொழில் முறையிலான உளவியல் ஆலோசனை வழங்கும் நிபுணர்கள் சங்கத்தின் முன்னாள் செயலாளர்

அகாடமி ஆப் பிசியோதெரபிஸ்ட் எனும் அமைப்பின் உறுப்பினர் மற்றும் இந்த அமைப்பின் சார்பில் வெளியாகும் இதழில் கட்டுரைகளை எழுதியவர் மற்றும் புதிய ஆய்வுகளை வழங்கியவர்.

தொழில் முறையிலான உளவியல் நிபுணர்கள் சங்கத்தின் உறுப்பினர்

ஒய் எம் சி ஏ எனும் சேவை அமைப்பின் தன்னார்வத் தொண்டர் மற்றும் ஆயுட்கால உறுப்பினர்

நாரத கான சபா எனும் கலை இலக்கிய அமைப்பின் ஆயுட்கால உறுப்பினர்

ஷீபா லூர்தஸ்

குழந்தை தொழிலாளர்கள் குறித்த ஆவண படத்தினை இயக்கி, சிறந்த ஆவண படத்திற்காக பிரபல இயக்குனர் ஹரிஹரனிடமிருந்து விருதினை பெற்றவர்.

அனாதை ஆசிரமம்/ ஆதரவற்றவர்களுக்கான காப்பகம்/ புணர்வாழ்வு மையங்கள் /குடிசை வாழ் குழந்தைகளுக்குக்கான கல்வி வழங்குதல் என பல்வேறு தளங்களில் ஈடு இணையற்ற முறையில் செயல்படும் சமூக செயற்பாட்டாளர் என சர்வதேச அளவில் அறியப்பட்டவர்.

45க்கும் அதிகமான நாடுகளுக்கு பயணித்து ஒவ்வொரு நாட்டிலும் மக்களின் கலாச்சாரம் மற்றும் உறவு குறித்த ஆய்வினை மேற்கொண்டவர்..

இப்படி இவரின் சேவைகளை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.

இதனுடன் மட்டும் நில்லாமல்.. ஆண்டுதோறும் மறைந்த முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளை சென்னையில் உள்ள 200 குடிசை வாழ் குழந்தைகளின் கல்விக்காக நிதிகளை சேகரித்து வழங்கி வருபவர்

இவர் உருவாக்கி நடத்தி வரும் ஒன்றுபட்ட சமாரியர்கள் அமைப்பு இந்தியா பவுண்டேஷன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் குடிசை பகுதி வாழ் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்கான திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்.

குறிப்பாக எச்ஐவி எனும் உயிர்க்கொல்லி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி, அவர்களுக்கான வாழ்விடம் ஆகியவற்றை உருவாக்கி வருகிறார். மேலும் வீதியோரத்தில் ஆதரவற்று உருகுலைந்து கிடக்கும் செல்ல பிராணிகளுக்கு சிகிச்சை அளித்து, பராமரித்து வருவதற்கான திட்டத்தையும் நடைமுறைப்படுத்தி வருகிறார்.

கிருபாய் மறுவாழ்வு மையம் என்ற அமைப்புடன் இணைந்து மது மற்றும் போதைக்கு அடிமையானவர்களை திருத்தி, அவர்களுக்கு மறுவாழ்வு வழங்கும் நடவடிக்கைகளில் ஆர்வமுடன் செயல்பட்டு வருகிறார்.

‘தி குயின் ஃபீஸ் ‘ எனும் குழுமத்தை உருவாக்கி அதில் பெண்கள் மேம்பாட்டிற்கான.. அவர்களின் தனித் திறன் மற்றும் வாழ்வாதாரத்திற்கான திட்டத்தில் பணியாற்றி வருகிறார்.

மனிதம் அசோசியேஷன் சார்பில் குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான ‘விடியலை நோக்கி’ மற்றும் ‘ஹேப்பினஸ் பிஹைன்ட் டிராஜிடி’ எனும் ஆவண படங்களை இயக்கி, சிறந்த படைப்பிற்கான விருதினை வென்றிருக்கிறார்.

மலேசியாவில் வாழும் இந்தியர்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறை தாக்குதலின் போது அது தொடர்பான விழிப்புணர்விற்காக ஊடகவியலாளரை சந்திப்பினை ஒருங்கிணைத்தவர்.‌

வெளிநாடுகளில் எதிர்பாராமல் பாதிப்பிற்கு உள்ளாகும்/ தாக்குதலுக்குள்ளாகும் இந்தியர்களுக்காக.. அவர்களின் பாதுகாப்பிற்காக சர்வதேச அளவில் ஊடக ஒருங்கிணைப்பை மேற்கொண்டு அவர்களின் நல்வாழ்விற்காக பாடுபட்டிருக்கிறார்.

இவரின் சாதனை பட்டியல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. சமூகத்திற்காக.. சமூக மேம்பாட்டிற்காக தன் வாழ்வை அர்ப்பணித்திருக்கும் டாக்டர் ஷீபா லூர்தஸ் (Dr.Sheeba Lourdhes ) போன்றவர்கள்.. இந்த டிஜிட்டல் தலைமுறையினர் கொண்டாட வேண்டிய இளம் தலைவர். அவர்களுடைய பாணியில் விவரிக்க வேண்டும் என்றால் இவர் செய்து வரும் பணிக்காக மில்லியன் கணக்கிலான லைக்ஸ்களையும், பில்லியன் கணக்கிலான ஃபாலோயர்களையும் கொண்டிருக்க வேண்டும்.

இவரின் சாதனைகளை தொடர்ந்து கேட்கும் போது வள்ளுவன் உரைத்த ‘ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனை /மகளை சான்றோன் என கேட்ட தாய்’ என்ற இரண்டடி திருக்குறள்தான் நினைவுக்கு வருகிறது.

இதனிடையே அவர் ஆண்டுதோறும் ஐந்து லட்சம் நாட்டு மரங்களை இயற்கை சுற்றுப்புற சூழலியலில் விருப்பமுள்ளவர்களுடன் இணைந்து பதியமிடுகிறார் என்பதும், இந்திய செஞ்சிலுவை சங்கத்துடன் இணைந்து குருதி நன்கொடை கண்தானம் உடல் உறுப்பு தானம் ஆகியவற்றை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் ஆயிரம் கணக்கிலானவர்கள் இது தொடர்பான உறுதிமொழி சான்றினை ஒப்படைப்பதற்கு வித்திட்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஷீபா லூர்தஸ்

Director Ex Miss Tamilnadu multi talented Dr Sheeba

யோகி பாபு – பாலாஜி இணைந்த ‘லக்கி மேன்’ பட டீசர் வெளியானது

யோகி பாபு – பாலாஜி இணைந்த ‘லக்கி மேன்’ பட டீசர் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் யோகிபாபு நடிக்கும் திரைப்படம் ‘லக்கி மேன்’.

இப்படத்தில் வீரா, ரேச்சல் ரெபேக்கா, அப்துல் லீ, ஆர்.எஸ். சிவாஜி, அமித் பார்கவ், சாத்விக் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

திங்க் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ரோல்டன் இசையமைத்துள்ளார்.

‘லக்கி மேன்’ படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று முடிவடைந்துள்ளது.

தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

இந்நிலையில், யோகிபாபுவின் ‘லக்கி மேன்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

yogi babu’s lucky man movie teaser released

ஆர்.கே.சுரேஷிடம் சிக்கிக் கொண்ட ‘ஒயிட் ரோஸ்’ கயல் ஆனந்தி

ஆர்.கே.சுரேஷிடம் சிக்கிக் கொண்ட ‘ஒயிட் ரோஸ்’ கயல் ஆனந்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை ‘கயல்’ புகழ் ஆனந்தி பல திரைப்படங்களில் தனது திறமையான நடிப்புடன், எளிமையான, இயல்பான, பக்கத்து வீட்டுப் பெண் கதாபாத்திரம் மூலம் ரசிகர்களின் மில்லியன் கணக்கான இதயங்களைக் கவர்ந்துள்ளார்.

இப்போது இயக்குநர் சுசி கணேசனின் முன்னாள் அசோசியேட்டாக இருந்தவரும் இந்தப் படம் மூலம் அறிமுக இயக்குநராகும் ராஜசேகர் இயக்கத்தில் சைக்கலாஜிக்கல் திரில்லர் கதையான ‘ஒயிட் ரோஸ்’ படத்தில் ஆனந்தி நாயகியாக நடிக்கிறார்.

படத்தின் மையக்கதை பற்றி இயக்குநர் ராஜசேகர் கூறும்போது, …

“ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு மிருகம் நிச்சயம் இருக்கும். அது நம்மைச் சுற்றியுள்ள மிருகங்களை விட ஆபத்தானது என்று பலர் கூறுவதை நாம் கேள்விப்படுகிறோம்.

கயல் ஆனந்தி

ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சாதாரணப் பெண், இப்படிப்பட்ட ஒரு மிருகத்திடம் மாட்டி எப்படி பிரச்சனைகளை எதிர்கொள்கிறார் என்று இறுதி வரை பல திருப்பங்களுடன் கூடிய சைக்கலாஜிக்கல் திரில்லராக இந்தப்படம் இருக்கும்.

படத்தின் முன்னணி கதாபாத்திரங்களைப் பற்றி மேலும் அவர் கூறுகையில்…,

“கயல் ஆனந்தி பல படங்களில் தனது அழகான நடிப்பால் நம்மைக் கவர்ந்துள்ளார். ஆனால், இது அவரது சினிமா பயணத்தில் நிச்சயம் ஒரு சிறந்த படமாக இருக்கும்.

ஆர்.கே.சுரேஷ் வில்லனாக நடிக்கிறார். அவர் தனது அற்புதமான நடிப்பால் பார்வையாளர்களை நடுங்க வைப்பார் என்று நான் உறுதியாக சொல்வேன். இதில் பார்வையாளர்கள் அவரின் வேறு வெர்ஷனைப் பார்ப்பார்கள்.

இன்னும் பல முக்கிய நடிகர்களை நாங்கள் இறுதி செய்து வருகிறோம். விரைவில் அது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிடுவோம்” என்றார்.

ஒயிட் ரோஸ்

*தொழில்நுட்பக்குழு விவரம்:*

எழுத்து, இயக்கம்: ராஜசேகர்,
தயாரிப்பு: ரஞ்சனி,
இசை: ஜோஹன் ஷெவனேஷ்,
ஒளிப்பதிவு: இளையராஜா வி,
படத்தொகுப்பு: கோபிகிருஷ்ணா,
பாடல்கள்: கவிப்பேரரசு வைரமுத்து,
கலை: டி.என். கபிலன், ஸ்டண்ட்ஸ்: ‘பீனிக்ஸ்’ பிரபு & ‘ராம்போ’ விமல்,
நடனம்: லீலாவதி,
ஆடை வடிவமைப்பு: ஏ. சுபிகா,
ஒலி வடிவமைப்பு & ஒலிக்கலவை: லக்ஷ்மி நாராயணன் ஏ.எஸ்.,
VFX: Hocus Pocus,
படங்கள்: எஸ் மோகன்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா-ரேகா D’One,
பப்ளிசிட்டி டிசைன்: Zoe Studios,
நிர்வாக மேலாளர்: பி தண்டபாணி,
லைன் புரொடியூசர்: சேதுராமன்

ஒயிட் ரோஸ்

Kayal Anandhi RK Suresh starrer White Rose

இயக்குனர் மிஷ்கினை போன்றவர் வெப் இயக்குனர் ஹாரூன்.. – கார்த்திக் ராஜா

இயக்குனர் மிஷ்கினை போன்றவர் வெப் இயக்குனர் ஹாரூன்.. – கார்த்திக் ராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹாரூன் இயக்கத்தில் கார்த்திக் ராஜா இசையில் நட்டி நடித்துள்ள படம் ‘வெப்’. வலை.

இந்த படம் ஆகஸ்ட் 4ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா பேசும்போது…

நான் தமிழுக்கு அடிமை. ஹீரோயின்கள் அழகாக தமிழ் பேசியதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது. நட்டியுடன் அவர் அறிமுகமான நாளை உட்பட 3 படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளேன் இயக்குனர் மிஷ்கின் போல ஒரு சிலர்தான் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை கேட்டு வாங்குவதை சரியாக தெரிந்து வைத்து இருப்பார்கள் அந்த வகையில் இந்த படத்தின் இயக்குனர் ஹாரூணும் ஒருவர்” என்றார் .

இயக்குனர் ஹாரூண் பேசும்போது…

, “நல்ல படைப்புகளை தொடர்ந்து மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி.

பெரும்பாலும் ஒரு கட்டடம் அழகாக தெரிவதைத்தான் பார்ப்பார்கள். ஆனால் அதன் அடித்தளம் யாருக்கும் தெரியாது.

அதுபோலத் தான் தயாரிப்பாளர்களும்.. கார்த்திக் ராஜாவிடம் இந்த படத்தின் கதை பற்றி கூறிய போது, அப்பா (இளையராஜா) சைக்கோ படத்திற்கு ஒரு விதமாக பண்ணினார். நான் இதில் ஒரு புது மாதிரியாக முயற்சிக்கிறேன் என்று ஊக்கமளித்தார்.

நடிகர் நட்டி புது இயக்குனர் என நினைக்காமல் 100% எங்களை நம்பினார். இந்த படத்தின் கதாநாயகிகள் தங்களுக்குள் ஆடை சம்பந்தமாக எந்த பிரச்சினையும் வரவில்லை என்று சொன்னார்கள்.. அதற்கு காரணம் இரண்டு பாடல்களைத் தவிர கிளைமாக்ஸ் வரை அனைவருக்கும் ஒரே காஸ்டியூம் தான். ஜெயிலர் திரைப்படம் வரும் அதே மாதத்தில் எங்களது படமும் வெளியாவதில் மகிழ்ச்சி” என்றார்.

Director Haroon is like Mysskin says Karthikraja

ஒரு படத்தின் வியாபாரத்திற்கு தயாரிப்பாளர் சங்கம் உதவாது – தனஞ்ஜெயன்

ஒரு படத்தின் வியாபாரத்திற்கு தயாரிப்பாளர் சங்கம் உதவாது – தனஞ்ஜெயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹாரூன் இயக்கத்தில் கார்த்திக் ராஜா இசையில் நட்டி நடித்துள்ள படம் ‘வெப்’. வலை.

இந்த படம் ஆகஸ்ட் 4ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசும்போது..

“நடிகர் நடிகைகள் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளத்தான் வேண்டும். அதே சமயம் அது வேறு ஒரு படத்தின் படப்பிடிப்பு உள்ளிட்ட வேலைகளை ரத்து செய்துவிட்டு அவர்கள் வருவதற்கு சிரமமாக கூட இருக்கலாம்.

அதனால் தங்கள் விழா பற்றி முறையான அறிவிப்பை முன்கூட்டியே படக்குழுவினர் அவர்களுக்கு தெரிவித்து விட்டால் அவர்களுக்கும் கலந்து கொள்ள ஏதுவாக இருக்கும். படம் நல்ல படமாக இருந்தால் நிச்சயமாக இப்போது ஒதுங்கிப்போனவர்கள் எல்லாம், நாளை சாட்டிலைட் ரைட்ஸ், டிஜிட்டல், ஓடிபி என வியாபாரம் பேச தேடி வருவார்கள்.

சினிமா தயாரிக்க வருபவர்கள் கனத்த இதயத்துடன் தான் வர வேண்டும் தயாரிப்பாளர் சங்கம் தயாரிப்பாளர்களின் பிரச்சினைகளுக்கு உறுதுணையாக உதவியாக இருக்குமே தவிர அவர்களின் வியாபார விஷயங்களில் நிச்சயமாக பொறுப்பெடுத்துக் கொள்ள முடியாது.

ஒருவேளை படம் தோல்வி அடைந்தாலும் வருத்தப்படக்கூடாது. தவறுகளை எப்படி களைவது என அதிலிருந்து கற்றுக்கொண்டு அடுத்த படத்தில் அதை சரி செய்ய வேண்டும். நடிகர் நட்டி அடுத்தடுத்து பிரம்மாண்ட படங்களில் நடிக்க இருக்கிறார். வரும் நாட்களில் அவர் உலக அளவில் பேசப்படுவார்” என்று கூறினார்.

Producer council will not help in movie business

More Articles
Follows