தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் சூரிக்கு அப்பாவாக நடித்தவர் தவசி.
இந்த படத்தில் ‘கருப்பன் குசும்புக்காரன்’ என்று இவர் பேசிய வசனம் தான் இவரை படு பிரபலமாக்கியது. தற்போது அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் நடித்து வருகிறார் தவசி.
தற்போது இவரை புற்றுநோய் தாக்கியுள்ளது.
அண்மையில் வெளியான புகைப்படத்தல் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியிருக்கிறார்.
மேலும் அவரின் சிகிச்சைக்கு போதிய பணமின்றி கஷ்டப்படுவதால் பண உதவியை நாடியிருக்கிறார்.
விஜய்சேதுபதி ரூ. 1 லட்சம் கொடுத்து உதவியிருக்கிறார்.
இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் ரூபாய் 25 ஆயிரம் பண உதவி செய்துள்ளதாக கூறப்படுகிறது- தனது ரசிகர் மன்ற நிர்வாகியின் மூலம், அவர் இந்த உதவியை செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
இதனை தொடர்ந்து தவசியை தொடர்பு கொண்டு நடிகர் ரஜினிகாந்த் உடல் நலம் விசாரித்துள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
Celebrities help to Tamil actor Thavasi