சிம்பு நடித்த பத்து தல இந்த ரிலீஸ் தேதிக்கு தயாராகிறதா?

சிம்பு நடித்த பத்து தல இந்த ரிலீஸ் தேதிக்கு தயாராகிறதா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பத்து தல டிசம்பர் 14-ம் தேதி திரைக்கு வரும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது ஆனால் நவம்பர் இறுதி வரை படப்பிடிப்பு நடந்ததால் தாமதம் ஆனது.

தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

புதிய வெளியீட்டுத் தேதி குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் இல்லை என்றாலும், 30 மார்ச் 2023 அன்று பத்து தல திரைப்படத்தை திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியிட குழு திட்டமிட்டுள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பத்து தல படத்தில் கவுதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கௌதம் மேனன், கலையரசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சூர்யா 42 படத்தின் புதிய ஷெட்யூல் குறித்த ரெட் ஹாட் அப்டேட்ஸ்!

சூர்யா 42 படத்தின் புதிய ஷெட்யூல் குறித்த ரெட் ஹாட் அப்டேட்ஸ்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா 42 படப்பிடிப்பின் புதிய ஷெட்யூலை தயாரிப்பாளர்கள் சென்னையில் தொடங்கினர்.

இந்த ஷெட்யூலில் சில ஸ்டண்ட் காட்சிகளை படமாக்கி வருவதாக கூறப்படுகிறது.

ஸ்டண்ட் இயக்குனர் சுப்ரீம் சுந்தர் தற்போதைய ஷெட்யூலில் இருக்கிறார்.

கோவா ஷெட்யூலில் தற்காலப் பகுதிகளுக்கு திஷா பதானி யோகி பாபுவுடன் இணைந்து அதிரடி காட்சிகளில் நடித்து வருகிறார்.

இப்படம் சரித்திரம் (1000 ஆண்டுகள் பழமையான) மற்றும் சமகாலப் பகுதிகளைக் கொண்டிருக்கும் என்றும் சூர்யா முதல்முறையாக ஐந்து விதமான வேடங்களில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.

‘வாரிசு’ கதை தளபதி விஜய்க்காக எழுதப்படவில்லையா? – தயாரிப்பாளர் பதில்

‘வாரிசு’ கதை தளபதி விஜய்க்காக எழுதப்படவில்லையா? – தயாரிப்பாளர் பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தில் ராஜு அளித்த பேட்டியில் வாரிசு படத்துக்கு விஜய் முதல் சாய்ஸ் இல்லை என்று கூறினார்.

“வம்ஷி என்னிடம் கதை சொன்னபோது, ​​இதை மகேஷ் பாபுவுடன் செய்ய விரும்பினோம், ஆனால் அவர் வேறொரு படத்தில் பிஸியாக இருந்தார்.

அதனால், ராம் சரனை அணுகினோம், ஆனால் அவர் எனது சொந்த பேனரின் 50வது படத்தில் பிஸியாக இருந்தார்.

“அல்லு அர்ஜுன், பிரபாஸ் கூட பிஸியாக இருந்தார்கள். பிறகு விஜய் சாரை அணுகினோம்.

விஜய் சார், அரை மணி நேரம் கதையைக் கேட்டு, ப்ராஜெக்ட்டை ஏற்றுக்கொண்டார்” என்று வாரிசு தயாரிப்பாளர் கூறினார்.

அஜித்தின் ‘பைக் உலக சுற்றுப்பயணம்’ குறித்து சுரேஷ் சந்திரா அறிக்கை

அஜித்தின் ‘பைக் உலக சுற்றுப்பயணம்’ குறித்து சுரேஷ் சந்திரா அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வினோத் இயக்கத்தில் உருவான ‘துணிவு’ படத்தில் நடித்து முடித்துள்ளார் அஜித்.

இதனையடுத்து லைக்கா தயாரிப்பில் விக்னேஷ்சிவன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

அந்த படத்தை முடித்து விட்டு 6 மாதங்கள் மீண்டும் பைக்கில் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறாராம் அஜித்.

இந்தியாவில் கார்கில், லடாக், ஜம்மு, ஸ்ரீநகர், மணாலி என பல இடங்களுக்கு பைக்கில் சுற்று பயணம் செய்தார்.

தாய்லாந்து நாட்டிலும் பயணம் செய்தார்.

தற்போது அஜித் உலக பைக் பயணத்தின் ஒரு பகுதியை முடித்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நடிகர் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தன் ட்விட்டரில்..

“நடிகர் அஜித்குமார் இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் பயணித்திருக்கிறார்.

இதன் மூலமாக உலகம் முழுவதும் சுற்றுப்பயண முதல் பாகத்தை நிறைவு செய்துள்ளார். இது ஒரு சாதனை என்றே சொல்ல வேண்டும்.

இந்தியாவில் அவர் சென்ற இடமெல்லாம் அவருக்கு அன்பு மக்களிடம் இருந்து கிடைத்தது.

பைக் அட்வென்ச்சர் ரைடர்ஸ் அனைவருக்கும் இது ஒரு பெருமையான தருணம்” என பதிவிட்டுள்ளார்.

ரஞ்சித் ஒரு பக்கம்.. முத்தையா & மோகன் மற்றொரு பக்கம்.; ‘அருவா சண்ட’ போடும் ஆதிராஜன்

ரஞ்சித் ஒரு பக்கம்.. முத்தையா & மோகன் மற்றொரு பக்கம்.; ‘அருவா சண்ட’ போடும் ஆதிராஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் பட நிறுவனம் சார்பில் வி.ராஜா பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் “அருவா சண்ட”.

பல தடைகளைத் தாண்டி இந்த படம் வருகிற டிசம்பர் 30-ம் தேதி உலகம் எங்கும் வெளியிடப்படுகிறது.

சிலந்தி, ரணதந்த்ரா (கன்னடம்), இளையராஜா இசையில் நினைவெல்லாம் நீயடா ஆகிய படங்களை இயக்கிய ஆதிராஜன், “அருவா சண்ட” படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார்.

இப்படத்தை பற்றி இயக்குநர் கூறியதாவது:

என்னதான் நாகரிகம் வளர்ந்தாலும் ஜாதி சண்டைகளும் கௌரவக் கொலைகளும் தினசரி பத்திரிகைகளிலும் சேனல்களிலும் தலைப்புச் செய்தியாக வந்து கொண்டு தான் இருக்கிறது. சாதிகளற்ற சமத்துவ சமுதாயம் அமைப்போம் என்று வாய் கிழியப் பேசினாலும் சாதிக்கு ஒரு சங்கம் வைத்து வீதிக்கொரு பேனர் வைக்கும் கலாச்சாரத்தில் இருந்து தமிழகம் மீளவில்லை.

எனவே சமகால சமுதாயத்தின் பிரதிபலிப்பு தான் இந்த படம். இதில் புதுமுகம் ராஜா நடித்த கதையின் நாயகனாகவும், மாளவிகா மேனன் கதாநாயகியாகவும் நடித்திருக்கின்றனர்.

இருவரும் நடிப்பில் போட்டி போட்டு தங்கள் கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டியிருக்கின்றனர். கபடி வீரரான ராஜா கபடி காட்சிகளில் தன் திறமையை காட்டியிருப்பதுடன் சண்டை காட்சிகளிலும் ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார். அவர் தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் நிச்சயமாக ரசிகர்கள் கவனத்தை ஈர்ப்பது உறுதி.

தேசிய விருது பெற்ற நடிகை சரண்யா பொன்வண்ணன் இதுவரை நடிக்காத மாறுபட்ட கதாபாத்திரத்தில் வள்ளியம்மாவாக வாழ்ந்திருக்கிறார்.

இந்த படத்திற்காக தினமும் ஒன்றை மணி நேரம் டல் மேக்கப் போட்டு தன்னை ஒரு செங்கல் சூளை தொழிலாளியாக மாற்றிக்கொண்டு நடித்திருக்கிறார். இந்த கேரக்டரை வேறு யாராலும் இத்தனை சிறப்பாக கையாண்டிருக்க முடியாது.

அதேபோல ஆடுகளம் நரேன், சௌந்தர்ராஜா இருவரும் வில்லன்களாக வெளுத்து வாங்கி இருக்கிறார்கள். இருவருக்குமே இந்த படம் இன்னொரு “சுந்தரபாண்டியனாக” இருக்கும்.

கஞ்சா கருப்பு காதல் சுமார் விஜய் டிவி சரத் டைரக்டர் மாரிமுத்து மதுரை சுஜாதா வெங்கடேஷ் ரஞ்சன் யாசர் ரமேஷ் மூர்த்தி வீரா நிஷா ஆகியோரும் கேரக்டர்களாக மாறியிருக்கிறார்கள்.

இந்த படத்தில் பல கபடி போட்டிகள் இடம் பெறுகின்றன. நிஜமான கபடி வீரர்கள் கலந்து கொண்டு விளையாடி இருக்கின்றார்கள். பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டு கபடி போட்டிகளை விறுவிறுப்பாக படமாக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் பாண்டி.

தரண்குமார் இசையமைத்திருக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதி இருக்கிறார்.

“வீரத்தமிழன் விளையாட்டுடா…” என்ற கபடிக்கான சிறப்பு பாடலையும், அம்மா பாடலையும் நான் எழுதி இருக்கிறேன்.

வைரமுத்து எழுதிய “சிட்டு சிட்டு குருவி” பாடலை நடிகை ரம்யா நம்பீசன் பாடியிருக்கிறார்.

வி ஜே சாபுஜோசப் எடிட்டிங் செய்திருக்கிறார். தீனா, ராதிகா மாஸ்டர்கள் நடன காட்சிகளை வடிவமைத்துள்ளனர். தளபதி தினேஷ் சண்டைக்காட்சி அமைக்க சுரேஷ் கல்லேரி கலை ஆக்கத்தை கவனித்திருக்கிறார்.

படம் முழுவதும் வசனங்கள் வாள் சண்டை நடத்தும். கிளைமாக்ஸ் காட்சி உயிரை உலுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்திய சினிமாவில் இப்படி ஒரு க்ளைமாக்ஸ் வந்ததே இல்லை.படம் முடிந்து போகும் போது கலங்காத நெஞ்சமும் கலங்கிவிடும்.

கசியாத விழிகளும் கசிந்து விடும்.இது சத்தியம். சரண்யா மேடத்திற்கு இந்த படம் பல விருதுகளை அள்ளித் தரும் என்பதில் சந்தேகம் இல்லை.

இயக்குநர் பா.ரஞ்சித் ஒரு சமூகத்திற்காக படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். இயக்குநர்கள் முத்தையா, மோகன் ஜி ஆகியோர் வெவ்வேறு சமுதாயத்தை முன்னிலைப்படுத்துகின்றனர்.

ஆனால் ‘அருவா சண்ட’ இரண்டு தரப்பு நியாயங்களையும் அநியாயங்களையும் உரக்கப் பேசும்…. அனல் பறக்கப் பேசும் என்பது உறுதி”

இவ்வாறு ஆதிராஜன் கூறினார்.

விஜய்தான் நம்பர் 1.. அமைச்சர் உதயநிதியை சந்திக்கும் ‘வாரிசு’ புரொடியூசர்.; டென்ஷனில் அஜித் ரசிகர்கள்

விஜய்தான் நம்பர் 1.. அமைச்சர் உதயநிதியை சந்திக்கும் ‘வாரிசு’ புரொடியூசர்.; டென்ஷனில் அஜித் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடித்த ‘வாரிசு’ மற்றும் அஜித் நடித்த ‘துணிவு’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் 2023 பொங்கல் தினத்தில் வெளியாகி மோத உள்ளன.

இதனையடுத்து தமிழகத்தில் இந்த இரு படங்களுக்கும் தியேட்டர் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

‘துணிவு’ பட வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் பெற்றுள்ளது.

இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் ரெட் ஜெயின் நிறுவனத்திற்கு அதிக தியேட்டர்களை ஒதுக்கி வருகின்றனர்.

இதறால் விஜய்யின் ‘வாரிசு’ படத்திற்கு குறைவான தியேட்டர்களே கிடைத்துள்ள நிலையில் ‘வாரிசு’ பட தயாரிப்பாளர் தில் ராஜூ பேசிய பேச்சு சர்ச்சையாகி உள்ளது.

இவர் அண்மையில் கலந்து கொண்ட ஒரு நிகழ்வில்.. “தமிழ்நாட்டில் விஜய் தான் நம்பர் 1. அஜித்தை விட விஜய் தான் கூடுதல் வியாபாரத்தில் உள்ளார். இதனால் வாரிசு திரை படத்திற்கு கூடுதல் திரையரங்குகள் ஒதுக்க வேண்டும்” என அவர் பேசி இருந்தார்.

மேலும் தான் உதயநிதியை சந்தித்து இது குறித்து பேச உள்ளதாகவும் தெரிவித்து இருந்தார்.

அவரின் பேச்சு அஜித் ரசிகர்களை டென்ஷன் ஆகியுள்ளது.்

More Articles
Follows