தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘தனி ஒருவன்’ மற்றும் ‘போகன்’ படங்களில் வில்லனாக கலக்கிய அரவிந்த்சாமி மறுபடியும் ஹீரோவாக பல படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இவரது நடிப்பில் ‘வணங்காமுடி’, ‘சதுரங்கவேட்டை-2’, ‘நரகாசுரன்’ உள்ளிட்ட படங்கள் வளர்ந்து வருகின்றது.
இதில் வணங்காமுடி படத்தை புதையல் பட இயக்குநர் செல்வா இயக்க, நாயகிகளாக ரித்திகா சிங் மற்றும் நந்திதா நடித்து வருகின்றனர்.
இப்படத்தில் போலீஸாக நடிக்கிறார் அரவிந்த்சாமி.
இதில் ஒரு காட்சியில் சிறுமியை ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்துவிடுகிறார்.
அவனை அரெஸ்ட் செய்து அடித்து உதைக்கும் காட்சிகளை அண்மையில் படமாக்கியுள்ளனர்.
இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார்.