இளையராஜா – யுவன் ஷங்கர் ராஜாவை தூக்கி ஜெயில்ல போடுங்க; நாடு நல்ல இருக்கும்

இளையராஜா – யுவன் ஷங்கர் ராஜாவை தூக்கி ஜெயில்ல போடுங்க; நாடு நல்ல இருக்கும்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘கஸ்டடி’.

இப்படத்தில் நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி, அரவிந்த்சாமி, சரத்குமார், பிரியாமணி, பிரேம்ஜி அமரன், பிரேமி விஷ்வநாத், வென்னேலா கிஷோர் உட்பட பலர் நடித்துள்ளனர்.

மேலும், ‘கஸ்டடி’ படத்தில் ஜீவா, ராம்கி இருவரும் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்கள்.

ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் தயாரித்துள்ள, இப்படத்துக்கு இளையராஜா – யுவன்சங்கர் ராஜா இணைந்து இசை அமைத்துள்ளனர்.

‘கஸ்டடி’ திரைப்படம் மே 12-ஆம் தேதி இன்று முதல் தமிழ், தெலுங்கில் மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது.

‘கஸ்டடி’ படம் மக்களிடையே எதிர்மறையான விமர்சனங்களை பெற்றுவருகிறது.

இந்நிலையில், ‘கஸ்டடி’ படம் பார்த்து வெளியே வந்து பொது விமர்சனம் (Pubilc review) போது ஒரு நபர் “இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி இவர்களை தூக்கி ஜெயில்ல போடுங்க; நாடு நல்ல இருக்கும்” என கூறினார்.

இதனால் இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளார்கள்.

இளையராஜா – யுவன் ஷங்கர் ராஜாவை தூக்கி ஜெயில்ல போடுங்க; நாடு நல்ல இருக்கும் | Custody Public Review

Ilayaraja – Put Yuvan Shankar in Jail says custody film review by pubilc

‘ஹிட் லிஸ்ட்-டில் இணையும் சமுத்திரக்கனி & KGF பிரபல நடிகர்

‘ஹிட் லிஸ்ட்-டில் இணையும் சமுத்திரக்கனி & KGF பிரபல நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பழம்பெரும் இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா ‘ஹிட்லிஸ்ட்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

இதில், கவுதம் மேனன், சரத்குமார் மற்றும் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

சூரியக்கதிர் மற்றும் கார்த்திகேயன் இயக்கும் இப்படம் ஆக்‌ஷன் திரில்லர் படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இயக்குனர் கார்த்திகேயன் கூறுகையில்,

“கௌதம் மேனன் இப்படத்தில் நெகட்டிவ் ரோலில் நடிக்கிறார். க்ளைமாக்ஸில் ஆக்‌ஷன் காட்சிகள் இருக்கும் அவர், முதல்முறையாக சில சண்டைக்காட்சிகளை நிகழ்த்தவுள்ளார். அவர் ஏற்கனவே தனது பகுதிகளை படமாக்கிவிட்டார்.”

கேஜிஎஃப் புகழ் கருடா ராமச்சந்திராவும் எதிரிகளில் ஒருவராக இருப்பார்.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக சமுத்திரக்கனி இருப்பதாகவும், விரைவில் அவரது பகுதிகளின் படப்பிடிப்பில் இருப்பதாகவும் கார்த்திகேயன் வெளிப்படுத்துகிறார்.

“அவருக்கு மூன்று நாட்கள் படப்பிடிப்பு உள்ளது, மேலும் அவரது கதாபாத்திரம் கிளைமாக்ஸிலும் தோன்றும்,” என்று அவர் கூறுகிறார்.

படத்தின் முக்கிய பகுதிகள் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் படமாக்கப்பட்டது.

“கடந்த அக்டோபரில் படத்தின் படப்பிடிப்பை தொடங்கினோம்.

தற்போது, ​​படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் உள்ளது” என கூறினார் கார்த்திகேயன்.

Samuthirakani to play key role in Hitlist film

‘ஆனந்தம் விளையாடும் வீடு’ இயக்குநரின் அடுத்த படம்.; மீண்டும் இணையும் சமுத்திரக்கனி – அனன்யா

‘ஆனந்தம் விளையாடும் வீடு’ இயக்குநரின் அடுத்த படம்.; மீண்டும் இணையும் சமுத்திரக்கனி – அனன்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் மாறுபட்ட திரைக்களங்களில் மக்கள் மனதைக் கவர்ந்த இயக்குநர் நந்தா பெரியசாமி.

இவரது இயக்கத்தில் 2022 டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’. இதில் கௌதம் கார்த்திக், சேரன், வெண்பா, சௌந்தரராஜா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தற்போது நந்தா பெரியசாமியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரக்கனி, அனன்யா, பாரதிராஜா, நாசர் ஆகியோர் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே துவங்கியது.

மனிதநேய உணர்வுகளின் கலவையோடு காட்சிக்கு காட்சி பதட்டமாக ஒரு பரபரப்பான திரில்லர் படமாக இத்திரைப்படம் உருவாகிறது.

கேரள எல்லையில் மேகமலை, குமுளி, மூணாறு பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே ஷெட்யூலில் நடைபெறவுள்ளது.

கதையைக் கேட்ட அடுத்த நிமிடமே சமுத்திரக்கனி மொத்தமாக தேதிகள் தந்து முழு ஈடுபாட்டுடன் இந்த படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் நாயகி அனன்யா, பாரதிராஜா, நாசர் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

நடிகை அனன்யா நாடோடிகள் படத்திற்கு பிறகு சமுத்திரக்கனி படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘சீதா ராமம்’ படப்புகழ் விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சினேகன், இயக்குநர் ராஜூமுருகன், மற்றும் பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் பாடல்களை எழுதுகின்றனர். மைனா படப்புகழ் ஒளிப்பதிவாளர் சுகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

மேலும் படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Samuthirakani – Ananya reunites.. ‘Anandham Prachum Veedu’ director’s next film is here

நியூ டெல்லியில் சுபாஷ் சந்திர போஸ் சிலையருகே ரிலீசாகும் ‘ஸ்பை’ டீசர்

நியூ டெல்லியில் சுபாஷ் சந்திர போஸ் சிலையருகே ரிலீசாகும் ‘ஸ்பை’ டீசர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புது தில்லி கர்தவ்யா பாதையில் அமைந்திருக்கும் சுபாஷ் சந்திர போஸ் சிலை அருகே மே 15ஆம் தேதியன்று நிகில் -கேரி பி ஹெச்- Ed என்டர்டெய்ன்மெண்ட்ஸ் ஆகியோரின் கூட்டணியில் தயாரான ‘ஸ்பை’ எனும் திரில்லர் படத்தின் டீசர் வெளியிடப்படுகிறது.

நட்சத்திர நடிகர் நிகில் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் பான் இந்திய திரைப்படம் ‘ஸ்பை’. மறைக்கப்பட்ட இந்திய சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸின் மரணம் குறித்த ரகசியங்களை அடிப்படையாகக் கொண்டு, இதன் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.

‘நீங்கள் எனக்கு ரத்தத்தை கொடுங்கள். நான் உங்களுக்கு சுதந்திரம் தருகிறேன்’ என வீரர் சுபாஷ் சந்திர போஸின் வீர முழக்கத்தை… இப்படத்தின் தயாரிப்பாளர்கள் அண்மையில் வெளியிட்ட காணொளியில் இடம்பெற்று பெரும் கவனத்தை ஈர்த்தது.

டெல்லியில் உண்மையிலேயே வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு ஒன்று நடைபெறவிருக்கிறது.

மே 15 ஆம் தேதியன்று கர்தவ்யா பாதையில் ஸ்பை படத்தின் டீசர் வெளியிடப்படுகிறது. இந்த பாதையில் நடைபெறும் முதல் திரைப்பட டீஸர் வெளியிட்டு விழா இது என்பதால் சிறப்பு அடையாளத்தை பெற்றிருக்கிறது.

பிரபல பட தொகுப்பாளரான கேரி பி ஹெச்- இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த திரைப்படத்தை Ed என்டர்டெய்ன்மெண்ட்ஸ் எனும் நிறுவனம் சார்பில் கே. ராஜசேகர் ரெட்டி பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.

இந்நிறுவனத்தில் சரந்தேஜ் உப்பலபதி தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றுகிறார்.

இதில் நிகிலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனனும், இரண்டாவது நாயகியாக சானியா தாக்கூருமா நடித்திருக்கிறார்கள்.

இவர்களுடன் ஆரியன் ராஜேஷ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். மேலும் அபிநவ் கோமடம், மகரந்த் தேஷ் பாண்டே, ஜிஷு செங் குப்தா, நித்தின் மேத்தா, ரவி வர்மா, கிருஷ்ண தேஜா, பிரிஷா சிங்,, சோனியா நரேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

வம்சி பட்சிபுளுசு மற்றும் மார்க் டேவிட் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீ சரண் பக்கலா மற்றும் விஷால் சந்திரசேகர் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.

ஆக்ஷன் கலந்த ஸ்பை த்ரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் கதையை தயாரிப்பாளர் கே ராஜசேகர் ரெட்டி எழுதி இருக்கிறார்.

மேலும் இந்த திரைப்படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து இந்திய மொழிகளில் வெளியாகிறது. இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் 29 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது.

National Thriller SPY Teaser Launch On May 15th at New Delhi

37 நாடுகளில் ரிலீசான ‘தி கேரளா ஸ்டோரி’.; அடா ஷர்மா அதிரடி பதிவு.!

37 நாடுகளில் ரிலீசான ‘தி கேரளா ஸ்டோரி’.; அடா ஷர்மா அதிரடி பதிவு.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் வெளியான படம் ‘தி கேரளா ஸ்டோரி’.

கடந்த மே 5-ம் தேதி வெள்ளிக்கிழமை தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் ‘தி கேரளா ஸ்டோரி’ படம் வெளியானது.

இந்தப் படத்துக்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

‘தி கேரளா ஸ்டோரி’ படம் தமிழகத்திலும் எதிர்ப்பு ஏற்பட்டது.

இதனால், திரையரங்குகள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பு கருதி, ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை மே 8-ம் தேதி முதல் நிறுத்துவதாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்தார்கள்.

மேற்கு வங்கத்தில் இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை வெளிப்படையாக பாஜக உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் வரவேற்றுள்ளன.

இந்த நிலையில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் 37-க்கும் மேற்பட்ட நாடுகளில் இன்று வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், நடிகை அடா ஷர்மா தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், “எங்கள் படத்தைப் பார்க்கப் போகும் கோடிக்கணக்கான மக்களுக்கும், அதனை டிரெண்ட் செய்பவர்களுக்கும் என்னுடைய நடிப்பை ரசிப்பவர்களுக்கும் நன்றி. மே 12-ம் தேதி ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் 37-க்கும் மேற்பட நாடுகளில் வெளியாகிறது” என பதிவிட்டுள்ளார்.

TheKeralaStory releases internationally in 37 countries

மறைந்த நடிகர் ஜேகே ரித்தீஷின் மனைவிக்கு சிறை தண்டனை.. நீதி மன்றம் உத்தரவு..

மறைந்த நடிகர் ஜேகே ரித்தீஷின் மனைவிக்கு சிறை தண்டனை.. நீதி மன்றம் உத்தரவு..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாயகன், பெண் சிங்கம் படங்களில் நடித்தவர் ஜேகே ரித்தீஷ்.

ராமநாதபுரம் திமுக எம்பி யாகவும் இருந்தவர். 2019 இல் உடல் நல குறைவால் காலமானார்.

ரித்தீஷின் மனைவி ஜோதீஸ்வரி கரைக்குடியில் திருச்செல்வம் என்பவரிடம் 60 லட்ச ரூபாய்க்கு தங்க வைர நகைகளை வாங்கி இருக்கிறார்.

அதற்கு 20 லட்சத்திற்கான மூன்று காசோலைகளை வழங்கியுள்ளார்.

காசோலையில் பணம் இல்லாததால் திருப்பி வந்துள்ளது.

இதனால் திருச்செல்வம் நீதி மன்றத்தை நாடினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஜோதீஸ்வரிக்கு 60 லட்ச ரூபாய் அபராதமும் 6 மாத சிறை தண்டனையும் விதித்தார்.

Jail sentence for late actor JK Rittish’s wife.. Court orders..

More Articles
Follows