சிவரஞ்சனி மகளும் நடிக்க வருகிறார்.; மகளுக்கு ஜோடி தேடும் நட்சத்திர தம்பதிகள்

சிவரஞ்சனி மகளும் நடிக்க வருகிறார்.; மகளுக்கு ஜோடி தேடும் நட்சத்திர தம்பதிகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1990-களில் ஆரம்பத்தில் நிறைய படங்களில் நாயகியாக நடித்தவர் பூனைக் கண்ணழகி சிவரஞ்சனி.

தமிழில் பிரபு, விஜயகாந்த், சத்யராஜ், கார்த்தி, அரவிந்த்சாமி ஆகியோருடன் நடித்திருக்கிறார்.

‘சின்ன மாப்ள’ படத்தில் சுகன்யாவின் தங்கையாக நடித்திருந்தார்.

தமிழ் தவிர கன்னடம், மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

தெலுங்கில் ஊஹா எஎன்ற பெயரில் 1994-ல் “ஆமி” என்ற படத்திற்காக சிறந்த நடிகைக்கான “நந்தி” விருதை பெற்றார்.

தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்தை 1997-ல் திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதியருக்கு இரண்டு மகன்கள் ஒரு மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் தன்னுடைய மகள் மேகா என்பவரை சினிமாவில் நாயகியாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் சிவரஞ்சனி.

எனவே சூப்பரான கதை & இயக்குனர் மற்றும் ஹீரோவை தேடி வருகிறார்களாம் இந்த நட்சத்திர தம்பதிகள்.

ருத்ரமாதேவி என்ற திரைப்படத்தில் மேகா குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actress Sivaranjani’s daughter to debut as heroine

ஆன்மிக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சந்தித்த ரஜினிகாந்த் & மகள்கள்

ஆன்மிக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சந்தித்த ரஜினிகாந்த் & மகள்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ரஜினிகாந்தை பாராட்டுபவர் யாராக இருந்தாலும் அவரை ஆன்மிகவாதி என குறிப்பிட தவறுவதில்லை.

எவருமே எதிர்பாராத வகையில் 2017 இறுதியில் “ஆன்மிக அரசியலை இந்த தமிழகம் விரைவில் பார்க்கும்” என தன் அரசியல் பிரவேசத்தை அறிவித்தார்.

அதன் பிறகு 2020 இறுதியில் அரசியலுக்கு வர மாட்டேன் என அறிவித்தார் ரஜினி.

எனவே எப்போதும் போல ஆன்மிகத்தை மட்டுமே பின்பற்றி வருகிறார்.

அந்த வகையில் இனி ரஜினியையும், ஆன்மிகத்தையும் இனி எப்போதுமே பிரிக்க முடியாது.

மன அமைதிக்காக அடிக்கடி இமயமலை செல்வதும் இவரது வாடிக்கைகளில் ஒன்று.

அவ்வப்போது ஆன்மிக குருக்களை சந்தித்து ஆசிப்பெறுவதும் ரஜினியின் வழக்கம்.

இந்த நிலையில் ரஜினி தனது மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா ஆகியோருடன் ஆன்மிக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சந்தித்திருக்கிறார்.

இது தொடர்பான புகைப்படத்தை சௌந்தர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரும் அவரது ட்விட்டர் பக்கத்தில் ரஜினி சந்திப்பு குறித்து பகிர்ந்துள்ளார்.

Rajinikanth Aishwarya Soundarya met Gurudev Sri Sri Ravi Shankar

Renowned actor @rajinikanth, @soundaryaarajni, @ash_r_dhanush met Gurudev @SriSri Ravi Shankar.

With the one who has dedicated his life towards service to humanity , with his holiness @SriSri Gurudev … an evening to remember forever #divinity #spirituality #peace https://t.co/qF4eDr3TEO

விஷால் பர்த் டே : காப்பக குழந்தைகளுடன் உணவருந்திய விஷால்.; ‘வீரமே வாகை சூடும்’ பர்ஸ்ட் லுக் ரிலீஸ்

விஷால் பர்த் டே : காப்பக குழந்தைகளுடன் உணவருந்திய விஷால்.; ‘வீரமே வாகை சூடும்’ பர்ஸ்ட் லுக் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷால் & ஆர்யா இணைந்து நடித்து வரும் படம் ‘எனிமி’.

இந்த படத்தைத் தொடர்ந்து, அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கத்தில் விஷால் நடித்து வருகிறார்.

விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இதில் நாயகியாக டிம்பிள் ஹயாத்தி நடிக்க, வில்லனாக மலையாள நடிகர் பாபுராஜ் நடிக்கிறார்.

தற்காலிகமாக ‘விஷால் 31’ எனப் பெயரிட்டுள்ளனர்.

இன்று ஆகஸ்ட் 29 விஷால் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என நடிகர் விஷால் தெரிவித்து இருந்தார்.

அதன்படி ’வீரமே வாகை சூடும்’ என அப்படத்திற்கு பெயரிட்டு போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில் விஷால் தன் 44வது பிறந்த நாளையொட்டி கீழ்பாக்கத்தில் உள்ள மெர்சி ஆசிரமம் & சென்னை மாநகராட்சி நகர்ப்புற காப்பகத்தில் உள்ள குழந்தைகள், முதியவர்களுக்கு பிரியாணி வழங்கினார். அவர்களுடனே அமர்ந்து பிரியாணி சாப்பிட்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசும் போது.. “ஒரு ரசிகனாக வடிவேல் மீண்டும் நடிக்க வருவதை வரவேற்பதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

Veerame Vaagai Soodum first look released Vishal Birthday treat to his fans

Vishal 31
Vishal 31
தன் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விஷால்

தன் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷால் & ஆர்யா இணைந்து நடித்து வரும் படம் ‘எனிமி’.

இந்த படத்தைத் தொடர்ந்து, அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கத்தில் விஷால் நடித்துவருகிறார்.

விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இதில் நாயகியாக டிம்பிள் ஹயாத்தி நடிக்க, வில்லனாக மலையாள நடிகர் பாபுராஜ் நடிக்கிறார்.

தற்காலிகமாக ‘விஷால் 31’ எனப் பெயரிட்டுள்ளனர்.

இந்த நிலையில் நாளை ஆகஸ்ட் 29 விஷால் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

இந்த படத்திற்கான சண்டைக்காட்சி படப்பிடிப்பின் போது விஷாலுக்கு முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது.

எனவே ஃபிசியோதெரபி சிகிச்சை எடுத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vishal 31 first look and title release tomorrow

ரகுராமின் பேரன்கள் நடிக்க ‘டேக் இட் ஈசி’ படம் மூலம் ஹாலிவுட்டில் இயக்குநராக சுஜா.

ரகுராமின் பேரன்கள் நடிக்க ‘டேக் இட் ஈசி’ படம் மூலம் ஹாலிவுட்டில் இயக்குநராக சுஜா.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல நடன இயக்குநர்கள் ரகுராம் மற்றும் கிரிஜா ரகுராமின் மகள் சுஜா ரகுராம் மனோஜ், தனது தந்தையிடம் நடனம் மற்றும் இயக்குநர் பயிற்சி பெற்றவராவார்.

பல்வேறு இந்திய மொழிப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

கமல்ஹாசன், பிரபுதேவா, கலா மாஸ்டர், பிருந்தா மாஸ்டர் மற்றும் பல்வேறு பிரபல இயக்குநர்களுடன் பணியாற்றி உள்ளார்.

தொழிலதிபர் மனோஜ் வேணுகோபாலை மணந்த பின்னர் அமெரிக்காவுக்கு சென்ற சுஜா, அங்கு ஹாலிவுட் இயக்குநர்களான பென் & ஜூடி லெவின், பாயு பென்னட் மற்றும் டேனியல் லிர் ஆகியோருடன் பணிபுரிந்துள்ளார்.

தற்போது இவர், ரகுராமின் பேரக் குழந்தைகளான திரிஷுல் ஆர் மனோஜ் மற்றும் சனா மனோஜ் ஆகியோரை தான் தயாரித்து இயக்க உள்ள படத்தில் நடிகர்களாக அறிமுகப்படுத்த உள்ளார்.

இசையை மையமாக வைத்து எடுக்கப்படவுள்ள இத்திரைப்படத்திற்கு டேக் இட் ஈசி என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஹாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகிறார் சுஜா.

நட்பைப் பற்றிப் பேசும் இத்திரைப்படத்தில், சாம் சி எஸ் இசையமைத்து பென்னி தயாள் மற்றும் சனா மனோஜ் பாடியுள்ள ஒரு சிறப்பு பாடல் இடம்பெறுகிறது.

திரிஷுல் ஆர் மனோஜ், சனா மனோஜ் மற்றும் நிகில் மகேஷ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

திரைப்படத்துறையில் நுழைவதன் மூலம், கே சுப்பிரமணியம் அவர்களின் புகழ்மிக்க பாரம்பரியத்தை அவரது கொள்ளு பேரக்குழந்தைகள் தொடர்கிறார்கள்.

Master Raghuram grandson debut film in hollywood

ஒவ்வொரு குடும்பமும் ரசிகர் மன்றமே.. என் கனவை நிறைவேற்றியவர் (ச)-சுபாஷ்கரன் – வடிவேலு

ஒவ்வொரு குடும்பமும் ரசிகர் மன்றமே.. என் கனவை நிறைவேற்றியவர் (ச)-சுபாஷ்கரன் – வடிவேலு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாபெரும் ஹிட்டான ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்தின் 2ஆம் பாகம் இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ என்ற பெயரில் உருவாக தொடங்கியது.

ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் இந்த படம் தொடங்கப்பட்டது.

சென்னைக்கு அருகே பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்து இதன் படப்பிடிப்பும் தொடங்கப்பட்டது.

ஆனால் சில நாட்களிலேயே, படக்குழுவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வடிவேலு படப்பிடிப்பிற்கு வரவில்லை.. இதனால் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது.

அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தில் படக்குழு சார்பில் புகாரளிக்கப்பட்டது. இதனால் வடிவேலுவுக்கு ரெட் கார்டு போடப்பட்டது.

எனவே வடிவேலுவால் பிற படங்களில் நடிக்க முடியாமல் போனது.

ஆனாலும் ‘கத்தி சண்ட’, ‘மெர்சல்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

திரையுலகினர் பலரும் ஷங்கர் – வடிவேலு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தினர். எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை.

கடந்த ஜூன் மாதம் மீண்டும் சமசரப் பேச்சுவார்த்தை நடந்தது.

இந்த நிலையில் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்ட தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்…

“எஸ்.பிக்சர்ஸ் ஷங்கர் ’23-ம் புலிகேசி 2′ திரைப்படத்தில் நடித்த வடிவேலு மீது புகார் அளித்திருந்தார்.

மேற்படி புகார் சம்பந்தமாக, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், நடிகர் வடிவேலு மற்றும் எஸ்.பிக்சர்ஸ் நிறுவனத்துடன் பேசி மேற்கண்ட பிரச்சினைக்கு சுமுகமாகத் தீர்வு காணப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில் தான் திரும்ப நடிக்க வருவதை முன்னிட்டு பிரபல ஊடகத்திற்கு பேட்டியளித்தார் வடிவேலு.

அதில்…

என் ரசிகர்களின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றியவர் லைக்கா நிறுவனத்தின் சுபாஷ்கரன்.

என்னை மீண்டும் திரைக்கு கொண்டுவந்ததன் மூலம் சுபாஷ்கரன் சபாஷ்கரன் ஆகிவிட்டார்.

மீண்டும் சினிமாவில் நான் தோன்றப் போவது முதன் முதலில் நான் வாய்ப்புத் தேடும் போது ஏற்பட்ட உணர்வு ஏற்பட்டுள்ளதி.

என் ரசிகர்கள் ஒவ்வொரு வீட்டிலும் ரசிகர் மன்றம் வைத்துள்ளனர்.

நடிப்பதற்கு விதிக்கப்பட்ட ரெட் கார்டு தடையை நீக்கியது மகிழ்ச்சி.

இது எனக்கு மறு பிறவி. சுராஜ் இயக்கும் நாய் சேகர் படத்தில் செப்டம்பர் முதல் நடிக்க உள்ளேன்.

2 படங்களில் கதாநாயகனாக நடித்து விட்டு பின்னர் காமெடியனாகவும் நடிக்க உள்ளேன்” என்றார் வைகைப் புயல் வடிவேலு.

Vadivelu talks about his re entry in kollywood

More Articles
Follows