OFFICIAL : சூர்யா – கார்த்தி – அரவிந்த்சாமி கூட்டணியில் பிரபல ஒளிப்பதிவாளர்

OFFICIAL : சூர்யா – கார்த்தி – அரவிந்த்சாமி கூட்டணியில் பிரபல ஒளிப்பதிவாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி.

கார்த்தி தற்போது இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் ‘ஜப்பான்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடிக்கிறார்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

சில தினங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டீசர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில், கார்த்தியின் 27வது படம் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

’96’ படத்தின் இயக்குனர் பிரேம் குமார் இயக்கம் படத்தில் கார்த்தி நடிக்கவுள்ளார்.

இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்திற்கு பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

இந்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வாயிலாக தெரிவித்துள்ளார்.

பிசி ஸ்ரீராம்

PC Sreeram to wield the camera for Karthi’s 27th movie

19 வயதில் பிரபல அரசியல்வாதியை திருமணம் செய்த நடிகை குட்டி ராதிகா

19 வயதில் பிரபல அரசியல்வாதியை திருமணம் செய்த நடிகை குட்டி ராதிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கர்நாடகா மாநிலத்தில் பிறந்து. தமிழ், கன்னடம் சினிமாவில் பல படங்களில் நடித்தவர் குட்டி ராதிகா.

குட்டி ராதிகா ஒன்பதாவது படித்துக் கொண்டு இருக்கும் போதே, ‘நீல மேக சியாமா’ என்ற படத்தில் நடித்தார். அந்த படத்தைத் தொடர்ந்து கன்னடத்தில் பல படங்களில் நடித்து வந்த குட்டி ராதிகா, தமிழில் ‘வர்ணஜாலம்’, ‘மீசை மாதவன்’, ‘உள்ளக்காதல்’ ஆகிய தமிழ் படங்களில் நடித்தார்.

கடந்த 2003ம் ஆண்டு வெளியான ‘இயற்கை’ படத்தில் ஷாம் நடித்த இப்படத்தில் அவருக்கு ஜோடியாக குட்டி ராதிகா நடித்திருந்தார்.

அழகான அழுத்தமான காதலை சொன்ன இந்த படம் திரையரங்கில் பல நாட்கள் ஓடியது.

‘இயற்கை’ படத்திற்கு பின் பல படங்களில் நடிக்க வாய்ப்பு வருவார் என்று எதிர்பார்த்த குட்டி ராதிகாவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது.

கடந்த 2000ம் ஆண்டு குட்டி ராதிகா தனது 14 வயதில் ரத்தன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் சில ஆண்டுகளில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்பட்ட நிலையில், 2002ம் ஆண்டு ரத்தன் குமார் திடீரென இறந்தார். இவரின் மரணம் குறித்து குட்டி ராதிகாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து, சர்ச்சையில் சிக்கிய குட்டி ராதிகா, சினிமாவிலும் பொது இடத்திலும் தலைகாட்டாமல் இருந்தார்.

திடீரென ஒரு நாள் குழந்தையும் கையுமாக வந்த குட்டி ராதிகா, அப்போது கன்னட முதலமைச்சராக இருந்த H.D.குமாரசாமிக்கும் தனக்கும் 2006ம் ஆண்டு திருமணமாகிவிட்டதாகவும் தங்களுக்கு ஷமிகா என்ற ஒரு பெண் குழந்தை இருப்பதாகவும், திருமண விஷயம் வெளியில் தெரிந்தால் பிரச்சனை என்பதால், இத்தனை ஆண்டு வெளிநாட்டில் வசித்து வந்ததாகவும் கூறி பெரும் சர்ச்சையை கிளப்பினார்.

நடிகை குட்டி ராதிகாக்கு தற்போது 36 வயது,H.D.குமாரசாமிக்கு தற்போது 63 வயது இருவருக்கும் இடையே 27 வயது வித்தியாசம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால், நடிகை குட்டி ராதிகா தன் அப்பா வயதில் இருப்பவரை திருமணம் செய்து கொண்டார் என நெட்டிசன் கூறிவருகின்றனர்.

மேலும், குட்டி ராதிகா தற்போது பல படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறார்.

குட்டி ராதிகா

kutty Radhika got married to who was 27 years older than her

சூர்யாவின் ‘கங்கா கங்கா கங்குவா…’ பாடல் வரிகள் இதோ..; புரிஞ்சவங்க பிஸ்தா.?!

சூர்யாவின் ‘கங்கா கங்கா கங்குவா…’ பாடல் வரிகள் இதோ..; புரிஞ்சவங்க பிஸ்தா.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வரும் இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.

இந்த படம் 10 மொழிகளில் வெளியாகும் என கூறப்படும் வரும் நிலையில் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு ‘கங்குவா….’ என்ற பாடல் கிளிப்ஸ் வீடியோ வெளியானது.

இந்தப் பாடல் வரிகள் பல நூறாண்டு காலத்திற்கு முன்பு உள்ள வரிகளை கொண்டிருப்பதால் பலருக்கு இதன் வரிகளின் அர்த்தம் புரியாமல் இருந்தன.

இந்த நிலையில் இதன் பாடல் வரிகளை வெளியிட்டுள்ளார் வசனகர்த்தா மற்றும் பாடலாசிரியரான மதன் கார்க்கி.

“ஆழிக்குள் கொடி நட்ட மாறாக்கன் வழிவந்து

வேழத்த விழவெச்ச கொச்சாமி வழிவந்து

பஞ்சத்தச் செயிச்செடுத்த இளம்பன் வழி வந்த

பெருமலையப் பேத்த தங்கையனுந்த பேரன்

சச்சாங்கனச் சாச்ச செந்தீயினுந்த மவன்

மண்டயாத்து மலயேறி கொண்டலப் புடிக்கவும்

வெங்காட்டு மரமேறி வெண்வேங்க அடிக்கவும்

அரத்தித் தீவேறி அச்சத்தக் காட்டவும்

முக்காட்டுக் களிறேரி திக்கெல்லாம் ஓட்டவும்

ஒண்டையே ஒண்ட வீரந்தைன்

எங்க கங்கா

ஒருநூறு புலிநகமும் மாரறைய

சருகூரும் உரகங்க நின்னுறைய

கரையூரும் திரையெல்லாம் முகம் வரைய

பெருமாச்சிப் பறையெல்லாம் பேர் பறைய

ஒண்டையே ஒண்ட வீரந்தைன்

சண்டையே ஏங்கஞ் சூரந்தைன்

தீ அவ பெத்தத் தீரந்தைன்

எங்க பெருமாச்சிக்காரந்தைன்

கங்கா கங்கா கங்குவா’…

Gangs Ganga Kanguva song lyrics here

ரஜினியின் ‘ஜெயிலர்’ பட இசை விழா ஏற்பாட்டில் விபத்து.; அசாம் இளைஞர் ஆஸ்பத்திரியில் அனுமதி

ரஜினியின் ‘ஜெயிலர்’ பட இசை விழா ஏற்பாட்டில் விபத்து.; அசாம் இளைஞர் ஆஸ்பத்திரியில் அனுமதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கிசரஃப், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு உள்ளிட்டோ நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜெயிலர்’.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ளார்.

இந்த படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் இடம் பெற்ற ‘காவலா… தலைவர் அலப்பறை… ஜுஜிபி…’ ஆகிய பாடல்கள் ஏற்கனவே வெளியான நிலையில் நாளை ஜூலை 28ஆம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.

இதில் கலந்து கொள்வதற்காக ரஜினிகாந்த் மாலத்தீவில் தன் ஓய்வு விடுமுறையை முடித்துவிட்டு நேற்று இரவு சென்னை திரும்பினார்.

தற்போது ‘ஜெயிலர்’ இசை விழா ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் நேரு ஸ்டேடியத்தில் அலங்கார விளக்குகள் அமைக்கும் பணியில் ஈடுபட்ட நபர் மின்சாரம் தாக்கி 15 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

அவருக்கு பலத்த காயம் ஏற்ப்பட்டுள்ளது.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சங்கர் மாலா (26) என்ற இளைஞர் மின்சாரம் தாக்கியதில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு இந்த விபத்து நடந்துள்ளதை அடுத்து பெரியமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Accident at Jailer audio launch arrangements spot

கேப்டன் மில்லரின் மிரட்டலான லுக்..; தனுஷ் பிறந்தநாள் நள்ளிரவில் டீசர்!

கேப்டன் மில்லரின் மிரட்டலான லுக்..; தனுஷ் பிறந்தநாள் நள்ளிரவில் டீசர்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் பிரியங்கா மோகன், நிவேதிதா சதிஷ், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது.

தனுஷ் பிறந்தநாளான ஜூலை 28ம் தேதி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிடவுள்ளதாக ஏற்கனவே கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘கேப்டன் மில்லர்’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு டீசர் வெளியாகும் நேரத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த டீசர் நள்ளிரவு 12.01 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், தனுஷ் கோபத்துடன் கத்துவது போன்று வெளியாகியுள்ள இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

கேப்டன் மில்லர்

Dhanush’s ‘Captain Miller’ movie Teaser release time revealed

என் ரசிகர்கள் பார்த்தாலே லாபம் தான்.; ஓடிடி ஆப் தொடங்கிய ‘யோக்கியன்’ ஜெய் ஆகாஷ்

என் ரசிகர்கள் பார்த்தாலே லாபம் தான்.; ஓடிடி ஆப் தொடங்கிய ‘யோக்கியன்’ ஜெய் ஆகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

20 வருடங்களாக சினிமாவில் நாயகன் மற்றும் தயாரிப்பாளர் என பன்முக அடையாளங்களை கொடுத்திருப்பவர் நடிகர் ஜெய் ஆகாஷ்.

ஒரு கட்டத்தில் இவரது படங்கள் சுமாரான வெற்றியைப் பெற்ற போது சீரியல் பக்கம் தன் கவனத்தை திருப்பினார்.

சீரியல் மூலம் பல ரசிகர்களை பெற்றவர் தற்போது மீண்டும் சினிமாவில் படங்களை தயாரித்தும் நடித்தும் வருகிறார்.

அந்த வகையில் ஜெய் ஆகாஷ் தயாரித்து நாயகனாக நடித்துள்ள படம் ‘யோக்கியன்’. அவரது உதவியாளர் சாய்பிரபா மீனா என்பவர் இந்த படத்தை இயக்கி இருக்கிறார்.

இந்த படத்தில் தியேட்டரில் வெளியிட அவர் பல முயற்சிகள் செய்தும் போதிய திரையரங்குகள் கிடைக்காத காரணத்தினால் தற்போது ஓ டி டி யில் வெளியிட திட்டமிட்டுள்ளார்.

அதன்படி வருகிற ஜூலை 28ஆம் தேதி ஒரே நேரத்தில் ஏ3 என்ற தன்னுடைய சொந்த மொபைல் ஆப் மூலம் ஓடிடி தளத்திலும் மற்றும் திரையரங்கிலும் வெளியிட உள்ளார்.

ஜெய் ஆகாஷ்

இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் ஜெய் ஆகாஷ் பேசியதாவது..

“என்னுடைய உதவியாளர் சாய்பிரபா மீனா இயக்கியுள்ள இந்த ‘யோக்கியன்’ படத்தை தியேட்டரில் கொண்டு வர பல முயற்சிகள் செய்தோம்.

ஆனால் இதுவரை தமிழகத்தில் 10 தியேட்டர்கள் கூட கிடைக்காத காரணத்தினால் தற்போது ஓ டி டி தளத்தில் இந்த படத்தை வெளியிடுகிறோம்.

இதற்காக நானே சொந்தமாக ஏ3 என்ற (A CUBE) மொபைல் ஆப்பை உருவாக்கி அதன் மூலம் வெளியிடுகிறேன்.

எனக்கு மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இந்த படத்தை பார்த்தாலே யோக்கியன் படத்தை நான் தயாரித்ததற்கான லாபம் கிடைத்து விடும்.

இந்த படத்தை நீங்கள் பார்க்க வேண்டும் என்றால் ரூபாய் 50 மட்டுமே செலுத்தி உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் பார்க்கலாம்.

அதுவும் நீங்கள் பார்க்க விரும்பினால் 24 மணி நேரம் மட்டுமே அது செயல்படும். மீண்டும் நீங்கள் பார்க்க விரும்பினால் மீண்டும் 50 ரூபாய் கொடுத்து அடுத்த நாள் தான் பார்க்க வேண்டும்.

தற்போது ஓடிடி தளங்கள் உலக அளவில் வரவேற்பு பெற்று வருவதால் இந்த முடிவுக்கு நான் வந்துள்ளேன்.

மேலும் எனது படங்களை இந்த ஆப்பு மூலம் வெளியிட தயாராக இருக்கிறேன். மற்ற படங்களும் ரிலீஸ் க்கு தயாராகி வருகின்றன என பேசினார் நடிகர் ஜெய் ஆகாஷ்.

ஜெய் ஆகாஷ்

Jai Akash launched A CUBE mobile app and releasing his yokkiyan movie

More Articles
Follows