தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கோலிவுட் முதல் பாலிவுட் வரை அறிந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராய்.
தற்போது மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்து வருகிறார்.
கடந்த 2016ல் ‛பனாமா பேப்பர்ஸ்’ என்ற தலைப்பில் அந்த நிறுவனத்தின் ரகசிய ஆவணங்கள் வெளியாகின.
இதில் வெளிநாடுகளில் சட்டவிரோதமாக சொத்துகளை வாங்கி குவித்த பிரபலங்கள் விவரங்கள் தெரியவந்தது.
நடிகை ஐஸ்வர்யா ராய் அவரது மாமனாரும் நடிகருமான அமிதாப் பச்சன் ஆகியோரும் வரி ஏய்ப்பு செய்ததாக தகவல் வெளியானது.
இதுதொடர்பாக அந்த நபர்களுக்கு அமலாக்கத்துறை சார்பில் விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டது.
ஐஸ்வர்யா ராய்க்கு ஏற்கனவே 2 முறை சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. இரண்டு முறையும் அவர் தனக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதனால் இன்று அவர் ஆஜர் ஆவாரா என்ற சந்தேகம் எழுந்தது.
இந்த நிலையில் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி தன் தரப்பு விளக்கத்தை ஐஸ்வர்யா ராய் அளித்துள்ளார்.
பனாமா பேப்பர்ஸ் முறைகேடு வழக்கில் கிட்டத்தட்ட 300 இந்தியர்களின் பெயர்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Aishwarya Rai was summoned by ED in connection with the Panama Papers case.