JUST IN – ‘PS 2’ இசை வெளியீட்டு விழாவில் கெத்து காட்டிய கமல் – சிம்பு – துருவ் விக்ரம்

JUST IN – ‘PS 2’ இசை வெளியீட்டு விழாவில் கெத்து காட்டிய கமல் – சிம்பு – துருவ் விக்ரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த விழாவில் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன், மணிரத்னம், சுஹாசினி, குஷ்பூ, ரேவதி, ஏஆர்.ரஹ்மான் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இதில் சிறப்பு விருந்தினர்களாக கமல்ஹாசன் கலந்துக் கொண்டார்.

சிலம்பரசன்

கமல் வருகையின் போது அரங்கமே அதிர்ந்தது. அதுபோல நடிகர் விக்ரமின் மகன் துருவ் வந்த போதும் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.

நடிகர் சிலம்பரசன் அரங்கத்திற்கு நுழைந்தபோது அரங்கத்தில் எழுந்த கூச்சல்கள் அடங்க வெகு நேரமானது.

மிக மாஸாக கெத்தாக வந்து இறங்கினார் சிலம்பரசன். கார்த்தி விக்ரம் ஆகிய இருவருக்கும் நடுவில் அமர்ந்திருந்தார் சிலம்பரசன் ய.

நடிகர் விக்ரம் தலை அலங்காரமும் சிலம்பரத்தின் தலை அலங்காரமும் ஒன்றாக இருந்ததாக ரசிகர்கள் குறிப்பிட்டு படங்களை பகிர்ந்து வருகின்றனர்.

தற்போது அவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சிலம்பரசன்

Dhruv Vikram talks about kamal and Simbu at the PS2 audio launch

JUST IN நல்ல சினிமா கொடுப்பது கடமை..; PS2 இசை விழாவில் சிம்பு பற்றிய பேசிய கமல்

JUST IN நல்ல சினிமா கொடுப்பது கடமை..; PS2 இசை விழாவில் சிம்பு பற்றிய பேசிய கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா மற்றும் மணிரத்னம் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன் 2’.

இந்த படத்தை மணிரத்னம் இயக்க ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, பிரபு, சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா தற்போது சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் கமல்ஹாசன் மற்றும் சிலம்பரசன் கலந்து கொண்டனர்.

கமல்ஹாசன் மேடையில் பேசும் போது..

“பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் இந்த படத்திற்காக நான் வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளேன். அந்த வாய்ப்பு எனக்கு அமைந்தது.

சிறந்த சினிமா கொடுப்பது எங்களது கடமை. அதை என் சகோதரர் சிலம்பரசன் நன்கு அறிவார். ஏனென்றால் நானும் அவரும் குழந்தை பருவத்தில் இருந்து நடித்து வருகிறோம்” என பேசினார் கமல்ஹாசன்.

Kamal talks about Simbu at the PS2 audio launch

ரெடி ஸ்டார்ட் ஆக்சன் : மாவீரனை அடுத்து உலக நாயகனுடன் இணையும் சிவகார்த்திகேயன்

ரெடி ஸ்டார்ட் ஆக்சன் : மாவீரனை அடுத்து உலக நாயகனுடன் இணையும் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ‘மாவீரன்’.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் கதாநாயகியாக நடிக்க, சுனில், மிஷ்கின், யோகி பாபு, சரிதா, யூடியூபர் மோனிஷா பிளெஸ்ஸி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.

‘மாவீரன்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் தனது படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டார், மீதமுள்ள இன்னும் இரண்டு நாட்களில் படப்பிடிப்பு முடிவடையும்.

மேலும், இதற்கிடையில், கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியுடன் சிவகார்த்திகேயன் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்கவுள்ளார்.

Sivakarthikeyan completes shooting for ‘Maaveeran’

கைதிகளுக்கு 1000 புத்தகங்களை தானமாக வழங்கிய விஜய்சேதுபதி

கைதிகளுக்கு 1000 புத்தகங்களை தானமாக வழங்கிய விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஜய் சேதுபதி 1,000 புத்தகங்களை மதுரை சிறைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சென்னையில் நடைபெற்ற புத்தக கண்காட்சியில், சிறைக்கைதிகளுக்கு புத்தகம் வழங்க தனியாக ஹால் அமைக்கப்பட்டு, கைதிகளுக்கு புத்தகம் தானமாக வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து, பலரும் புத்தகங்களை தானமாக வழங்கி வந்தனர்.

இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதி 1,000 புத்தகங்களை மதுரை சிறைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

சிறைச்சாலையில் செயல்படும் சிறை நூலகத்திற்கு 1,000 புத்தகங்களை அதிகாரியிடம் வழங்கினார்.

இதனை மதுரை மத்திய சிறைத்துறை துணைத் தலைவர் பழனி மற்றும் சிறைத்துறை காவல் கண்காணிப்பாளர் வசந்த கண்ணன் பெற்றுக்கொண்டனர்.

vijay sethupathi donated a thousand books to madurai jail

தனுஷின் ‘கேப்டன் மில்லர்’.; சூப்பர் அப்டேட் கொடுத்த ஜிவி. பிரகாஷ்

தனுஷின் ‘கேப்டன் மில்லர்’.; சூப்பர் அப்டேட் கொடுத்த ஜிவி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கேப்டன் மில்லர்’.

இப்படத்தில் தனுஷுடன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் மற்றும் நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளனர்.

‘கேப்டன் மில்லர்’ படத்தின் மூலம் தனுஷுக்கு ஐந்தாவது முறையாக ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்நிலையில், ஜி.வி.பிரகாஷின் சமீபத்திய அறிக்கை ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், ‘கேப்டன் மில்லர்’ அப்டேட் ……. ஆயிரத்தில் ஒருவன் Celebration of Life BGM-க்கு பிறகு கேப்டன் மில்லருக்காக படமாக்கப்பட்ட காட்சிகளுக்கு இசையமைத்துள்ளேன், கிட்டதட்ட 3,4 bgms படமாக்கப்பட்டு ஒத்திசைக்கப்பட்டது. mad bgms onway super excited” என ட்வீட் செய்துள்ளார்.

GV Prakash gives update on Dhanush’s ‘Captain Miller’

சவால்களை விரும்பும் நடிகையின் கனவு நினைவானது.; ‘பத்து தல’ குறித்து பிரியா

சவால்களை விரும்பும் நடிகையின் கனவு நினைவானது.; ‘பத்து தல’ குறித்து பிரியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு கௌதம் கார்த்திக் ப்ரியா பவானி சங்கர் கௌதம் மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்து தல’.

இந்த படம் நாளை மார்ச் 30ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தில் தன் அனுபவங்கள் குறித்து பிரியா பவானி சங்கர் பேசியதாவது…

“ஒரு நடிகைக்கு ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் அதிகம் நடிப்பதை விடவும் சவாலான கதாபாத்திரங்கள் சிலது கிடைப்பது சிறந்த ஒன்றுதான். அது கனவு நனவாகும் ஒரு தருணம்.

இயக்குநர் கிருஷ்ணா சார் தனது படங்களில் பெண் கதாபாத்திரங்களை வலுவான ஒன்றாக இருக்கும்படியே அமைப்பார்.

அந்த வகையில், அவருடைய ‘பத்து தல’ படத்தில் அப்படிப்பட்ட ஒரு பாத்திரத்தில் நடிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த படத்திற்கு தயாரிப்பாளர்கள் கே.இ.ஞானவேல்ராஜா மற்றும் ஜெயந்திலால் கடா ஆகியோர் மிகப்பெரிய ஆதரவை வழங்கியுள்ளனர். கௌதம் கார்த்திக்குடன் பணிபுரிந்தது அற்புதமான அனுபவம். அவர் ஒரு அர்ப்பணிப்புள்ள கலைஞர். தன்னுடைய நடிப்பில் சிறந்ததைக் கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்.

சிலம்பரசனின் தோற்றமும் நடிப்பும் எப்போதும் ரசிகர்களை ஈர்க்கக்கூடியது. இந்தப் படத்தில் ஒவ்வொரு ஷாட் மீதும் அவரது அதீத அர்ப்பணிப்பு படம் பார்க்கும்போது தெரிய வரும்.

ஒவ்வொரு நடிகரும் தங்களின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் படம் மிகவும் சிறப்பாக உருவாகியுள்ளது.

ஒவ்வொரு பிரேமும் மிகவும் கச்சிதமாக இருப்பதை உழைப்பைக் கொடுத்து தொழில்நுட்ப வல்லுநர்கள் உறுதி செய்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையைக் கேட்டு வளர்ந்த நான், அவருடைய இசையமைப்பிலேயே திரையில் வருகிறேன் என்பது எனக்கு மிகவும் எமோஷனலான மற்றும் மகிழ்ச்சியான தருணம். குடும்பப் பார்வையாளர்களின் ரசனையை நிச்சயம் திருப்திப்படுத்தும் வகையில் பல எமோஷன்கள் மற்றும் எண்டர்டெயின்மெண்ட் என கமர்ஷியலான விஷயங்களை ‘பத்து தல’ கொண்டுள்ளது”.

இவ்வாறு தன் அனுபவங்களை பகிர்ந்தார் ப்ரியா பவானி சங்கர்.

ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜாவும், பென் ஸ்டுடியோஸ் சார்பில் ஜெயந்திலால் கடாவும் தயாரித்திருக்கும் படம் ‘பத்து தல’. சிலம்பரசன் டிஆர், கெளதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கெளதம் வாசுதேவ் மேனன், கலையரசன், டீஜே அருணாசலம், அனு சித்தாரா மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படத்தை ஓபிலி என் கிருஷ்ணா இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு ஃபரூக் ஜே பாஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் கே.எல் படத்தொகுப்பாளராகவும் மிலன் கலை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளனர்.

Actress Priya Bhavani Shankar talks about working in Pathu Thala

More Articles
Follows