தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த விழாவில் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன், மணிரத்னம், சுஹாசினி, குஷ்பூ, ரேவதி, ஏஆர்.ரஹ்மான் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக இன்று சென்னை வந்திருந்தார் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய்.
அரங்கத்திற்குள் நுழைவதற்கு முன்பு அங்கு அமைக்கப்பட்டிருந்த ஒரு பகுதியில் ஐஸ்வர்யா ராய் பேசினார்.
அவர் பேசும்போது.. “பொன்னியின் செல்வன் படத்திற்கு நீங்கள் அனைவரும் தந்த அன்பு மிகப்பெரியது.
உலகம் முழுவதும் இந்த படத்திற்கு பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் சென்னையிலும் என ஒவ்வொரு வீட்டிலும் இந்த படத்தை பார்த்து ரசித்துள்ளனர்.
உங்களின் அன்பினால் எங்களுடைய ஒட்டுமொத்த பொன்னியின் செல்வன் படக்குழுவும் மகிழ்ச்சியில் உள்ளது” என ஆங்கிலத்தில் பேசினார்.
அதன் பின்னர்…. “உங்க எல்லாருடைய அன்புக்கும் நன்றி” என தமிழில் பேசினார் ஐஸ்வர்யா ராய்.
Aishwarya Rai speech at Ponniyin Selvan 2 audio launch