BREAKING த்ரிஷா உடன் மேடையேறி ரஜினி-கமலுக்கு கோரிக்கை வைத்த ஐஸ்வர்யா ராய்

BREAKING த்ரிஷா உடன் மேடையேறி ரஜினி-கமலுக்கு கோரிக்கை வைத்த ஐஸ்வர்யா ராய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள படம் ‛பொன்னியின் செல்வன்’ .

இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, இன்று செப்டம்பர் 6, 2022 மாலை 6 மணியளவில் சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் தொடங்கி நடந்து வருகிறது.

டிடி (திவ்யதர்ஷினி) மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி வருகின்றனர்.

Ponniyin Selvan Audio Launch Photos

படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களுடன் நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன், இயக்குனர்கள் ஷங்கர் கௌதம் மேனன், இசையமைப்பாளர்கள் யுவன் ஷங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன் உள்ளிட்டோர் வருகை தந்திருந்தனர்.

த்ரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் ஒன்றாக மேடையேறினர்.

த்ரிஷா பேசியதாவது…

மணிரத்னம் உடன் பணிபுரிந்தது மறக்க முடியாத அனுபவம். இந்த பட வாய்ப்பை கொடுத்ததற்கு நன்றி. கமல் & ரஜினி இருவரையும்எப்போதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். போர் அடிக்காது.” என பேசினார் த்ரிஷா.

ஐஸ்வர்யாராய் பேசும்போது…

“எனது குருநாதர் மணிரத்னம். அவர் இயக்கிய ‘இருவர்’ படத்தில் இருந்து தான் என்னுடைய பயணம் தொடங்கியது. இந்த படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம்.

ரஜினி உடன் நடித்து விட்டேன். கமலுடன் இன்னும் நடிக்கவில்லை. ஆனால் அவர்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டு உள்ளேன்.

நீங்கள் இருவரும் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும். நாங்கள் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்” என பேசினார் ஐஸ்வர்யா ராய்.

Aishwarya and Trisha speech at PS1 trailer Launch

BREAKING பான் இந்தியா பாதை போட்டது அவங்கதான்.; இந்தியன் 2 அப்டேட் கொடுத்த ஷங்கர்

BREAKING பான் இந்தியா பாதை போட்டது அவங்கதான்.; இந்தியன் 2 அப்டேட் கொடுத்த ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள படம் ‛பொன்னியின் செல்வன்’ .

இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, இன்று செப்டம்பர் 6, 2022 மாலை 6 மணியளவில் சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் தொடங்கி நடந்து வருகிறது.

டிடி (திவ்யதர்ஷினி) மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி வருகின்றனர்.

படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களுடன் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், இயக்குனர்கள் ஷங்கர் கௌதம் மேனன், இசையமைப்பாளர்கள் யுவன் ஷங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன் உள்ளிட்டோர் வருகை தந்திருந்தனர்.

டைரக்டர் ஷங்கர் பேசியதாவது…

மணிரத்னம் இயக்கிய ரோஜா படம் முதலில் வந்த ஃபேன் இந்தியா படம். அவருடன் ஏ ஆர் ரகுமான் இணைந்து இருந்தார்.

அவர்கள் 30 வருடங்களுக்கு முன்பே பான் இந்தியா பாதையை போட்டு விட்டார்கள்.

நாங்கள் அந்தப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்” என்றார்.

அதன் பின்னர்.. “இந்தியன் 2 படத்தின் ஒரு கட்ட படப்பிடிப்பு நேற்று முடிவடைந்து விட்டது. செப்டம்பர் மூன்றாம் வாரத்தில் அடுத்த கட்ட படப்படிப்பு கமல் சார் உடன் தொடங்கும்” என பேசினார் ஷங்கர்.

Director Shankar sema speech at PS1 trailer Launch

BREAKING முஜே ஹிந்தி நஹி மாலும் ஹே.. தமிழே என் ஞானம் ஹே – பார்த்திபன்.; பிரபு & கார்த்தியை வச்சி செய்த ஜெயராம்

BREAKING முஜே ஹிந்தி நஹி மாலும் ஹே.. தமிழே என் ஞானம் ஹே – பார்த்திபன்.; பிரபு & கார்த்தியை வச்சி செய்த ஜெயராம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‛பொன்னியின் செல்வன்’ இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, இன்று செப்டம்பர் 6, 2022 மாலை 6 மணியளவில் சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் தொடங்கி நடந்து வருகிறது.

டிடி (திவ்யதர்ஷினி) மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி வருகின்றனர்.

படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களுடன் நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன், இயக்குனர்கள் ஷங்கர் கௌதம் மேனன், இசையமைப்பாளர்கள் யுவன் ஷங்கர், ராஹா, சந்தோஷ் நாராயணன் உள்ளிட்டோர் வருகை தந்திருந்தனர்.

ரஜினியை கண்டதும் ஐஸ்வர்யா ராய் கட்டி பிடித்துக் கொண்டார். பின்னர் ரஜினி காலில் விழுந்து ஆசி பெற்றார்.

பார்த்திபன் மேடையேறி தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி ஆகிய மொழிகளில் பேசினார்.

முஜே ஹிந்தி நஹி மாலும் ஹே.. தமிழே என் ஞானம் ஹே.. என்றார். மேலும் சுஹாசினிக்கு முன் மணிரத்னத்தின் காதலி யார் தெரியுமா? அது பொன்னியின் செல்வன் தான்.

அந்த நாவலை லவ் செஞ்சா தான் இப்படி படமெடுக்க முடியும்.” என பேசினார் பார்த்திபன்.

பின்னர் நடிகர் ஜெயராம் மேடையேறி படப்பிடிப்பில் நடந்த சம்பவங்களை அவரவர் குரல்களில் பேசி காட்டினார்.

முக்கியமாக சாப்பாட்டுக்காக பிரபு ஏங்கியதும்… அடுத்த சீன்காக கார்த்தி காத்துருந்ததும் பற்றி பேசினார்.

அரங்கமே சிரிப்பலையில் குலுங்கியது. ரஜினி கமல் மணிரத்னம் த்ரிஷா கார்த்தி ஷங்கர் உள்ளிட்டோர் வாய்விட்டு சிரித்தனர்.

Jayaram and Parthiban sema funny speech at PS1 event

Kamal Shankar Rajini at PS1 Audio Launch

Rajinikanth entry Ponniyin Selvan 1 Audio Launch live updates

Just In ரஜினி காலில் விழுந்து ஆசிபெற்ற ‘பொன்னியின் செல்வன்’ கலைஞர்கள் யார்?

Just In ரஜினி காலில் விழுந்து ஆசிபெற்ற ‘பொன்னியின் செல்வன்’ கலைஞர்கள் யார்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மணிரத்னம் இயக்கத்தில் ‛பொன்னியின் செல்வன்’ நாவல் அதே பெயரில் பிரம்மாண்டமான திரைப்படமாக இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது.

“பொன்னியின் செல்வன் பாகம்-1” செப்டம்பர் 30-ஆம் தேதி அன்று உலகெங்கிலும் திரையரங்குகளில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக உள்ளது.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

‘பொன்னியின் செல்வன் பாகம்-1” படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, இன்று செப்டம்பர் 6, 2022 மாலை 6 மணியளவில் சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் தொடங்கியது.

டிடி (திவ்யதர்ஷினி) மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி வருகின்றனர்.

படத்தில் பங்குபெற்றுள்ள ஒவ்வொரு கலைஞர்களும் அரங்கத்திற்கு வந்து கொண்டு இருந்தனர்.

சரத்குமார் மணிரத்னம் சுஹாசினி பிரபு உள்ளிட்டோர் முதலில் வந்து விட்டனர்.

பின்னர் பார்த்திபன், ஜெயராம், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லட்சுமி, நாசர், ஜெயம் ரவி, துருவ் விக்ரம், த்ரிஷா, கார்த்தி, ஏஆர். ரஹ்மான், கிஷோர் உள்ளிட்டோர் வந்தனர். பின்னர் சீயான் விக்ரம் வந்தார்.

நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் வந்தபோது அரங்கம் அதிர்ந்தது. மணிரத்னத்தை கண்டதும் துள்ளி குதித்து ஓடி வந்து கட்டி பிடித்துக் கண்டார் ஐஸ்வர்யா ராய்.

8 மணியளவில் ரஜினிகாந்த் அரங்கத்திற்குள் வந்தார். அவரை கண்டதும் ரசிகர்கள் எழுப்பிய கரவொலி உற்சாகம் விண்ணைப் பிளந்தது.

ரஜினியை கண்டதும் ஐஸ்வர்யா ராய் கட்டி பிடித்துக் கொண்டார். பின்னர் ரஜினி காலில் விழுந்து ஆசி பெற்றார்.

இதன்பின்னர் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா உள்ளிட்டோர் காலில் விழுந்து ஆசி பெற்றனர். பின்னர் ரஜினி மணிரத்னத்தை வாழ்த்தி இருக்கையில் அமர்ந்தார்.

Aishwarya Vikram Karthi Ravi got blessing from Rajini at PS1 Audio Launch

Just In ‘PS1’ இசை விழாவில் அவரை கண்டதும் துள்ளி வந்து கட்டிப் பிடித்த ஐஸ்வர்யா ராய்

Just In ‘PS1’ இசை விழாவில் அவரை கண்டதும் துள்ளி வந்து கட்டிப் பிடித்த ஐஸ்வர்யா ராய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மணிரத்னம் இயக்கத்தில் ‛பொன்னியின் செல்வன்’ நாவல் அதே பெயரில் பிரம்மாண்டமான திரைப்படமாக இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது.

“பொன்னியின் செல்வன் பாகம்-1” செப்டம்பர் 30-ஆம் தேதி அன்று உலகெங்கிலும் திரையரங்குகளில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக உள்ளது.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

‘பொன்னியின் செல்வன் பாகம்-1” படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, இன்று செப்டம்பர் 6, 2022 மாலை 6 மணியளவில் சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் தொடங்கியது.

டிடி (திவ்யதர்ஷினி) மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி வருகின்றனர்.

படத்தில் பங்குபெற்றுள்ள ஒவ்வொரு கலைஞர்களும் அரங்கத்திற்கு வந்து கொண்டு இருந்தனர்.

சரத்குமார் மணிரத்னம் சுஹாசினி பிரபு உள்ளிட்டோர் முதலில் வந்து விட்டனர்.

பின்னர் பார்த்திபன், ஜெயராம், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயம் ரவி, துருவ் விக்ரம், த்ரிஷா, கார்த்தி, ஏஆர். ரஹ்மான், கிஷோர் உள்ளிட்டோர் வந்தனர். பின்னர் சீயான் விக்ரம் வந்தார்.

நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் வந்தபோது அரங்கம் அதிர்ந்தது.

ஒவ்வொருவரையும் பார்த்து கை கொடுத்து கட்டி பிடித்து வந்தார் ஐஸ்வர்யா.

மணிரத்னத்தை கண்டதும் துள்ளி குதித்து ஓடி வந்து கட்டி பிடித்துக் கண்டார் ஐஸ்வர்யா ராய்.

இதனை கண்டதும் ரசிகர்கள் கரவொலி வண்ணம் பிளந்தது.

Aishwarya Rai entry Ponniyin Selvan 1 Audio Launch live updates

இதுவரை பார்த்திராத ஆக்சன் விஷுவல்ஸ் உடன் ‘கேப்டன்’.; சந்தோஷத்தில் சக்தி சௌந்தர்ராஜன்

இதுவரை பார்த்திராத ஆக்சன் விஷுவல்ஸ் உடன் ‘கேப்டன்’.; சந்தோஷத்தில் சக்தி சௌந்தர்ராஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தொலைநோக்கு பார்வைக்கொண்ட இயக்குநர்களில் முதன்மையானவராக தன்னை நிரூபித்தவர் இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன்.

ஸ்பேஸ் திரில்லராக உருவான டிக் டிக் டிக், வேம்பயர் திரில்லரன மிருதன், உயிருடன் வரும் டெடி பொம்மை சார்ந்த காதல் கதையான டெடி என ஒவ்வொரு படமும் அவருக்கு மட்டுமல்ல தமிழ்படைப்புலகத்திற்கே முற்றிலும் புதிதானது.

அந்த வகையில் முற்றிலும் புதிதான களத்தில் ஏலியன் சர்வைவல் திரில்லராக ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் திரைப்படம் (செப்டம்பர் 8, 2022) உலகம் முழுக்க வெளியாகிறது

படம் குறித்து இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் கூறியதாவது…

ஒவ்வொரு படத்திற்கும் ஒரு ஆரம்ப புள்ளி இருக்கும். அந்த கணத்திலிருந்தே அதன் மொத்த பயணமும் தொடங்கும். கேப்டன் படத்தை பொறுத்தவரை ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடும் படியான ஒரு படைப்பை, இது வரை பார்த்திராத விஷுவல்களுடன் புதிய ஆக்சனுடன் பிரமாண்டமாக தர வேண்டுமென்பதாக இருந்தது. முதலில் இது சாத்தியமில்லை என்றே நினைத்தேன்.

ஆனால் ஆர்யா மற்றும் ஸ்வரூப் தந்த ஆதரவு எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை தந்தது. என் மீது அவர்கள் வைத்த முழுமையான நம்பிக்கையில் தான் நான் இந்த படைப்பை உருவாக்க முடிந்தது.

மீண்டும் இணைந்த ‘டெடி’ கூட்டணியில் கைகோர்த்த தனுஷ் பட நடிகை

ஒரு படத்தின் பட்ஜெட்டை விட இயக்குநருக்கும் நடிகருக்கும் உள்ள சுமூகமான உறவால் தான் ஒரு அருமையான படம் உருவாக முடியும் அந்த வகையில் ஆர்யாவுடன் டெடி படத்தில் பணியாற்றும் போதே ஒரு சகோதரர் போன்ற உறவு உண்டாகிவிட்டது.

இந்தப்படத்தில் அவரது உழைப்பும் அர்ப்பணிப்பும் அபாரமானது. முன்னெப்போதிலும் இல்லாத ஒரு முழுமையான திரையரங்கு அனுபவமாக இப்படம் இருக்கும் என்றார்.

Think Studios உடன் நடிகர் ஆர்யாவின் The Show People இணைந்து தயாரிக்கும் “கேப்டன்” படத்தில் ஆர்யாவுடன் சிம்ரன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஹரிஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மேலும் கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன், பரத் ராஜ், அம்புலி கோகுல் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக் குழுவில் S.யுவா (ஒளிப்பதிவு), D இமான் (இசை), பிரதீப் E ராகவ் (எடிட்டர்), S.S.மூர்த்தி (தயாரிப்பு வடிவமைப்பு), R.சக்தி சரவணன்- K கணேஷ் (ஸ்டண்ட்ஸ்), தீபாலி நூர் (ஆடை வடிவமைப்பு), S மூர்த்தி (ஸ்டில்ஸ்) , NXgen (VFX), V அருண் ராஜ் (VFX மேற்பார்வையாளர்), Igene (DI), சிவசங்கர் V (வண்ணக்கலைஞர்), தபஸ் நாயக் (ஆடியோகிராபி), அருண் சீனு (ஒலி வடிவமைப்பு), கோபி பிரசன்னா (பப்ளிசிட்டி டிசைன்), S சிவக்குமார் (தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர் ), K. மதன் (நிர்வாகத் தயாரிப்பாளர்), சுரேஷ் சந்திரா-ரேகா D’One (மக்கள் தொடர்பு) ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

More Articles
Follows