மூன்று ஹீரோயின்களுடன் ‘தடம்’ பதிக்கும் அருண்விஜய்

மூன்று ஹீரோயின்களுடன் ‘தடம்’ பதிக்கும் அருண்விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thadam 3 heroinesஎன்னை அறிந்தால் படத்தில் வில்லனாக மிரட்டிய அருண்விஜய் அவர்கள் குற்றம்-23 படத்தில் மீண்டும் தன் ஹீரோயிசத்தை நிரூபித்தார்.

தற்போது ‘மீகாமன்’ பட இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கும் தடம் படத்தில் நடித்து வருகிறார்.

இதன் சூட்டிங்கின்போது அருண்விஜய்க்கு காலில் சிறு விபத்து ஏற்பட்டதால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இப்படத்தில் இவருடன் 3 நாயகிகள் நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

தெலுங்கில் ஜெகபதி பாபுவுடன் ‘பட்டேல் S.I.R.’ படத்தில் நடித்த தன்யா ஹாப் மற்றும் புதுமுகம் ஸ்மிரிதி ஆகியோர் நடிக்கின்றனர்.

மூன்றாவது நாயகியாக ‘சைவம்’ படப்புகழ் வித்யா நடிக்கிறார்.

இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் ஒவ்வொரு நாயகியாக இணைவார்கள் என கூறப்படுகிறது.

அருண் ராஜ் என்பவர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

‘குற்றம்-23’ தயாரிப்பாளர் இந்தர்குமார் இப்படத்தை தயாரிக்கிறார்.

இவர் தற்போது ‘கொடிவீரன்’ படத்தில் வில்லனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

3 heroines romance with Arun Vijay in Thadam movie

அபிசரவணன் சூப்பர் ஸ்டாராக வேண்டும்… பாக்யராஜ் பரபரப்பு பேச்சு

அபிசரவணன் சூப்பர் ஸ்டாராக வேண்டும்… பாக்யராஜ் பரபரப்பு பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

k bhagyaraj abi saravananரைட்வ்யூ சினிமாஸ் தயாரிக்க, ஆர்பிஎம் சினிமாஸ் வெளியிடும் திரைப்படம் சதுரஅடி 3500. அறிமுக நாயகன் நிகில் மோகன் நடிக்கும் இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

அப்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர் பார்த்திபன் அவர்களின் மகளுக்கு ஒரு லட்ச ரூபாய்க்கான நிதி உதவியை அபி சரவணன், கே பாக்யராஜ் முன்னிலையில் வழங்கினார்.

அதன்பின்னர் விழாவில் கே. பாக்யராஜ் பேசியதாவது…

‘இப்படத்தில் ஒரேயொரு பாடலுக்கு நடனமாடிய நடிகை மேக்னா முகேஷ் இங்கு வருகைத்தந்திருக்கிறார். அவருக்கு நான் நன்றி சொல்கிறேன்.

சதுர அடி 3500 படத்தின் இசை வெளியீட்டு விழா மகிழ்ச்சியாக தொடங்கி, விவாத மேடையாக மாறிவிட்டது. இருந்தாலும் நடிகர் அபி சரவணன் இந்த மேடையினை நெகிழ்ச்சியாக மாற்றிவிட்டார்.

வளரும் போதே முகம் தெரியாதவர்களுக்கு இவ்வளவு உதவிகளை செய்யும் இவரல்லவா சூப்பர் ஸ்டாராகவேண்டும். என்னுடைய வாய் முகூர்த்தம் பலிக்கும் என்பார்கள். அபி சரவணன் விசயத்தில் நடந்தால் சந்தோஷம்.

நடிகை இனியா இப்படவிழாவில் வராதது குறித்து கருத்து தெரிவிக்கவேண்டும் என்றால், அவர்கள் வராததால் நஷ்டம் அவருக்குதான் ஒழிய படக்குழுவிற்கு இல்லை.

‘சுவர் இல்லாத சித்திரங்கள் ’ படத்தில் நான் ஒரு வசனம் எழுதியிருப்பேன். ‘கண்ணடிச்சு கூப்பிட்டும் வராத பொம்பளை கைய பிடிச்சு இழுத்தா மட்டும் வந்துடவா போவுது..’ என்று எழுதியிருப்பேன்.

அவர்களுக்கு தான் இங்கு வரவேண்டிய பொறுப்பு இருக்கவேண்டும். அவர்கள் வராத விசயம் பெரிய பிரச்சனையாக மாறிவிட்டதால் இனி அவர் எல்லா விழாக்களிலும் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கிறேன்.

எல்லா தியேட்டர்களிலும் எப்போதும் ஏதேனும் ஒரு சிறிய படங்கள் ஓடிக்கொண்டிருக்கவேண்டும் என்று ஒரு சட்டத்தை ஏன் போடக்கூடாது.

எப்போது பார்த்தாலும் பெரிய ஆர்ட்டிஸ்ட் படம் தான் ஒடவேண்டும் என்று எந்த நியதியும் இல்லையே? ஒவ்வொரு தியேட்டரிலும் சிறிய படங்களுக்கு காட்சிகளை ஒதுக்கவேண்டும்.

அதற்காக காலை காட்சியை ஒதுக்கக்கூடாது. பெரிய நடிகர்கள் நடித்திருந்தால் அந்த படத்தை காண ரசிகர்கள் காலை காட்சிக்கு வருவார்கள்.

ஆனால் புதுமுகங்கள் நடித்திருக்கும் சின்ன படங்களுக்கு ரசிகர்கள் வரமாட்டார்கள். இதை காரணமாக காட்டி தியேட்டரிலிருந்து படத்தை தூக்கிவிடுகிறார்கள்.

படம் பார்த்த ரசிகர்களின் மவுத் டாக் பரவுவதற்குள் படத்தை தூக்கிவிட்டால் சின்ன படங்கள் எப்படி ஒடும்? அதனால் சின்ன பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்கள் முன்னுரிமை அளிக்கவேண்டும்.

கண்டிப்பாக ஏதேனும் ஒரு சின்ன படங்கள் தியேட்டரில் ஓடிக்கொண்டேயிருக்கவேண்டும் என்பது போல் ஒரு நடைமுறையை உருவாக்கவேண்டும்.

அதே போல் ஏசி வசதி, பார்க்கிங் வசதி போன்ற எல்லா வசதிகளும் கொண்ட நல்ல தியேட்டர்களும் சின்ன படங்களை திரையிட முன்வரவேண்டும்.

இந்த படத்தின் டைட்டிலைப் பார்த்தவுடன் இது ஒரு சஸ்பென்ஸ் படமாக இருக்கும் என்று நினைத்தேன்.

இந்த வருடமே ஒரு சஸ்பென்ஸான வருடம் தான். ஜெயலலிதா அம்மா ஹாஸ்பிட்டலில் இருந்தது சஸ்பென்ஸாக இருந்தது. அதற்கு பின் இவர்கள் வருவார்களா? அவர்கள் வருவார்களா? என்ற சஸ்பென்ஸ் இருந்தது.

அப்புறம் இவர்கள் அங்கே போய் சேர்ந்துவிடுவார்களா? அவர்கள் இங்கே போய் சேர்ந்துவிடுவார்களா? என்ற சஸ்பென்ஸ் இருந்தது. அப்புறம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தேர்தலில் வெங்கய்ய நாயுடுவுக்கு அந்த கட்சிகாரர்களே ஒட்டுபோடுவார்களா? மாட்டார்களா? என்ற சஸ்பென்ஸ் இருந்துகொண்டேயிருக்கிறது.

இது போல் ஏகப்பட்ட சஸ்பென்ஸ்களுடன் இருக்கின்ற இந்த காலக்கட்டத்தில் இந்த சதுர அடி 3500 படம் வெளியாவது விசேசம். படத்தின் இயக்குநர் ஜாய்சன் அவருடைய குரு வைஷாக்கிற்கு நல்லதொரு மரியாதையை பெற்றுத்தருவார்.

Abi Saravanan should became Super Star says K Bhagyaraj

sathuradi 3500 audio launch

மெர்சல் ஆடியோ விழாவில் த்ரீ சர்ப்ரைஸ் ட்ரீட்

மெர்சல் ஆடியோ விழாவில் த்ரீ சர்ப்ரைஸ் ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Three surprise treat in Mersal audio launch eventவிஜய் 3 வேடங்களில் நடித்து வரும் மெர்சல் படத்தை அட்லி இயக்கி வருகிறார்.

இப்படத்தின் மொத்த சூட்டிங்கையும் ஜீலை 31ஆம் தேதியோடு முடிக்க திட்டமிட்டு விறுவிறுப்பாக பணியாற்றி வருகிறது படக்குழு.

இதன் ஆடியோ விழாவை மிகப்பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு இருக்கிறதாம் தயாரிப்பு தரப்பு.

அதற்கு முக்கிய காரணம்…

மெர்சல் படம் ஸ்ரீ தேனாண்டாள்பிலிம்ஸின் 100வது படைப்பு.

1992ஆம் ஆண்டில்தான் விஜய் மற்றும் ஏஆர். ரஹ்மான் இருவரும் சினிமாவில் அறிமுகமானார்கள்.

இந்த ஆண்டோடு அவர்கள் 25 ஆண்டுகளை நிறைவு செய்கின்றனர்.

எனவே நடைபெற உள்ள ஆடியோவில் விழாவில் இந்த மூன்று கலைஞர்களையும் பெருமைப்படுத்திட திட்டமிட்டு இருக்கிறார்கள் என தெரியவந்துள்ளது.

Three surprise treat in Mersal audio launch event

ஒரு மாதம் ஓடக்கூடிய பெரிய்ய்ய்ய்ய படம்; பார்க்க ரெடியா?

ஒரு மாதம் ஓடக்கூடிய பெரிய்ய்ய்ய்ய படம்; பார்க்க ரெடியா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ambience movieஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரூ வெப்பர்க் என்பவர் சோதனை முயற்சியாக 720 மணி நேரம் ஓடக்கூடிய ஆம்பியன்ஸ் எனும் படத்தை உருவாக்கி இருக்கிறார்.

இப்படம் ஒரு மாதம் ஓடக்கூடியதாம்.

இந்தப் படம் குறித்து ஆண்ட்ரூ வெப்பர்க் கூறும்போது… இது எனது கடைசி படம் எனவும் இனி படங்களை இயக்க மாட்டேன். எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

72 நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படத்தின் டீசர் 2014ம் ஆண்டு ரிலீசானது.

அடுத்து 72 மணி நேரம் ஓடக்கூடிய ட்ரெய்லர் அடுத்த ஆண்டு 2018ம் ஆண்டு ரிலீசாக இருக்கிறது.

இதன்மூலம் நீண்ட நேரம் ஓடக்கூடிய டீசர், ட்ரெய்லர் என்கிற சாதனை மற்றும் பெருமையையும் இப்படம் பெறும்.

இப்படம் வருகிற 2020ஆம் ஆண்டு ரிலீசாக இருக்கிறது.

இதற்குமுன்பு 240 மணிநேரம், (10 நாட்கள்) ஓடக்கூடிய மாடர்ன் டைம்ஸ் ஃபாரெவர் என்ற படம் வெளியாகி இருந்தது என்பது சிலருக்கு தெரிந்திருக்கலாம்.

தற்போது அப்பட சாதனையை ஆம்பியன்ஸ் படம் முறியடிக்க இருக்கிறது.

கக்கூஸ் பட இயக்குநர் திவ்யாபாரதி கைது

கக்கூஸ் பட இயக்குநர் திவ்யாபாரதி கைது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director divya bharathiமலக்குழிக்குள் உயிரை மாய்த்துக் கொண்டவர்களின் கதைகளைத் தேடி ஆவணமாக்கியவர் திவ்யா பாரதி.

சமீபத்தில் பெரியார் சாக்ரடீஸ் விருது பெற்றார் திவ்யாபாரதி.

2009ஆம் ஆண்டு சட்டக்கல்லூரி மாணவியாக இருந்த போது போராட்டத்தில் ஈடுபட்டதாக திவ்யாபாரதி மீது புகார் உள்ளது.

8 ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட வழக்கில் மதுரையில் கைது செய்யப்பட்டுள்ளார் திவ்யாபாரதி.

தலித் மாணவர் விடுதியில் பாம்பு கடித்து இறந்த மாணவரின் உடலை வாங்க மறுத்து மதுரை மருத்துவமனையில் போராடினார் திவ்யா பாரதி.

கைது செய்யப்பட்ட திவ்யபாரதி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

நெடுவாசல், கதிராமங்கலம் போராட்டத்திற்கு ஆதரவாக முகநூலில் எழுதிய மாணவி வளர்மதி கைது செய்யப்பட்ட நிலையில் திவ்யாபாரதியின் கைதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியளவில் சல்மான்கான் சாதனையை முறியடித்த அஜித்

இந்தியளவில் சல்மான்கான் சாதனையை முறியடித்த அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith and salman khanஇந்தி படங்களுக்கு இணையாக தமிழ் படங்களும் பல சாதனைகளை புரிந்து வருகிறது.

இந்நிலையில் அஜித் நடித்துள்ள விவேகம் படமும் இந்தியளவில் ஒரு சாதனை படைத்துள்ளது.

இதற்குமுன் சல்மான் கானின் டியூப்லைட் பட டீஸர் பெரும் சாதனையை செய்திருந்தது.

தற்போது அதனை முறியடித்து, அதிக லைக்ஸ் பெற்று (503K) விவேகம் டீசர் சாதனை புரிந்துள்ளது.

More Articles
Follows