தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மகிழ்திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடித்த படம் ‘தடம்’.
இந்த படம் தமிழ் சினிமாவில் ஓர் ஆழமான தடத்தை பதித்தது என்று சொன்னால் அது மிகையல்ல.
இந்த படத்திற்கு இசையமைத்தவர் அருண் ராஜ். இவரது இசையில் உருவான ‘பைரி’ என்ற படமும் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.
இந்த நிலையில் இவர் தற்போது இசையமைத்துள்ள படம் ‘பீட்சா 3’.
அஸ்வின் & பவித்ரா இணைந்து நடித்துள்ளனர். மோகன் கோவிந்த் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தை சி.வி. குமார் தயாரித்துள்ளார்.
இந்த படத்தில் இடம்பெற்ற “மின்னல் கண்ணிலே…” என்று தொடங்கும் பாடல் ஏழு மாதங்களுக்கு முன்பு இணையத்தில் வெளியானது.
“கண்ணிலே.. மின்னல் கண்ணிலே.. என்னை தாக்கியே பெண்ணே என்னை நீ பார்க்கிறாய்..”
உன் மூச்சிலே உன் மூச்சு காற்றிலே என்னை நீ தீண்டும்போது என்னை நீ சாய்க்கிறாய்…”
இந்தப் பாடலை மோகன் ராஜா என்பவர் எழுத பாடி இசையமைத்துள்ளார் அருண் ராஜ்.
மேலும் இதே படத்தில் இடம் பெற்ற அடுத்த பாடலான ‘கண்ணே கண்மணியே..’ கடந்த வாரம் வெளியானது
இந்த பாடலின் லிரிக் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
“கண்ணே கண்மணியே…” என்று தொடங்கும் இந்த பாடல் ஓர் அழகான குடும்ப உறவை சித்தரிக்கும் பாடலாக அமைந்துள்ளது.
“கண்ணே கண்மணியே நீ இருந்தாலே வாழ்க்கை மாறும்…்என் கண் முன்னே நீ சிரிச்சாலே என் சோகம் தீரும்..
உன் கை கோர்த்து நான் போகும் தூரம் எல்லாம் என் சந்தோஷம் நூறாகும் நெஞ்சமெல்லாம்..
என அழகான வரிகளுடன் அனைவருக்கும் புரியும் படியில் ஓர் உணர்வு பாடலாக உருவாகியுள்ளது.
இந்தப் பாடல் வரிகளை மோகன் ராஜா எழுத லலிதா சுதா பாடியுள்ளார்.
சமீப காலமாக பாடல் வரிகளை கவனிக்க விடாமல் இசையே மேலோங்கி நிற்கும். ஆனால் அருண்ராஜ் இசையமைத்த இந்த இரு பாடல்களிலுமே வரிகளுக்கு தனித்துவம் கொடுத்து இதயத்திற்கு இதமான ராகத்தை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து இதுபோல பல பாடல்களை அமைத்து அருண் ராஜ் இனி ஆனந்த (இசை) ராஜாவாக மாற வாழ்த்துவோம்…
Thadam composer Arun Raj next project details