தனுஷ் படத்தில் ‘மாஸ்டர்’ நாயகியுடன் ‘தடம்’ நாயகியும் இணைந்தார்

தனுஷ் படத்தில் ‘மாஸ்டர்’ நாயகியுடன் ‘தடம்’ நாயகியும் இணைந்தார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ்பாலிவுட்டில் ‘அத்ரங்கி ரே’, கோலிவுட்டில் ‘கர்ணன்’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார் நடிகர் தனுஷ்.

மேலும் தாணு தயாரிப்பில் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கும் படத்திலும் நடிக்கிறார். இப்படத்திற்கு இசை யுவன்.

இதனையடுத்து சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க கார்த்திக் நரேன் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ்.

இதில் நாயகியாக ‘மாஸ்டர்’ மாளவிகா மோகனன், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

இந்த நிலையில் மற்றொரு நாயகியாக ஸ்மிருதி வெங்கட் இணைந்துள்ளதை படக்குழு சற்றுமுன் அறிவித்துள்ளது.

தடம், மூக்குத்தி அம்மன் படங்களில் ஸ்மிருதி நடித்துள்ளார்.

மேலும் தீர்ப்புகள் விற்கப்படலாம், அக்னி நட்சத்திரம், பற்ற வைத்த நெருப்பொன்று ஆகிய படங்களிலும் ஷ்மிருதி வெங்கட் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Thadam girl Smruthi Venkar is part of D43

பொங்கல் முடிந்தவுடன் தமிழக பள்ளிகள் திறப்பு..; முதல்வரின் உத்தரவுக்காக காத்திருக்கும் மாணவர்கள்

பொங்கல் முடிந்தவுடன் தமிழக பள்ளிகள் திறப்பு..; முதல்வரின் உத்தரவுக்காக காத்திருக்கும் மாணவர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

School reopen 2021கொரோனா வைரஸ் பரவலை தடுக்க போடப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த 2020 மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன.

இந்நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து தீபாவளி சமயத்தில் நவம்பர் மாதம் 9-ஆம் தேதி கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

இதன் முடிவில் பள்ளிகள் திறக்க அதிகப்படியான பெற்றோர்கள் & மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் பள்ளிகள் திறப்பது ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

தற்போது 10,11,12 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நெருங்கி வருகிறது.

இந்த நிலையில் பள்ளிகள் திறக்க இரண்டாம் கட்ட பெற்றோர்கள் கருத்து கேட்பு இன்று ஜனவரி 6 முதல் வருகிற 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இன்று நடைபெற்ற கருத்து கேட்பின் படி தமிழகத்தில் 10,11, மற்றும் 12 வகுப்புகளுக்கான பள்ளிகள் வருகிற ஜனவரி 18-ஆம் தேதி திறக்கப்படும் எனவும், அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை முதல்வர் விரைவில் வெளியிடுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

TN Schools likely to reopen after Pongal

2021 சென்னை புத்தகக் காட்சி நடைபெறுமா..? வாசகர்கள் எதிர்பார்ப்பு..; ‘பபாசி’ விளக்கம்

2021 சென்னை புத்தகக் காட்சி நடைபெறுமா..? வாசகர்கள் எதிர்பார்ப்பு..; ‘பபாசி’ விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில் சென்னை புத்தகக் காட்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

கடந்தாண்டு 2020ல், 43-வது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜனவரி 9-ம் தேதி தொடங்கியது.

எனவே இந்தாண்டும் ஜனவரியில் சென்னை புத்தகக் காட்சி நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

அதில்…

அன்பார்ந்த வாசகப் பெருமக்களே..

வழக்கமாக ஜனவரி பொங்கல் திருநாளில் நடைபெரும் சென்னை புத்தக காட்சி 2021 இந்த ஆண்டு பெருந்தொற்றுகாரணமாக பொங்கல் விடுமுறை காலங்களில் நடத்த இயலவில்லை.

ஆனால் 44வது சென்னைப் புத்தகக் காட்சியை வருகின்ற பிப்ரவரி /மார்ச் காலங்களுக்குள் நடத்துவதற்காக அரசிடம் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த விண்ணப்பம் பேரிடர் மேலாண்மை துறையில் அனுமதிக்காக காத்திருக்கிறது.

அரசு அனுமதி கிடைத்தவுடன் பிப்ரவரி கடைசி அல்லது மார்ச் முதல் வாரத்தில் 44ஆவது சென்னை புத்தகக் காட்சி 2021 நடைபெறும் வாசகர்கள் இதுகுறித்து விசாரிப்பதால் இந்த தகவலை வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

அதற்கிடையே கடந்த 8 மாதகாலமாக புத்தக விற்பனை இல்லாத சூழலில் இந்த பொங்கல் விடுமுறை காலங்களில் வாசகர்களின் புத்தக ஆவலை பூர்த்தி செய்யும் வகையில் ஒரு சில பதிப்பாளர்கள் கூட்டாகவும் தனித்தனியாகவும் அவர்கள் சக்திக்கு ஏற்றபடி சிறு சிறு புத்தக காட்சிகளை சென்னையை சுற்றி நடத்தி வருகிறார்கள்.

இது வாசகர்களின் அறிவு தாகத்திற்கு சிறு வடிகாலாக அமையுமென்று நம்புகிறோம்.

மேலும் பபாசி நடத்தும் பிரம்மாண்டமான 44 ஆவது சென்னை புத்தகக் காட்சி அரசு அனுமதி கிடைத்தவுடன் விரைவில் அதனுடைய சிறப்பு தன்மைகளோடு பல்வேறு புதிய அம்சங்களுடன் சிறந்த பண்பாட்டு நிகழ்வாக நடைபெறும் என்பதையும் வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்

ஆர்.
எஸ்.சண்முகம்
தலைவர் பப்பாசி.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Book Fair 2021 Official new Statement from bapasi

மறைந்த நடிகை சித்ராவின் பர்ஸ்ட் & லாஸ்ட் படம் ‘கால்ஸ்’..; டீசர் படைத்த ரெக்கார்ட்

மறைந்த நடிகை சித்ராவின் பர்ஸ்ட் & லாஸ்ட் படம் ‘கால்ஸ்’..; டீசர் படைத்த ரெக்கார்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சின்னத்திரை மூலம் பலகோடி உள்ளங்களை கொள்ளை கொண்ட
வி.ஜே சித்ரா நடித்த கால்ஸ் திரைப்பட டீசர் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

சின்னத்திரை புகழ்
விஜே சித்திரா அவர்கள் இறப்பிற்கு முன்பு எடுக்கப்பட்ட படம் கால்ஸ்.

இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்(first look) ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில் இப்படத்தின் டீசரும் செகண்ட் லுக்கும் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி வெளியானது.

இத்திரைப்படம் இப்போது திரைக்கு வர தயாராகி உள்ளது.

தற்போது வெளிவந்த டீஸர் (Teaser) பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இத்திரைப்படத்தின் டீஸர் (Teaser) ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் இயக்குனரான
திரு. ஜெ. சபரிஷ் அவர்கள் கூறியதாவது “நம்மிடையே வி.ஜே சித்து தற்போது இல்லையென்றாலும்.. அவர் இருந்திருந்தால் எத்தகைய அன்பையும் ஆதரவையும் மக்கள் தந்திருப்பார்களோ அதே ஆதரவையும் அன்பையும் தந்துள்ளார்கள்”. என மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

VJ Chithra’s Calls teaser records

#BREAKING தியேட்டர்களில் 100% பார்வையாளர்கள் அனுமதி.. தமிழக அரசுக்கு மத்திய அரசு கண்டனம்..; மாஸ்டர் & ஈஸ்வரன் ரிலீசாகுமா?

#BREAKING தியேட்டர்களில் 100% பார்வையாளர்கள் அனுமதி.. தமிழக அரசுக்கு மத்திய அரசு கண்டனம்..; மாஸ்டர் & ஈஸ்வரன் ரிலீசாகுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த 2020 மார்ச் மாதம் 17ந் தேதி தியேட்டர்கள் மூடப்பட்டன.

கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கு பிறகு கடந்தாண்டு நவம்பர் 10 முதல் தமிழக அரசு தளர்வுகளை அறிவித்து திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்தது.

50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்க வேண்டும் என்று நிபந்தனையுடன் அனுமதியளிக்கப்பட்டது.

எனவே இரண்டு இருக்கைகளுக்கு நடுவில் உள்ள இருக்கையில் ரிப்பன் கட்டியும் இருக்கையில் தடுப்பு வைத்தும் தடுத்து வைத்தும் தியேட்டர்கள் இயங்கி வந்தன.

இதனால் சிறிய படங்கள் மட்டுமே தியேட்டர்களில் ரிலீசாகின.

இந்த நிலையில் 100% இருக்கைகளுக்கு அனுமதியளிக்க வேண்டும் என விஜய், சிம்பு உள்ளிட்ட திரையுலகினர் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்

இவர்கள் கோரிக்கை வைத்த நிலையில் தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

இதனால் தமிழ் திரைத்துறையினர் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த அனுமதிக்கு எதிராக சிலர் விமர்சனங்களையும் முன் வைத்து வருகினலறனர்.

இந்த நிலையில் திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதித்திருப்பது விதி மீறல் என மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காதது ஏன்.?

கொரோனா தடுப்புக்கான மத்திய அரசின் வழிகாட்டு விதிகளுக்கு ஏற்ப புதிய உத்தரவை பிறப்பிக்க தமிழக அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேற்கண்டவற்றை குறிப்பிட்டு தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார்.

தியேட்டர்களில் 100% இருக்கைக்கு அனுமதி என்ற உத்தரவை நம்பியே மாஸ்டர் & ஈஸ்வரன் படங்கள் ரிலீசுக்கு ரெடியாக இருந்தன.

தற்போது இப்படி ரிலீஸில் சிக்கல் எழலாம் எனத் தெரிகிறது.

தமிழக அரசு என்ன செய்யப் போகிறதோ..?

Central Govt asks TN Govt to withdraw 100% occupancy in theatres

சிம்பு வீட்டு முன்பு அவரது ரசிகர்கள் திடீர் போராட்டம்

சிம்பு வீட்டு முன்பு அவரது ரசிகர்கள் திடீர் போராட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்புசுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, பாரதிராஜா, நிதி அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘ஈஸ்வரன்’.

தணிக்கையில் ‘யு’ சான்றிதழ் பெற்றுள்ள இந்தப் படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 14-ம் தேதி திரைங்குகளில் ரிலீசாகிறது.

ஜனவரி 2ஆம் தேதி நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிம்பு பேசியது பரபரப்பானது.

எவருடைய அட்வைஸ் கேட்காதீர்கள்… இனிமே பேச்சு இல்ல. செயல்தான்… என பேசினார்.

இதன் பின்னர் இப்பட வெளியீட்டை முன்னிட்டு நடிகர் சிம்பு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.

என் ரசிகர்கள் ‘மாஸ்டர்’ படம் பாருங்கள், விஜய் அண்ணா ரசிகர்கள் ‘ஈஸ்வரன்’ பாருங்கள்.

இந்த நிலையில் இன்று ஜனவரி 6 மாலை நேரத்தில் சிம்பு வீட்டு முன்பு ரசிகர்கள் குவிந்தனர்.

சிம்பு ரசிகர் மன்றத்தின் அகில இந்திய தலைவர் நாகு சதீஷை மாற்ற கோரி சிம்பு வீட்டின் முன்பு அவரது ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிம்பு

IMG-20210106-WA0085

#Simbu

Fans protest near Simbu house

More Articles
Follows