அஜித்தின் ‘விடாமுயற்சி’.: தமிழை மதிக்கும் தல..; மதிக்காத தளபதி விஜய்.?!

அஜித்தின் ‘விடாமுயற்சி’.: தமிழை மதிக்கும் தல..; மதிக்காத தளபதி விஜய்.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று மே ஒன்றாம் தேதி நடிகர் அஜித் தன் பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

அவரின் பிறந்த நாளை முன்னிட்டு அஜித் ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் வகையில் அஜித் 62 ஆவது படத்தின் தலைப்பை லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த படத்திற்கு ‘விடாமுயற்சி’ என்ற பெயரிட்டு அந்த போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்க அனிருத் இசையமைக்க நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

சமீப காலமாகவே அஜித் மற்றும் விஜய் படங்கள் தயாராகும்போது சூட்டிங் தொடங்கி கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகே அந்தப் படத்தின் தலைப்பை வெளியிடுவார்கள்.

ஆனால் அஜித் 62 படத்தின் தலைப்பை லைக்கா நிறுவனம் இப்போதே வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிலும் முக்கியமாக விடாமுயற்சி என்ற தமிழ் தலைப்பை வைத்து தமிழ் டைட்டில் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

ஆனால் விஜய் நடிப்பில் இதற்கு முன்பு வெளியான ‘பீஸ்ட்’ & ‘வாரிசு’ ஆகிய படங்களுக்கு முதலில் ஆங்கில டைட்டில் மட்டுமே வெளியானது.

வாரிசு தமிழ் தலைப்பாக இருந்தாலும் தமிழ் டிசைன் வடிவில் வெளியாகவில்லை

இந்த படங்களின் ரிலீஸ் சமயத்தில் தான் ‘பீஸ்ட்’ மற்றும் ‘வாரிசு’ தமிழ் வடிவமைப்பு வெளியானது. இது சம்பந்தமான செய்திகளை நாம் FILMISTREET தளத்தில் நாம் வெளியிட்டிருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போதும் கூட லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘லியோ’ படத்தின் டைட்டில் ஆங்கிலத்தில் மட்டுமே டிசைன் வெளியானது. மேலும் ‘லியோ’ என்பது ஆங்கில சொல்லாகும்.

ஆனால் இந்த முறை படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே ‘லியோ’ டைட்டில் வெளியானது இங்கே கவனிக்கத்தக்கது.

Ajiths respect for Tamil language but Vijay movies never does it

சிவகார்த்திகேயன் திடீர் விலகல்.; அதிர்ச்சியில் ரசிகர்கள்.! என்ன காரணம்.?

சிவகார்த்திகேயன் திடீர் விலகல்.; அதிர்ச்சியில் ரசிகர்கள்.! என்ன காரணம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன்.

இவரது நடிப்பில் உருவாகி உள்ள ‘மாவீரன்’ மற்றும் ‘அயலான்’ ஆகிய திரைப்படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளன.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தன் ட்விட்டரில் பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

“சில காலம் ட்விட்டரிலிருந்து ஒதுங்கியிருப்பதாக தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

விரைவில் உங்களை சந்திப்பேன் எனவும் படத்தினைப் பற்றி இனிமேல் எனது படக்குழுவினர் செய்திகளை பரிமாறுவார்கள் என தெரிவித்துள்ளார்.

அவர் சுற்றுலா விமானத்தில் இருந்து புகைப்படத்தினை பகிர்ந்து இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

My dear brothers and sisters,
I am taking a break from twitter for a while.
Take care, and i will be back soon 👍😊

சிவகார்த்திகேயன்

Sivakarthikeyan’s shared tweet Fans are shocked

ரஜினிக்கு மீண்டும் ஒரு ‘பாட்ஷா’ கொடுக்க ரெடியாகும் லோகேஷ் கனகராஜ்

ரஜினிக்கு மீண்டும் ஒரு ‘பாட்ஷா’ கொடுக்க ரெடியாகும் லோகேஷ் கனகராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்ட இந்தியாவின் பிரபல நட்சத்திரங்கள் ரஜினியுடன் நடித்து வருகின்றனர்.

இந்தப் படத்தை ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் வெளியிடப்பட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையில் தன்னுடைய மகள் ஐஸ்வர்யா இயக்கும் ‘லால் சலாம்’ என்ற படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார் ரஜினி.

இந்தப் படங்களைத் தொடர்ந்து லைக்கா நிறுவனம் தயாரிப்பில் ‘ஜெய்பீம்’ இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் ரஜினிகாந்த்.

இந்த படங்களை முடித்த கையோடு லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள ஒரு படத்தில் ரஜினி நடிக்க ரெடியாகி வருவதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

இது ரஜினி நடிப்பில் உருவாகும் ‘தலைவர் 171’ வது படமாகும். இந்த படத்தையும் தன்னுடைய வழக்கமான பாணியான கேங்ஸ்டர் கதையாக உருவாக்க இருக்கிறாராம் லோகேஷ் கனகராஜ்.

ரஜினிகாந்த் பல கேங்ஸ்டர் கதைகளில் நடித்திருதாலும் அவரது கேரியரில் பில்லா, பாட்ஷா, கபாலி, காலா படங்களை அந்த வரிசையில் சொல்லலாம்.

லோகேஷ் இயக்கவுள்ள இந்த புதிய படம் ரஜினிக்கு மீண்டும் ஒரு பாட்ஷாவாக அமையும் என தகவல்கள் வந்துள்ளன.

இந்த படத்தை கிட்டத்தட்ட ரூ 250 கோடியில் உருவாக்க திட்டமிட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

ரஜினி இதுவரை 170 படங்களில் நடித்தாலும் தன்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத வரிசையில் பாட்ஷா படத்தை என்றுமே சொல்லுவார்.

அவருக்கு மீண்டும் ஒரு ‘பாட்ஷா’ கிடைத்தால் அது நிச்சயம் ஒரு பாதுஷாவாக இருக்கும் என நம்பலாம்.

Rajinikanth’s film with Lokesh Kanagaraj to be titled ‘Thalaivar 171’

அஜித் பிறந்தநாளில் AK 62 டைட்டிலை வெளியிட்ட லைக்கா.; செம பொருத்தமாச்சே.!

அஜித் பிறந்தநாளில் AK 62 டைட்டிலை வெளியிட்ட லைக்கா.; செம பொருத்தமாச்சே.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடிக்கும் அவரின் 62 ஆவது படத்தை லைக்கா நிறுவனம் தயாரிப்பதாக பல மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தனர்.

இந்தப் படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவார் எனக் கூறப்பட்டது அதன் பின்னர் அவர் விலகினார்.

அதன்படி இன்று மே 1ம் தேதி 12 மணி துவங்கும் வேளையில் அஜித் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் டைட்டில் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்தப் படத்திற்கு ‘விடா முயற்சி’ என்று பெயரிட்டுள்ளனர்.

விடா முயற்சி

இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்க அனிருத் இசை அமைக்கிறார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

எந்தப் பின்புலமும் இல்லாமல் சினிமாவில் அறிமுகமானவர் அஜித். அவர் தன்னுடைய தொடர்ந்து விடாமுயற்சியால் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.

எனவே இந்த தலைப்பு அஜித்திற்கு மிகவும் பொருத்தமானது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த படத்தில் நடிக்கும் நடிகர் – நடிகைகள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

விடா முயற்சி

Ajith 62 movie titled Vidaa Muyarchi Title look released

தெலுங்கில் ரஜினி – கமல் – சூர்யா கார்த்திக்கு ரசிகர்கள் இருக்காங்க – கார்த்திக் வர்மா

தெலுங்கில் ரஜினி – கமல் – சூர்யா கார்த்திக்கு ரசிகர்கள் இருக்காங்க – கார்த்திக் வர்மா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்திக் வர்மா இயக்கத்தில் சாய் தரம் தேஜ் மற்றும் சம்யுக்தா ஜோடியாக நடித்துள்ள படம் ‘விரூபாக்‌ஷா’.

இந்த படம் கடந்த ஏப்ரல் மாதம் தெலுங்கில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

இதனையடுத்து இந்த படத்தை தமிழில் டப் செய்து ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் வெளியிடுகிறது.

வருகிற மே 5ம் தேதி இந்த படத்தை தமிழில் வெளியிட உள்ள நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

இந்த சந்திப்பில் இயக்குநர் கார்த்திக் வர்மா பேசுகையில்..

“‘தமிழ் மொழியில் இயல்பாக பேச வராது. இருந்தாலும் தமிழ் திரைப்பட ஆளுமைகளான மணிரத்னம், ஷங்கர், கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ், வெற்றிமாறன் என ஏராளமான திறமையாளர்கள் மீது அதிக ஈடுபாடு உண்டு.

தமிழ் மக்களின் திரைப்பட ஆர்வம் எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழில் வெளியான ‘பீட்சா’, நயன்தாரா நடித்த ‘மாயா’ ஆகிய படங்களை பார்த்திருக்கிறேன்.

இந்தப்படத்திற்கு சுகுமார் சாரின் திரைக்கதை வெற்றி பெற வைத்திருக்கிறது.

முதலில் நாயகனை சந்தித்தபோது அவர் என்னிடமிருந்து காதல் கதையைத்தான் எதிர்பார்த்தார்.

ஆனால் நான் ‘‘விரூபாக்‌ஷா’ கதையைச் சொல்லும் போது, முதலில் தயங்கி பிறகு ஒப்புக்கொண்டார். இந்த திரைப்படம், திரையரங்கிற்கு வருகை தந்து கண்டு ரசிக்க வேண்டிய திரைப்படம். தெலுங்கு ரசிகர்கள் ரஜினி சார், கமல் சார், சூர்யா சார், கார்த்தி சார்.. ஆகியோருக்கு வரவேற்பும், ஆதரவும் அளித்தது போல், தமிழ் ரசிகர்கள் சாய் தரம் தேஜுக்கும் ஆதரவும், வரவேற்பும் அளிப்பார்கள். ” என்றார்.

Director Kartik Varma speechat virupaksha event

கேரளா சேலை கட்டினா தமிழ் பசங்கதான் ரொம்ப லைக் பண்றாங்க – சம்யுக்தா

கேரளா சேலை கட்டினா தமிழ் பசங்கதான் ரொம்ப லைக் பண்றாங்க – சம்யுக்தா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்திக் வர்மா இயக்கத்தில் சாய் தரம் தேஜ் மற்றும் சம்யுக்தா ஜோடியாக நடித்துள்ள படம் ‘விரூபாக்‌ஷா’.

இந்த படம் கடந்த ஏப்ரல் மாதம் 21ல் தெலுங்கில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

இதனையடுத்து இந்த படத்தை தமிழில் டப் செய்து ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் வெளியிடுகிறது.

வருகிற மே 5ம் தேதி இந்த படத்தை தமிழில் வெளியிட உள்ள நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

இந்த சந்திப்பில் நடிகை சம்யுக்தா பேசுகையில்…

”எனக்கு தமிழ் மொழியும், தமிழ்நாடும் எனக்கு மிகவும் பிடிக்கும். ‘வாத்தி’ படத்திற்கு அளித்த ஆதரவிற்கு நன்றி. அதனைத் தொடர்ந்து தெலுங்கில் ‘விரூபாக்‌ஷா’ எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறேன்.

இந்த திரைப்படம் திரையரங்கில் கண்டு ரசிக்க வேண்டிய திரைப்படம். ஒரு திரைப்படம் வெளியாகி அதனை ஓடிடியில் காண்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனால் ‘‘விரூபாக்‌ஷா’ திரையரங்கில் கண்டு மகிழ வேண்டிய படம்.

ஏனெனில் இது தொழில்நுட்ப ரீதியாக புதிய அனுபவத்தை வழங்கக்கூடியது. இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் பிரம்மாண்டமான காட்சி அமைப்புகள், ஒலி… என அனைத்தின் சிறப்பம்சங்களும் திரையரங்கில் மட்டுமே சாத்தியம். இந்த அனுபவம் ஓ டி டி மற்றும் சிறிய திரையில் கிடைக்காது.

நான் பாலகாட்டைச் சேர்ந்த பெண்.. நான் கேரளா சேலை கட்டினால் கேரளா பையன்கள் எனக்கு அதிகம் லைக் செய்வதை விட தமிழ் பசங்க தான் அதிகமாக லைக் பண்றாங்க.

இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர், இயக்குநர், நாயகன், தமிழில் வெளியிடும் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா உள்ளிட்ட அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.

Samyktha speech at virupaksha event

More Articles
Follows