தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி & நிதி அகர்வால் ஜோடியாக நடித்துள்ள படம் ‘கலகத் தலைவன்’.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்ற வருகிறது.
இதில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது…
” நான் 2019 ஆம் ஆண்டு ‘கலகத் தலைவன்’ படத்தில் நடிக்க ஒப்பு கொண்டு விட்டேன்.
ஆனால் படத்தை 3 வருடங்களுக்கு மேலாக எடுத்துக் கொண்டே இருக்கிறார். ஒவ்வொரு காட்சிகளையும் செதுக்கி கொண்டே இருக்கிறார் மகிழ்திருமேனி” என பேச தொடங்கினார் உதயநிதி.
அப்போது இடைமறித்த மகிழ் திருமேனி.. “படம் ஆரம்பித்த உடனேயே இரண்டு கொரோனா லாக்டவுன் வந்துவிட்டது. அதன் பின்னர் தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்று விட்டார் உதயநிதி. அதன் பிறகு எனக்கு இரண்டு முறை கொரோனா வந்தது.
இதுபோன்ற காரணங்களால் படம் தள்ளிக் கொண்டு போனது. மேலும் எந்த ஹீரோயினையும் பிடிக்கவில்லை என்றார் உதயநிதி. அதனால் ஹீரோயினி தேடிக் கொண்டே இருந்தேன். இதுதான் காரணங்கள்.” என்றார்.
அதன் பின்னர் உதயநிதி பேசியதாவது..
மகிழ் திருமேனி 90 நாட்கள் படத்தை எடுத்தார் என்றால்.. மாரி செல்வராஜ் 120 நாட்கள் மேலாக ‘மாமன்னன்’ படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். இருவரும் என்னை வச்சி செய்கின்றனர்.
மகிழ் இயக்கிய ‘தடம்’ படத்தில் முதலில் நான்தான் நடிக்க இருந்தேன். எனக்கு கதை பிடித்திருந்தது.
ஆனாலும் ரெட் ஜெயன்ட் செண்பகமூர்த்தி நடிக்க விடவில்லை. இங்கு வருவோர் எல்லாரும் அவரைப் பார்த்து வணக்கம் சொல்லிக் கொண்டிருப்பார்கள். காரணம் அவர்தான் அனைவருக்கும் சம்பளம் நிர்ணயம் செய்கிறார்” என அவரையும் போட்டு கலாய்த்தார் உதயநிதி.
Udhayanidhi Stalin speech at Kalaga Thalaivan Audio Launch