தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள் : இனிகோ பிரபாகர், ஷைனி, ‘ஆடுகளம்’ நரேன், வேலா ராமமூர்த்தி, கயல் வின்சென்ட், ‘ஆரண்ய காண்டம்’ வசந்த், யூகித், ஹேமா மற்றும் திருநங்கை பிரீத்திஷா மற்றும் பலர்.
சை: S.N.அருணகிரி,
ஒளிப்பதிவு: P.V.முருகேஷா
படத்தொகுப்பு: ராஜா முகமது,
பாடல்கள்: யுகபாரதி,
நடனம்: சரவண ராஜா,
சண்டைக்காட்சி: ராக் பிரபு
கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம்: S. பரீத்
பி.ஆர்.ஓ. : குமரேசன்
கதைக்களம்…
தன் மகனை நன்றாக படிக்க வைத்து இந்த ஜில்லாவிலே முதல் மாணவனாக வர வைப்பேன் என தன் தம்பிகளிடம் சவால் விடுகிறார் ஆடுகளம் நரேன்.
இது ஒருபுறமிருக்க, கவுன்சிலர் வேல ராமமூர்த்தியின் மகளை அவர் வீட்டில் டிரைவராக வேலைப் பார்க்கும் ஒருவன் காதலிக்கிறார்.
இவர்கள் இல்லாமல் வேலைக்கும் போகாமல் ஊர் சுற்றி வருகிறார் இனிகோ பிரபாகர் மற்றும் அவரது 2 நண்பர்கள் (ஒருவர் திருநங்கை).
இனிகோவுக்கும் அந்த டிரைவருக்கும் சில பிரச்சினைகள் எழ, ஆடுகளம் நரேனின் மகன் அதில் சிக்கிக் கொள்கிறார்.
இதனால் அவனது படிப்பு பிரச்சினை எழுகிறது.
எனவே இனிகோ அவனது படிப்பை தொடர வைக்க நினைக்கிறார். அதன் பின் நடந்தது என்ன? நரேனின் ஆசையை அவரது மகன் நிறைவேற்றினாரா? அந்த காதல் ஜோடி என்ன ஆனார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.
கேரக்டர்கள்…
வேலையில்லாமல் தனது நண்பர்களுடன் சேட்டை செய்யும் இளைஞனாக இனிகோ பிரபாகர் வருகிறார். கிராமத்து இளைஞனாக பளிச்சிடுகிறார்.
ஆனால் தொடர்ந்து பல படங்களில் இதே கேரக்டர்களில் வருவது சலிப்பை தட்டுகிறது. இனிகோ ரூட்டை மாத்துனா ரசிகர்களுக்கு இனிக்கும்.
நாயகியாக நல்ல நடிப்பை கொடுத்திருக்கிறார் ஷைனி. ஆனால் குடிகாரன் சொன்ன பேச்சை கேட்டு காதல் வருவது எல்லாம் ரொம்ப ஓவர்.
வேலராமமூர்த்தி மகளாக வருபவர் அழகாக இருக்கிறார். ஆனால் பாதியில் அவரை சாகடித்து ஒன்றுமில்லாமல் செய்துவிட்டார்.
ஆடுகளம் நரேன் தன் முதிர்ந்த நடிப்பை கொடுத்திருக்கிறார். பிள்ளைகளை படிக்க வைக்க ஏழை அப்பாக்கள் படும் பாட்டை அருமையாக கொடுத்துள்ளார்.
இவர்களுடன் வேல ராமமூர்த்தி, தென்னவன் துரைசாமி, சஞ்சரி விஜய் உள்ளிட்டவர்களும், நரேனின் மகனாக வரும் அந்த சிறுவன், ‘கயல்’ வின்சென்ட், திருநங்கை ப்ரீத்திகா ஆகியோரும் நல்ல தேர்வு.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
எஸ்.என்.அருணகிரியின் பின்னணி இசை ஓகே. பாடல்கள் படத்திற்கு பலவீனம்.
பி.வி.முருகேசின் ஒளிப்பதிவில் கிராமத்து காட்சிகள் ரசிக்க வைக்கிறது.
பல கோணங்களில் கதை சொன்ன இயக்குனர், எதையும் முழுமையாக சொல்லாமல் விட்டுவிட்டார். மேலும் படத்தின் நீளத்தை குறைத்து ட்விஸ்ட் வைத்து சொல்லியிருக்கலாம்.
படத்தின் ஆரம்பத்தில் கோழி பிடிக்கும் காட்சி, அதனை அடுத்து வரும் பாடல் இது எல்லாம் தேவையா? என கேட்க தோன்றுகிறது.
வீரையன்… வீராப்பு குறைவு