தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கபாலி, தெறி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை தயாரித்தவர் கலைப்புலி தாணு.
இப்படங்களை தொடர்ந்து இவர் தயாரிக்க உள்ள புதிய படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கவிருக்கிறார்.
இப்படத்திற்கான அறிவிப்பு சற்றுமுன் வெளியானது.
இப்படத்திற்கு நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்? எனப் பெயரிடப்படலாம் என தெரியவந்துள்ளது.
எனவேதான் #NEEK என்ற வார்த்தையை உபயோகித்துள்ளனர்.
கதை, திரைக்கதை, வசனம் தனுஷ் எழுதுகிறார்.
இப்படத்தை முதலில் தனுஷ் தயாரிக்கக்கூடும் என செய்திகள் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இப்படத்தில் நடிக்க திறமையானவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
எனவே உங்களது படம் மற்றும் தகவல்களை [email protected] என்ற முகவரிக்கு அனுப்பவும்.
மேலும் தொடர்புக்கு உதவி இயக்குனர் சீரஞ்சிவி (9629 33 7116)