பாகுபலி & கேஜிஎஃப் பாணியில் பிரதமரின் வாழ்க்கை படம்..; மோடியாக நடிப்பவர் இவரா?

பாகுபலி & கேஜிஎஃப் பாணியில் பிரதமரின் வாழ்க்கை படம்..; மோடியாக நடிப்பவர் இவரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Modi biopicபிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்குவது நம் திரைக் கலைஞர்களுக்கு பிடித்தமான ஒன்று தான்.

ஆனால் இது போன்ற வாழ்க்கை படங்கள் முன்பெல்லாம் அந்த குறிப்பிட்ட பிரபலங்கள் மறைந்த பின்னரே உருவாகும்.

சமீபகாலமாக சச்சின், தோனி், மோடி ஆகியோரது படங்கள் அவர்கள் உயிருடன் இருக்கும் போதே உருவானது.

தற்போது மீண்டும் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு படம் ஹிந்தியில் தயாராகிறது.

இந்த படத்தை வங்காள மொழி இயக்குனர் மிலன் பவுமிக் இயக்க ‘ஏக் அவுர் நரேன்’ என்று பெயரிப்பட்டுள்ளனர்.

இவர் வன்கொடுமை செய்யப்பட்ட நிர்பயாவின் வாழ்க்கை கதையை படமாக எடுத்தவர்.

இதில் மோடி வேடத்தில் மகாபாரத தொடரில் யுதிஷ்டிரர் வேடத்தில் நடித்த கஜேந்திர சவுஹான் என்பவர் நடிக்கிறாராம்.

இந்த ‘ஏக் அவுர் நரேன்’ படத்தை இரண்டு பாகங்களாக பாகுபலி & கேஜிஎஃப் பாணியில் எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Another biopic on PM Narendra Modi is titled Ek Aur Naren

பழைய புதிய திறமையாளர்களுக்கான புதிய களம் ‘Vels Signature’

பழைய புதிய திறமையாளர்களுக்கான புதிய களம் ‘Vels Signature’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தரமான கல்வியை ஒரு பக்கம் தரும் வேல்ஸ் யுனிவர்சிட்டி மற்றொரு பக்கம் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தரமான படங்களையும் கொடுத்து வருகிறது.

கடந்த சில வருடங்களில் புதிய இளம் இயக்குனர்களை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தி உள்ளார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.

இந்த நிலையில் சினிமாவில் சாதிக்க துடிக்கும் திறமையாளர்களை இந்த உலகுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக “Vels Signature” எனும் புதிய தளமொன்றை தன் நிறுவனம் மூலம் அமைத்துள்ளார் ஐசரி கணேஷ்.

இந்த நிறுவனம் Conzept Note நிறுவனத்துடன் இணைந்து செயல்படவுள்ளதாம்.

இசை ஆல்பங்கள் குறும்படங்கள் போன்றவற்றை உருவாக்கும் திறமையாளர்களை இந்த தளம் ஊக்குவித்து அவர்களுக்கான அடையாளத்தை இந்த நிறுவனம் உருவாக்கி தரவுள்ளது.

Vels Film’s new platform #VELSSIGNATURE in association with Conzept Note

இரு மொழிகளில் உருவான அஷோக் & ஸ்வேதாவின் ‘ஆறா எனும் ஆரா’

இரு மொழிகளில் உருவான அஷோக் & ஸ்வேதாவின் ‘ஆறா எனும் ஆரா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆக்க்ஷன் கலந்த சஸ்பென்ஸ் திரில்லராக பிரமாண்டமாக உருவாகி வரும் ‘ஆறா எனும் ஆரா’ படத்தை சாபு அவர்கள் சாபு பிக் டிவி பானரில் தயாரித்துள்ளார்.

இதன் இணை தயாரிப்பாளர் ஜோஸ். ஸ்டீபன். ஜெ எழுதி இயக்கியுள்ளார்.

அஷோக்குமார் கதாநாயகனாகவும், ஸ்வேதா ஜோயல் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

இவர்களுடன் நிழல்கள் ரவி, மனோபாலா, ஆனந்தராஜ், பில்லி, ஷைனி, ஷகிலா மற்றும் பலர் நடிக்கின்றனர்.

சுலக் ஷா டாடி இசையில், ரக்சகன் பாடல் வரிகள் எழுதியுள்ளார்.

ரவிசாமி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய. கலை இயக்கம் சியோ ஜோஸ்,

எடிட்டிங் விபின்,. புரொடக்ஷன் கன்ட்ரோலர் செபாஸ்டியன். ஜெ . ஜாக்கி ஜான்ஸன் சண்டை காட்சிகளை அமைக்க, நடனம் செல்வி மாஸ்டர் அமைத்துள்ளார்.

தொடர்ந்து சென்னை மற்றும் பல இடங்களில் படப்பிடிப்பு நடத்தி, வெகு விரைவில் இரு மொழிகளிலும் திரைக்கு வரும் என தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.

Ashok and Shwetha joins for a new film

லிங்குசாமி & ராம் பொதினேனி கூட்டணியில் உருவாகும் #RAPO19 படத்தில் கீர்த்தி ஷெட்டி

லிங்குசாமி & ராம் பொதினேனி கூட்டணியில் உருவாகும் #RAPO19 படத்தில் கீர்த்தி ஷெட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு திரையுலகில் தொடர் வெற்றிகளால் அசத்தி வரும் இளம் நடிகரான ராம் பொதினேனி, தமிழ் சினிமாவின் கமர்ஷியல் கிங், சண்டக்கோழி (Pandemakodi), பையா ( Awara ), வேட்டை ( Thadaka ) படப்புகழ் இயக்குநர் லிங்குசாமியுடன் புதிய படத்தில் இணைந்திருக்கிறார்.

ஒரு சில வாரங்களுக்கு முன் படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில், இன்று படக்குழு படத்தின் நாயகி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பிரபல இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி இப்படத்தில் நடிகர் ராம் பொதினேனி ஜோடியாக நடிக்கிறார்.

#RAPO19 திரைப்படம் முழுக்க முழுக்க, ஸ்டைலீஷ் ஆக்சன் கமர்ஷியல் படமாக உருவாகவுள்ளது.

கமர்ஷியல் படங்களின் கிங் இயக்குநர் லிங்குசாமி தன் தனித்த முத்திரையில், ஸ்டைலீஷ் மாஸ் மசாலா படமாக இப்படத்தை உருவாக்குகிறார்.

மிகப்பெரும் பட்ஜெட்டில் பெரும் ஆளுமைமிக்க தொழில்நுட்ப கலைஞர்களுடன் மாஸ் ஆக்சன் படமாக #RAPO19 படம் உருவாகிறது.

தயாரிப்பாளர் சித்தூரி ஶ்ரீனிவாசா Srinivasaa Silver Screen நிறுவனத்தின் சார்பில் 6 வது படைப்பாக இப்படத்தை தயாரிக்கிறார்.

படகுழுவினர் விபரம்

நாயகன் – ராம் பொதினேனி

நாயகி – கீர்த்தி ஷெட்டி

தயாரிப்பு நிறுவனம் – Srinivasaa Silver Screen

வழங்குபவர் – பவன் குமார்

தயாரிப்பாளர் – சித்தூரி ஶ்ரீனிவாசா

இயக்குநர் – N.லிங்குசாமி

Actress Krithi Shetty is on board for Lingu Samy’s next

‘யாரையும் இவ்ளோ அழகா’ பாடலுக்காக கார்த்தி & ராஷ்மிகா உடன் இணைந்த சிம்பு

‘யாரையும் இவ்ளோ அழகா’ பாடலுக்காக கார்த்தி & ராஷ்மிகா உடன் இணைந்த சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரெமோ பட இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சுல்தான்’.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நாயகி ராஷ்மிகா மந்தனா என்பவர் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

ட்ரீம் வாரியர் பிட்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்துக்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய, விவேக் – மெர்வின் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளனர்.

இந்த நிலையில், சுல்தான் படத்தில் இடம் பெற்றுள்ள ‘யாரையும் இவ்ளோ அழகா’ என்ற பாடலை நடிகர் சிம்பு பாடி இருக்கிறார்.

விவேகா இப்பாடலை எழுதியிருக்கிளார்.

இந்த பாடல் இன்று மார்ச் 5ல் வெளியிடவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Sultan 2nd single sung by STR

silthan (2)

ஒரே ஒரு படம் நடித்து 25 ஆண்டு கால சினிமா வாழ்க்கை கிடைத்தது… – அபிஷேக்

ஒரே ஒரு படம் நடித்து 25 ஆண்டு கால சினிமா வாழ்க்கை கிடைத்தது… – அபிஷேக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரே ஒரு படம் நடித்து 25 ஆண்டுகால சினிமா வாழ்க்கை கிடைத்தது: நடிகர் அபிஷேக் பேச்சு!

‘மோகமுள்’ என்ற ஒரே ஒரு படம் நடித்தேன்.அதன்மூலம் இருபத்தைந்து ஆண்டுகால சினிமா வாழ்க்கை எனக்குக் கிடைத்தது என்று நடிகர் அபிஷேக கூறினார். இதுபற்றிய விவரம் வருமாறு:

‘மோகமுள்’ திரைப்படமாக உருவாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டன .அந்த வகையில் ‘மோகமுள்’ படத்திற்கு இது வெள்ளிவிழா ஆண்டு. அப் படத்திற்காக எழுதிய திரைக்கதையை நூலாக அப்படத்தை இயக்கிய ஞான ராஜசேகரன் ஐ.ஏ.எஸ் உருவாக்கியிருக்கிறார்.இந்த நூலைக் காவ்யா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.’மோகமுள்’ திரைக்கதை நூலின் வெளியீடு ,44வது புத்தகக்காட்சியில் காவ்யா பதிப்பக அரங்கில் நடைபெற்றது.
இந்த விழாவில் திரைக்கதை நூலை அந்தப் படத்தின் நாயகனாக நடித்த அபிஷேக் வெளியிட்டார்.ஜெர்மனியிலிருந்து வந்திருந்த பாரம்பரிய மரபுகள் குறித்த ஆய்வாளர் டாக்டர் சுபாஷினி பெற்றுக்கொண்டார்.

நூலை வெளியிட்டு நடிகர் அபிஷேக் பேசும்போது,

” மோகமுள்’ தான் எனக்கு முதல் படம் .மும்பையில் இருந்த என்னைத் தேடிக் கண்டுபிடித்து இயக்குநர் இதில் நடிக்க வைத்தார்.எனக்கு தமிழே தெரியாது. ஆனாலும் தமிழ் பேசி என்னை நடிக்க வைத்தார்.

என்னைப் பார்ப்பவர்கள் எல்லாம் “எந்த இன்ஸ்டிடியூட்டில் படித்தீர்கள்?” என்பார்கள்.நான் “மோகமுள் இன்ஸ்டிடியூட்டில் படித்தேன்” என்பேன்.
‘மோகமுள்’ படத்தில் நடித்த போது மூன்றாண்டு காலம் கற்றுக்கொண்ட அனுபவத்தில்தான் இன்றுவரை என் பயணம் சென்று கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு கற்றுக்கொள்ளும் அனுபவமாக இருந்தது.

மும்பையில் பிறந்து சென்னையில் செட்டில் ஆகி இருக்கும் நான், ‘இது எனக்கு எழுதி வைக்கப்பட்ட விதி ‘என்று நினைக்கிறேன் .அதுவும் இயக்குநர் எழுதி வைத்த விதி என்று நினைக்கிறேன்.
‘மோகமுள்’ என்கிற ஒரே ஒரு படத்தில் நடித்தேன்.அதன்மூலம் எனக்கு 25 ஆண்டுகாலம் சினிமா டிவி என்று நடிக்கிற வாழ்க்கை கிடைத்தது.

தமிழில் பேசத் தெரியாத எனக்கு இந்த படத்திற்குப் பின் தமிழகத்தில் ஓர் இடம் கிடைத்துவிட்டது .தமிழில் பேசவும் படிக்கவும் எழுதவும் கூட கற்றுக்கொண்டு விட்டேன்.அந்த வகையில் இயக்குநருக்கு நன்றி.
இந்தப்படத்தின் நினைவுகள் நூறாண்டு தாண்டியும் இருக்கும் என்று நம்புகிறேன்.
” என்றார்.

நிகழ்வில் படத்தின் இயக்குநரும் நூலாசிரியருமான ஞான ராஜசேகரன் பேசும்போது,

“நான் இயக்கிய முதல் படம் ‘மோக முள்’. அந்தப் படத்தின் மூலம்தான் நான் இயக்குநர் ஆனேன்.நான் வேறொரு துறையில் இருந்தேன். ‘மோகமுள் ‘ இல்லா விட்டால் நான் இயக்குநராக ஆகியிருப்பேனா என்று சந்தேகம்தான்.

என்னை இயக்குநராக்கி
இன்றுவரை எனக்கு அடையாளமாக இருப்பதும் ‘மோகமுள்’ தான் என்று சொல்வேன்.மூன்றாண்டு ஆண்டுகாலம் சிரமப்பட்டு இந்தப் படத்தை எடுத்தோம்.இந்த படத்திற்குக் கிடைத்த விருதுகள், பாராட்டுகள் போன்ற அங்கீகாரம் தான் எனக்கு ஒரு பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியது.இந்தப் படத்தில் அறிமுகமான அபிஷேக் பெரிதாக வளர்ந்திருக்கிறார் . குறிப்பாகத் தொலைக்காட்சியில் சிறந்து விளங்குகிறார்.
படத்தில் நான் அறிமுகப்படுத்திய அர்ச்சனா ஜோக் லேக்கரும் வளர்ந்து புகழ் பெற்றார். அறிமுகப்படுத்தியவன் என்ற வகையில் இது எனக்கு மகிழ்ச்சி.’மோகமுள்’, ‘பாரதி’, ‘பெரியார்’ என என் படங்களுக்குத் தன் ஒளிப்பதிவின் மூலம் பெரிய பலமாக இருந்த தங்கர்பச்சான் இங்கே வந்திருப்பது மகிழ்ச்சி.படத்தைப் பார்த்துவிட்டு எழுத்தாளர் வாஸந்தி கூறினார் “இது தி. ஜானகிராமனுக்கான சிறந்த அஞ்சலி ” என்று .அதை இப்போது உணர்கிறேன்.

இந்தப் படத்தைத் திரையரங்கில் பார்த்தவர்களை விட உலகம் முழுவதும் தொலைக்காட்சிகளில் ஏராளமான பேர் பார்த்திருக்கிறார்கள்.

படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. தி ஜானகிராமன் அவர்களின் நூற்றாண்டில் படத்துக்கான வெள்ளி விழா ஆண்டு வருவது மகிழ்ச்சி. அதனால் இந்நிகழ்வு கவனம் பெறுகிறது.எனக்கு ஒரு 50 பேராவது தொலைபேசி விசாரித்து இருப்பார்கள் “படத்திற்கான வெள்ளிவிழா கொண்டாட வில்லையா?எப்போது கொண்டாடப் போகிறீர்கள்?” என்று. அந்த அளவுக்கு ‘மோகமுள்’ இன்றும் ஒரு பேசுபொருளாக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது”என்றார்.

இயக்குநர் தங்கர்பச்சான் பேசும்போது ,

” இயக்குநரின் படங்களில் பணியாற்றியது ஒரு வகை மகிழ்ச்சி என்றால் இது மாதிரியான தருணங்களில் ஒருவரை ஒருவர் சந்திப்பது பெரிதும் மகிழ்ச்சியான அனுபவம் .நோய்த்தொற்றுக் காலத்திற்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி” என்றார்.

ஜெர்மனியிலிருந்து வந்திருந்த ஆய்வாளர் டாக்டர் சுபாஷினி பேசும்போது,

” இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் பெருமையடைகிறேன். இந்த வாய்ப்பு அமைந்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். மோகமுள் நான் பார்த்து ரசித்த படம் .அந்தப் படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆனாலும் இப்போது பார்த்தாலும் இந்தக் காலத்திற்கு ஏற்றது போல் இந்த படத்தின் போக்கு இருக்கும். இன்றைய தலைமுறைக்கும் பொருத்தமாக இருக்கும்படி இந்தப் படம் இருக்கும்.

தலைமுறை தாண்டி ரசிக்கும்படி இந்த படத்தின் கூறுகள் இருக்கும். அந்த நாவலை மிகச் சிறப்பாக எடுத்து இருப்பார் இயக்குநர். குறிப்பாக இறுதிக் கட்ட காட்சிகள் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்று நினைக்க முடியும்.ஏனென்றால் அப்படி புரட்சிகரமாகக் காட்சிகள் நாவலில் அமைக்கப்பட்டிருக்கும். ஆனாலும் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி ரசிக்கும்படி படத்தில் அமைத்திருப்பார். அதேபோல் அவர் இயக்கிய பாரதி, பெரியார் படங்களும் சிறப்பாக இருந்தன. நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன் “என்றார்.

இதே விழாவின் மற்றொரு பகுதியாக ‘பாரதி’ படத்தின் திரைக்கதை நூலும் வெளியிடப்பட்டது. ‘பாரதி’ திரைக்கதையை இயக்குநர் ஒளிப்பதிவாளர் தங்கர்பச்சான் வெளியிட்டார்.திருமதி சகுந்தலா ராஜசேகரன் பெற்றுக்கொண்டார்.
அந்த நிகழ்வில் விருந்தினராகப் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் கலந்து கொண்டார். நிறைவாக காவ்யா சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.

Actor Abhisek speech at recent event in chennai

More Articles
Follows