தமிழ் சினிமாவில் ‘தங்கலான்’ ஒரு மைல் கல்.; விக்ரம் விருது பெறுவார் – தனஞ்செயன்

தமிழ் சினிமாவில் ‘தங்கலான்’ ஒரு மைல் கல்.; விக்ரம் விருது பெறுவார் – தனஞ்செயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சார்பட்டா பரம்பரை மற்றும் நட்சத்திரம் நகர்கிறது ஆகிய படங்களை தொடர்ந்து ‘தங்கலான்’ படத்தை இயக்கி வருகிறார் பா ரஞ்சித்.

ஸ்டூடியோ கீரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். சியான் விக்ரம் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த படம் ‘கேஜிஎஃப்’ பாணியில் கோலார் தங்கவயல் பற்றிய கதைக்களம் ஆகும்.

சமீபத்தில் இந்த பட அப்டேட் குறித்து ரஞ்சித் தெரிவித்து இருந்தார். இன்னும் பத்து நாட்களில் ‘தங்கலான்’ பட டீசர் வெளியாகும் என தெரிவித்தார்.

இந்த நிலையில் விக்ரம் நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தங்கலான்’ படத்தின் டீசரை பார்த்த தனஞ்ஜெயன் பாராட்டு.

தமிழ் சினிமாவில் ‘தங்கலான்’ படம் ஒரு மைல் கல்லாக இருக்கும். ரஞ்சித் படைப்புகளில் சிறந்த படைப்பாகவும் இருக்கும். விக்ரம் நிறைய விருதுகளை பெறுவார் என தெரிவித்துள்ளார் தனஞ்ஜெயன்.

Thangalaan will be milestone in kollywood says Dhananjayan

‘தி கேர்ள் ஃப்ரெண்ட்’ படத்தில் கனவு நாயகி ராஷ்மிகா மந்தனா

‘தி கேர்ள் ஃப்ரெண்ட்’ படத்தில் கனவு நாயகி ராஷ்மிகா மந்தனா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கீதா ஆர்ட்ஸ் துவங்கிய காலத்திலிருந்தே, தனித்துவமான திரைப்படைப்புகளை வழங்கி, தனக்கென தனியொரு பெயரைப்பெற்றிருக்கும் புகழ்மிகு நிறுவனம் ஆகும். வித்தியாசமான கதைக்களத்தில் மீண்டும் மீண்டும் பல வெற்றிப்படைப்புகளை தந்து வரும் கீதா ஆர்ட்ஸ் தற்போது, புதிய பிளாக்பஸ்டர் தயாரிப்பு நிறுவனமான மாஸ் மூவி மேக்கர்ஸ் மற்றும் தீரஜ் மொகிலினேனி என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றுடன் இணைந்து ஒரு அற்புதமான ஒரு புதிய திரைப்படத்தை தயாரிக்கிறது.

தேசிய அளவிலான இளைஞர்களின் கனவு நாயகி ராஷ்மிகா மந்தனா முக்கியப் பாத்திரத்தில் நடிக்க, இயக்குநர் ராகுல் ரவீந்திரன் இந்த திரைப்படத்தை இயக்குகிறார்.

அனைத்துப் படங்களிலும் அழுத்தமான நடிப்பை வழங்கி ரசிகர்களை ஈர்த்து வரும் ராஷ்மிகா , தற்போது பெண் கதாப்பாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த புதிய படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்த தயாராகி வருகிறார்.

ராஷ்மிகா மந்தனா

இப்படக்குழு படம் பற்றிய ஒரு அழகான ஸ்னீக் பீக்கை வெளியிட்டுள்ளது, இப்படம் அனைத்து வயதினரும் கொண்டாடும் ஒரு அழகான சினிமா அனுபவமாக இருக்கும் என்று ஸ்னீக் பீக் உறுதியளிக்கிறது.

இப்படத்திற்கு தி கேர்ள்ஃபிரண்ட் The Girlfriend என தலைப்பிடப்பட்டுள்ளது, தனது காதலியிடம் எதிர்பார்க்கும் உரையாடல்களை அழுத்தமாக கொண்டிருக்கும் இந்த அழுத்தமான படைப்பில் தனது ரசிகர்களை அசத்தவுள்ளார் ராஷ்மிகா. இதில் அவரது தோற்றம் அழகாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவை கையாள்கிறார், இசைப் புகழ் ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார், இவர்கள் இருவரும் நிச்சயமாக படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாக இருப்பார்கள். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் வழங்க, வித்யா கோப்பினிடி மற்றும் தீரஜ் மொகிலினேனி இப்படத்தை தயாரிக்கின்றனர்.

ராஷ்மிகா மந்தனா

நடிகர்கள் & குழுவினர் விவரங்கள்
நடிப்பு – ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர். எழுத்து – இயக்கம் – ராகுல் ரவீந்திரன்
வழங்குபவர் – அல்லு அரவிந்த்
தயாரிப்பாளர்கள் – வித்யா கோப்பினீடி, தீரஜ் மொகிலினேனி
இசை – ஹேஷாம் அப்துல் வஹாப்
ஒளிப்பதிவு – கிருஷ்ணன் வசந்த்
தயாரிப்பு வடிவமைப்பு – S. ராமகிருஷ்ணா & மோனிகா நிகோத்ரே
ஆடைகள் – ஷ்ரவ்யா வர்மா
மக்கள் தொடர்பு – யுவராஜ்
மார்க்கெட்டிங் – ஃபர்ஸ்ட் ஷோ

National Crush Rashmika Mandanna in Rahul Ravindran directorial

நானி படத்தில் முக்கிய கேரக்டரில் இணைந்த எஸ் ஜே சூர்யா

நானி படத்தில் முக்கிய கேரக்டரில் இணைந்த எஸ் ஜே சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேச்சுரல் ஸ்டார் நானியும், ‘அந்தே சுந்தரானிகி’ போன்ற கல்ட் என்டர்டெய்னரை வழங்கிய இயக்குநர் விவேக் ஆத்ரேயா ‘நானி 31’ படத்திற்காக மீண்டும் இணைந்திருக்கிறார்கள்.

இந்த படத்தை ‘ஆர் ஆர் ஆர்’ போன்ற ஆஸ்கார் விருது பெற்ற படத்தை தயாரித்த டிவி வி என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் டி வி வி தனய்யா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோர் தயாரிக்கிறார்கள்.

‘நானி 31’ தொடர்பாக ஒரு சிறிய அறிவிப்பு வீடியோவை வெளியிடுவதன் மூலம் படக் குழு தங்களின் திட்டத்தையும் விவரித்தது. இதனால் இப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

தயாரிப்பாளர்கள் தங்கள் இரண்டாவது பயணத்தில் இந்த முறை வித்தியாசமான படைப்பை தருவதற்கு முயற்சிக்கப் போவதாகவும் சுட்டிக்காட்டி உள்ளனர்.

தற்போது ‘நானி 31’ படத்தின் நடிகர்கள் பற்றிய தகவல்களை வெளியிட தொடங்கியுள்ளனர். இப்படத்தின் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் தற்போது நடிகர் எஸ். ஜே. சூர்யா இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். எஸ். ஜே. சூர்யா அசுரத்தனமான கதாபாத்திரங்களில் நடிப்பதற்காகவே பெயர் பெற்றவர். அதாவது விவேக் ஆத்ரேயா போன்ற இயக்குநரின் இயக்கத்தில் இவர் நடிக்கவிருப்பதால் வித்தியாசமான நடிகராக இவர் திரையில் தோன்றுவார் என்ற எதிர்பபார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

‘நானி 31’ இம்மாதம் 23ஆம் தேதியும், பூஜை 24 ஆம் தேதியும் நடைபெறவிருக்கிறது. மேலும் படத்தைப் பற்றிய உற்சாகமான அப்டேட்டுகளும் தொடர்ந்து வரவிருக்கிறது.

நானி 31

Versatile Actor SJ Suryah In A Crucial Role For Natural Star Nani at Nani 31

மதன்கார்க்கி வரிகளில் குழந்தைகள் மீதான போரின் தாக்கத்தை விளக்கும் பாடல்

மதன்கார்க்கி வரிகளில் குழந்தைகள் மீதான போரின் தாக்கத்தை விளக்கும் பாடல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனி இசைக்கலைஞர்களை ஆதரிப்பதற்காக, பா மியூசிக் தொடர்ந்து இயங்கி வருகிறது.

அந்த வகையில் இசையமைப்பாளர் ரமேஷ் தமிழ்மணி இசையில், பாடகி உத்தரா உன்னிகிருஷ்ணனின் குரலில் ‘அவனிடம் சொல்வேன்’ என்ற பாடல் இத்தளத்தில் வெளியாகியுள்ளது.

அவனிடம் சொல்வேன்

உலகெங்கும் போரின் தாக்கங்கள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், இந்த அவலச் சூழலால் குழந்தைகளின் வாழ்க்கை எத்தனை பாதிப்புக்குள்ளாகிறது என்பதை ஒரு சிறுமியின் கண்ணோட்டத்தில் இருந்து வெளிப்படுத்தும் வகையில் பாடலாசிரியர் மதன் கார்க்கி வரிகளை வடித்துள்ளார்.

இப்பாடலைப் பா மியூசிக் யூடியூப் தளத்தில் கேட்கலாம்.

பாடல் இணைப்பு 🔗 https://youtu.be/-bvD-smNiKY

Avanidam Solven A Song Illuminating the Impact of War

நடிகர் மம்மூட்டியின் 10000 தபால் தலைகளை வெளியிட்ட ஆஸ்திரேலிய நாடாளுமன்றம்

நடிகர் மம்மூட்டியின் 10000 தபால் தலைகளை வெளியிட்ட ஆஸ்திரேலிய நாடாளுமன்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் ‘இந்தியாவின் நாடாளுமன்ற நண்பர்கள்’ குழு என்ற அமைப்பு உள்ளது.

இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான உறவை வளர்ப்பதற்காக இந்த அமைப்பு அங்கு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பு சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. அப்போது நடிகர் மம்மூட்டியின் உருவம் கொண்ட 10 ஆயிரம் தபால் தலைகள் வெளியிட்டது.

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியாவுக்கான இந்திய தூதர் மன்பிரீத் வோராவிடம் முதல் தபால் தலை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அறிந்த மலையாள நடிகர் மம்முட்டியின் ரசிகர்கள் இந்த செய்தியை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Australian parliament honours Mammootty releases personalized postal stamps

ரஜினியின் கழுகு கதையும் ரஜினியின் ‘கழுகு’ படமும்..; லியோ-வுடன் இப்படி கனெக்ட்டாச்சே.!?

ரஜினியின் கழுகு கதையும் ரஜினியின் ‘கழுகு’ படமும்..; லியோ-வுடன் இப்படி கனெக்ட்டாச்சே.!?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஜெயிலர்’ பட இசை வெளியீட்டு விழாவில் கழுகு – காக்கா கதை குறித்து பேசி இருந்தார் ரஜினிகாந்த்.

என்னதான் காக்கா கழுகை தொந்தரவு செய்தாலும் எதையும் கண்டுகொள்ளாத கழுகு மேலே உயர பறந்து கொண்டே இருக்கும் என்றார். இதனால் ரஜினிகாந்த் தன்னை கழுகாகவும் அவர் காக்கா என்று குறிப்பிட்டது நடிகர் விஜய் சொன்னதாகவும் சமூக வலைத்தளங்களில் சர்ச்சை உருவானது.

அதே சமயம் காக்கா என்பது கூடி வாழும்.. கழுகு எப்போதும் தனித்து தான் நிற்கும்.. என்றும் விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்தனர்.

அதன் பின்னர் ஜெயிலர் படம் வெளியாகி உலக அளவில் 700 கோடிக்கு மேல் வசூலித்தது.

ரஜினியின் இந்த பேச்சுக்கு ‘லியோ’ பட இசை வெளியீட்டு விழாவில் விஜய் பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ‘லியோ’ படத்தின் இசை விழா நடைபெறவில்லை.

இந்த நிலையில் நேற்று விஜய் நடித்த ‘லியோ’ படம் உலகமெங்கும் வெளியானது. இந்த படத்தில் கழுகு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. விஜய்யை லியோ-தாஸ் என அது அடையாளப்படுத்தும்.

கழுகை காட்டும்போது போது தியேட்டரில் கரகோஷம் எழுந்தது. அது ரஜினியை குறிப்பிட்டு ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘கழுகு’ படத்தையும் லியோ படத்துடன் ஒப்பிட்டு வருகின்றனர்.

ரஜினி நடித்த ‘கழுகு’ படத்தில் வில்லன் நரபலி கொடுப்பார்.்அதை ரஜனி தடுப்பதும் கதைக்களமாக இருந்தது.

அதே பழைய கதையை லியோ-வில் வில்லன் கேரக்டராக வைத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இதனை ரஜினிகாந்த் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

மேலும் ‘லியோ’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ரஜினியின் ‘பொல்லாதவன்’ படத்தில் இடம்பெற்ற ‘நான் பொல்லாதவன்.. பொய் சொல்லாதவன்.. நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்..” என்ற பாடல் ஒலிக்கும். இந்த காட்சியையும் ரசிகர்கள் குறிப்பிட்டு விஜய் ரசிகர்களை வச்சி செய்து வருகின்றனர்.

Rajini fans trolls Vijays Leo with Kazhugu movie story

More Articles
Follows