தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழகத்தில் அடுத்த ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி அரசியல் களம் பரபரப்பாகி இருக்கிறது.
எனவே தன் கட்சி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேச இந்திய பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ளார்.
பிரதமர் மோடி பேசியதாவது…
“நம் கூட்டணி நாட்டின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டது. ஆனால் காங்கிரஸ், தி.மு.கவோ வாரிசு அரசியலை நோக்கமாக கொண்டு செயல்படுகிறது.
கடந்த 1989-ம் ஆண்டு மார்ச் மாதம் 25-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் தி.மு.க தலைவர்கள், ஜெயலலிதாவிடம் நடந்து கொண்ட விதமே போதும்.
அவர்களுடைய ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீண்டும் அதிகரிக்கும்.
இனியும் அவர்கள் ஆட்சிக்கு வந்தால், நம்மால் நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு அனைத்து பெண்களையும் அவதூறாக பேசுவார்கள்.
நாங்கள், பெண்களை அவதூறாக பேசுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.
திமுக கட்சியின் சார்பாக இருக்கும் திண்டுக்கல் லியோனியும், கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெண்கள் குறித்து அவதூறான கருத்துகளைப் பேசியுள்ளார். தி.மு.க தலைமை அதனைக் கண்டிக்கவில்லை.”
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி,
ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்,
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சபாநாயகர் தனபாலன், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், வானதி சீனிவாசன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
DMK will insult many more women in Tamil Nadu says PM Modi