BREAKING சிபிஎஸ்இ 12 வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து – பிரதமர் மோடி

BREAKING சிபிஎஸ்இ 12 வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து – பிரதமர் மோடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

modiசிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அவரின் பேசியதாவது..

“மாணவர்களின் உடல் நலம் மற்றும் பாதுகாப்பு மிக முக்கியமானது. இதில் எந்த சமரசமும் இருக்காது.

மன அழுத்த சூழலில் மாணவர்கள் இருக்கும் போது அவர்களை தேர்வுக்கு வருமாறு கட்டாயப்படுத்த கூடாது.

நாடு முழுவதும் கொரோனா 2வது அலை காரணமாக சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து.

மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே இருக்கும் கவலை முடிவுக்கு வரப்பட வேண்டும்.

என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

CLASS 12 EXAMINATION UNDER CBSE IS CANCELLED

‘ஜகமே தந்திரம்’ பட ட்ரைலரை வெளியிட்டு தனது ஏமாற்றத்தை தெரிவித்த தனுஷ்

‘ஜகமே தந்திரம்’ பட ட்ரைலரை வெளியிட்டு தனது ஏமாற்றத்தை தெரிவித்த தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush (2)கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, ஜோ ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘ஜகமே தந்திரம்’.

இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தை திரையரங்கில் ரசிகர்கள் எதிர்ப்பார்த்தனர்.

இயக்குனர் கார்த்தி்க்கும் நடிகர் தனுஷூம் தியேட்டர் வெளியீட்டையே எதிர்பார்ப்பதாக ட்விட்டரில் தெரிவித்திருந்தனர்.

ஆனால் கொரோனா ஊரடங்கால் இத்திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கு ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவியது.

ஆனால் தயாரிப்பாளர் தன் முடிவில் உறுதியாக இருந்தார்.

அதன்படி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூன் 18-ம் தேதி ரிலீசாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலரை இன்று ஜூன் 1-ம் தேதி காலை இணையங்களில் வெளியிட்டனர்.

இந்த டிரைலரை வெளியிட்ட தனுஷ் தன் ட்விட்டரில்..

“சிறப்பான திரை அனுபவமாக இருக்க வேண்டியது நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. இருந்தாலும் ஜகமே தந்திரத்தையும், சுருளியையும் ரசிப்பீர்கள் என நம்புகிறேன்’ என் ட்வீட் செய்துள்ளார்.

இவ்வாறாக ஓடிடி தள ரிலீசில் தனக்கு விருப்பமில்லை. ஜகமே தந்திரம் படம் தியேட்டர்களில் கொண்டாடப்பட வேண்டிய படம் என்பதை மறைமுகமாக தந்திரமாக தெரிவித்துள்ளார் தனுஷ்.

Dhanush about his upcoming film release in OTT

Biggest sensation on reality Television award.. விருதை திருப்பி கொடுக்கும் ‘பிக்பாஸ்’ பாலாஜி

Biggest sensation on reality Television award.. விருதை திருப்பி கொடுக்கும் ‘பிக்பாஸ்’ பாலாஜி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Balaji Murugadossமாடலிங் துறையில் பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ்.

இவர் பிக்பாஸ் சீசன் 4-ல் கலந்து கொண்டு தமிழக மக்களிடையே பிரபலமானார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி பெண் ரசிகைகளை அதிகம் பெற்று தந்தது. ஷிவானி நாராயணனுடன் பாலாஜி செய்த ரொமான்ஸ் பெரிதாக பேசப்பட்டது.

இந்த 4-வது சீசனில் ஆரி, ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ், ரம்யா பாண்டியன், ஷிவானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் நடிகர் ஆரி வெற்றி பெற்றார். பாலாஜி முருகதாஸ் இரண்டாமிடம் பெற்றார்.

இதனையடுத்து பிஹைண்ட் வுட்ஸ் கோல்ட் மெடல் என்ற விருது நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

அதில் பாலாஜி முருகதாஸுக்கு விருது கொடுக்கப்பட்டது. அவரது பேச்சு ஒளிபரப்பாகவில்லை.

இந்த நிலையில்..

நான் விருது வாங்கியதையோ அல்லது நான் பேசியதையோ ஒளிபரப்பாத உங்களின் விருது எனக்கு எதற்கு?

“Biggest sensation on reality Television award”-ஐ திருப்பி தருவதாக பதிலடி கொடுத்துள்ளார் பாலாஜி முருகதாஸ்.

விருது நிகழ்ச்சியின் போது, மேடையில் இருந்த பிஹைண்ட்வுட்ஸ் சேனல் ரிவியூவரும் திரைப்பட தயாரிப்பாளருமான ரவீந்தர் சந்திரசேகரை பாலாஜி விமர்சித்து பேசியதே காரணம் என சொல்லப்படுகிறது.

Bigg Boss Balaji returns his Behind Woods award

E2svzcEVEAY-pGq

சாந்தினி பாலியல் புகார்.: முன்னாள் அமைச்சரை தேடும் போலீசார்.; நடிகை மீது புகார் கொடுத்த மணிகண்டன் மனைவி

சாந்தினி பாலியல் புகார்.: முன்னாள் அமைச்சரை தேடும் போலீசார்.; நடிகை மீது புகார் கொடுத்த மணிகண்டன் மனைவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

E2ddTPLUYAETiUDமுன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் புகார் தெரிவித்து இருந்தார் நாடோடிகள் பட நடிகை சாந்தினி.

தனக்கு மூன்று முறை அமைச்சர் கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும், தனது அரை நிர்வாண புகைப்படங்களை வைத்துக் கொண்டு மிரட்டல் விடுப்பதாக பேட்டியளி்தார்.

எனவே அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது, கட்டாயக் கருக்கலைப்பு செய்தல், பாலியல் பலாத்காரம், பாலியல் வன்முறை, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் பாலியல் பலாத்கார புகார் கொடுக்கப்பட்டிருப்பதால் நடிகை சாந்தினிக்கு மருத்துவப் பரிசோதனை செய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

மணிகண்டனுக்கு சொந்தமான இடங்களில், போலீசார் அவரைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நடிகை சாந்தினியை அறிமுகம் செய்து வைத்த பரணி என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

இதனிடையில் சாந்தினிக்கு கருக்கலைப்பு செய்த மருத்தவர் அருணுடன் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனவே சாந்தினிக்கு கட்டாய கருக்கலைப்பு செய்த மருத்துவர் அருணுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மனைவி வசந்தி புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில்.. “தன் கணவர் மீது பொய்யான தகவலை பரப்பி, தங்கள் குடும்பத்திற்கு அவமரியாதையையும் , மன உளைச்சல் ஏற்படுத்தியுள்ளார் நடிகை சாந்தினி.

நடிகை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.

இந்த புகார் தற்போது்அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாம்.

EX minister Manikandan wife against Actress Chandini

தன் தந்தையும் நடிகருமான கிருஷ்ணா பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடிய மகேஷ்பாபு..; நம்ம ஹீரோஸ் செய்வாங்களா.?

தன் தந்தையும் நடிகருமான கிருஷ்ணா பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடிய மகேஷ்பாபு..; நம்ம ஹீரோஸ் செய்வாங்களா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு நடிகரும்,

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் மகேஷ்பாபு.

இவரின் தந்தையுமான நடிகருமான கிருஷ்ணாவுக்கு மே 31 நேற்று பிறந்த நாள்.

இந்த நிலையில் தனது தந்தையின் 79வது பிறந்தநாளை முன்னிட்டு, ஆந்திரா குண்டூர் மாவட்ட புர்ரிபாலம் என்ற கிராமத்து மக்களுக்கு தனது சொந்த செலவில் தடுப்பூசியை வழங்கி இருக்கிறார் மகேஷ் பாபு.

கிராம மக்கள் பலரும் ஆர்வமுடன் கலந்துக் கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த விஷயத்தை நெகிழ்ச்சியுடன் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் மகேஷ் பாபு.

இதுபோல நம்ம கோலிவுட் ஹீரோஸ் செய்வாங்களா.?

Actor Mahesh Babu sponsors COVID-19 vaccines for an entire village on his father Krishna’s birthday

Mahesh_free_vaccine

ஒரே நேரத்தில் இரட்டை குதிரை சவாரியில் ‘வானத்தை போல’ சின்ராசு

ஒரே நேரத்தில் இரட்டை குதிரை சவாரியில் ‘வானத்தை போல’ சின்ராசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thaman Kumarஇயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் கதையில் மீண்டும் ரீமேக்காக உருவான ‘சட்டம் ஒரு இருட்டறை’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் தமன்குமார்.

இன்று சன் டிவியில் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கும் ‘வானத்தை போல’ சீரியலில் நாயகன் ‘சின்ராசு’வாக சிட்டி முதல் பட்டிதொட்டியெல்லாம் ரொம்பவே பிரபலமான நட்சத்திரம் ஆகிவிட்டார்

ஒருபக்கம் சினிமா, இன்னொரு பக்கம் சின்னத்திரை என இரண்டுக்கும் சம முக்கியத்துவம் கொடுத்து வெற்றிகரமாக இரட்டைக்குதிரை சவாரி செய்து வருகிறார் தமன்குமார்..

“ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தாலும் நடிப்பின் மீது இருந்த தீராத ஆர்வம் காரணமாக வேலையை உதறிவிட்டு, தியேட்டர் லேப் ஜெயராமிடம் நடிப்பு பயிற்சிக்காக சேர்ந்தேன்..

அந்த சமயத்தில் சட்டம் ஒரு இருட்டறை ஆடிசனில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்ததும், அதில் ஹீரோவாக நான் செலக்ட் ஆனதும் எல்லாம் அடுத்தடுத்து நடந்தன.

அதன்பிறகு தொட்டால் தொடரும், படித்துறை, நேத்ரா என சில படங்களில் நடித்துவிட்டேன்.. ஆனால் தற்போதுதான் எனது இன்னிங்ஸ் உண்மையிலேயே ஆரம்பித்துள்ளதாக உணர்கிறேன்.

ஆம்.. ஒருபக்கம் சினிமாவில் கண்மணி பாப்பா, யாழி ஆகிய படங்களில் நடித்து வருகிறேன்.. இன்னொரு பக்கம் சன் டிவியில் அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து நான் நடித்துவரும் வானத்தை போல சீரியல், நூறாவது எபிசோடை தாண்டி வெற்றிகரமாக போய்க்கொண்டு இருக்கிறது.

பெரியவர்கள் முதல் சின்னக்குழந்தைகள் கூட, ‘சின்ராசு’வாக என்னை தங்கள் மனதில் பதிய வைத்துள்ளனர்.

சினிமாவை எடுத்துகொண்டால் நான் நடித்துள்ள ‘கண்மணி பாப்பா’ ஹாரர் படமாக உருவாகியுள்ளது.

ஒரு சிறுமியை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப்படத்தில் நடிகர் கொட்டாச்சியின் மகள் பேபி மானஸ்வி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

வழக்கமான ஹாரர் படங்களில் இருந்து மாறுபட்டு வெற்றிக்கு உத்தரவாதம் தரக்கூடிய பிளாஸ்பேக் மற்றும் வித்தியாசமான கிளைமாக்ஸுடன் இந்தப்படம் உருவாகியுள்ளது.

சென்னை மற்றும் கொடைக்கானல் பகுதியில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.

குறிப்பாக கொடைக்காணல் பகுதியில் காட்டுப்பகுதியில் உள்ள பெரிய பங்களா ஒன்றில் பல நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம்.. பெரும்பாலான நாட்கள் அந்த பங்களாவிலேயே இரவில் தங்கினோம்.

ஆனால், அதுவே ஒரு பேய் பங்களா என்றும் சிலர் அங்கே தற்கொலை செய்துகொண்டு இறந்து போனார்கள் என்கிற விபரமும் சென்னை வந்த பின்னர் தான் தெரிந்தது..

மேலும் அந்த பங்களாவில் படப்பிடிப்பு நடத்த சென்ற படக்குழுவினர் பலரும், தொடர்ந்து நடத்த முடியாமல் பாதியிலேயே திரும்பி வந்துள்ளனர்..

ஆனால் எந்த சிக்கலும் இன்றி அந்த பேய் பங்களாவில் முதல்முறையாக முழு படப்பிடிப்பையும் முடித்து வந்தவர்கள் எங்கள் படக்குழுவினர் தான், அந்தப்படத்தின் படப்பிடிப்பு உண்மையிலேயே ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

அதேபோல யாழி படத்தின் கதையும் வித்தியாசமானது தான். கலாப காதலன் படத்தில் ஆர்யாவின் மச்சினிச்சியாக நடித்த அக்சயா தான் இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக மாறியுள்ளார்.

மேலும் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். சில வருடங்கள் கழித்து சினிமாவுக்கு அவர் மீண்டும் திரும்பி வருவதால் தன்னை வலுவாக நிலைநிறுத்தி கொள்ளும் விதமாக ஒவ்வொரு விஷயத்தை பார்த்து பார்த்து செய்திருக்கிறார்.

இந்த இரண்டு படங்களில் கண்மணி பாப்பா விரைவில் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

இவை தவிர இன்னும் இரண்டு படங்களில் நடித்து வருகிறேன். சினிமா மற்றும் சீரியலுக்கு என மாதத்தில் பாதிப்பாதி நாட்களை தனியாக பிரித்து கொடுத்து விடுவதால் கால்ஷீட்டில் எந்த சிக்கலும் வருவதில்லை.

அந்தவகையில் இரண்டையும் சமமாக பேலன்ஸ் செய்து வருகிறேன்.

சீரியலுக்கான நடிப்பு சற்றே வித்தியாசமானதுதான் என்றால்லும் நான் பெற்ற நடிப்பு பயிற்சியின் மூலம் சினிமாவிற்கான அதே இயல்பான நடிப்பையே சீரியலிலும் தர முயற்சிக்கிறேன்.. பக்கம் பக்கமான வசனங்களை உடனுக்குடன் மனப்பாடம் பண்ணி பேசவேண்டிய சவால் சீரியலில் உண்டு..

ஷூட்டிங்கின்போது அந்த சவாலை வெற்றிகரமாக நிறைவேற்றி விட்டாலும், எனக்கான டப்பிங்கை நானே பேசமுடியவில்லை என்பதில் எனக்கு வருத்தம் தான்.. அந்த அளவுக்கு இரண்டு பக்கமும் பிசியாக ஓடிக்கொண்டு இருக்கிறேன்” என்கிறார் தமன்குமார்..

மேலும் தனது திரையுலக பயணத்தில் மறக்க முடியாத நிகழ்வு என அவர் கூறுவது தளபதி விஜய்யின் பாராட்டியதையும் அவர் வழங்கிய ஆலோசனைகளையும் தான்.

“சட்டம் ஒரு இருட்டறை படப்பிடிப்பின்போது சண்டைக்காட்சியில் எனக்கு காலில் காயம்பட்டிருந்தது. அந்தசமயத்தில் படப்பிடிப்பை பார்க்க வந்திருந்த விஜய் சார் என்னிடம் வந்து அக்கறையாக விசாரித்ததுடன் சண்டைக்காட்சிகளில் நடிக்கும்போது கவனமாக இருக்கும்படி அறிவுரை கூறினார்.

அதுமட்டுமல்ல அந்த படம் ரிலீசானபோது, படம் பார்த்துவிட்டு வெளியே வந்த விஜய் சார், என்னை அழைத்து, எனது நடிப்பு பற்றி பாராட்டி பேசியதுடன், ஒரு நடிகனாக எப்படி முன்னோக்கி செல்லவேண்டும் என சில ஆலோசனைகளையும வழங்கி கிட்டத்தட்ட கால் மணி நேரம் வரை பேசிக்கொண்டிருந்தார்..

அவர் கூறியவற்றை இப்போதுவரை பின்பற்றி வருகிறேன்” என்கிறார் தமன்குமார்.

Vaanathai Pola chinrasu talks about his upcoming projects

More Articles
Follows