தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பா.ஜ.க-வின் அறிவுசார் பிரிவின் தமிழ்நாடு மாநிலத் தலைவராகப் பதவி வகித்துவந்தவர் அர்ஜுனமூர்த்தி.
ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் சேர்வதற்காகத் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
ஜனவரியில் கட்சி தொடக்கம் என்றும் கூறியிருந்த ரஜினி, உடல்நிலை காரணமாக, தான் அரசியலுக்கு வரப்போவது இல்லை என நேற்று அறிவித்திருந்தார்.
இந்த நிலையில்… அர்ஜுனமூர்த்தி தமது நிலைப்பாட்டை விளக்குவதற்காக செய்தியாளர்களை சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டுக்கு இன்று பிற்பகலில் அழைத்திருந்தார்.
அப்போது பேசிய அவர், “ரஜினி அரசியலுக்கு வர இயலாத நிலை தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பை சக குடும்பத்தினர் ஒருவருக்கு ஏற்பட்ட நிலையின்போது எடுக்கப்படும் முடிவு போலவே கருத வேண்டும்.
“எனது இரண்டு கண்களில் ஒரு கண் நரேந்திர மோடி, இன்னொரு கண் ரஜினிகாந்த்.
இந்த இருவருமே தமிழ்நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டவர்கள். அதனால் ஈர்க்கப்பட்டே இருவரின் தலைமையை நான் ஏற்றேன்.
மருத்துவர்கள் ரஜினிக்கு ஓய்வு வேண்டும் என கூறியிருக்கிறார்கள். நாம் அதைப் புரிந்துகொள்ளவேண்டும். ரஜினியின் முடிவை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ரஜினியுடனேயே தொடர்ந்து இருப்பேன். எனக்கு பாஜகவுடன் நெருங்கிய உறவு உள்ளது. அங்குள்ள தலைவர்கள் மீது எனக்கு மிகுந்த நன்மதிப்பு உள்ளது. மீண்டும் பாஜகவில் சேருவது பற்றி இப்போதைக்கு முடிவு செய்யவில்லை,” என்றார்.
Arjuna Murthy about Rajini and Modi