தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
டெல்லியில் நவீன வசதிகள் கொண்ட புதிய பாராளுமன்றக் கட்டிடம் நாளை மே 28 அன்று பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்படவுள்ளது
தமிழ்நாட்டின் பண்பாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும், தமிழ்ப் பெருங்குடி மக்களுக்கும் மேலும் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்ததுள்ளது இந்த செங்கோல்.
மேலும் இந்திய விடுதலையின் அடையாளமாகவும் ஆட்சி அதிகார மாற்றத்திற்கு அத்தாட்சியாகவும் விளங்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தச் செங்கோல், பிரதமரால் நாளை மே 28ல் திறக்கப்படவுள்ளது.
புதிய பாராளுமன்றக் கட்டிடத்தில், மக்களவைத் தலைவரின் இருக்கைக்கு அருகில் நிரந்தரமாக இடம் பெறவுள்ளது.
இந்த நிலையில் இது இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் நேற்று மே 27ல் பதிவிட்டுள்ளதாவது…
இந்திய நாட்டின் புதிய பாராளுமன்றக் கட்டடத்தில் ஜொலிக்கப் போகும் தமிழர்களின் ஆட்சி அதிகாரத்தின் பாரம்பரிய அடையாளம் – செங்கோல்.
#தமிழன்டா
தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த மதிப்பிற்குரிய பாரதப்பிரதமர் @narendramodi அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
என ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளார்.
Rajinikanth tweeted thanks Modi for ‘making Tamilians proud’