தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த மோடிக்கு நன்றி. #தமிழன்டா என ரஜினி ட்வீட்

தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த மோடிக்கு நன்றி. #தமிழன்டா என ரஜினி ட்வீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டெல்லியில் நவீன வசதிகள் கொண்ட புதிய பாராளுமன்றக் கட்டிடம் நாளை மே 28 அன்று பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்படவுள்ளது

தமிழ்நாட்டின் பண்பாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும், தமிழ்ப் பெருங்குடி மக்களுக்கும் மேலும் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்ததுள்ளது இந்த செங்கோல்.

மேலும் இந்திய விடுதலையின் அடையாளமாகவும் ஆட்சி அதிகார மாற்றத்திற்கு அத்தாட்சியாகவும் விளங்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தச் செங்கோல், பிரதமரால் நாளை மே 28ல் திறக்கப்படவுள்ளது.

புதிய பாராளுமன்றக் கட்டிடத்தில், மக்களவைத் தலைவரின் இருக்கைக்கு அருகில் நிரந்தரமாக இடம் பெறவுள்ளது.

இந்த நிலையில் இது இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் நேற்று மே 27ல் பதிவிட்டுள்ளதாவது…

இந்திய நாட்டின் புதிய பாராளுமன்றக் கட்டடத்தில் ஜொலிக்கப் போகும் தமிழர்களின் ஆட்சி அதிகாரத்தின் பாரம்பரிய அடையாளம் – செங்கோல்.

#தமிழன்டா

தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த மதிப்பிற்குரிய பாரதப்பிரதமர் @narendramodi அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

என ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளார்.

Rajinikanth tweeted thanks Modi for ‘making Tamilians proud’

விஜய் சேதுபதியின் முதல் ஹிந்தி படம் ஓடிடி-யில் ரிலீஸ்.; லோகேஷ் வாழ்த்து.!

விஜய் சேதுபதியின் முதல் ஹிந்தி படம் ஓடிடி-யில் ரிலீஸ்.; லோகேஷ் வாழ்த்து.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்றைய தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ்.

இவர் இயக்கிய முதல் படம் ‘மாநகரம்’ கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தை எஸ்.ஆர். பிரபு தயாரித்திருந்தார்.

முதல் படமே லோகேஷுக்கு வெற்றி படமாக அமைந்தது. தற்போது ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படம் ஹிந்தியில் ரீமேக் ஆகி ‘மும்பைகர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இந்தப் படத்தை ஹிந்தியில் இயக்க ஷிபு தமீன்ஸ் தயாரித்துள்ளார்.

தமிழில் முனீஸ்காந்த் நடித்த வேடத்தில் ஹிந்தியில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

இவர்களுடன் விக்ராந்த் மாசே, தன்யா மாணிக்டலா, ஹ்ரிது ஹரூன், சஞ்சய் மிஸ்ரா ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படம் தமிழ் & தெலுங்கு ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வரும் ஜூன் 2ஆம் தேதி நேரடியாக ஜியோ சினிமாஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

இந்த நிலையில் இப்படத்தின் ட்ரெய்லரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்தியுள்ளார்.

Here’s the #MUMBAIKAR trailer!

Wishing good luck to the entire team 😊💯

#MumbaikarOnJioCinema from 2nd June
@jiocinema

@vikrantmassey

@VijaySethuOffl

@hridhuharoon

@santoshsivan

@imsanjaimishra

@RanvirShorey
#TanyaManiktala
@sachinskhedekar
#JyotiDeshpande
@riyashibu_

@hr_pictures

@jiostudios

@TimesMusicHub

Lokesh Kanagaraj wishes to Vijay Sethupathi’s Mumbaikar

‘விடாமுயற்சி’ அப்டேட்.; 12 வருடங்களுக்குப் பிறகு அஜித் தரும் டபுள் விருந்து

‘விடாமுயற்சி’ அப்டேட்.; 12 வருடங்களுக்குப் பிறகு அஜித் தரும் டபுள் விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தாண்டு 2023 அஜித் நடிப்பில் உருவான ”துணிவு’ படம் வெளியானது.

இந்த படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை (விடாமுயற்சி) மகிழ் திருமேனி இயக்குவார் என அறிவித்தது லைக்கா நிறுவனம்.

அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் ஜூன் மாதம் ‘விடாமுயற்சி’ படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படவுள்ளது.

இந்த படத்தில் அஜித் ஜோடியாக திரிஷா நடிப்பார் எனக. கூறப்படுகிறது.

இதற்கு முன்பு ஜி, என்னை அறிந்தால், மங்காத்தா உள்ளிட்ட படங்களில் அஜித்திற்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார்.

இத்துடன் ‘விடாமுயற்சி’ படத்தின் மற்றொரு அப்டேட்டும் கிடைத்துள்ளது. அதாவது இந்த படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.

இரட்டை வேடங்களில் அஜித் இறுதியாக நடித்த படம் ‘அசல்’. இந்த படம் கடந்த 2010 வெளியானது. கிட்டத்தட்ட 12 வருடங்களுக்குப் பிறகு தற்போது தான் அஜித் இரு வேடங்களில் நடிக்கவுள்ளார்.

2010 ஆண்டுக்கு முன்னர் ‘வாலி’, ‘சிட்டிசன்’, ‘பில்லா’, ‘அட்டகாசம்’, ‘வில்லன்’ ஆகிய படங்களில் இரட்டை வேடங்களில் அஜித் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Ajith plays dual role after 12 years

அஞ்சலியின் 50-வது படத்தலைப்பு – கலைஞர்கள் பற்றிய முழு தகவல்கள்..

அஞ்சலியின் 50-வது படத்தலைப்பு – கலைஞர்கள் பற்றிய முழு தகவல்கள்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் – தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிரபலமான நடிகை அஞ்சலி.

தமிழில் இவரது நடிப்பில் வெளியான ‘கற்றது தமிழ்’, ‘அங்காடித் தெரு’, ‘எங்கேயும் எப்போதும்’ உள்ளிட்ட பல படங்களில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

அழகும் திறமையும் நடித்த அஞ்சலி தற்போது 50 வது படத்தை நெருங்கி விட்டார்.

இவரின் 50-வது படத்திற்கு ‘ஈகை’ என்று தலைப்பிட்டு புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்தப் படத்தில் அஞ்சலியுடன் காஷ்யப், ஹரி, புகழ், அபிநக்‌ஷத்ரா, நிஷாந்த் ரகு, உள்ளிட்ட கலைஞர்கள் நடித்துள்ளனர். #filmistreet

அசோக் வேலாயுதம் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்ய தரண் இசை அமைத்துள்ளார்.

தங்கராஜ் லட்சுமிநாராயணன் & தினகர் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

Anjali’s 50th film is titled Eagai

‘மாவீரன்’ பட ரிலீஸ்.; மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்த லைக்கா

‘மாவீரன்’ பட ரிலீஸ்.; மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்த லைக்கா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘மாவீரன்’.

இந்த படத்தில் நாயகியாக அதிதி சங்கர் நடித்துள்ளார். இவர்களுடன் மிஷ்கின் சரிதா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

பரத் ஷங்கர் என்பவர் இசையமைத்துள்ள இந்த படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

முதலில் ஆகஸ்ட் மாதம் 10 தேதி ”மாவீரன்’ படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ரஜினியின் ‘ஜெயிலர்’ படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால் மாவீரன் படம் ஜூலை 14ஆம் தேதி வெளியாகும் என பின்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தப் படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது அந்த நிறுவனம் விலகிய நிலையில் தற்போது லைக்கா நிறுவனம் மாவீரன் படத்தை வாங்க முன் வந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே ‘மாவீரன்’ படம் குறித்த அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.

ஏற்கனவே சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்த ‘டான்’ படத்தை லைக்கா நிறுவனம் இணைந்து தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Sivakarthikeyan and Lyca joins for a new film

பாவனாவுடன் ஒன்று அமிதாப்புடன் ஒன்று.; இந்திய சினிமாவில் வரிசை கட்டும் ரஹ்மான் படங்கள்

பாவனாவுடன் ஒன்று அமிதாப்புடன் ஒன்று.; இந்திய சினிமாவில் வரிசை கட்டும் ரஹ்மான் படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ரஹ்மான் – நடிகை பாவனா முதன் முதலாக இணைந்து நடிக்கிறார்கள்.

பெயரிடப்படாத இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கொச்சியில் ஆரம்பமானது.

புது முக இயக்குநர் ரியாஸ் மாரத் இயக்கும் ஆக்ஷன் த்ரில்லரான இப்படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் கதாநாயகனாக ரஹ்மான் நடிக்கிறார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக்க வந்த பாவனா இதில் தடயவியல் மருத்துவ அதிகாரியாக நடிக்கிறார்.

இப்படத்தை ஏ பி கே சினிமாஸ் (APK) சார்பாக ஆதித் பிரசன்ன குமார் பெரிய பொருட் செலவில் தயாரிக்கிறார்.

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சி, பாண்டிச்சேரி மற்றும் கொடைக்கானல் ஆகிய இடங்களில் ஜூன் மாதத்தில் நடை பெறுகிறது.

துருவங்கள் 16” ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங் இதற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்டத்தை தவிர,
மலையாளத்தில் ரஹ்மான் கதா நாயகனாக நடிக்க,
அமல் K ஜோப் இயக்கும் ‘ஏதிரே ‘ ,
சார்ல்ஸ் இயக்கும் ‘சமாரா’ மற்றும் தமிழில் டைரக்டர் சுப்பு ராம் இயக்கும் ‘அஞ்சாமை ‘ மற்றும்
கார்த்திக் நரேன் இயக்கத்தில் சரத்குமார், அதர்வாவுடன் இணைந்து நடிக்கும் ‘ நிறங்கள் மூன்று ‘ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

ஹிந்தியில் ரஹ்மான் அறிமுகமாகும் பிரம்மாண்ட படம் ‘ கண்பத் ‘ .’குயின்’ புகழ் விகாஸ் பால் இயக்கும் இப்படத்தில் ரஹ்மானும், டைகர் ஷார்ஃபும் அமிதாப் பச்சனின் பிள்ளைகளாக நடித்து வருகிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. இப்படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கிறது.

ரஹ்மான் நாயகனாக நடிக்கும் முதல் வெப் சீரீசை டிஸ்னி ஹாட் ஸ்டாருக்காக பிரபல மலையாள நிறுவனமான ஆகஸ்ட் சினிமாஸ் தயாரிக்கிறது.
நஜீம் கோயா இதனை இயக்குகிறார்.

‘1000 பேபீஸ் ‘ என்று பெயர் சூட்ட பட்டுள்ள இந்த வெப் சீரீஸின் படப்பிடிப்பு வரும் மே மாதம் 1- ம் தேதி கொச்சியில் துவங்கியது.

One with Bhavana and one with Amitabh Bachchan. Rahman’s films are making a row in Indian cinema

More Articles
Follows