‘பாகுபலி’ எழுத்தாளர் கைவண்ணத்தில் கீச்சா சுதீபின் பிரம்மாண்ட படம்

‘பாகுபலி’ எழுத்தாளர் கைவண்ணத்தில் கீச்சா சுதீபின் பிரம்மாண்ட படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பான் இந்திய நட்சத்திர நடிகர் கிச்சா சுதீப்பின் பிறந்தநாளை முன்னிட்டு திரையுலக ரசிகர்களுக்கு ஓர் நற்செய்தி.

மகதீரா, பாகுபலி, ஆர்ஆர்ஆர் போன்ற வெற்றிப் படங்களின் கதாசிரியர், திரைக்கதை வித்தகர், பான் இந்தியா என்ற கருத்தை முதன் முதலில் உருவாக்கியவர், பிரபல இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி படங்களின் கதாசிரியர், திரு வி விஜயேந்திர பிரசாத் அவர்கள், புகழ்பெற்ற கன்னட நிறுவனமான ஆர்.சி.ஸ்டுடியோவின் அறிமுகப் படத்திற்கான திரைக்கதையை மேற்பார்வையிடுகிறார்.

பிரமாண்டமாக உருவாகவுள்ள இந்த பான் இந்தியப் படத்தில் நாயகனாக கிச்சா சுதீப் நடிக்கிறார். இப்படத்தினை இயக்குநர் ஆர்.சந்துரு இயக்கவுள்ளார்.

இந்த 3 ஜாம்பவான்களும் இணைந்து உருவாக்கும் இந்தப் படத்திற்காக ஒட்டுமொத்த இந்தியாவே ஆவலுடன் காத்திருக்கிறது, இப்படம் இந்த வருடத்தின் மெகா ஹிட் படமாக அமையும்.

ஆர் சி ஸ்டுடியோஸ் கர்நாடகாவில் ஒரு புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் தயாரிப்பில், இந்த ஆண்டு 5 பெரிய படங்கள் திரைக்கு வருகிறது.

இயக்குநர் ஆர் சந்துரு இதுவரை பணியாற்றிய படங்கள் மிக ஸ்பெஷலானதாக இருக்கும் அந்த வகையில், இந்தப் படமும் பல சிறப்புகளை கொண்டதாக இருக்கும். கிச்சா சுதீப்பின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், ரசிகர்களுக்கு பிரத்யேக விருந்தாக இப்படத்தின் டைட்டிலை வெளியிட ஆர் சி ஸ்டுடியோஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

விஜயேந்திர பிரசாத் திரைக்கதை மேற்பார்வை, கிச்சா சுதீப் நடிப்பு மற்றும் இயக்குநர் ஆர் சந்துரு இயக்கம் என இந்த மூன்று ஜாம்பவான்கள் இணைந்து உருவாக்கவுள்ள படத்திற்காக ஒட்டு மொத்தத் திரையுலகமும் வெகு ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

திரைக்கதை ஆசிரியர் விஜயேந்திர பிரசாத் 25க்கும் மேற்பட்ட படங்களுக்கு கதை எழுதியுள்ளார். அவை அனைத்துமே வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளன. மதிப்புமிக்க ஆந்திரா அரசின் நந்தி விருது மற்றும் ஃபிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார்.

ஆர்சி ஸ்டுடியோஸ் இந்தப் படத்தில் பல கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளது, இப்படம் பான் இந்தியா கான்செப்ட்டை உடைத்து, உலகளாவிய திரைப்படத் தரத்தில், இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்திய படமாக இருக்கும்.

இதன் மூலம் ஆர்சி ஸ்டுடியோஸ் ஒரு உலகளாவிய தயாரிப்பு நிறுவனமாக மலரும்.

இதன் மூலம் உலகளாவிய வகையில் திறமையான மற்றும் வளர்ந்து வரும் இளம் திறமைகளுக்கு ஆர்சி ஸ்டுடியோஸ் வாய்ப்புகளை வழங்கும்.

இந்த மூன்று ஜாம்பவான்களும் ஒன்றிணைவது திரைத்துறையின் எதிர்கால வளர்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் உதவும். கிச்சாவுடன் இணைந்து ஆர்சி ஸ்டுடியோஸ் நிறுவனம் ஒரு படத்தைத் தயாரிப்பது அவரது பிறந்தநாளில் உறுதியாகியுள்ளது.

Kiccha Sudeeps next movie announcement on his birthday

நெருப்புக்கு நடுவே ‘கங்குவா’ படக்குழு.; வைரலாகும் புகைப்படம்

நெருப்புக்கு நடுவே ‘கங்குவா’ படக்குழு.; வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் “கங்குவா” படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, கே எஸ் ரவிகுமார், ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ‘கங்குவா’ படப்பிடிப்பு தளத்தில் நெருப்புக்கு நடுவே இயக்குனர் சிறுத்தை சிவா மற்றும் படக்குழு கேமராவுடன் நிற்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது

மேலும், ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

suriya’s kanguva movie shooting spot picture released by the team

திருமண நாளை காஸ்ட்லி காருடன் கொண்டாடிய ‘மாமன்னன்’ வில்லன்

திருமண நாளை காஸ்ட்லி காருடன் கொண்டாடிய ‘மாமன்னன்’ வில்லன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் பகத் பாசில்.

தன் தந்தை பாசில் இயக்கிய ‘கையெத்தும் தூரத்து’ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் காலடியெடுத்து வைத்தார்.

அதன் பிறகு ‘பிரைட்’, ‘பெங்களூர் டேஸ்’, ‘டிரான்ஸ்’ போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

இவர் தமிழில் ‘வேலைக்காரன்’, ‘சூப்பர் டீலக்ஸ்’, ‘விக்ரம்’ படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தார்.

சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான உதயநிதியின் ‘மாமன்னன்’ படத்தில் இவர் நடித்திருந்த ரத்தினவேல் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது.

இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு நடிகை நஸ்ரியாவை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், பகத் பாசில் – நஸ்ரியா அவர்களது திருமண நாளையொட்டி ‘land rover defender 90’ என்ற காரை வாங்கியுள்ளார்.

இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

actor Fahadh Faasil takes delivery of a ‘Land Rover Defender 90’ car

எதிர்காலத்திற்கு வரவேற்கிறோம்.; ‘தளபதி 68’ அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு

எதிர்காலத்திற்கு வரவேற்கிறோம்.; ‘தளபதி 68’ அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தற்போது ‘லியோ’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதைத்தொடந்து விஜய்யின் 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார்.

கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தின் பணிகள் தொடக்க நிலையில் உள்ளன.

இந்நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் ‘தளபதி 68’ படம் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் இரண்டு புகைப்படங்களை பகிர்ந்த அவர், “எதிர்காலத்திற்கு வரவேற்கிறோம்” என்று நடிகர் விஜய் மற்றும் அர்ச்சனா கல்பாத்தியை டேக்செய்து பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

‘Welcome to the future’ says in Venkat Prabhu gave an update on ‘Thalapathy 68’

ரஜினி ஓகே செய்த காரை பரிசளித்த ‘ஜெயிலர்’ தயாரிப்பாளர் கலாநிதி மாறன்

ரஜினி ஓகே செய்த காரை பரிசளித்த ‘ஜெயிலர்’ தயாரிப்பாளர் கலாநிதி மாறன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது.

இந்த படம் வெளியான முதல் நாளே வசூலில் ரூ 90 கோடியை நெருங்கியது.

தற்போது படம் வெளியாகி 3 வாரங்களை கடந்துள்ளது. இன்றும் பல திரையரங்குகளில் ஜெயிலர் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

ரஜினியின் ஸ்டைல்.. மோகன்லால் மற்றும் சிவராஜ் குமாரின் மாஸ் ஆக்சன் காட்சிகள்… தமன்னா போட்ட காவலா ஆட்டம்.. விநாயகனின் வில்லத்தனம்.. யோகி பாபுவின் காமெடி என பல்வேறு அம்சங்கள் இந்த படத்தில் நிறைந்திருந்ததால் படம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தது.

மேலும் அனிருத்தின் வெறித்தனமான பின்னணி இசை நெல்சனின் அருமையான திரைக்கதை ஆகியவையும் இந்த படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்தன.

நேற்று ஆகஸ்ட் 31ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த சன் பிக்சர்ஸ் நிறுவனர் கலாநிதிமாறன் JAILER பட வசூலில் ஒரு பங்கை ரஜினிக்கு செக்காக கொடுத்துள்ளார்.

அவர் கொடுத்த தொகை எவ்வளவு? என்ற விவரங்கள் வெளியாகவில்லை. ஆனால் இந்த தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று செப்டம்பர் 1 தேதி ரஜினிக்கு புதிய காரை வழங்க திட்டமிட்டு இருந்தார் கலாநிதி மாறன். அதன்படி ரஜினி தேர்வு செய்த BMW X7 காரை பரிசாக வழங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது

Kalanithi Maran presented the key to a brand new BMW X7 which Rajini chose.

கீர்த்தி / ராஷ்மிகா கூட்டணி; 4 படங்களை தயாரிக்கும் ட்ரீம் வாரியர்ஸ் & இன்வேனியோ

கீர்த்தி / ராஷ்மிகா கூட்டணி; 4 படங்களை தயாரிக்கும் ட்ரீம் வாரியர்ஸ் & இன்வேனியோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் மற்றும் இன்வேனியோ ஃபிலிம்ஸ் இணைந்து 4 புதிய திரைப்படங்களைத் தயாரிக்கவுள்ளனர்.

இது குறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக இரண்டு தயாரிப்பு நிறுவனங்களும் அறிவித்துள்ளன.

திரைத்துறையின் இரண்டு முக்கியத் தயாரிப்பு நிறுவனங்கள், தங்களது திரைப்படத் தயாரிப்புப் பயணத்தை இணைந்து தொடரவிருக்கின்றன.

இது ரசிகர்களுக்கு தரமானத் திரைப்படங்களைத் தரும் நோக்கில், திரைத்துறையில் ஏற்பட்டிருக்கும் ஒரு முக்கியத் திருப்புமுனையாகும்.

தென்னிந்திய திரைப்படத் துறையில் முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், இன்வேனியோ பிலிமிஸ் நிறுவனத்துடன் இணைந்து தமிழ் மற்றும் தெலுங்கில் நான்கு புதிய திரைப்படங்களை தயாரிக்க உள்ளது.

சிறந்த நடிகைக்கான தேசிய விருது வென்ற கீர்த்தி சுரேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘கண்ணிவெடி’ (தமிழ்), ராஷ்மிகா மந்தனா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘ரெயின்போ’ (தெலுங்கு) உட்பட மேலும் இரண்டு பெயரிடப்படாத திரைப்படங்களை இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கவுள்ளன.

இந்த புதிய கூட்டு முயற்சி குறித்து பேசிய இன்வேனியோ நிறுவனத் தலைவர் அலங்கார் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். “ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் போன்ற அனுபவமிக்கவர்களுடன் ஒரே குழுவில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

படைப்பாற்றல், தொழில்நுட்ப திறன் மற்றும் உயர்தர பொழுதுபோக்கை வழங்குவதற்காக எங்கள் இரண்டு நிறுவனங்களும் இணைந்துள்ளது” என்று அலங்கார் கூறியுள்ளார்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் எஸ்.ஆர்.பிரபு பேசுகையில்…

“இந்த புதிய பயணம் உற்சாகத்தைத் தருகிறது.

இரண்டு நிறுவனங்களின் தனித்துவ சிறப்புகளும் எங்கள் படைப்புகளில் பிரதிபலிக்கும். எல்லைகள் தாண்டி அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் வண்ணம் நாங்கள் சொல்லப்போகும் கதைகள் வெள்ளித் திரையை உயிர்ப்பிக்கும்” என்றார்.

Dream warrior and Invenio forge new partnership and produce 4 films

More Articles
Follows