BREAKING சூப்பர் ஸ்டார் பட்டம் தொல்லை.; இருவருக்கு மட்டுமே பயம்..- ரஜினி ஓபன் டாக்

BREAKING சூப்பர் ஸ்டார் பட்டம் தொல்லை.; இருவருக்கு மட்டுமே பயம்..- ரஜினி ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது (ஜூலை 28 இரவு 9.30) சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசும்போது..

உங்கள் அன்புக்கும் வார்த்தைகளுக்கும் நன்றி கலாநிதி மாறன்.. உங்கள் பேச்சின் மூலம் நீங்கள் என்னை பழைய நினைவுகளுக்கு அழைத்துச் சென்று விட்டீர்கள்.

இயக்குநர் நெல்சன் எதற்காகவும் தன்னுடைய நிலையை மாற்றிக் கொள்ளவில்லை. அவருக்கு திருப்தி ஆகும் வரை படமாக்கிக் கொண்டே இருந்தார்.

வசனக் காட்சிகளை படமாக்கிய பின்னர் ‘காவலா…’ பாடல் படமாக்கி கொண்டிருந்தபோது என்னுடைய கால்ஷீட் ஆறு நாட்கள் மட்டுமே மீதம் இருந்த

மூன்று நாட்கள் நான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றேன். ஆனால் என்னை அழைக்கவே இல்லை.. பின்னர் கண்ணா இங்கே வா.. ஏன் என்னை அழைக்கவில்லை என்று கேட்டேன்.

உங்களுக்கு ஸ்டெப் இருக்கு சார் ஆனால் ஒரே ஒரு ஸ்டெப் தான் என்றார்கள்..

(பின்னர் சிரித்தபடியே ரஜினி பேசியதாவது) தமன்னாவும் டான்ஸ் மாஸ்டர் ஜானியும் இணைந்து அந்த பாடலை எங்கோ கொண்டு சென்று விட்டார்கள். பெரும் சூப்பர்ஹிட் ஆகிவிட்டது.

ஹுக்கும்… தலைவர் அலப்பறை பாடல் வரிகளை பார்த்தேன். சூப்பர் ஸ்டார் என்ற வார்த்தையை நீக்க சொன்னேன்.. சூப்பர் ஸ்டார் டைட்டில் என்றைக்குமே தொல்லை தான்.

சில வருடங்களுக்கு முன்பே நான் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை நீக்க சொன்னேன்.. அப்போது நான் பயந்துவிட்டேன் என்றார்கள்.. நான் இருவருக்கு மட்டும்தான் பயப்படுவேன்.. ஒருவர் கடவுள் மற்றவர் மக்கள்.

நான் காக்கா கழுகு என்று சொன்னா அவரைத்தான் சொல்றாங்க இவரைத்தான் சொல்றாங்கன்னு சோசியல் மீடியாவுல போடுவாங்க.

குறைக்காத நாயும் இல்ல.. குறை சொல்லாத வாயும் இல்ல.. ரெண்டும் இல்லாத ஊரும் இல்ல.. நாம நம்ம வேலையை பார்த்துக்கிட்டு போய்கிட்டே இருக்கணும்.. அர்த்தமாயிந்தா ராஜா..

10 வருடங்களுக்கு முன்பு கன்னடம் படங்களை பற்றி அதிகம் வெளியே தெரியாது.. தற்போது கேஜிஎப், காந்தாரா படங்கள் கன்னட படங்களுக்கு பெரிய அறிமுகம் கொடுத்துள்ளது.

அதுபோல தெலுங்கில் பாகுபலி, ஆர்ஆர்ஆர், புஷ்பா ஆகிய படங்கள் பெரிய அளவில் ரீச் ஆகியுள்ளது.

தமிழிலும் அதுபோல பிரம்மாண்ட படங்கள் வரவேண்டும். பெரிய ஹீரோக்களின் படங்கள் வந்தால் தியேட்டருக்கு நிறைய லாபம் கிடைக்கும். எல்லோரும் சம்பாதிக்கலாம்.. எல்லாரும் நம்முடைய சகோதரர்கள் தான்.

சிவராஜ்குமார் பற்றி பேசும்போது..
ஒருத்தர பெரிய ஆளோட பிள்ளைன்னு சொல்றது ஈசி ஆனா அந்த பேர காப்பாத்துறது ரொம்ப கஷ்டம்..

மோகன்லால் பற்றி பேசும்போது..

அவர் எளிய மனிதர்.. சிறந்த நடிகர் என புகழ்ந்து பேசினார்..

தமன்னாவை பற்றி பேசும்போது அவர் ஆன்மீக பற்று உள்ளவர்.. என்று பாராட்டினார்.

ரஜினிகாந்த் மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென மேடை ஏறி ய ரம்யா கிருஷ்ணன் மைக்கை பற்றி கொண்டு பேசியதாவது..

“வயசானாலும் உங்க ஸ்டைல் உங்கள விட்டு போகாது.. என படையப்பா படத்தில் வந்த நீலாம்பரி வசனத்தை பேசி காட்டினார். அப்போது ரசிகர்கள் கரகோஷத்தில் அரங்கமே அதிர்ந்தது..

இறுதியாக மதுபானம் பற்றி ஒரு ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்தார். எப்போதாவது குடிக்கலாம்.. ஆனால் எப்பொழுதும் குடித்து உங்களையும் உங்கள் குடும்பத்தையும் கெடுக்காதீர்கள் என்றார் ரஜினிகாந்த்.

Rajini open talk about SuperStar title issue

BREAKING பீஸ்ட் தோல்வியால நெல்சனை மாத்த சொன்னாங்க.; இது என்னடா புதுசா இருக்கு – ரஜினி ஓபன் டாக்

BREAKING பீஸ்ட் தோல்வியால நெல்சனை மாத்த சொன்னாங்க.; இது என்னடா புதுசா இருக்கு – ரஜினி ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படத்தின் இசை விழா தற்போது சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த விழாவில் இறுதியாக ரஜினிகாந்த் மேடை ஏறி பேசினார்.. அவர் மேடை ஏறும்போது ரசிகர்கள் கரகோஷத்தில் விசில் சத்தத்தில் நேரு ஸ்டேடியம் அதிர்ந்தது.

ரஜினி பேசியதாவது…

“அண்ணாத்த படத்திற்குப் பிறகு நிறைய இடைவெளி விட்டு விட்டேன். நிறைய கதைகள் வந்தன. அவையெல்லாம் பாட்ஷா அண்ணாமலை டைப்பில் இருந்தன.

எனவே நிறைய கதைகளை தவிர்த்து வந்தேன். ஒரு கட்டத்தில் நிறைய கதைகளை தவிர்ப்பது எனக்கே ஒரு மாதிரியாக இருந்தது.. எனவே கதைகள் கேட்பதை நிறுத்தி வைத்தேன்.

ஒரு படத்திற்கு தயாரிப்பாளர் அம்மா போன்றவர் என்றால் இயக்குனர் அப்பா போன்றவர்.

என் வாழ்க்கையில் பல இயக்குனர்கள் எனது சினிமா பயணத்தை சிறப்பாக அமைத்துக் கொடுத்துள்ளனர்.

முத்துராமன் மகேந்திரன் சுரேஸ் கிருஷ்ணா பி வாசு கே.எஸ்.ரவிக்குமார், ஷங்கர், ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ். இவர்கள் வரிசையில் தற்போது நெல்சன் இணைந்துள்ளார்.

நெல்சன் இடம் கதை கேட்க அவரை நான் வர சொன்னேன். காலை 10 மணிக்கு அவருக்கு அப்பாயின்மென்ட் கொடுத்திருந்தேன். ஆனால் அவர் நான் லேட்டாக எழுந்திருப்பவன். எனவே லேட்டாக வருகிறேன் என்றார்.

எனவே நான் அவருக்கு காலை 11:30 மணிக்கு அப்பாயின்மென்ட் கொடுத்தேன். ஆனால் அவர் அப்போதும் வரவில்லை. 12 மணிக்கு மேல் தான் வந்தார். வந்தவுடன் என்ன வேண்டும் என கேட்டேன். நல்லதா ஒரு காபி சொல்லுங்க என்று சொன்னார் நெல்சன்.

நெல்சன் எனக்கு ஒன் லைன் ஸ்டோரி சொன்னார். நான் கதையை விரிவாக கேட்டேன்.. பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் முடித்துவிட்டு பத்து நாட்கள் கழித்து வந்து முழுக்கதை சொன்னார். கதை சிறப்பாக இருந்தது.

நாங்கள் ‘ஜெயிலர்’ படத்தின் அறிவிப்பை வெளியிடும்போது ஒரு பிரமோ வீடியோ வெளியிட்டோம். அதன் பிறகு தான் ‘பீஸ்ட்’ படம் வந்தது. ‘பீஸ்ட்’ படம் தோல்வி அடைந்ததால் பல விநியோகஸ்தர்கள் என்னை தொடர்பு கொண்டு இயக்குனரை மாற்ற சொன்னார்கள்.

அதன் பின்னர் நாங்கள் சில பேர் சன் நிர்வாகத்தை சந்தித்து பேசினோம். அப்போது அவர்களும் ஆமாம் படத்திற்கு நெகட்டிவ்வான விமர்சனங்கள் தான் வருகின்றன. ஆனால் எங்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் படம் லாபம் தான் என்றனர்.

அதன் பின்னர் ஒரு நாள் ஷூட்டிங்கில் கலந்து கொண்டேன். அப்போது முதல் காட்சி எடுத்த பின்னர் எனது முதல் காதலை பற்றி கேட்டார் நெல்சன். ஏன்? என் காதல் பற்றி கேட்கிறீர்கள் என கேட்டேன்.

எனக்கு கொஞ்சம் எனர்ஜி ஏற்றிக்கொள்ள வேண்டும் என்றார் நெல்சன். இது என்னடா புதுசா இருக்கே.? என்று நினைத்தேன்.

இவ்வாறு பேசினார் ரஜினிகாந்த்.

Rajini open talk about Vijays Beast movie failure

BREAKING ரஜினிக்கு போட்டி இருக்கு.. விஜய் சொன்ன மாதிரி.; நெல்சன் & அனிருத் நடிக்கணும்.. – கலாநிதி மாறன்

BREAKING ரஜினிக்கு போட்டி இருக்கு.. விஜய் சொன்ன மாதிரி.; நெல்சன் & அனிருத் நடிக்கணும்.. – கலாநிதி மாறன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படத்தின் இசை விழா தற்போது சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த விழாவில் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் மேடை ஏறி பேசும் போது…

“நான் இன்னும் ஜெயிலர் படத்தை பார்க்கவில்லை.. ஆனால் பார்த்தவர்கள் எல்லாம் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

என்னுடைய தாத்தா ரஜினி ரசிகர் தான். அது போல என்னுடைய மகளும் ரஜினி ரசிகை தான்.. ஐந்து தலைமுறைகளாக ரசிகர்களை வைத்திருப்பவர் ரஜினிகாந்த்.

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு போட்டி இருக்கு.. விஜய் சொன்ன மாதிரி தான்.. அவருக்கு போட்டி அவர்தான்.. சிவாஜி கணேசனுக்கு போட்டி சிவாஜி கணேசன் தான்.

நெல்சன் மற்றும் அனிருத்தின் டைமிங் சூப்பர்.. அவர்கள் இருவரும் சிறிய பிரேக் எடுத்துக்கொண்டு ஒரு படத்தில் இணைந்து நடிக்க வேண்டும்.”

இவ்வாறு கலாநிதி மாறன் பேசினார்.

Kalanithimaaran speaks about Super Star Rajini

BREAKING ரஜினி எனக்கு சித்தப்பா.; விஜய் ரசிகன் நான்.. – சிவராஜ்குமார் ஓபன் டாக்

BREAKING ரஜினி எனக்கு சித்தப்பா.; விஜய் ரசிகன் நான்.. – சிவராஜ்குமார் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினியுடன் மோகன்லால் சிவராஜ்குமார் ஜாக்கிசரஃப் சுனில் ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த விழாவிற்காக சென்னை வந்த சிவராஜ்குமார் இந்த விழாவில் பங்கேற்று மேடை ஏறி பேசினார்.

அவர் பேசும்போது…

“ரஜினிகாந்த் எங்கள் குடும்பத்தில் ஒருவர் மட்டுமல்ல. அவர் எனக்கு சித்தப்பா போல ஆவார்.

நான் என் அப்பாவுடன் சபரிமலைக்கு சென்று இருக்கிறேன். அப்போது ரஜினி அங்கிள் கையைப் பிடித்துக் கொண்டு சபரிமலை சென்றேன். அந்த நினைவுகள் எப்போதும் எனக்கு ஸ்பெஷல். என்றும் மறக்க முடியாதவை.

எனக்கு நடிகர் விஜய் ரொம்ப பிடிக்கும். மற்ற தமிழ் நடிகர்களையும் பிடிக்கும் என பேசினார் சிவராஜ்குமார்.

நடிகர் யோகி பாபு பேசும்போது… கோலமாவு கோகிலா பார்ட் 2 விரைவில் உருவாகுகிறது என பேசினார்.

நடிகை ரம்யா கிருஷ்ணன் பேசும்போது…

நான் ரஜினியுடன் 24 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிக்கிறேன்.. நான் இன்று வரை நடித்திக் கொண்டிருப்பதற்கு படையப்பா படத்தில் இடம்பெற்ற நீலாம்பரி கேரக்டர் தான் என்று பெருமையுடன் பேசினார் ரம்யா கிருஷ்ணன்.

‘ஜெயிலர்’ படத்தின் நாயகி தமன்னா படத்தில் இடம்பெற்ற ‘காவலா…’ என்ற பாடலுக்கு மேடையில் நடனம் ஆடினார்.

Sivarajkumar talks about Rajini relation with family

JUST IN ரஜினிக்காக ஒத்துக்கிட்டாங்க.; என் வெற்றியில் 50% அனிருத்துக்கு.. விஜய்தான் சொன்னாரு – நெல்சன் எமோஷன்

JUST IN ரஜினிக்காக ஒத்துக்கிட்டாங்க.; என் வெற்றியில் 50% அனிருத்துக்கு.. விஜய்தான் சொன்னாரு – நெல்சன் எமோஷன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த விழாவில் ரஜினி, ஜாக்கிசரஃப், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு, அனிருத், கலாநிதி மாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்தப் படத்தின் இயக்குனர் நெல்சன் மேடை ஏறிப் பேசும்போது…

‘ஜெயிலர்’ படம் என் 4வது திரைப்படம். நான்கு படங்களை இயக்கி விட்டேன் எந்த படத்திற்கும் இசை வெளியீட்டு விழா நடைபெறவில்லை. இதுதான் என்னுடைய முதல் இசை விழா.

நான் இந்த படத்திற்காக நிறைய பேருக்கு நன்றி சொல்ல வேண்டும்.. எனக்கு கிடைத்த வெற்றியில் பாதி வெற்றி அனிருத்துக்கு தான் சேரும். அவரால் தான் இங்கு நிற்கிறேன். அவர்தான் எப்போதும் என்னை உற்சாகப்படுத்திக் கொண்டே இருப்பார்.

என்னுடைய கோலமாவு கோகிலா டாக்டர் ஆகிய படங்களை பார்த்து சிவராஜ்குமார் பாராட்டினார். உங்கள் படத்தில் ஏதாவது ஒரு சின்ன வேஷம் என்றாலும் என்னை அழையுங்கள். நான் வந்து நடித்துக் கொடுக்கிறேன் என்றார்.

இந்தப் படத்தில் நான் கேட்டதற்காக நிறைய நட்சத்திரங்கள் ஒப்புக்கொண்டனர். அவர்கள் கதைக்காக ஒத்துக் கொண்டார்களா என்பது தெரியாது.

ஆனால் ரஜினிக்காக ஒத்துக் கொண்டார்கள் என்பது எனக்குத் தெரியும்.

நான் யாருக்காகவும் பயப்பட மாட்டேன். ஆனால் கலாநிதிமாறனுக்கு பயப்படுவேன். நானும் சின்னத்திரையில் இருந்து வந்தவன் தான். அவர்தான் சின்னத்திரையை ஆட்சி செய்து கொண்டிருப்பவர்.

எனக்கு மாறன் சாரிடம் கதை சொல்ல கொஞ்சம் பயம்.. பீஸ்டு படத்தின் கதையை சொல்லும் போது கூட விஜய் இடம் இதை சொன்னேன்.

நான் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் நிறைய படங்களை செய்ய ஆசைப்படுகிறேன். அவர்களும் இதையே நினைக்க வேண்டும்.

நான் முதன் முதலில் பார்த்த ரஜினி படம் ‘அண்ணாமலை’ படம் தான். அந்த போர்டு மீட்டிங் சிகரெட் பிடிக்கும் காட்சியில் தான் முதன் முதலில் தலைவரை பார்த்தேன்.

எனக்கு முதலில் ரஜினி அவர்களை சந்திக்க நம்பிக்கை வரவில்லை. பயம் இருந்தது. அப்போது விஜய் தான் போய் கதை சொல்லுயா நல்லா இருக்கும் என உற்சாகப்படுத்தி என்னை அனுப்பி வைத்தார்.

ஒரு நாள் கூட ஷூட்டிங் ஸ்பாட்டில் நெகட்டிவ் ஆக எதையும் சொல்லவில்லை ரஜினி.

என்னை சூட்டிங் தளத்தில் சார் என்று தான் அழைப்பார் ரஜினி சார்.. நான் என்னை சார் என்று அழைக்க வேண்டாம் என சொல்லிவிட்டேன். ஆனாலும் அப்படித்தான் அழைப்பார். மரியாதை என்ன என்பதை தலைவரிடம் கத்துக்கணும்.”

இவ்வாறு பேசினார் நெல்சன் திலீப்குமார்.

Nelson speaks about Rajini Vijay Anirudh at Jailer Audio launch

LIVE நெல்சா இந்தவாட்டி குறி மிஸ் ஆகாது.. தலைவர் நிரந்தரம்.; அனிருத் அசத்தல் பேச்சு

LIVE நெல்சா இந்தவாட்டி குறி மிஸ் ஆகாது.. தலைவர் நிரந்தரம்.; அனிருத் அசத்தல் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த விழாவில் பாடகரும் இந்தப் படத்தின் இசையமைப்பாளருமான அனிருத் மேடை ஏறி பாடல்களை பாடி பேசினார்.

‘தலைவர் அலப்பறை என்ற பாடலை அவர் பாடும் போது அனைவரையும் எழுந்து நிற்கச் சொல்லி தான் பாட பாட ரசிகர்களை பாடச் சொல்லி உற்சாகப்படுத்தினார்.

ஹூக்கும்.. தலைவர் அலப்பறை என்ற பாடல் முடிந்த பின்னர் ரசிகர்கள் மீண்டும் ஒன்ஸ்மோர் கேட்டனர்.. எனவே அனிருத் மீண்டும் ரசிகர்களுக்காக பாடினார்.

அதன் பின்னர் அவர் பேசியதாவது….

தலைவர் மாஸ் ஏறிட்ட்டே இருக்கு.. எனவே பாடல்களிலும் மாஸ் ஏறிக்கிட்டே இருக்கும்.

ஆகஸ்ட் 10ஆம் தேதி தலைவர் அலப்பறை கிளப்புறோம்.. தலைவர் நிரந்தரம்..

காவலா… தலைவர் அலப்பறை… ஜூஜிபி என்ற ஒவ்வொரு பாடலாக வெளியிட்டுக் கொண்டே இருந்தோம்.. எனவே எங்களுக்கு ஓய்வே இல்லை.. இவையெல்லாம் தலைவரின் மீது நாங்கள் கொண்டு அன்பினால் தான்.. லவ் யூ தலைவா..

பின்னர் நெல்சன் குறித்து பேசும்போது..

“நெல்சா இந்த வாட்டி குறி மிஸ் ஆகாது என பொடி வைத்து பேசினார் அனிருத்.

இதற்கு முன்பு நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த ‘பீஸ்ட்’ படம் படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Anirudh mass speech about Rajini at Jailer Audio launch

More Articles
Follows