தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கோபுரம் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தை அன்புச்செழியன் நடத்தி வருகிறார்.
மேலும் மதுரை உட்பட தென்மாவட்ட சினிமா விநியோகஸ்தராகவும் உள்ளார்.
இந்நிலையில் இவரது வீட்டில் ஐடி ரெய்டு நடைபெற்று வருகிறது.
மதுரை கீரைத்துறை, காமராஜர் ரோட்டில் உள்ள அவரது வீடுகள், தெற்கு மாசி வீதி அலுவலகத்திலும் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
தலைமறைவான அன்புசெழியனுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கின.
விஜய் நடித்த பிகில் படத்தை ஏ.ஜி.எஸ்., நிறுவனம் தயாரித்தது.
இதற்கு அன்புச்செழியன் நிதி வழங்கி இருக்கலாம் என்றும், இப்படத் தயாரிப்பில் முறைகேடு நடத்திருக்கலாம் என்றும் அதிகாரிகள் சந்தேகித்து வருகின்றனர்.
இன்று நடந்த சோதனையில் மதுரையிலிருந்து ரூ.15 கோடியும், சென்னையிலிருந்து ரூ.50 கோடி பணமும் ரொக்கமாக கைப்பற்றி உள்ளதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நடிகர் விஜய் வீட்டிலும் 2வது நாளாக சோதனை நடந்து வருகிறது.