தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விண்னைத் தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு மீண்டும் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கிறார் என்றவுடனே ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர்.
‘அச்சம் என்பது மடமையடா’ என்ற தலைப்பிடப்பட்ட இப்படம் விறுவிறுப்பாக நடந்தது.
ஆனால் ‘தள்ளிப் போகாதே’ பாடல் மற்றும் சில காட்சிகள் படமாக்கப்படவில்லை என்றும் சிம்பு படப்பிடிப்புக்கு வரவில்லை என்றும் கெளதம் மேனன் அண்மையில் தெரிவித்தார்.
இதுகுறித்து, சிம்பு தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது..
“கெளதம் மேனனை சிம்பு ரொம்பவே மதிக்கிறார். ஆனால், சம்பள பாக்கி இருக்கிறது.
அதனைக் கொடுத்துவிட்டால் மீதமுள்ள காட்சிகளை முடித்துக் கொடுத்துவிடுவார் சிம்பு.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது