தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் சிம்புக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் மஞ்சிமா மோகன்.
தற்போது உதயநிதியுடன் இப்படை வெல்லும் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் விக்ரம் பிரபுவுடன் நடித்து சத்ரியன் திரைப்படம் நாளை ரிலீஸ் ஆகிறது.
இந்நிலையில் தன் சினிமா பயணம் குறித்து அவர் கூறியதாவது…
மஞ்சிமா என்ற பெயரை பெரும்பாலானவர்கள் மங்கிமா என்றுதான் அழைக்கிறார்கள்.
மஞ்சிமா என்றால் அழகு என்று என் அப்பா சொன்னார்.
சத்ரியன் படத்தில் தைரியமான பெண்ணாகவும் அதே சமயம் இங்கிலீஷ் பேசாத பெண்ணாகவும் நடித்திருக்கிறேன்.
நான் இணைந்து நடித்துள்ள 3 ஹீரோக்களுமே (சிம்பு, உதயநிதி, விக்ரம்பிரபு) பெரிய நட்சத்திர குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்.
எனவே அவர்களுடன் பழக முதலில் தயக்கம் இருந்தது. ஆனால் அவர்கள் மிகவும் யதார்த்தமாக பழகினார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
Manjima mohan talks about Simbu Vikram Prabhu and Udhayanidhi