தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அச்சம் என்பது மடமையடா படத்தை தொடர்ந்து சிம்பு நடித்துள்ள AAA படம் அடுத்த வாரம் ஜீன் 23ஆம் ரிலீஸ் ஆகிறது.
இந்நிலையில் இப்படம் குறித்தும் தன் சினிமா பயணம் குறித்து பல்வேறு பேட்டிகளை அளித்து வருகிறார் சிம்பு.
அந்த பேட்டியில் அவர் கூறியதாவது…
“முன்பு படம் பண்ணும் போது, ஒரு படம் கமர்ஷியலாக செய்தால், மறுபடம் வித்தியாசமாக பண்ணலாம் என நினைப்பேன்.
வானம், ‘தொட்டி ஜெயா, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ மற்றும் ‘அச்சம் என்பது மடமையடா’ என வித்தியாசமாக படங்களை செய்தேன்.
எனக்கென்ன 15 விருதுகள் கொடுத்து பாராட்டிவிட்டார்களா?
வித்தியாசமாக படங்கள் செய்து ஏமாந்து போவதை விட, ரசிகர்களுக்காக படம் செய்து அவர்களை இன்னும் திருப்திபடுத்த நினைக்கிறேன்.
எனவே, இப்போது 2 விஷயங்களை மட்டுமே பார்க்கபோகிறேன்.
ஒரு படத்தின் கதை என்னை மிகவும் கவரவேண்டும். இந்தப் படத்தில் எப்படி செய்யப் போகிறோம், நடிக்கப் போகிறோம் என்று தோன்ற வேண்டும்.
எனது ரசிகர்களுக்கும் அப்படம் பிடிக்க வேண்டும். இந்த இரண்டை மட்டுமே தற்போது பார்க்கிறேன்.” என்று கூறினார்.
Simbu changed his formula of Story Selection to satisfy his fans